Jump to content

Zoom செயலி: காணொளி கூட்டங்களில் அதிக நேரத்தை செலவிடும் பயனர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Zoom செயலி: காணொளி கூட்டங்களில் அதிக நேரத்தை செலவிடும் பயனர்கள்

  • வில் ஸ்மேல்
  • பிபிசி 
ஸூம்

பட மூலாதாரம், ZOOM

 
படக்குறிப்பு, 

கடந்த ஏப்ரல் மாதம் சரியாக தூங்கக் கூட முடியாதவராக இருந்தார் அப்ரணா

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வேலை அதிகமாக இருந்ததால், ஸூம் நிர்வாகிகள், உறங்கச் செல்வதற்குக் கூட, சுழற்சி முறையில் செல்ல வேண்டியிருந்தது என்று அபர்ணா பாவா கூறுகிறார்.

"எங்களுடைய மேலதிகாரி மற்றும் நான், ஏப்ரல் மாதத்தில் சுழற்சி முறையில் உறங்கி ஓய்வெடுக்கச் சென்றோம். அது பைத்தியகாரத்தனமாக இருந்தது" என்று அமெரிக்க காணொளிக்காட்சி நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக (சி.ஓ.ஓ) இருக்கும் அபர்ணா பாவா கூறுகிறார். 

இன்று ஸூம் நிறுவனம் ஒரு பழக்கப்பட்ட பெயராக மாறியுள்ளது.

"இது பைத்தியம் பிடித்தது போலிருந்தது, உறங்கச் செல்ல ஒரு நேரமும் இடமும் இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் கடமைப்பட்டிருப்பதை உணர்கிறேன். இந்த சேவையை வழங்கக்கூடிய அளவுக்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்" என்கிறார் அவர்.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஸூம் என்கிற பெயரை பலரும் கேட்டிருக்கமாட்டார்கள். ஆனால், 2012ஆம் ஆண்டில் சிலிக்கான் வேலியில் ஸூம் நிறுவனம் தொடங்கப்பட்டிருந்தது. மிகவும் வெற்றிகரமாக வியாபாரத்தை வளர்த்திருந்தாலும், ஸூம் பற்றி பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று கூறுவது மிகையல்ல. 

நம்மில் பெரும்பாலானோர் அலுவல் ரீதியிலான வேலைக்கோ அல்லது நம் தனிப்பட்ட வாழ்க்கையிலோ, வீடியோ அழைப்புகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பிரச்னை எழுந்தது. 

டிசம்பர் 2019-ன் இறுதியில், 'நாங்கள் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம்' என நினைத்தேன், சராசரியாக தினமும் 10 மில்லியன் பேர் பங்கேற்பாளர்களாக ஸூமை பயன்படுத்தி வந்தார்கள். 2020 ஏப்ரல் மாதத்தில், தினசரி 300 மில்லியன் பேர், பங்கேற்பாளர்களாக ஸூம் செயலியைப் பயன்படுத்தினார்கள். அன்றிலிருந்து இன்று வரை அதே அளவில் பயனர்கள், ஸூமை பயன்படுத்தி வருகிறார்கள்" என்கிறார் அபர்ணா.
 

ஸூம்

பட மூலாதாரம், ZOOM

பிபிசி திரட்டிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மற்ற காணொளி அழைப்புகள் மற்றும் கான்பரன்சிங் போட்டியாளர்களைக் காட்டிலும், ஸூம் நிறுவனத்தில் பயனர்கள் அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன. 

மைக்ரோசாப்ட் நிறுவனம், டீம்ஸ் என்கிற சேவையை வழங்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் டீம்ஸ் சேவையை, தினசரி 115 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது.

கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்கிற சேவையை வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், தினசரி சராசரியாக 235 மில்லியன் பேர் தனது மீட்டிங் சேவையை பயன்படுத்தியதாக கூகுள் கூறுகிறது. அந்த வகையில், காணொளி காட்சி சேவையை வழங்கும் நிறுவனங்களில், கூகுள் மீட் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 

ஃபேஸ்புக் அதன் மெசஞ்சர் ரூம்ஸ் காணொளி காட்சி சேவை பயனர்கள் விவர எண்களை வெளிப்படுத்தவில்லை. ஆனால் பொதுவாக, மெசஞ்சரில் தினசரி வீடியோ அழைப்புகள், இப்போதும் மொத்தம் 150 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளன என்று ஃபேஸ்புக் கூறியிருக்கிறது.

ஸூம் முதலிடத்தைப் பிடித்தது எப்படி? 

"சரியான நேரத்தில் சரியான நிறுவனமாக இருந்தது. எளிமையாக பயன்படுத்த முடிவது, 'ஃப்ரீமியம்' வணிக மாதிரி மற்றும் தரமற்ற இணைய இணைப்புகளையும் கையாளும் வலுவான தொழில்நுட்பம் ஆகியவைகள் தான் அதன் வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என நினைக்கிறேன் என்கிறார்" தொழில்நுட்ப வலை தளமான ஐடிஜி கனெக்டில் பங்களிப்பு ஆசிரியராக இருக்கும் மார்ட்டின் வீட்ச்.

"இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் எழுந்த போது, அதைத் தீர்க்க ஸூம் நிறுவனம் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்பட்டது. இந்த பாதுகாப்பு பிரச்சனையால் பல நிறுவனங்கள் ஸூமின் பயன்பாட்டை தடை செய்வதை நாம் கண்டோம். ஆனால் ஸூம் விரைவாக பதிலளித்தது, மேலும் இந்த சிக்கல்களைத் தீர்க்க, அதன் முதலீட்டையும் அர்ப்பணிப்பையும் இரட்டிப்பாக்கியது" என்கிறார் சி.சி.எஸ் இன்சைட் என்கிற ஆராய்ச்சி குழுவின் தொழில்நுட்ப ஆய்வாளர் ஏங்கலா அஷெண்டன்,

2020 வசந்த காலத்தில், ஸூம் நிறுவனத்தில் கணிசமாக பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதும், எந்த தடையுமின்றி இயங்கியது. அதற்கு ஸூம் நிறுவனத்தின் அமைப்பு கட்டுமானத்துக்கு தான் நன்றி கூற வேண்டும். ஸூம் நிறுவனம் க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குகிறது. இதன் முக்கிய செயல்பாடுகள், உலகின் பல மூலைகளில் இருக்கும் சர்வர் மையங்களில் நடக்கின்றன.

"கொரோனாவுக்கு முன், தன் நீண்ட கால இலக்குகளை கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்தது. எனவே ஏற்கனவே 19 சர்வர் மையங்களை வைத்திருந்தது ஸூம். அப்போதைக்கு ஸூம் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்த பயனர்கள் எண்ணிக்கைக்கு இது அதிகம் தான். அதோடு, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, உலகின் பல பகுதிகளில் இருக்கும் ஆயிரக் கணக்கான சர்வர்களை, வெறும் ஐந்து மணி நேரத்துக்கு முன் தெரிவித்துவிட்டு பயன்படுத்தத் தொடங்கும் விதத்தில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தது" என கூறுகிறார் அபர்ணா.

எனவே திடீரென ஸூம் நிறுவனத்தின் சேவையை நிறைய பேர் பயன்படுத்தத் தொடங்கும் போதும், ஸூம் நிறுவனத்தால் உடனடியாக தன் சேவையை விரிவுபடுத்த முடிந்தது.

பல்வேறு புதிய பயனர்கள், தங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கவும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும் ஸூம் சேவையைப் பயன்படுத்தினார்கள். 

அலுவலக வேலைகளில் வெறுமனே காணொளி கூட்டங்களுக்கு மட்டும் இது பயன்படுத்தப்படவில்லை. வேலைக்கு ஆட்களை எடுப்பது, வேலையில் இருந்து ஆட்களை நீக்குவது, பார்ட்டி சந்திப்புகள் என எல்லாவற்றுக்கும் ஸூம் பயன்படுத்தப்பட்டது. 

நம்மில் பலரும் தொடர்ந்து வீட்டில் இருந்தே வேலை செய்யவிருக்கிறோம். குறைந்தபட்சம் அடுத்த கொஞ்ச காலத்துக்காவது வீட்டில் இருந்து வேலை செய்வோம். எனவே காணொளி காட்சி முறையில் சந்திப்புகள் நடப்பது எதிர்காலத்தில் எப்போதும் இருக்கும் என்கிறார் அபர்ணா.

மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்

பட மூலாதாரம், MICROSOFT TEAMS

வேலைகளின் எதிர்காலம் நிரந்தரமாக மாறிவிட்டது. எங்களின் பல வாடிக்கையாளர்கள் ஹைப்ரிட் மாடலில் அலுவலகத்தை நடத்துவோம் என்கிறார்கள். இன்னும் சில நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை வாரத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வீட்டில் இருந்து வேலை பார்க்கச் சொல்வோம், சுமாராக 2 - 3 நாட்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யச் சொல்வோம் எனக் கூறினார்கள் என்கிறார் அபர்ணா பாவா.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பது பலருக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கலாம். நம்மில் சிலருக்கு இன்னும் காணொளிக் காட்சி மூலம் கூட்டங்களில் பங்கெடுப்பது பயத்தை ஏற்படுத்தவதாக இருக்கலாம். 

அப்படி பலரையும் காணொளி காட்சி முறையைச் சிறப்பாகப் பயன்படுத்த, பலருக்கு உதவி இருப்பதாக வணிக உளவியலாளரான ஸ்டுவர்ட் டஃப் கூறுகிறார்.

அதிகம் காணொளி காட்சி பயன்படுத்துவதை Zoom Fatigue என்கிறார்கள். நாம் ஒருவருடன் தொடர்புகொள்ள, எழுத்து, காணொளி, செல்போன் அழைப்பு , நேரடியாக முகம் பார்த்துப் பேசுவது என நான்கு முறைகளில் தான் தொடர்புகொள்ள முடியும்.

இதில் முகம் பார்த்துப் பேசுவது தான் மிகச் சிறந்தது. இந்த வரிசையில் காணொளிக்காட்சி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை காணொளிக் காட்சியைப் பயன்படுத்தும் போது, வீடியோ ஒரு நல்ல வழிமுறையாக இருக்காது என்கிறார் டஃப்.

கெட்டி

பட மூலாதாரம், GETTY IMAGES

நிறுவனங்கள், அலுவலக காணொளிக் கூட்டத்தை குறைவாகவும், ஊழியர்கள் மனம் விட்டு பேசும் யதார்த்தமான காணொளிக் கூட்டங்களைக் அதிகமாகவும் நடத்த வேண்டும் என்கிறார் டஃப். அலுவல் ரீதியிலான காணொளி கூட்டத்துக்கு வரும் போது தன்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களை தெளிவாக பேச வைக்கிறேன் என்கிறார் டஃப்.

காணொளி அழைப்புகள் மற்றும் காணொளிக்காட்சி சந்திப்புகளை அதிகம் பயன்படுத்துவது சிலருக்கு பிரச்னையாக இருக்கலாம். என்பதை ஆமோதிக்கிறார் அபர்ணா. ஸூம் ஃபேடிக் (Zoom Fatigue) என்பது உண்மை தான், ஆனால் அது ஸூம் நிறுவனத்தின் தவறல்ல என்கிறார்.

நீங்கள் உங்கள் வாழ்கையில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வப் போது மின் திரைகளைப் பார்ப்பதில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பிரச்னை, எல்லா நிறுவன ஊழியர்களைப் போல, ஸூம் ஊழியர்களையும் பாதித்தது. எங்களுக்கும் அதே பிரச்னைகள் இருக்கின்றன என்கிறார் ஸூம் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.

ஸூம்

பட மூலாதாரம், ZOOM

 
படக்குறிப்பு, 

அபர்ணா

எங்கள் ஊழியர்களின் மன நலத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். என்றார்.

ஸூமில் அடிப்படை சேவைகள் இலவசம். ஒரு கட்டத்துக்குப் பிறகு நிறுவனங்கள் பணம் செலுத்தினால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம். இதோடு இன்னும் சில வசதிகளும் இருக்கின்றன.

"இந்த ஆண்டில், ஸூம் நிறுவனம் வணிக ரீதியாக இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் போதும், கொரோனாவால் கொண்டாடும் மனநிலையில் நிறுவனம் இல்லை. இது ஒரு வருத்தமான காலகட்டம். உலகமே ஒரு பெரிய சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு கொண்டாடப் பிடிக்காது," என்கிறார் அபர்ணா.

https://www.bbc.com/tamil/global-55403983

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.