Jump to content

கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானர்.

Screenshot-2020-12-22-14-39-20-402-org-m

வானொலி வர்ணனையால் புகழ் பெற்ற, அப்துல் ஜப்பாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி, ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, புகழ் பெற்ற அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 81.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் வானொலி வர்ணனையால் ஏராளமானோர் ஈர்க்கப்பட்டனர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர், தமிழ்நாடு-கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டிக்கு வானொலியில் முதல் வர்ணனை செய்தார். 80-களில் அவரின் வர்ணனை புகழ்பெற்று திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து தொலைகாட்சிகளிலும் வர்ணனையாளராகப் பணியாற்றினார்.

hqdefault.jpg

‘அழைத்தார் பிரபாகரன்’ என்ற தலைப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததைப் பற்றி, அவர் எழுதிய நூல் வாசர்களால் விரும்பிப் படிக்கப்படும் நூலாக இருந்து வருகின்றது. இந்நிலையில், அப்துல் ஜப்பாரின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அப்துல் ஜப்பாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://tamil.news18.com/news/tamil-nadu/first-tamil-commentator-abdul-jabbar-passed-away-sur-383403.html

டிஸ்கி

கண்ணீர் அஞ்சலிகள் ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தமிழில் அசத்தல் வர்ணணை... மறைந்தார் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்!

அப்துல் ஜப்பார்

இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள்.

தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புக்கு முந்தைய வானொலி காலத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணணைக்குப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. வானொலி ரசிகர்களைத் தன் அழகு தமிழ் வர்ணணையால் கவர்ந்த அப்துல் ஜப்பார் இன்று காலை மறைந்தார். அவருக்கு வயது 81.

சாத்தான்குளத்தைச் சேர்ந்தவரான அப்துல் ஜப்பார் 1980-களில் இந்தியா விளையாடிய பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் வர்ணணை செய்துள்ளார். அப்போது வானொலியில் கிரிக்கெட் வர்ணணை செய்துகொண்டிருந்த பலருமே ஆங்கில வார்த்தைகளை கலந்துபேசுவது வழக்கம். ஆனால், அப்துல் ஜப்பாரின் வர்ணணையில் துளி ஆங்கிலம் கலக்காது. அழகு தமிழில், தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில், பரபரப்பான தருணங்களை தன் கணீர்குரல் மூலம் ரசிகர்களுக்கு கடத்தியவர் அப்துல் ஜப்பார்.

 

இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள். பிரபாகரன், அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இந்த அனுபவத்தை புத்தகமாகவும் எழுதியிருக்கிறார் அப்துல் ஜப்பார். சில ஹாக்கி போட்டிகளுக்கும் தமிழில் வர்ணனை செய்திருக்கிறார்.

அப்துல் ஜப்பார்
 
அப்துல் ஜப்பார்

கிரிக்கெட் காதலனாக, தமிழ் நேசனாக, வர்ணணை உலகில் எல்லோரின் மனங்களையும் கவர்ந்த அப்துல் ஜப்பாரின் புகழ் என்றும் அழியாது

 

https://sports.vikatan.com/cricket/iconic-tamil-cricket-commentator-abdul-jabbar-passed-away-in-sathankulam

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்.

 
e34ad283-25af-44d2-bcf0-97522cdaeaf1-696
 4 Views

‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய சாத்தான் குளம் திரு அப்துல் ஜபார் அவர்கள் இன்று (22.12.2020) காலை மாரடைப்பால் காலமானார். தமிழ் நாட்டில் பிறந்து இலங்கை வானொலி வாயிலாக பிரபலமடைந்த அப்துல் ஜபார், இலங்கை இந்திய மற்றும் தமிழ் நாடு அரசின் விருதுகளையும் பெற்றவர்.

கடந்த நாற்பதுகளிலே தமிழகத்தில் இருந்து வாணிபம் செய்யும் நோக்கில் அப்துல் ஜபார் அவர்களின் தந்தையார் இலங்கைக்கு சென்றிருந்தார். சிறுவனாக இருந்த அப்துல் ஜபார் வீட்டில் ஒரே மகன் என்பதால் அவரையும் தன்னுடனேயே அழைத்துச் சென்றிருந்தார். கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அப்துல் ஜபாருக்குக் கிடைத்தது.

இவரது ஊடகப் பயணத்தில் முதல் பகுதி இலங்கை வானொலியில் தொடங்கியது. 14 ஆண்டுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகள், நாடகங்கள் வழியாக திறன் வாய்ந்த ஊடகராக இயங்கும் வேளை, சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக மீண்டும் இந்தியா திரும்பினார். அங்கே பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்புடன், நாடக நடிப்பிலும் ஈடுபட்டார். பின்னர் இந்திய வானொலி வழியாக தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் தனி முத்திரையை பதித்திருந்தார்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பின் நிமித்தம் ஈழத்திற்கு சென்று தேசியத் தலைவரை நேரில் சந்தித்தார்.

 

 

153282e8-b7f4-411f-a9d6-fc475e8c41cf.jpe

தேசியத் தலைவர் வே . பிரபாகரன் அவர்கள் மீது அதீத பற்றுக் கொண்டவர் . தமிழர்களுக்கு ஈழ தேசம் மிக விரைவில் கிடைக்க வேண்டும் என தன் குரலால் ஊடகம் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியவர். வாராந்தம் இந்தியக் கண்ணோட்டம் என்ற தொகுப்பை இரு தசாப்தங்களைக் கடந்து புலம்பெயர் வானொலிகளுக்காக ஆரம்பத்தில் இருந்த அதே துடிப்போடு வழங்கியவர் .

இஸ்லாமியப் பெருமக்களின் புனித நோன்பு காலச் சிறப்புப் பகிர்வு, அரசியல் கருத்தாடல், தமிழக மற்றும் இந்தியத் தேர்தல் காலத்தில் நேரடிப் பகிர்வுகள் என்று புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் வானொலிகளுக்கான அவரின் பங்களிப்பை நீண்ட காலம் வழங்கி வந்தார். ஐரோப்பியத் தமிழ்ச் சமூகம் IBC தொலைக் காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் இவருக்கு ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருது வழங்கிக் கெளரவித்தது.

இறுதியாக நிதர்சனம் ஊடகத்திற்கு 2020 மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக மாவீரர்களின் அர்ப்பணிப்பு, தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர வரலாறு பற்றியும் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதுவே அவரின் இறுதி நேர்காணலாகவும் அமைந்தது. அந்த நேர்காணலில் தலைவரை தான் சந்தித்தது பற்றி உணர்வுபூர்வமாக கூறியிருந்தார்.

அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.

 

https://www.ilakku.org/?p=37722

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயர்பகிர்கிறேன் ; அப்துல் ஜப்பார் தமிழ் ஊடக உலகில் ஒரு வரலாறு! – எஸ்.கே.ராஜென்

 
  • எஸ்.கே.ராஜென்

ழைக்கும் பொழுதெல்லாம் அன்போடு பேசி, எமது ஐபிசி தமிழ் குடும்பத்தினர் அனைவரின் சுகம் கேட்டு மகிழும் எமது அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எமை விட்டுப் பிரிந்து விட்டார்.

%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%இன்று காலை கண்விழித்த வேளை எனது அன்புச்சோதரர் பீ.எச்.அப்துல் ஹமீட் அவர்களது குறுஞ்செய்தி:

“துயரச் செய்தி. ஜப்பார் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.”

பார்த்ததும் மௌனம் மனதை நிறைத்துக்கொண்டது.

எங்கள் மூத்த ஊடகவியலாளர் என்று வாய் இனிக்கக் கூறி உங்களை வானலையில் வரவேற்று மகிழ்வேனே. இனி அவ்வாறு நான் கூறினாலும் உங்கள் அன்பும் பாசமும் பரிவும் அறிவாழம் மிக்க அந்தக் குரலை உயிரோட்டமாகக் கேட்டிட முடியாது போய்விட்டதே!

தங்கள் உடல் உபாதை எதனையும் எள்ளளவும் பொருட்படுத்தாமல் தமிழ் உறவுகளுக்காய் ஊடகப்பணி ஆற்றிவந்தீர்களே!

வைத்தியமனை சென்று திரும்பிய வேளைகளிலெல்லாம் “I am perfectly alright Rajen” என்று கூறுவீர்கள். “பணியை மீளத்தொடங்கிவிட்டேன். சற்று நேரத்தில் நிகழ்ச்சியை அனுப்பி வைக்கிறேன்.” என்பீர்களே!

உங்களை வைத்தியமனையில் அனுமதித்துள்ளார்கள் என்ற தகவலை சகோதரி றூபி குமார் அவர்கள் அறியத்தந்தவேளை, சுகமடைந்து வருவீர்கள் வழமை போன்று “I am perfectly alright Rajen” என்று கூறுவீர்கள். பேசுவோம் என்று காத்திருந்தேன்.. ஏமாற்றம்!

‘ஒரு கேள்வி ஒரு பதில்’ மூலம் இந்தியாவை முழுமையாக உலகதமிழ் உறவுகளின் உள்ளங்களில் பதிய வைக்கும் நுணுக்கமான தகவல் களஞ்சியமாக தாங்கள் படைக்கும் “இந்தியக்கண்ணோட்டம்” இனி எப்படி ஒலிபரப்புவது?

ஐபிசி தமிழ் என்றாலே உற்சாகம் உங்களை நிறைத்துவிடும்.

நாம் இப்பொழுதும் உங்கள் நிகழ்ச்சிக்காகக் காத்திருக்கிறோம்!

மின்சாரத் துண்டிப்பு ஏற்படப்போகிறது என்றதுமே உடனே ஒரு மின்னஞ்சல் “கொஞ்சம் தாமதமாகும், அனுப்பி வைக்கிறேன் பொறுத்தருள்க” என்று, அந்தக் குறுந்தகவலிலும் தமிழில் விளையாடுவீர்களே!

அப்துல் ஜப்பார் அவர்கள் தமிழ் ஊடக உலகில் ஒரு வரலாறு!

உங்கள் தமிழ் உலகநாயகன் உள்ளத்திலும் உங்களைப்பதிய வைத்துள்ளது.

ஜப்பார் ஐயா உங்களை என்றும் மறவோம்! எங்கள் வாழ்க்கைக் காலம் முழுவதும் எம்மோடு நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.

https://thinakkural.lk/article/100120

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.