Jump to content

இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்ல முடியும்: பிரவேசிப்பதற்கு மட்டுமே தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்ல முடியும்: பிரவேசிப்பதற்கு மட்டுமே தடை!

பிரித்தானியாவில் இருந்து எந்தவொரு பயணிகள் விமானங்களுக்கோ பயணிகளுக்கோ இலங்கைக்குள் பிரவேசிக்க இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பிரித்தானியாவுக்கு-செல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலம் பொருளாதார /அரசியல் அகதிகளை ஏற்றிக்கொண்டு இலங்கையிலிருந்து விமானங்கள் பிரித்தானிய மண்ணில் தரை தொட்டுவிடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள்.

இன்று கொடூரமான வியாதிகளை சுமந்தவர்களை தாங்கியபடி இலங்கை மண்ணில் பிரித்தானிய  விமானங்கள் தரையிறங்கி விடுமோ என்று சிங்களவர்கள் அஞ்சுகிறார்கள்.

கொரோனா என்பது உலகிற்கு கொடுமையான நோயாக இருக்கிறதே என்று மனசு கனத்தாலும்,  ஏற்றத்தாழ்வில் குதிக்கும் அனைவருக்கும் உயிர் பயம் என்ற பேரில் சமத்துவத்தை இந்த ஒரு விசயத்திலாவது ஏற்படுத்தி சென்றது மகிழ்ச்சிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் இருந்து அரச ஆதரவு கள்ளப் பாஸ்போட் காரர்களையும் எந்தவித உடற்பரிசோதனையும் இல்லாமல் உள்வாங்கிக் கொண்ட நாட்டுக்கு.. இப்படி ஒரு நிலை.

ஆய்வின் படி.. புதிய மாறல் கொரானா வைரஸ் பிரிட்டனின் உற்பத்தியல்ல.. அது வெளியில் இருந்து தான் வந்திருக்கிறது. வந்த பாதையை கண்டுபிடித்தால்.. அது சொறீலங்காவாகக் கூட அமையலாம். வெயிட் அன்ட் சீ. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.