Jump to content

இன்றைய கிரிக்கட் செய்திகள்


Recommended Posts

அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே...

என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட கிரிக்கட் செய்திகளால் யாழ்கள விளையாட்டுத் திடலை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி.

யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய கிரிக்கட் செய்திகளை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய கிரிக்கட் செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம்.

இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்

புதிய பயிற்சியாளர் பேலீஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் டிரிவோர் பேலீஸ், நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்கவுள்ள இவர், இரண்டு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்.

உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி பதவி விலகுவதாக அறிவித்தார்.

இலங்கை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஐந்தாவது ஆஸ்திரேலியர் டிரிவோர் பேலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

-B.B.C-

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை விபரம் அறிவிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பின் பாகிஸ்தான் அணி நவம்பர் 2 ஆம் திகதி முதல் இந்தியா வந்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட்டில் பங்கேற்கிறது. இதற்கான இடங்கள், திகதி இந்திய கிரிக்கெட் சபை செயற்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

போட்டி அட்டவணை வருமாறு;

இந்தியா- அவுஸ்திரேலிய தொடர்

செப். 29 முதல் ஒரு நாள் போட்டி, பெங்களூர்

அக்.2 2-ஆவது ஒரு நாள் போட்டி, கொச்சி

அக்.5 3 -ஆவது ஒரு நாள் போட்டி, ஐதராபாத்

அக்.8 4 ஆவது ஒரு நாள் போட்டி, கவுகாத்தி

அக்.11 5 ஆவது ஒரு நாள் போட்டி, பரோடா

அக்.14 6 ஆவது ஒரு நாள் போட்டி, நாக்பூர்

அக்.17 7 ஆவது ஒரு நாள் போட்டி, மும்பை

இந்தியா- பாகிஸ்தான் தொடர்

நவ.2 பாகிஸ்தான் அணி வருகை

நவ.6 முதல் ஒரு நாள் போட்டி, பரிதாபாத்

நவ.9 2 ஆவது ஒரு நாள் போட்டி, மொகாலி

நவ.12 3 ஆவது ஒரு நாள் போட்டி, கான்பூர்

நவ.15 4 ஆவது ஒரு நாள் போட்டி, குவாலியர்

நவ.18 5 ஆவது ஒரு நாள் போட்டி, ஜெய்பூர்

நவ.22-26 முதலாவது டெஸ்ட், டெல்லி

நவ.30 - டிச.4 2 ஆவது டெஸ்ட், கொல்கத்தா

டிச.8 -12 3 ஆவது டெஸ்ட், பெங்களூர்.

-dinakkural-

Link to comment
Share on other sites

அணியிலிருந்து நீக்கம்-முனாப் படேல் டென்சன்

சென்னையில் எம்ஆர்எப் பவுண்டேஷனில் சிறப்பு பயிற்சி எடுத்து எனது திறமையை அடுத்த போட்டியில் நிச்சயம் நிரூபிப்பேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முனாப் படேல் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியினர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்ல இருக்கின்றனர். இந்த அணியில் முனாப் படேல் இடம் பெறவில்லை.

முனாப் படேல் முழுத் தகுதியுடன் இல்லாததால் அவரை தேர்ந்தெடுக்கவில்லை என தேர்வு குழு தலைவர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

இதனால் எரிச்சலான படேல் தனது சொந்த கிராமமான குஜராத்திலுள்ள பரூக் மாவட்டத்திலுள்ள இகாருக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து படேல் கூறுகையில், நான் முழு தகுதியுடன் இருந்தும் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. காரணம் என்னவென்று தெரியவில்லை.

சொந்த ஊரில் சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு, சென்னையிலுள்ள எம்ஆர்எப் பவுண்டேஷனின் சிறப்பு பயிற்சி எடுக்கவுள்ளேன். அடுத்த போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று எனது திறமையை நிச்சயம் நிரூபிப்பேன் என்றார்.

-thatstamil-

Link to comment
Share on other sites

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட விரும்புவதாக கூறுகின்றார் லாரா

மீண்டும் கிரிக்கெட்டில் கால் பதிக்க லாரா விரும்புகிறார். இதனை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக இருந்த 38 வயதான பிரையன் லாரா 2 மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். முதலில் ஒரு நாள் போட்டியிலிருந்து மட்டும் விலக முடிவு செய்திருந்த அவர் கடைசி நேரத்தில் டெஸ்டில் இருந்தும் விலகினார். இதையடுத்து அணிக்கு புதிய கப்டனாக சர்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்டில் பல சாதனைக்குச் சொந்தக்காரரான லாராவால் கிரிக்கெட்டை மறக்க முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார். இதனை அவர் மறைமுகமாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். `நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று நினைக்கிறேன். 6 அல்லது 8 மாதங்கள் கிரிக்கெட் இல்லாமலிருந்தால் அதை மறந்து விடுவேன் போல் இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டை நான் இன்னும் இழக்க விரும்பவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் அணியிலிருந்தும் 63 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கிறதே என்ற ஒரு கேள்விக்கு பதிலளித்த லாரா `தனிப்பட்ட முறையில் முடிந்த வரை சிறப்பாக விளையாடியிருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், ஒரு அணியாக நன்றாக செயற்படவில்லை என்பது இன்னும் எனக்கு வருத்தமாகவும் , உறுத்தலாகவும் இருக்கிறது' என்றார்.

-thinakkural-

Link to comment
Share on other sites

சச்சினின் டெஸ்ட் சத சாதனையை முறியடிப்பேன் என்கிறார் பொண்டிங்

டெஸ்ட் போட்டியில் அதிக சதமடித்தவர் என்ற சாதனையில் டெண்டுல்கர் உள்ளார். 137டெஸ்டில் விளையாடியிருக்கும் அவர் 37 சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கவாஸ்கர், லாரா ஆகியோர் தலா 34 சதங்கள் அடித்துள்ளனர். இருவரும் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது லாரா மீண்டும் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கிபொண்டிங் 33 சதம் அடித்துள்ளார். டெண்டுல்கரின் 37 சதத்தை முறியடிப்பேன் என்று பொண்டிங் கூறியுள்ளார்.

பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

கடந்த தொடர்களில் அவர் இரண்டு மூன்று சதம் அடித்தார். இதனால், அவர் 37 ஆவது சதத்தில் உள்ளார். நான் 33 சதத்தில் இருக்கிறேன். ஆனால், என்னை விட அவர் அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறார். என்னை விட வயதானவர். நானும் நீண்ட காலம் விளையாடும் பட்சத்தில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பேன் அதற்கான நேரத்திற்கு காத்திருக்கிறேன்.

டெண்டுல்கர் சமீபத்தில் பங்களாதேஷ் தொடரில் ஓட்டங்கள் குவித்தார். ஆனால், வலுவான அணிக்கு எதிராக அவர் ஓட்டம் குவிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை டெண்டுல்கர் தொடர்ந்து ஆட வேண்டுமானால், தனது துடுப்பாட்டத்தில் முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

ஸ் ரீவோ ஓய்வு பெறும் கட்டத்தில் கூட சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சிறந்த வீரராகவே இருந்தார். டெண்டுல்கர் சிறந்த வீரர். ஆனால், விளையாட்டில் தொடர்ந்து சிறப்பாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 3 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சியானதாகும். 1999இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்ற கடுமையாக போராடினோம்.

தொடக்கத்திலேயே பல போட்டிகளில் தோற்றோம். 2003, கடந்த உலகக் கிண்ணத்தில் நல்ல முன்னேற்றமிருந்தது. ஆனால், அதேநேரத்தில் நாங்கள் நம்ப முடியாத வகையில் கிரிக்கெட் விளையாடி வருகிறோம் என்றார்.

33 வயதான பொண்டிங் 110 டெஸ்ட்டில் விளையாடியிருக்கிறார். அவருக்கும், டெண்டுல்கருக்கும் 27 டெஸ்ட் வித்தியாசம் உள்ளது. பொண்டிங்கின் டெஸ்ட் சராசரி 59. 29. டெண்டுல்கரின் சராசரி 55. 44 ஆகும்.

-thinakkural-

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய அணியின் வெற்றியின் இரகசியம் என்ன என்று கூறுகிறார் அணித்தலைவர் பொண்டிங்

" ஒரு தொடருக்கு தயாராகும் போது இரண்டாவது இடத்திலிருக்கும் அணியாக நினைத்துக் கொள்வோம். இன்னும் சிறப்பாக செயல்பட்டு முன்னேற துடிப்பதே அவுஸ்திரேலியாவின் வெற்றியின் ரகசியம்" என்கிறார் கப்டன் ரிக்கி பொண்டிங்.

ஒரு நாள் போட்டிகளில் அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் அவுஸ்திரேலியாவின் கப்டன் ரிக்கி பொண்டிங். தற்போது பெங்களூர் வந்துள்ள அவர், எத்தனை வெற்றிகள் வந்தாலும் முழு மனநிறைவு பெறாததே அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்கிறார்.

இது குறித்து பொண்டிங் கூறியதாவது; ஒரு தொடருக்கான பயிற்சியின் போது, நாங்கள் இரண்டாவது இடத்திலிருக்கும் அணியாக நினைத்து கொள்வோம். இதுவரை சாதித்தது எதையும் பெரிதாக எண்ண மாட்டோம். அதனால் மகிழ்ச்சியடையவும் மாட்டோம். அனைத்து தொடர்களுக்கும் கடுமையாக முயற்சி செய்வோம்.

களத்தில் இறங்கும் போது எந்த இலக்கையும் நிர்ணயிக்க மாட்டோம். இலக்கு நிர்ணயித்தால் மிகப்பெரும் சாதனைகளை செய்ய முடியாது. எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்படுவோம். இந்திய அணி தற்போது கடும் நெருக்கடியில் விளையாடி வருகிறது. இதிலிருந்து மீண்டு வர அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் பார்த்த துடுப்பாட்ட வீரர்களில் சச்சின் தான் சிறந்த வீரர். நானும் அவரைப் போல் சிறந்த வீரராக வருவேன். இளம் வீரராக இருந்த போது எனக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதே போல் வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பந்துவீச்சாளராக இருப்பது மிகவும் எளிது. துடுப்பாட்டக்காரர் சிறிய தவறிழைத்தால் போதும் அவரை வீழ்த்திடலாம் என்றும் பொண்டிங் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஓட்டங்களுக்கும் பொண்டிங் ஒரு நாள் போட்டிகளில் எடுக்கும் ஒவ்வொரு ஓட்டங்களுக்கும், ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக தனியார் நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இத்தொகையை ஏழைச் சிறுவர்களின் படிப்பு செலவுக்கு வழங்கப்படும். இதையடுத்து இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்களை குவிக்கப் போவதாக பொண்டிங் தெரிவித்துள்ளார்.

-thinakkural-

Link to comment
Share on other sites

பொன்டிங்கின் இரகசியம் தான் ஜம்முவின் இரகசியமும்

:P :icon_idea:

Link to comment
Share on other sites

தாழ்ந்தது தரம் வீழ்ந்தது அணி

* இதுதான் இன்றைய மேற்கிந்திய அணியின் நிலை

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் தோல்விப் பயணம் தொடர்கிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கிய முதல் இரண்டு (1975, 1979) முறை சாம்பியனாக வெற்றி நடை போட்ட மேற்கிந்திய அணி, தற்போது தரம் தாழ்ந்து திணறி வருகிறது.

ஒன்பதாவது உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில் நடத்திய மேற்கிந்திய அணியால், அரையிறுதிக்குக் கூட முன்னேற முடியவில்லை. இத்தொடருடன் உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர் லாராவும் தனது ஓய்வை அறிவித்து விட்டார்.

லாரா இல்லாத மேற்கிந்திய அணி, கத்துக்குட்டியை போல் காட்சியளிக்கிறது. இன்னும் 2 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் எனக் கூறிய லாரா, கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக முன்னதாகவே ஓய்வை அறிவித்து விட்டார். லாராவுக்கும் கிரிக்கெட் சபைக்குமிடையிலான மோதல் போக்கு, அணியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

லாராவுக்குப் பின் கப்டன் பொறுப்பேற்றுள்ள சர்வானுக்கு பெரியளவில் வீரர்களிடம் வரவேற்பில்லை. அணியை வழிநடத்தி செல்லும் அளவுக்கு அனுபவமும் அவரிடம் இல்லை. கப்டன் பொறுப்பேற்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் சுற்றுப்பயணத்திலேயே பலத்த காயத்துடன் நாடு திரும்பியுள்ளார் சர்வான். தவிர, துடுப்பாட்டத்தில் நடுவரிசை படுமோசமாகவுள்ளது. தொடக்க வீரர் கெய்ல், உலகக் கிண்ணத் தொடரிலிருந்து `போர்ம்' இழந்து தவித்து வருகிறார்.

ஆனால், அவருக்குப் பதில் மாற்று வீரரை களமிறக்குமளவுக்கு, திறமையான தொடக்க வீரர்கள் கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தும் தொடர்ந்து சொதப்பி வருகிறார் கெய்ல். துடுப்பாட்டத்தில் சந்தர்போலும், பந்துவீச்சில் கொலிமோரும் ஆறுதலாக இருக்கிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய வீரர்களுக்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையே சுமுக உறவு இல்லை. சபைக்கு எதிராக செயல்பட்ட லாரா தூக்கி எறியப்பட்டார். புதிதாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் மூரின் செயற்பாடுகள் மீது வீரர்களுக்கு நம்பிக்கையில்லை. வீரர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டு, கிரிக்கெட் சபை அவுஸ்திரேலியாவின் டேவிட் மூரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

வோல்ஷ்,அம்புரோஸ் போன்ற உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர்களுடன் எதிரணிகளை மிரட்டிக்கொண்டிருந்த மேற்கிந்திய அணி, தற்போது சரியான பயிற்சி இல்லாமல் துவண்டு போயுள்ளது.

மீண்டும் லாரா?

அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சிலர், வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தவிர, டெஸ்ட் போட்டிகளில் லாரா மீண்டும் விளையாட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். அணியின் நலனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு லாராவை பலரும் அணுகியுள்ளனர். ஆனால் லாரா இன்னும் மௌனம் சாதித்து வருகிறார்.

Link to comment
Share on other sites

அத்தபத்து மீது என்ன நடவடிக்கை எடுப்பது? இலங்கை கிரிக்கெட் சபை விரைவில் கூடுகிறது

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து திடீரென விலகியதற்காக அத்தபத்து மீது கிரிக்கெட் சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் வரும் 25 ஆம் திகதி தொடங்குகிறது. இத்தொடருக்கான இலங்கை அணியில் அத்தபத்து தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அத்தபத்து அறிவித்தார். இவர் தற்போது இங்கிலாந்தில் கிளப் போட்டிகளில் ஆடிவருகிறார். இது குறித்து இலங்கைக் கிரிக்கெட் சபைச் செயலர் மதிவாணன் கூறுகையில்;

"ஒப்பந்தத்தை இவர் மீறியுள்ளாரா? என்பது குறித்து ஆராய்வோம். இவர் மீறியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தனது திறமையை நிரூபிக்க அவருக்கு இத்தொடர் சிறந்த வாய்ப்பு. அவர் விலகியது வருத்தமளிக்கிறது" என்றார்.

மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. எனினும் இவருக்குப் பதிலாக ஜெயசூரியா அணியில் இடம்பெற மாட்டார் என்பது உறுதி. அணி நிர்வாகம் இவருக்கு இத்தொடரில் ஓய்வளித்ததையடுத்து, தற்போது கவுன்டி போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அத்தபத்து 16 சதங்களுடன்' 5 ஆயிரத்து 330 ஓட்டங்கள் குவித்துள்ளார். 267 ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரத்து 529 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 11 சதங்களும் அடங்கும்.

Link to comment
Share on other sites

குட்டி யார் அத்தபத்து என்றா???

Link to comment
Share on other sites

பந்தோ அப்ப வீரை இல்லையா???குட்டி தாங்கள் ஒட்டும் கருத்தில் ஒருத்தரும் விவாதம் செய்வதில்லையே என்னையும் உங்களையும் போன்ற அறிவாளிகளை தவிர ஏன்???

:P :unsure: :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிரிக்கெட்-வங்கதேச அணியை வீழ்த்தியது இலங்கை அணி

வெற்றி நாயகன் முரளிதரன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் 234 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதல் ஆட்டத்தில் 89 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டத்தில் 254 ஓட்டங்களையும் வங்காளதேச அணி எடுத்தது. இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 577 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் சார்பில் அதன் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இந்தப் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். வங்காளதேச அணிக்கு எதிராக இலங்கை பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி இதுதான்.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ண் அவர்களின் சாதனையை சமன் செய்ய முத்தையா முரளிதரனுக்கு இன்னமும் 25 விக்கெடுகள் மட்டுமே தேவை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இது வரை முரளிதரன் 683 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

:angry: :angry: முரளிதரன் விழுத்தினா தான் என்ன விழுதாட்டி தான் என்ன........... :angry: :angry:

Link to comment
Share on other sites

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே லோட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் இங்கிலாந்து அணி 79 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஓட்ட விரங்கள் கீழே..

47773620ux7.jpg

98633957yy2.jpg

bvbrj8.jpg

Ian Bell சிறப்பாக துடுப்பாடி 56 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

-Cricinfo-

Link to comment
Share on other sites

மேற்கிந்திய தீவுகள் அணி எனி பழைய நிலைமைக்கு வாறது என்றா முடியாத காரியம்.........அத்துடன் லாராவின் ஓய்வும் மேற்கிந்திய அணியை பின்னுக்கு இட்டு செல்லும் என்றே கூறலாம்...........

:unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

71195411ap5.png

Marcus Trescothick

செப்ரம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள Twenty 20 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து துடுப்பாட்டச் சங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சிறந்த ஆட்டக்கரருமான Marcus Trescothick இன் பெயர் சேர்க்கப்பட்டள்ளது.

nonameec5.jpg

www.cricinfo.com

Link to comment
Share on other sites

வினோ அண்ணா கிரிக்கட் சேய்தி ஒரே சலிப்பு தட்டுது ஏதாவது புதுசா ஒன்றும் இல்லையோ........ :P :huh: :P

Link to comment
Share on other sites

வினோ அண்ணா கிரிக்கட் சேய்தி ஒரே சலிப்பு தட்டுது ஏதாவது புதுசா ஒன்றும் இல்லையோ........ :P :huh: :P

செப்ரம்பர் மாதம் வரைக்கும் கிரிக்கட் செய்திகள் கொஞ்சம் சலிப்பாக தான் இருக்கும் கொஞ்சம் பொறுத்திருங்கள் Twenty 20 ஆரம்பிக்கும் வரைக்கும். :lol:

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜெஃப் லாசன் நியமனம்

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளாரான ஜெஃப் லாசன் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை ஆஸ்திரேலியாவின் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பயிற்சியாளராக இருந்து, கடந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது மர்மான முறையில் மரணமடைந்த பாப் உல்மரின் மரணம் தொடர்பில் இருந்த சர்ச்சை விலகியதையடுத்தே தான் இந்தப் பொறுப்பை ஏற்பதாகவும் ஜெஃப் லாசன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணிக்கு கடந்த 11 ஆண்டுகளில் 8 பயிற்சியாளர்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர் என்றும், குறிப்பாக பந்துவீசும் அனைத்துத் துறைகளிலும் அவர்களிடம் பெரும் திறமை உள்ளது என்றும் ஜெஃப் லாசன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர்களிடம் இருக்கும் திறமையை ஒருங்கிணைத்து அவர்கள் சீரான வகையில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற வழிசெய்வதுதான் தனது முதல் கடமையாக இருக்கும் எனவும் ஜெஃப் லாசன் கூறுகிறார்.

--B.B.C-

Link to comment
Share on other sites

இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான முதலாவது ரெஸ்ற் கிறிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் 76 ஓவர்களில் 252 ஓட்டங்களை பெற்று இரண்டு விக்கெற்றுக்களை மாத்திரம் இழந்த நிலையில் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

cricketdc4.jpg

Link to comment
Share on other sites

ஒரு நாள் போட்டிகளில் சச்சின் 15,000 ரன்கள்!

சனி, 30 ஜூன் 2007( 15:03 ஈஸ்T )

Wஎப்டுனிஅ

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 15,000 ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் நகரில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நாள் போட்டியில் அரை சதத்தை எட்டியபோது, ஒரு நாள் போட்டிகளில் 15,000 ரன்களையும் சச்சின் எட்டிவிட்டார்.

387 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், 41 சதங்களுடனும், 79 அரை சதங்களுடனும் இவ்வளவு ரன்களைக் குவித்து மேலும் ஒரு உலக சாதனையை உருவாக்கியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் இன்னிங்ஸ் சராசரி 44.10 ரன்களாகும்.

http://tamil.webdunia.com/sports/cricket/n...070629044_1.htm

Link to comment
Share on other sites

ஸ்ட்ராஸ் 96, இங்கிலாந்து 218/2

வியாழன், 19 ஜூலை 2007( 21:12 ஈஸ்T )

Wஎப்டுனிஅ

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 96 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, மைக்கேல் வானுடன் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 142 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை 218 ரன்களுக்கு உயர்த்தியுள்ளார்!

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களை எடுத்துள்ளது.

அபாரமாக ஆடிய ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 186 பந்துகளில் 14 பெளண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனில் கும்ளேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மைக்கேல் வான் 166 பந்துகளில் 10 பெளண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றார்.

மறுமுனையில் கெவின் பீட்டர்சன் ஆடவந்துள்ளார்.

------

இங்கிலாந்து 169/1 (48 ஓவர்கள்)

இங்கிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் அலாஸ்டர் குக் விக்கெட்டை மட்டுமே இழந்து 169 ரன்களை எடுத்துள்ளது!

பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலாஸ்டர் குக், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நல்ல துவக்கத்தைத் தந்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 14.4 ஓவர்களிலேயே 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாஸ்டர் குக் ஆட்டமிழந்தார்.

அலாஸ்டர் குக் விக்கெட்டை செளரவ் கங்கூலி வீழ்த்தினார். கங்கூலியின் பந்தை தடுத்தாட முயன்று எல்.பி.டபிள்யூ. ஆகி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் குக். அடுத்து ஆடவந்த வானுடன் இணை சேர்ந்து அணியின் எண்ணிக்கை 48வது ஓவரின் முடிவில் 169 ரன்களுக்கு உயர்த்தினார் ஸ்ட்ராஸ்.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 141 பந்துகளை எதிர்கொண்டு 11 பெளண்டரிகளுடன் 67 ரன்களும், அணித் தலைவர் மைக்கேல் வான் 114 பந்துகளில் 8 பெளண்டரிகளுடன் 48 ரன்களும் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

http://tamil.webdunia.com/sports/cricket/n...070719023_1.htm

ஸ்ட்ராஸ் 96, இங்கிலாந்து 218/2

வியாழன், 19 ஜூலை 2007( 21:12 ஈஸ்T )

Wஎப்டுனிஅ

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 96 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, மைக்கேல் வானுடன் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 142 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை 218 ரன்களுக்கு உயர்த்தியுள்ளார்!

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களை எடுத்துள்ளது.

அபாரமாக ஆடிய ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 186 பந்துகளில் 14 பெளண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனில் கும்ளேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மைக்கேல் வான் 166 பந்துகளில் 10 பெளண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றார்.

மறுமுனையில் கெவின் பீட்டர்சன் ஆடவந்துள்ளார்.

------

இங்கிலாந்து 169/1 (48 ஓவர்கள்)

இங்கிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் அலாஸ்டர் குக் விக்கெட்டை மட்டுமே இழந்து 169 ரன்களை எடுத்துள்ளது!

பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலாஸ்டர் குக், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நல்ல துவக்கத்தைத் தந்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 14.4 ஓவர்களிலேயே 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாஸ்டர் குக் ஆட்டமிழந்தார்.

அலாஸ்டர் குக் விக்கெட்டை செளரவ் கங்கூலி வீழ்த்தினார். கங்கூலியின் பந்தை தடுத்தாட முயன்று எல்.பி.டபிள்யூ. ஆகி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் குக். அடுத்து ஆடவந்த வானுடன் இணை சேர்ந்து அணியின் எண்ணிக்கை 48வது ஓவரின் முடிவில் 169 ரன்களுக்கு உயர்த்தினார் ஸ்ட்ராஸ்.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 141 பந்துகளை எதிர்கொண்டு 11 பெளண்டரிகளுடன் 67 ரன்களும், அணித் தலைவர் மைக்கேல் வான் 114 பந்துகளில் 8 பெளண்டரிகளுடன் 48 ரன்களும் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.