Jump to content

கள்ளு தயாரிக்கும் முறை...


Recommended Posts

அப்பம் எண்டா கூட எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் பால் அப்பம் எண்டா ருசியே தனி.

ஊரில அப்பத்துக்கு போட போறம் எண்டா காலேலயே போய் ஒரு டம்ளரில உடன் கள்ளு வாங்கி வந்து மணக்க மணக்க விட்டு குழைச்சு செய்வம். இங்க எங்க பனைமரமா நிக்குது. இல்லை கடையில எங்காச்சும் வாங்க முடியுமா என்ன...அதுக்காக ஒரு வழி சமீபத்தில அறிஞ்சன். (ஆமா இது எப்பவோ எனக்கு தெரியும் எண்டு தெரிஞ்சவை பேசாதைங்கோ) இது தெரியாதவைக்கு மட்டும்.

செய்முறை:

ஒரு டம்ளரில இளஞ் சூடான தண்ணியை தேவையான அளவு விடவும்.

அப்புறம் ஈஸ்ட் , சீனி தண்ணி அளவுக்கேற்ப போட்டு...கொஞ்ச நேரம் கலக்கி ஊற விடவும்.

கொஞ்ச நேரத்தால மெல்லிய கள்ளு வாசம் வீசும். அப்புறம் எடுத்து அப்பத்துக்கு பயன்படுத்தலாம்.

கூட எல்லாருக்கும் அளவுகள் கொஞ்சம் குறிப்புக்கு போட தெரியும்.

அளவு தெரியாதவர்கள் வேணும்னா நான் கேட்டு சொல்றேன்.

பி.கு: அப்பத்துக்கு தான் நான் சொன்னது. B)

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

ஆன்ரி..உம்மையிலேயே நாவூறுது.....

கள்ளுக்கில்லை..அப்பத்துக்கு :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் விழுந்தடித்து வந்து பாா்த்தேன்.ஆக அப்பத்துக்கு மட்டும்தானாா :P .என்றாலும் தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

உப்பிடித்தான் கசிப்பு காச்சுறவையோ?! :P

Link to comment
Share on other sites

அதுசரி அப்பம் என்றால் கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்குது, ஆனால் கள்ளு என்றால் என்ன? முறுக்கா?

Link to comment
Share on other sites

ஓமோம்.. கள்ளுக் குடிச்சுப்போட்டு, ஏவறைவிட்டுக்கொண்டு, முறுக்கிக் கொண்டு வேலையளை மூரியளை பிரிக்கிறவை கனபேர் பாருங்கோ.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியா மாமி, இங்கே கிடைக்கும் யோகட்டை சரியாக மூடாமல் குளிரூட்டியில் ஒருவாரம் வைத்தாலும் கள்ளு வாசனை தான் வரும். அதைப் பாவிக்கலாமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கள்ளு செய்கின்ற முறையை அப்பத்துக்கு மட்டும் தான் பாவிக்கலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் கஸ்டப்பட்டுத் தயாரிக்கத் தேவை இல்லை. பனை மரத்தில் எறிக் குடிக்கலாம்

Link to comment
Share on other sites

ஓமோம்.. கள்ளுக் குடிச்சுப்போட்டு, ஏவறைவிட்டுக்கொண்டு, முறுக்கிக் கொண்டு வேலையளை மூரியளை பிரிக்கிறவை கனபேர் பாருங்கோ.. :lol:

ம்..

சின்ன வயதில் பார்த்த ஞாபகம்.

எங்கள் தோட்டக்காணிக்கு அண்மையாக ஒரு குடும்பம் வசித்துவந்தார்கள். குடும்பத் தலைவன் பிற்பகலில் கண்மூடித்தனமாக கள் குடித்துவிட்டு வருவார். அவர் வீட்டிலுள்ளவர்கள் பயத்தில் படலையை கட்டிவிடுவார்கள். :lol::D

இவர் ஆத்திரத்தில் படலையை பிணைச்சல் பக்கமாக பிடுங்கிக்கொண்டு உள்ளே போய்விடுவார். :D பின் வீட்டினுள் சண்டை பிடிப்பதும் படலையை பிரித்துக்கொண்டு வெளியே வருவதுமாக அதனை ஒருவழிபண்ணிவிடுவார். :P :P

வெறி முறிந்ததும் நன்கு குளித்து திருநீறு பூசி வந்து நின்று படலையை திருத்துவார். அடுத்த நாள் திருவிழாவுக்காக. :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறி முறிந்ததும் நன்கு குளித்து திருநீறு பூசி வந்து நின்று படலையை திருத்துவார். அடுத்த நாள் திருவிழாவுக்காக.

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க வீட்டிலையும் அப்பம் செய்யிறனாங்கள். இப்பிடி ஒண்ணும் விடுறேலையே. :lol:

ஹீ ஹீ சகி மாமி ஆகிட்டாவா?

மாமி ஆத்துல ஆத்துக்காரர் சேமமா இருக்கிறாகளா?

:lol: :P :lol:

ஏன்டா அம்பி. மாமாவை பத்தி கேட்டு மாமியை டென்சன் ஆக்குறீங்க.? :lol:

Link to comment
Share on other sites

எங்க வீட்டிலையும் அப்பம் செய்யிறனாங்கள். இப்பிடி ஒண்ணும் விடுறேலையே. :lol:

ஏன்டா அம்பி. மாமாவை பத்தி கேட்டு மாமியை டென்சன் ஆக்குறீங்க.? :lol:

மாமிட்ட கேட்டா பாட்டி வாறாங்க :angry: :angry:

Link to comment
Share on other sites

ஓமோம்.. கள்ளுக் குடிச்சுப்போட்டு, ஏவறைவிட்டுக்கொண்டு, முறுக்கிக் கொண்டு வேலையளை மூரியளை பிரிக்கிறவை கனபேர் பாருங்கோ.. :lol:

என்ன சொல்ல வாறீங்க அங்கிள் பிரியா சகி கசிப்பு காச்சிறவா எனவா நல்லா இல்லை சொல்லி போட்டன் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

சகி அக்கா இது என்ன சைட் பிசினசோ

:P :lol:

ஆன்ரி..உம்மையிலேயே நாவூறுது.....

கள்ளுக்கில்லை..அப்பத்துக்கு :P

மாமா என்ட ஆக்கா உமக்கு ஆண்டியோ உது நல்லா இல்லை சொல்லிட்டன்

:angry: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளு தயாரிக்கிறாங்களாக்கும் எண்டு வந்து பாத்தா அப்பம் தயாரகுது

Link to comment
Share on other sites

கள்ளு தயாரிக்கிறாங்களாக்கும் எண்டு வந்து பாத்தா அப்பம் தயாரகுது

கறுப்பிக்கு கள்ளு வேண்டுமாயின் கு.சா. அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு கள்ளு வேண்டுமாயின் கு.சா. அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...........கறுப்பிக்க

Link to comment
Share on other sites

பிரியசகி

மணம் மட்டும்தான் கள் மாதிரி இருக்கா?

அதன் சுவை, குணம் எல்லாம் கள்மாதிரி இருந்தா சொல்லுங்க?

அடிச்சு கனகாலம் ஆகிவிட்டது. உங்கட புண்ணியத்திலை, தினமும் திருவிழா போகலாம்! :lol:

Link to comment
Share on other sites

சகி கள்ளு தயாரிக்கும் முறைக்கு நன்றி :D

எனக்கும் அப்பம் எண்டால் ரொம்ப விருப்பம் ....... ஆனால் செய்யத் தெரியாது..... :D இந்த முறை லீவுக்கு செய்து பழகப்போறன். நல்லா வந்திச்செண்டால் எல்லாருக்கும் அனுப்பிவிடுறன். ;) :D

Link to comment
Share on other sites

கள்ளுத்தயாரிக்கிற முறையா...

அடப்பாவிங்களா....

அப்பமா...

கள்ளு ஸ்ட்ரோங்கா...

எங்கே கிடைக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுத்தயாரிக்கிற முறையா...

அடப்பாவிங்களா....

அப்பமா...

கள்ளு ஸ்ட்ரோங்கா...

எங்கே கிடைக்கும்...

உதைத்தான் நானும் தேடுறன் :P

Link to comment
Share on other sites

சகி கள்ளு தயாரிக்கும் முறைக்கு நன்றி :D

எனக்கும் அப்பம் எண்டால் ரொம்ப விருப்பம் ....... ஆனால் செய்யத் தெரியாது..... :D இந்த முறை லீவுக்கு செய்து பழகப்போறன். நல்லா வந்திச்செண்டால் எல்லாருக்கும் அனுப்பிவிடுறன். ;) :D

அனி பாட்டி உங்களை நினைக்க எனக்கு என்ன சொல்லுறது என்று தெறியவில்லை எல்லாருக்கும் அனுப்புங்கோ எல்லாரும் அடுத்த நாள் யாழுக்கு வந்தா அடுத்த நாள் எனக்கு தாங்கோ

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.