Jump to content

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம்

christmas-featured-article  
 

‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது. ‘கிறிஸ்மஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது.

உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழா கிறிஸ்துமஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா.

மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, அங்கிருந்தவர்களுக்கு இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும் பேரானந்தமும் தெரிந்திருக்கும்.

மகிழ்ச்சியான இப்பெருவிழாவின் மீது பெருந்தொற்று உருவாக்கிய சோகத்தின் கருநிழல் இந்த ஆண்டு படிந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய கரோனா நோய்க்கிருமியின் கோரத்தாண்டவம், உலகெங்கும் பரவி ஓராண்டில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்றிருக்கிறது.

புன்னகையில் கண்ணீர்

இந்நாடுகளில் இந்த விழாக் காலத்தில் எல்லா இடங்களிலும் தவறாது ஒலிக்கும் கிறிஸ்துமஸ் பாடல்களோடு துயர கீதங்களும் சேர்ந்தே ஒலிக்கும். குடும்பத்தில் ஒருவரை அல்லது நெருங்கிய நண்பரைப் பறிகொடுத்தோரின் புன்னகையில் கண்ணீர் ஒளிந்திருக்கும்.

கிறிஸ்துமஸ் விழாவின்போது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் பரிசு தரும் பழக்கம் இருக்கிறது. நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக ‘விலகியிருங்கள். ஆறடி தூரமாவது தள்ளி நில்லுங்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ‘கிறிஸ்துமஸ் பார்ட்டீஸ்’ என்றழைக்கப்படும் விழாக்கால விருந்துகளிலும் ஒருவரையொருவர் வாழ்த்தும்போதும் அணைத்துக் கொள்வதும், ஆரத்தழுவுவதும், முத்த மிடுவதும், கை குலுக்குவதும் அங்கே இயல்பாக நிகழ்பவை. ஆனால், நோய் அச்சத்தால் இந்த ஆண்டு இவற்றை கவனமாகத் தவிர்க்க வேண்டியிருக்கும்.

நம்பிக்கை மகிழ்ச்சி அவசியம்

இந்தச் சூழலில் இயல்பாக எழக்கூடிய கேள்வி என்ன? இத்தனைக்கும் மத்தியில் நாம் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்தான் வேண்டுமா?

இன்றைய சூழலில் மட்டுமல்ல புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போதும், ‘இந்த வேளையில் விழா அவசியமா?, கொண்டாட்டம் தேவையா?' என்று கேட்கும் சிலர் எப்போதும் இருப்பார்கள்.

கார்ல் ரானர், ரானல்ட் ரால்ஹைசர் போன்ற அறிஞர்கள் இக்கேள்விக்குத் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள். சோதனைகள் சூழும் வேளையில் வேதனையில், விரக்தியில் வீழ்ந்து கிடப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. சோகம் நம்மை முடக்கிப் போடும். சூழ்ந்திருக்கும் சவால்களைச் சந்திக்க நாம் முனைந்து எழ வேண்டும். அப்படி எழுவதற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அவசியம்.

நம் மனத்துக்கு வேண்டிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதில் திருவிழாக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. நம்பிக்கையூட்டும் நல்ல நிகழ்வுகளை திருவிழாக்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. அந்த நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் அருஞ்செய்திகளை, அவை மீண்டும் முன்வைக்கின்றன.

கடவுள் கைவிடவில்லை

மானுடத்தைக் கடவுள் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதற்கான சான்றே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எனச் சொன்னார் மகாகவி தாகூர். அப்படியானால், பிறக்கும் இறைமகன் எதற்கான சான்று? அவரின் பிறப்பைக் கொண்டாடும் இவ்விழா சொல்லும் செய்தி என்ன? இறைவன் இவ்வுலகை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் தெரியுமா? உலகை மீட்க தன் மகனை மனிதனாக அனுப்பும் அளவுக்கு. எனவே, கவலையும் கண்ணீரும் நிறைந்த இந்தச் சூழலில் நாம் இந்த விழாவைக் கொண்டாடியாக வேண்டும். கொண்டாட்ட விருந்துக்கு வழியில்லையே, பரிசுகள் வாங்கப் பணம் இல்லையே என்றெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.

பொருள்களோ, பரிசுகளோ இல்லாவிட்டால் என்ன? மனங்களும் கரங்களும் இணைந்திருக்கும்வரை கிறிஸ்துமஸ் என்ற அந்த மானுடகுமாரனின் பிறந்த நாள் அளித்த ஒளி நிலைத்திருக்கும். கருணையும் மனிதநேயமும் செழிக்கும் இடங்களில், மனங்களில் எல்லாம் கிறிஸ்துமஸ் விண்மீன் கண்சிமிட்டும். தெய்வக் குழந்தையின் திருமுகம் மலரும், ஒளிரும். ‘நல்மனம் கொண்டோர் அனைவருக்கும் அமைதி' என்று வாழ்த்தும் வானவரின் பாடல் ஒலிக்கும்.

சூழ்ந்திருக்கும் சிரமங்களுக்கு மத்தியிலும் நாம் கொண்டாட வேண்டும். இதுதான் இன்றைய தேவை. எளியோருக்கு உதவி, எளிமையாய்க் கொண்டாட வேண்டும். தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துவிடாமல் கொண்டாட வேண்டும்.

இந்தச் சூழலில் இறைவன் எப்படிப் பிறக்க வேண்டும் என்பதைச் சொல்லும் ஒரு பாடல் இருக்கிறது. அதன் காணொளியைக் காண விரும்புவோர் பல்லவியின் முதல் இரண்டு சொற்களான, ‘உயிராக, நலமாக’ என்ற சொற்களை யூ ட்யூபில் தட்டச்சு செய்து தேடலாம்.

‘உயிராக, நலமாக இறைவா நீ வா - இந்த உலகோரின் நிலை கண்டு உடனே நீ வா, நோயோடும் சாவோடும் போராடிடும் - உந்தன் சேயோருக்காய் மீண்டும் பிறந்திங்கு வா’ என்பதுதான் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாக்காலம் முழுவதும், உலகெங்கும் உள்ள மனிதர்களின் இதயத்திலிருந்து எழுந்துவரும் வேண்டுதலாக இருக்கும்.

துயரங்களிலிருந்தும் உற்பாதங்களிலிருந்தும் நம்மைக் காத்தருளும் தேவகுமாரனின் பிறந்த நாள் நம்மில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பெருக்கட்டும்.

 

https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/614964-christmas-featured-article-4.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.