Jump to content

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020

Santa Claus | Christmas

Santa Claus | Christmas

நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.

இன்று கிறிஸ்துமஸ் திருநாள். கிறிஸ்துமஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது Santa Claus. சான்டா இல்லாமல் கிறிஸ்துமஸ் பூரணமடையாது. கிபி 280-ல் நிக்கோலஸ் என்ற ஒரு பாதிரியார், தற்போது துருக்கி என அழைக்கப்படும் Myra எனும் இடத்தில் வாழ்ந்தாராம். அவர் மிகவும் கருணயுள்ளவராகவும் தன்னிடம், உள்ள எல்லா பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்தளிப்பவராகவும் இருந்துள்ளார். இவர் இறந்த பின் அவரது ஆன்மாவை இரு தேவைதைகள் வந்து எடுத்து சென்றதாகவும் அதன் பின் அவரது வழியைப் பின்பற்றி காலம் காலமாக மற்றவர்களுக்கு பரிசுகள் அளித்து மகிழ்ந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. சான்டா பற்றி பல சுவாரஸ்யமான கதைகள் இருந்தாலும் பரவலாக நம்பப்படுவது இதுதான்.

சரி அப்படியாயின் சிறு வயதில் நம் வீட்டின் சிம்னி வழியாக இரவில் வந்து பரிசுப் பொருட்கள் வைத்து சென்ற சான்டா எங்கிருக்கிறார் என்கிற கேள்விக்கான பதில்தான் Lapland.

Santa Claus | Christmas
 
Santa Claus | Christmas

ஸ்வீடன், நார்வே, ரஷ்யா, மற்றும் பால்டிக் கடலினால் சூழப்பட்ட ஃபின்லாந்து நாட்டில் இருக்கும் ஓர் இடம்தான் இந்த Lapland. இன்று வரை சான்டாவின் அதிகாரப்பூர்வ வாசஸ்தலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிடும் இடமாக இது இருந்து வருகிறது.

ஆரம்ப காலங்களில் சான்டா பச்சை, நீளம் எனப் பல நிறங்களில் ஆடை உடுத்தி வளம் வந்திருக்கிறார். அதன் பின்னர் கொககோலா நிறுவனம் தனது பிராண்டின் நிறமான சிகப்பு வெள்ளை நிறத்தில் அவருக்கு ஆடை அணிவித்து விளம்பரம் செய்ய, அது அனைவருக்கும் பிடித்துப்போக அதிலிருந்துதான் சான்டாவின் நிறம் மாறியது.

 

கிறிஸ்துமஸை மிக பிரமாண்டமாக கொண்டாடுவதில் ஐரோப்பிய நாடுகள் முதலிடம் வகிக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் குளிர்காலத்தின் இருண்ட நாட்களில், ஒளியையயும் பிறப்பையும் கொண்டாடினர். ஸ்கேண்டிநேவியர்கள் டிசம்பர் 21 முதல் ஜனவரி வரை கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

நீண்ட குளிர்காலத்தின் பின் மீண்டும் சூரியன் ஒளிர்வதைக் கொண்டாடும் விதமாக கரிய மரத்துண்டுகளைக் கொண்டுவந்து எரிப்பார்கள். அது பூரணமாக எரிந்து முடிக்கும் வரை விருந்து வைத்து கொண்டாடுவார்கள். கவனமாக தேர்வு செய்யப்பட்ட ஒரு முழு மரம் பெயர்த்து, பெரிய விழாக்கோலமாக ஆரவாரத்துடன் வீட்டிற்குள் எடுத்து வரப்படும். மரத்தின் அடிப்பகுதி முதலில் தீக்குள் வைக்கப்பட்டு மிச்சம் இருக்கும் பகுதி அறைக்குள் நீண்டு கிடத்தப்பட்டிருக்கும். மிகுந்த கவனத்துடன் இந்த மரம் மெது மெதுவாக தீக்குள் செலுத்தப்பட்டு இரையாக்கப்படும். இது முழுவதுமாக எரிய கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகலாம். எரியும் நெருப்பிலிருந்து வரும் ஒவ்வொரு தீப்பொறியும் அடுத்து வரும் ஆண்டில் பிறக்கவிருக்கும் ஒரு புதிய பன்றி அல்லது கன்றுக்குட்டியைக் குறிக்கும் என்று ஸ்கேண்டிநேவியர்கள் நம்பினார்கள்.

Santa Claus | Christmas
 
Santa Claus | Christmas

வெனிசூலா நாட்டின் தலைநகரான கராகஸில், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலையில் நகரவாசிகள் ரோலர் ஸ்கேட்களில் தேவாலயங்களுக்குப் பெருமளவில் வருவார்கள். இதனால் நகரத்தின் பல வீதிகளில் காலை 8 மணி முதல் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும்.

டென்மார்க்கில் கிறிஸ்துமஸ் இரவு உணவு முடிந்ததும், சில பாரம்பர்ய கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு மரத்தைச் சுற்றி குடும்பமாக நடனமாடத் தொடங்குவார்கள். இரவு உணவின்போது நம் ஊர் பாயசம் போல Ris A L’Amalde எனப்படும் ஒரு விதமான Rice Pudding உணவைத் தயாரிக்கின்றனர். அதனுள் ஒரு பாதாம் பருப்பு வைக்கப்படுமாம். சாப்பிடும்போது யாருக்கு அந்த பாதாம் கிடைக்கிறதோ, அவருக்கு அந்த ஆண்டு அற்புதங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது.

 

நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.

அங்கு கடினமாக உழைத்த விவசாயிகளுக்குப் புதிய துணிகளையும், வேலை செய்யாது ஏமாற்றியவர்களுக்கு ராட்சத கிறிஸ்துமஸ் பூனையையயும் ஊக்கப்பரிசாகத் தருவார்களாம்.

நார்வே நாட்டுப்புறக் கதைகளின்படி, கிறிஸ்துமஸ் ஈவ் என்பது துர் ஆவிகள் மற்றும் கெட்ட மந்திரவாதிகள் வானத்தை நோக்கிச் செல்லும் நாள். கார்ட்டூன்களில் மந்திரவாதிகள் துடைப்பம் மற்றும் விளக்குமாறை தங்கள் போக்குவரத்து முறையாகப் பயன்படுத்துவதைப் பார்த்திப்போம். அதனால் இந்த கெட்ட மந்திரவாதிகள் கண்ணில் படாதவாறு கிறிஸ்துமஸ் இரவு அன்று குச்சிகளில் இணைக்கப்பட்ட எந்தவொரு துப்புரவுப் பொருட்களையும் நார்வே குடும்பங்களில் மறைத்து வைத்துவிடுவது பாரம்பர்யமாம்.

Santa Claus | Christmas
 
Santa Claus | Christmas

உக்ரைனில் மக்கள் சிலந்தி வலைகளால் தங்கள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கின்றனராம். தமது குழந்தைகளுக்காக ஒரு மரத்தைக்கூட அலங்கரிக்க முடியாத ஓர் ஏழை விதவையின் கதையிலிருந்து இந்த பாரம்பர்யம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. சிலந்தி வலைகள் உக்ரேனிய கலாசாரத்தில் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸின் சான் பெர்ணான்டா நகரத்தில் ராட்சத விளக்கு விழாவான 'Ligligan Parul Sampernandu'-வை நடத்துகிறார்கள். பல கிராமங்கள் மிக அதிகமான காகித விளக்குகளை போட்டிபோட்டுக்கொண்டு உருவாக்குக்கின்றன. அவை ஆறு மீட்டர் (20 அடி) விட்டம் வரைப் பெரிதாகவும், கண்களைக் கவரும் வர்ணங்களாலும் பல வடிவங்களில் செய்யப்பட்டிருக்கும்.

கிறிஸ்துமஸ் மாலை அன்று, திருமணமாகாத செக் நாட்டு பெண்கள், தங்கள் முதுகை கதவை நோக்கி காட்டியவாறு திரும்பி நின்று காலணிகளில் ஒன்றை தோள்பட்டைக்கு மேல் தூக்கி எறிவார்களாம். கதவுப்பக்கம் கால்விரல் பகுதி விழுந்தால் அந்த வருடம் அவர்கள் மணவாழ்வில் இணைவார்கள் என்ற நம்பிக்கை அங்கேயிருக்கிறது.

Santa Claus | Christmas
 
Santa Claus | Christmas

இன்று கிறிஸ்துமஸ் சாதி, மத வேறுபாடுகள் இன்றி எல்லோராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறிவிட்டது. கிறிஸ்துமஸில் ஆரம்பிக்கும் கொண்டாட்ட மனநிலை அப்படியே புது வருடம் வரை தொடர்கிறது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள், கேக், வைன், புத்தாடைகள், தேவாலய ஆராதனைகள், பகிர்ந்துகொள்ளப்படும் பரிசுப்பொருட்கள், நண்பர்களுடனான அரட்டை இவை எல்லாவற்றையும் தாண்டி, பரிசு மூட்டைகளோடு வரும் Santa Claus எப்போதுமே ஸ்பெஷல்தான்.

இந்த கிறிஸ்துமஸ் திருநாளில், ஒரு வருடமாக ஆட்டிப்படைக்கும் கொரோனாவிலிருந்து நிரந்தர விடுதலை தந்து மக்களை நிம்மதியாகவும், நோயின்றியும் வாழ்வதற்கன ஒரு சூழலை இயேசு கிறிஸ்து இவ்வுலகுக்கு பரிசாக அளிக்கட்டும்!

 

https://www.vikatan.com/lifestyle/international/santa-claus-and-the-christmas-celebrations-happening-all-around-the-world

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.