Jump to content

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020

Santa Claus | Christmas

Santa Claus | Christmas

நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.

இன்று கிறிஸ்துமஸ் திருநாள். கிறிஸ்துமஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது Santa Claus. சான்டா இல்லாமல் கிறிஸ்துமஸ் பூரணமடையாது. கிபி 280-ல் நிக்கோலஸ் என்ற ஒரு பாதிரியார், தற்போது துருக்கி என அழைக்கப்படும் Myra எனும் இடத்தில் வாழ்ந்தாராம். அவர் மிகவும் கருணயுள்ளவராகவும் தன்னிடம், உள்ள எல்லா பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்தளிப்பவராகவும் இருந்துள்ளார். இவர் இறந்த பின் அவரது ஆன்மாவை இரு தேவைதைகள் வந்து எடுத்து சென்றதாகவும் அதன் பின் அவரது வழியைப் பின்பற்றி காலம் காலமாக மற்றவர்களுக்கு பரிசுகள் அளித்து மகிழ்ந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. சான்டா பற்றி பல சுவாரஸ்யமான கதைகள் இருந்தாலும் பரவலாக நம்பப்படுவது இதுதான்.

சரி அப்படியாயின் சிறு வயதில் நம் வீட்டின் சிம்னி வழியாக இரவில் வந்து பரிசுப் பொருட்கள் வைத்து சென்ற சான்டா எங்கிருக்கிறார் என்கிற கேள்விக்கான பதில்தான் Lapland.

Santa Claus | Christmas
 
Santa Claus | Christmas

ஸ்வீடன், நார்வே, ரஷ்யா, மற்றும் பால்டிக் கடலினால் சூழப்பட்ட ஃபின்லாந்து நாட்டில் இருக்கும் ஓர் இடம்தான் இந்த Lapland. இன்று வரை சான்டாவின் அதிகாரப்பூர்வ வாசஸ்தலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிடும் இடமாக இது இருந்து வருகிறது.

ஆரம்ப காலங்களில் சான்டா பச்சை, நீளம் எனப் பல நிறங்களில் ஆடை உடுத்தி வளம் வந்திருக்கிறார். அதன் பின்னர் கொககோலா நிறுவனம் தனது பிராண்டின் நிறமான சிகப்பு வெள்ளை நிறத்தில் அவருக்கு ஆடை அணிவித்து விளம்பரம் செய்ய, அது அனைவருக்கும் பிடித்துப்போக அதிலிருந்துதான் சான்டாவின் நிறம் மாறியது.

 

கிறிஸ்துமஸை மிக பிரமாண்டமாக கொண்டாடுவதில் ஐரோப்பிய நாடுகள் முதலிடம் வகிக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் குளிர்காலத்தின் இருண்ட நாட்களில், ஒளியையயும் பிறப்பையும் கொண்டாடினர். ஸ்கேண்டிநேவியர்கள் டிசம்பர் 21 முதல் ஜனவரி வரை கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

நீண்ட குளிர்காலத்தின் பின் மீண்டும் சூரியன் ஒளிர்வதைக் கொண்டாடும் விதமாக கரிய மரத்துண்டுகளைக் கொண்டுவந்து எரிப்பார்கள். அது பூரணமாக எரிந்து முடிக்கும் வரை விருந்து வைத்து கொண்டாடுவார்கள். கவனமாக தேர்வு செய்யப்பட்ட ஒரு முழு மரம் பெயர்த்து, பெரிய விழாக்கோலமாக ஆரவாரத்துடன் வீட்டிற்குள் எடுத்து வரப்படும். மரத்தின் அடிப்பகுதி முதலில் தீக்குள் வைக்கப்பட்டு மிச்சம் இருக்கும் பகுதி அறைக்குள் நீண்டு கிடத்தப்பட்டிருக்கும். மிகுந்த கவனத்துடன் இந்த மரம் மெது மெதுவாக தீக்குள் செலுத்தப்பட்டு இரையாக்கப்படும். இது முழுவதுமாக எரிய கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகலாம். எரியும் நெருப்பிலிருந்து வரும் ஒவ்வொரு தீப்பொறியும் அடுத்து வரும் ஆண்டில் பிறக்கவிருக்கும் ஒரு புதிய பன்றி அல்லது கன்றுக்குட்டியைக் குறிக்கும் என்று ஸ்கேண்டிநேவியர்கள் நம்பினார்கள்.

Santa Claus | Christmas
 
Santa Claus | Christmas

வெனிசூலா நாட்டின் தலைநகரான கராகஸில், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலையில் நகரவாசிகள் ரோலர் ஸ்கேட்களில் தேவாலயங்களுக்குப் பெருமளவில் வருவார்கள். இதனால் நகரத்தின் பல வீதிகளில் காலை 8 மணி முதல் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும்.

டென்மார்க்கில் கிறிஸ்துமஸ் இரவு உணவு முடிந்ததும், சில பாரம்பர்ய கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு மரத்தைச் சுற்றி குடும்பமாக நடனமாடத் தொடங்குவார்கள். இரவு உணவின்போது நம் ஊர் பாயசம் போல Ris A L’Amalde எனப்படும் ஒரு விதமான Rice Pudding உணவைத் தயாரிக்கின்றனர். அதனுள் ஒரு பாதாம் பருப்பு வைக்கப்படுமாம். சாப்பிடும்போது யாருக்கு அந்த பாதாம் கிடைக்கிறதோ, அவருக்கு அந்த ஆண்டு அற்புதங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது.

 

நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.

அங்கு கடினமாக உழைத்த விவசாயிகளுக்குப் புதிய துணிகளையும், வேலை செய்யாது ஏமாற்றியவர்களுக்கு ராட்சத கிறிஸ்துமஸ் பூனையையயும் ஊக்கப்பரிசாகத் தருவார்களாம்.

நார்வே நாட்டுப்புறக் கதைகளின்படி, கிறிஸ்துமஸ் ஈவ் என்பது துர் ஆவிகள் மற்றும் கெட்ட மந்திரவாதிகள் வானத்தை நோக்கிச் செல்லும் நாள். கார்ட்டூன்களில் மந்திரவாதிகள் துடைப்பம் மற்றும் விளக்குமாறை தங்கள் போக்குவரத்து முறையாகப் பயன்படுத்துவதைப் பார்த்திப்போம். அதனால் இந்த கெட்ட மந்திரவாதிகள் கண்ணில் படாதவாறு கிறிஸ்துமஸ் இரவு அன்று குச்சிகளில் இணைக்கப்பட்ட எந்தவொரு துப்புரவுப் பொருட்களையும் நார்வே குடும்பங்களில் மறைத்து வைத்துவிடுவது பாரம்பர்யமாம்.

Santa Claus | Christmas
 
Santa Claus | Christmas

உக்ரைனில் மக்கள் சிலந்தி வலைகளால் தங்கள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கின்றனராம். தமது குழந்தைகளுக்காக ஒரு மரத்தைக்கூட அலங்கரிக்க முடியாத ஓர் ஏழை விதவையின் கதையிலிருந்து இந்த பாரம்பர்யம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. சிலந்தி வலைகள் உக்ரேனிய கலாசாரத்தில் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸின் சான் பெர்ணான்டா நகரத்தில் ராட்சத விளக்கு விழாவான 'Ligligan Parul Sampernandu'-வை நடத்துகிறார்கள். பல கிராமங்கள் மிக அதிகமான காகித விளக்குகளை போட்டிபோட்டுக்கொண்டு உருவாக்குக்கின்றன. அவை ஆறு மீட்டர் (20 அடி) விட்டம் வரைப் பெரிதாகவும், கண்களைக் கவரும் வர்ணங்களாலும் பல வடிவங்களில் செய்யப்பட்டிருக்கும்.

கிறிஸ்துமஸ் மாலை அன்று, திருமணமாகாத செக் நாட்டு பெண்கள், தங்கள் முதுகை கதவை நோக்கி காட்டியவாறு திரும்பி நின்று காலணிகளில் ஒன்றை தோள்பட்டைக்கு மேல் தூக்கி எறிவார்களாம். கதவுப்பக்கம் கால்விரல் பகுதி விழுந்தால் அந்த வருடம் அவர்கள் மணவாழ்வில் இணைவார்கள் என்ற நம்பிக்கை அங்கேயிருக்கிறது.

Santa Claus | Christmas
 
Santa Claus | Christmas

இன்று கிறிஸ்துமஸ் சாதி, மத வேறுபாடுகள் இன்றி எல்லோராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறிவிட்டது. கிறிஸ்துமஸில் ஆரம்பிக்கும் கொண்டாட்ட மனநிலை அப்படியே புது வருடம் வரை தொடர்கிறது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள், கேக், வைன், புத்தாடைகள், தேவாலய ஆராதனைகள், பகிர்ந்துகொள்ளப்படும் பரிசுப்பொருட்கள், நண்பர்களுடனான அரட்டை இவை எல்லாவற்றையும் தாண்டி, பரிசு மூட்டைகளோடு வரும் Santa Claus எப்போதுமே ஸ்பெஷல்தான்.

இந்த கிறிஸ்துமஸ் திருநாளில், ஒரு வருடமாக ஆட்டிப்படைக்கும் கொரோனாவிலிருந்து நிரந்தர விடுதலை தந்து மக்களை நிம்மதியாகவும், நோயின்றியும் வாழ்வதற்கன ஒரு சூழலை இயேசு கிறிஸ்து இவ்வுலகுக்கு பரிசாக அளிக்கட்டும்!

 

https://www.vikatan.com/lifestyle/international/santa-claus-and-the-christmas-celebrations-happening-all-around-the-world

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.