Jump to content

கொவிட் 19 முள்ளுப் பந்து விளையாட்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு.

Life cycle of a coronavirus: How respiratory illnesses harm the body |  COVID | Prevention | UT Southwestern Medical Center

தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை..

முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்...

கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்..  extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல்.

இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்... 

இவர் தான் அவர்.. இவர் இந்த அலுவலை ஒரு மணி நேரத்துக்குள் செய்திடுவார்..

Technology - AusDiagnostics Pty Ltd

அதன் பின்... பிரித்தெடுத்த கொவிட் ஆர் என் ஏ ( RNA) ஐ.. வைச்சுக் கொண்டு வாய்தான் பார்க்கனும்.. ஏனெனில் ஆர் என் ஏயை அப்படியே பெருக்கி எடுக்க இன்னும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.. இங்கும் இயற்கை மனிதனை வென்றுவிடுகிறது.. அதனால்.. கில்லாடி மனிதன்.. என்ன செய்கிறான் என்றால்.. ஆர் என் ஏ யை டி என் ஏ.. கொம்பிலிமென்ரரி (Complementary DNA)  cDNA ஆக்கி இந்த கொவிட் 19 இன் மரபணுத்தகவல்கள் கொப்பிகளை மில்லியன் கணக்கில் உருவாக்கிக் கொள்கிறான். இந்த ஆர் என் ஏ அல்லது சி டி என் ஏ யோ தொற்றாது. 

கொவிட் கொழுக்கட்டையாக இருந்தால் மட்டுமே தொற்றும். அதனை கோது.. உள்ளீடு என்று பிரித்துவிட்டால்.. ஆள் காலி. இதனையே மேலே உள்ள ரோபோ செய்கிறது.

இதன் பின் பிரித்தெடுத்த ஆர் என் ஏயை பயன்படுத்தி.. மேற்சொன்ன சி டி என் ஏ யை உருவாக்கி.. கொப்பி பண்ணி அதில் உள்ள கொவிட் தனித்துவ ஜீன்களை அடையாளம் கண்டு.. கொவிட் தொற்றை அடையாளம் காண வேண்டும். 

இந்த வேலைகளையும் ஒரு ரோபோவே செய்யும்..

AusDiagnostics Systems and Reagents - YouTube

அவர் இவர் தான். இவர் தன் தொழிலை ஆட்டம் 1 மற்றும் ஆட்டம் 2 என்று ஆடி முடிப்பார். இதற்கான மொத்த நேரம் 2 மணித்தியாலங்கள்.

இவருக்குள் பல அயிட்டங்கள் வைக்கப்பட்டால் தான் அவர் இந்த வேலையை செய்வார்.. இவரை கணனி கட்டுப்படுத்தும்.. இவருக்குள் இத்தனை அயிட்டங்களை அடக்கனும். இல்லாவிடில் இவருக்குரிய வேலையை இவர் செய்யமாட்டார்.

இதற்குள்.. ஆர் என் ஏ யை சி டி என் ஏ ஆக்கி பல்கிப் பெருகச் செய்யும் அதன் பின்.. பல்கிப் பெருகின சி டி என் ஏ யில்.. கொவிட் 19 ஐ அடையாளம் காட்டக் கூடிய அதற்கு என்றே தனித்துமான அடையாள அறிகுறிகளை கண்டறியச் செய்யச் செய்வது. அதாவது தனித்துவமான மரபணுக்களை (Genes) தெரிவு செய்து அடையாளம் காட்டுதல். கொவிட்டை அடையாளம் காண இரண்டு அல்லது அதற்கு மேலதிகமான.. தனித்துவமான மரபணுக்கள் பாவிக்கப்படுகின்றன.

Software - AusDiagnostics Pty Ltd

கொவிட்-19 தெரிவு மரபணுக்களின் தொகையை இந்த வரைபுகள் மூலமாக நமக்கு கணனிகள் கணித்துக் காட்டும். இதில் குறித்த கொவிட் 19 ஜீன் வரைபுகளில்  Ct (Cycle Threshold value) அளவீடு..9 தொடங்கி 30 க்குள் அமையின் அதனை கொவிட் 19 தொற்று பாசிட்டிவ் என்று கொள்வார்கள். குறிப்பாக Ct குறைவாக இருப்பின் தொற்று அதிகம்.. கூடியதாக இருப்பின் தொற்றுக் குறைந்து செல்கிறது என்று அர்த்தப்படுத்தப்படும். தொற்றின் மிக ஆரம்பத்திலும் Ct கூடியதாக இருக்கலாம். அதலால் இதனை வாசிப்பதில் கவனமாக இருப்பது அவசியம். 

ஆக இந்த பி சி ஆர் (இங்கு உண்மையில் பாவிக்கப்படுவது.. rRT-PCR (The COVID-19 RT-PCR test is a real-time reverse transcription polymerase chain reaction (rRT-PCR)) ஆகும். மேற்சொன்ன முறையில் இதனைச் செய்து முடிக்க.. கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் எடுக்கும். இதனை விட குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய வழிமுறைகளும் உண்டு. ஆனால்.. இந்த முறையில்.. சென்சிர்ரிவிற்றி -sensitivity அதிகமாகும்.

எனி மாறல்கள் தொடர்பில் பார்ப்போம்.. 

என்னதான் மாறல் (variant).. தோற்றம் மாறிய கொவிட் என்று உலகம் உங்களை வெருட்டினாலும்.. அதன் சில ஜீன்கள் அப்படியே தனித்துவமாகவே தான் உள்ளன. இந்த மாறல்கள்..கொவிட் 19 இல் வெளித்தள்ளிக் கொண்டிருக்கும்.. ஒட்டும் கிளைகோபுரதத்தில் (Glycoprotein -Spike) தான் மாறல் வருகிறது. அதன் ஒட்டும் தன்மையில் தான் தொற்றும் தன்மை உள்ளது. 

Anatomy of a killer - Understanding SARS-CoV-2 and the drugs that might  lessen its power | Briefing | The Economist

 

Coronaviridae ~ ViralZone page

கொவிட் 19 வெறும் 30 ஆயிரம் bp (base pairs)தான்.. 30 ஆயிரம் மரபணு அலகுகள் என்று வைச்சுக் கொண்டால்.. இது ஆட்டிப்படைக்கும் மனிதனில் இதே 6.4 பில்லியன் bp கள்.

கொவிட் - 19 எமது உடலுக்குள் போடும் ஆட்டத்தை விளங்கிக் கொண்டாலே.. போதும்.. இவரை மடக்கிற பல வழிகளை கண்டறியலாம்.

Figure 1 by Vagmita Pabuwal and Keith Monaghan

 

 

 

எல்லா வைரஸ் போலவும் கொவிட் டும் கொட்டிக்காரன் அல்ல அல்ல சுழியன். எமது உடலுக்குள் நுழைந்து எமது கலங்களில் உள்ள இரசாயனப் பொறிகளை பயன்படுத்தி தன் இனத்தைப் பெருப்பித்துக் கொள்கிற.. திறமை உள்ள சுழியன்.

சரி.. எனி எப்படி கொவிட் இருக்கா இல்லையா என்று சொல்லுறது..

கொவிட் எல்லா கலங்களிலும் தொற்ற முடியாது. அவரின் ஒட்டுந்தன்மையுள்ள முள்ளுத்தொப்பியில் உள்ள முள்ளு ஒட்டக்கூடிய கலங்களை தான் அவர் ஆரம்பித்தில் தாக்குவார். அது எமது சுவாசப்பாதை வழி மென்மையான இழையங்கள்.. அமைந்திருப்பது அவருக்கு இந்தச் செயலைச் செய்ய இலகுவாகிவிட்டது.

எனவே சுவாசப் பாதையில்.. குறிப்பாக உள் மூக்குத்துவாரங்கள்.. அடித்தொண்டைப் பகுதியில் இருந்து பெறப்படும்.. பரிசோதனை மாதிரிகள் அடங்கிய காதுக்குடம்பி போன்ற ஆனால் இதற்கு என்று தயாரித்த மென் குடம்பிகளை (swab) பயன்படுத்தி செய்வார்கள்.

Rapid COVID-19 Lateral Flow Test Kits (Pack of 10 Tests) – New Leaf Health

மேலே படத்தில் இருப்பது துரித பரிசோதனை (Rapid test kit or Lateral flow test kit) தொகுதி. இதனை வீட்டிலேயே செய்யலாம். இதில் கொவிட் அன்ரிஜென் (Antigen) இருக்கா என்று அதாவது கொவிட் தொற்றி இருக்கா என்று கண்டுபிடிக்கலாம். இதனை வெறும் 30 நிமிடத்துக்குள் செய்யலாம். ஆனால்.. உண்மையில் 10 நிமிடத்துக்குள் முடிவை சொல்லலாம்.

Coronavirus (COVID-19) IgM/IgG Rapid Test Kit

இதற்கு மேலதிகமாக..

COVID-19 Test Kit Solution - NFC Forum

அன்ரிபாடி.. (antibody test) ரெஸ்ட் செய்வது. அதாவது எமது உடலில் கொவிட் -19 க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கான்னு கண்டறிதல். இதற்கு சில துளி இரத்த மாதிரிகள் போதும். 

COVID-19 IgM/IgG Antibody Test Kit (Colloidal Gold) – Antagen  Pharmaceuticals, Inc.

இறுதியாக..

என்னதான் கொவிட் 19 தோடு விளையாடினாலும்.. பாதுக்காப்புக் கவசங்கள் அணிந்து கொண்டு போர்க்களச் சண்டைக்கு போவது போல் தான் போக வேண்டி இருக்குது. காரணம்.. கொவிட் நேரடியாக விளைவிக்கும் பாதிப்பை விட எமது உடல் கொவிட்டுக்கு எதிராக அபரிமிதமாக தொழிற்பட ஆரம்பித்தால் தான்.. எமது உடல் எம்மையே அதிகம் பாதிக்கச் செய்துவிடும். அதனால்.. கொவிட்19 தொற்றுக்கண்டால்.. அச்சம் தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தி/ நிர்பீடணச் செயற்பாட்டை அதிகரிக்கவல்ல.. உணவுகளை உட்கொள்வதோடு.. தொண்டை.. நாசிப் பகுதியில் இருக்கும் கிருமிகளை கொல்லக் கூடிய அல்லது வெளியேற்றக் கூடிய.. உணவுகளை.. சிகிச்சை முறைகளை முன்னெடுக்கலாம்.

சுவாச அல்லது நாட்பட்ட நீண்ட கால நோயாளிகள்.. நிர்பீடணம் அல்லது நோய் எதிர்ப்புசக்தி.. பலவீனமானவர்கள்.. கொவிட் 19 எதிரான அவர்களின் உடற்தொழிற்பாடு காரணமாக.. பாதிப்பை அதிகம் சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்கள்.. தேவை உணர்ந்து வைத்திய சேவைகளிடம் உதவி நாட வேண்டும்.

சரி..

எனி தனிமைப்படுத்தல்... முகக்கவசம் அணிதல்.. கைகழுவுதல்.. தனிமனித இடவெளி.. இதெல்லாம்.. தொற்றுக்கான வாய்ப்பை.. குறைக்கும் வழிமுறைகளே தவிர.. இவை தொற்றுக்களை முற்றாக தடுக்காது. 

எனி வக்சீனுக்கு (vaccine) வருவோம்..

பெறப்பட்டுள்ள வக்சீன்கள்.. இந்த வைரசின்.. சில ஆர் என் ஏ பகுதிகளை பயன்படுத்தி.. அதனை பிரதிநிதித்துவப்படுத்தும்.. கூறுகளை உருவாக்கி.. பெறப்பட்டதே இந்த வக்சீன்.

ஆனால் வேறு சில வழிமுறைகளிலும் இந்த வக்சீன்கள் பெறப்படலாம்.

What to know about COVID-19 vaccines and how they work - ABC News

இந்த வக்சீனை செலுத்தினால்.. உங்கள் உடல் இந்த வைரசுக்கு எதிரான அன்ரிபாடிகளை உருவாக்கி வைச்சுக் கொள்ளும். ஒருவேளை உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டால்.. உடனடியாகவே இந்த அன்ரிபாடிகள் தொழிற்பட ஆரம்பிப்பதால்.. இந்த வைரஸ்கள் உடலுக்குள் புகுந்து பெருகிக் கொள்ள முதலே அழிக்கப்பட்டு விடும். அதனால்.. இதன் தாக்கத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வக்சீன்களை எடுப்பதால்.. பின்விளைவுகள் வருமா என்றால்.. பாரிய பின்விளைவுகள் வர வாய்ப்புக்குறைவு. ஆனால்.. தனிப்பட்ட நபர்களின் உடல்நிலைகு ஏற்ப இதனை தெரிவு செய்வது நல்லம். குறிப்பாக சிலருக்கு.. பென்சிலின் அலேர்ஜி (Allergy)/ ஒவ்வாமை இருந்தால்.. எப்படி பென்சிலின் எடுக்க முதல் பரிசோதித்து எடுக்கச் சொல்வார்களோ அப்படி. 

இந்த வக்சீன்கள் எமக்கு புதிதல்ல. நாம் பிறந்த காலத்தில் இருந்து பல வக்சீன்கள் எமக்குள் ஊட்டப்பட்டே உள்ளன. சில வக்சீன்கள்.. உடலில் மாறா வடுக்களை ஏற்படுத்தி இருப்பதையும் பார்ப்பீர்கள். அந்தளவுக்கு இது இல்லை. 

மேலும்.. குருதிப் பிளாஸ்மா (Blood Plasma) ஏற்றுதல்.. கொவிட் 19 தொற்றுக்கண்டு.. தேறிய 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களின் குருதியில் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை பயன்படுத்தி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொவிட் நோயாளிகள்.. கொவிட்டை எதிர்த்துப் போராடக் கூடிய அன்ரிபாடிகளை கொடுப்பதுண்டு. ஏலவே இப்படியான வழிமுறைகள் வேறு சில நோய்களுக்கு எதிராகவும் பாவிக்கப்படுவதுண்டு. 

சரி.. இத்தோடு.. கொவிட்-19 முள்ளுப்பந்து விளையாடி முடிந்துவிட்டது.

இயன்றவரை எளிமைப்படுத்தி தனித்தமிழில் தர முயன்றிருக்கிறோம். எமது சமூகம்.. இந்த கொவிட் 19 சார்ந்தும்.. அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் அறிந்து அச்சம் நீக்கி வாழ. 

ஆக்கம்..

யாழிற்காக.. நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இயன்றவரை எளிமைப்படுத்தி தனித்தமிழில் தர முயன்றிருக்கிறோம். எமது சமூகம்.. இந்த கொவிட் 19 சார்ந்தும்.. அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் அறிந்து அச்சம் நீக்கி வாழ. 

 

நெடுக்ஸின் கோவிட்-19 பற்றிய ஆக்கத்தை பல காலமாகவே எதிர்பார்த்திருந்தேன். இப்போதுதான் சற்று ஓய்வு கிடைத்திருக்கு என்று நினைக்கின்றேன்🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

நெடுக்ஸின் கோவிட்-19 பற்றிய ஆக்கத்தை பல காலமாகவே எதிர்பார்த்திருந்தேன். இப்போதுதான் சற்று ஓய்வு கிடைத்திருக்கு என்று நினைக்கின்றேன்🙂

நேரடியாக கொவிட்-19 ஆய்வு மற்றும் மாதிரிப் பகுப்பாய்வுகளில் ஈடுபட்டு வருவதால்.. நீண்ட ஓய்வுக்கு இடமிருக்கவில்லை. ஆதலால்.. இந்த நத்தார் விடுமுறை வார இறுதியை அண்டி வந்ததால்.. ஒரு சிறு ஓய்வுக்காலம் கிடைத்துள்ளது. 

குறிப்பாக பிரித்தானிய வைரஸ் என்று ஒன்றை.. வைச்சு உலகத்தை பயமுறுத்தும் அளவுக்கு.. அதன் மாறல்.. என்பது அதன் முள்ளுச் சார்ந்த ஒன்று. அது அதன் தொற்றும் இயல்பை சாதகமாக மாற்றி அமைத்திருக்கலாம். ஆனால்.. அது தீவிரமான உயிர்க்கொல்லி என்பது அர்த்தம் அல்ல.

அதுமட்டுமன்றி.. ஒவ்வொரு தடவையும் இந்த வைரஸ் என்ன.. ஒரு மனிதன் குழந்தை பெற்றால் கூட அது மாறல் அடைகிறது. இன்றேல்.. தாயும் தந்தையும் போல் அல்லவா எல்லா குழந்தைகளும் இருக்க வேண்டும். மாறல் என்பது இயல்பானது. 

மேலும்.. குறிப்பிட்ட மாறல் கொவிட் வக்சீன் மற்றும்.. பரிசோதனைகளில் மாற்றங்களை செய்யத் தூண்டும் வகைக்கு இல்லை என்றே சொல்லலாம். அப்படியான மாறல்களும் எதிர்பார்க்கப்படுவதால்.. இந்த யுகே வைரஸ் பயம் காட்டல் அர்த்தமற்ற ஒன்று. பெரிதும் பொருண்மிய.. பிராந்திய செல்வாக்குகள் கருதியே இது ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் வந்து ஒரு நன்மை செய்திருக்கிறது என்னவென்றால் நெடுக் அண்ணாவை ஆய்க்கினைப் படுத்திக் கொண்டு இருந்த விடையத்தை செய்ய வைத்திருக்கிறது..அது தான் எழுத வைத்திருக்கிறது மிகவும் நன்றிகள் .தொடருங்கள்..✍️😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சாமியோவ்! நல்ல அறிவுறுத்தல்/அறிவு கட்டுரை. உங்கள் நேரத்திற்கு நன்றிகள்.
மீண்டும் இது போன்ற அறிவியல் மற்றும் மருத்தவ தகவல்களை எமது  யாழ்களத்தில் எதிர்பார்க்கின்றோம்.

நான் உங்களுடன் அதிகம்  முரண்பட்டிருந்தாலும் உங்கள் பல மருத்தவ செய்திகளை விரும்பி படிப்பவன். நன்றி உங்கள் பதிவுகளுக்கு....👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நெடுக்கு சாமியோவ்! நல்ல அறிவுறுத்தல்/அறிவு கட்டுரை. உங்கள் நேரத்திற்கு நன்றிகள்.
மீண்டும் இது போன்ற அறிவியல் மற்றும் மருத்தவ தகவல்களை எமது  யாழ்களத்தில் எதிர்பார்க்கின்றோம்.

நான் உங்களுடன் அதிகம்  முரண்பட்டிருந்தாலும் உங்கள் பல மருத்தவ செய்திகளை விரும்பி படிப்பவன். நன்றி உங்கள் பதிவுகளுக்கு....👍🏽

நன்றி. 

16 hours ago, யாயினி said:

வைரஸ் வந்து ஒரு நன்மை செய்திருக்கிறது என்னவென்றால் நெடுக் அண்ணாவை ஆய்க்கினைப் படுத்திக் கொண்டு இருந்த விடையத்தை செய்ய வைத்திருக்கிறது..அது தான் எழுத வைத்திருக்கிறது மிகவும் நன்றிகள் .தொடருங்கள்..✍️😀

எழுத முன்னை போல் காலம் அமைவதில்லை. கிடைக்கும் குறுகிய நேர அளவில்.. பகிரத்தான் முடியும். இது எல்லோருக்கும் உள்ள பொதுப்பிரச்சனை தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் தொற்று முன்னர் இருந்ததை விட இப்ப அதிகம் இருந்தாலும் முன்னைய வீரியமான தாக்கம் இப்போதுள்ளத்தில் இல்லை.  எனக்குத் தெரிந்து ஆறு குடும்பத்தவர்கள் இரு வாரங்களுள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனாலும் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை அல்லது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

நன்றி இதை பகிர்ந்தமைக்கு நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தெளிவான விளக்கமான கட்டுரை ஊசியின் கட்டுக்கதைகளை உடைத்து சாமானியனுக்கும் விளங்குவதுக்கு ஏதுவாக ஊசியின் பயனை விளக்கமாக எழுதியது போல் வேறு எவரும் இதுவரை எழுதியது  இல்லை  எழுதினாலும் ஒரே குழப்ப மயம் பயனுள்ள ஆக்கம் நன்றிகள் உரித்தாக  மேலும் இந்த கோவிட் 19 பற்றிய தக்வல்களை எதிர்பார்க்கிறேன் நெடுக்கர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் விளங்கும் படியாகவும், படங்களுடன், நல்ல உதாரணங்களுடன்....

பொறுமையாக.... அழகிய தமிழில் எழுதிய மருத்துவ கட்டுரை. 👍🏼

நன்றி நெடுக்ஸ். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கர்,

வேலை பளு காரணமாக வரமுடியாவிடினும், உங்கள் ஆக்கம், நன்றி சொல்ல வைக்கிறது. எனது பார்வையில், கோவிட், சூரன் போரில் வரும் அரக்கன் சூரன் தான். 

ஒவ்வொரு உருவத்தில் வந்து, வந்து.... அழிந்து மறைந்து போகும் சூரன்.

எனது புரிதலில், இந்த வகை வேகமான உருமாறலே வைரசுக்கு மருந்து காண முடியாமைக்கு காரணம். அதேவேளை, அதுவே இறைவன் மனிதனுக்கு தந்த வரமும் ஆகும்.

Link to comment
Share on other sites

மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்துள்ளீர்கள் சகோதரம்  நெடுக். மிக்க நன்றிகள். துறை சார்ந்தவர்கள் அத்துறை சார்ந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்வது மிகச்சிறந்த ஒரு கற்பித்தலாக அமையும்.உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாழ் உறவுகளே உங்கள் ஊக்கத்துக்கும்.. கருத்துப் பகிர்விற்கும்.

இங்கு கொவிட்-19 தொடர்பில் மக்கள் மத்தியில் இருக்கும் பீதிகளைப் பார்ப்போம். அவற்றில் பல போலியானவை.

கேள்வி பதில் வடிவில்..

1. பி சி ஆர் பரிசோதனை நோகுமா?

நிச்சயமாக நோகக் கூடிய ஒரு பரிசோதனை அல்ல. swab (சுவப்) எடுக்கும் போது..கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டு வாயை.. ஆ ஆ என்று திறந்து அடித்தொண்டையில்.. இருந்து மாதிரியை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல்.. மூக்குத்துவாரத்தில்.. இருந்து என்றால்.. சுவப்பை... அடிவரைக்கும் செலுத்தி மாதிரி எடுக்கனும் என்றில்லை. சுமார் 1.5 சென்ரிமீட்டர்கள் வரை உள்ளே சென்று மூக்குத்துவார சுவரில் உள்ள மாதிரிகளை எடுத்தாலே போதும். இது ஒரு போதும் நோகாது. சிலருக்கு தும்மல் வரலாம். நீங்கள் ஒரு திசுவை வைத்து தும்மலை பிடித்துக் கொண்டு மாதிரிகளை எடுக்கலாம்.

COVID-19 nasal swab test: What it feels like to have one - Chicago Sun-Times

Explained: how five-year-olds should be tested for coronavirus | World news  | The Guardian

ஏலவே சளி உள்ளவர்கள்.. சளியை 'சீறி' திசுவில் எடுத்துவிட்டு மாதிரியை எடுக்க வேண்டும்.

எப்போதும் தும்பல்.. இருமல்.. மற்றும் சளியை பெற்ற திசுக்களை (soft nasal tissue).. இப்படி கிருமி தொற்றழிப்புச் செய்து கொள்வது நல்லம். சாதாரண வாழ்வில் இதனை இயல்பாகக் கடைப்பிடிப்பது தடிமன் (common cold).. மற்றும் புளூ (flu) போன்ற நோய்கள் வருவதைக் கூடக் குறைக்கலாம். குறிப்பாக சிங்கப்பூரில் இந்த நடைமுறை இயல்பில் உண்டு. 

Catch It, Bin It, Kill It Sign

2. கொவிட்-19 தொற்றின் போது சில நோயாளிகளில் அதிக அளவு சளி வெளியேற்றப்பட்டு அது சுவாசப்பைகளில் தடங்கலை ஏற்படுத்தும் போது சுவாசிக்க கஸ்டமாக இருக்கும். இதன் போது என்ன செய்ய வேண்டும்..?!

இதன் போது நீங்கள் தற்காலிக முதலுதவிச் செயற்பாடாக.. ஆவி அடையக் கூடிய சுடுநீரில்.. சிறிதளவு விக்ஸை ( கலந்து.. அந்த ஆவியை உள்ளிளுத்துக் கொள்ளலாம். தமிழில் ஆவி பிடிப்பது என்பார். 

image.jpeg.341d33da9a352d50b57df30d54c8b8d0.jpeg

இதில் மக்கள் தமது வசதிக்கு ஏற்ப முறைகளைக் கையாள்கின்றனர். சிலர் சுடும் நீரில் தேயிலை மற்றும் அக்ஸ் திரவம் சில துளிகள் கலந்தும் பிடிப்பது சுகம் எங்கின்றனர்.

images?q=tbn:ANd9GcSCpW0h8qdiNAsIiN-5UQTufIX_Bk78EokxzVILWYKaDZ0pD-_PM7QPRaQLG9z149DfcAcQnNQF&usqp=CAc

இன்னும் சிலர் கற்பூரத்தையும்.. தேங்காய் எண்ணையையும் மேசைக்கரண்டியில் எடுத்து.. சூடாக்கி.. அந்த ஆவியை சுவாசிப்பது.. மற்றும் நெஞ்சில் பூசிக் கொள்வது தமக்கு சுலபமாக இருக்கு என்றும் கூறுகின்றனர்.

ஆனால் இவை எவையும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை முறைகள் அல்ல. அங்கீகரிக்கப்பட்ட முதலுதவிகளும் அல்ல. அதனால்.. இவற்றால் பாதிப்பு அதிகமானால்.. அதற்கும் நோயாளிகளே அதிகம் சிரமப்பட நேரிடும். எனவே இவ்வாறான செயற்பாடுகளைச் செய்ய முன்.. உங்கள் பொது வைத்திய சேவைக்குரிய மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது மிக மிக நல்லது. 

How to apply Vicks VapoRub: all of the ways you mightn't have considered.

இந்த முதலுதவிக்கு.. பயன் கிடைக்காவிடின்.. உடனடியாக மருத்துவ சேவையின் அவசர சேவை.. தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உதவி கோருவது மிக முக்கியம். காரணம்.. இந்த மூச்சு விடும் சிரம நிலை தொடர்ந்து தீவிரமானால்.. உடலில் ஒக்சிசன் அளவில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. அது பிற அங்கங்களின் செயற்பாட்டை பாதிக்கச் செய்து.. பலத்த கேடினை விளைவிக்கும்.

3. எனக்கு மூச்சு விடக் கடினமாக உள்ளது. நெஞ்சில்.. சளி நிறைந்திருப்பதை உணர்கிறேன். ஆனால் வைத்தியசாலைக்குப் போகப் பயமாக உள்ளது.. பெரிய வயர்களை மூக்குக்குள்ளால் தள்ளினமாம். ஆக்கள் சொல்வதைக் கேட்டால்.. மிகவும் பயமாக இருக்குது. என்ன செய்வது..?!

கொவிட் 19 தொற்று தீவிரமடையும் போது உடலும் அதனை எதிர்த்துப் போராடும். அதன் விளைவுகளில் ஒன்று சளி உருவாதல். சிலருக்கு இது அதிக அளவாக அமைந்து விடுவதோடு.. அது சுவாசப் பைகளை அடைந்து கொள்வதாலும்.. சுவாசப் பாதைகளை சூழ்ந்து கொள்வதாலும்.. மூச்சு விடச் சிரமம் ஏற்படுவதோடு.. குருதியில் ஒக்சிசனின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. 

எனவே மூச்சுவிடச் சிரமம் என்றால்.. உடனடியாக அவசர சேவைகளின் தொலைபேசி எண் ஊடாக.. மருத்துவ உதவி கோருவது அவசியம்.

மருத்துவ மனையில்.. சோதனையின் பின் தேவைக்கு அவசியமான முறையில்.. உங்களுக்கு உடலுக்கு தேவையான ஒக்சிசனை வழங்க உபகரணங்களை உபயோகிப்பார்கள்.

அவை எல்லாமே ஒரு விதமானவை அல்ல. சில மட்டுமே அதிதீவிர நோயாளிகளுக்குரிய வயர்களை மூக்குத்துவாரத்தூடு செலுத்தும் பொறிமுறைகளைக் கொண்டவை. ஆனால்.. மற்றவை நோகாத.. இலகுவான உபகரணங்கள். எனவே அச்சம் தவிர்த்து.. மூச்சுவிடுவதில் சிரமம் என்றால்.. உடனடியாக அவசர சேவை தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அம்புலன்ஸ் வண்டிகளை அழைத்து.. மருத்துவமனையை அடைதல் மிக மிக நல்லது.

How is coronavirus disease treated in hospital?

உங்களின் உடல் நிலைக்கு ஏற்ப இந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு தேவையான அளவு ஒக்சிசன் செலுத்தப்படும்.

இதில்.. படி 1 மற்றும் 2 நோவோ.. சிரமமோ அற்றது. இது மூச்சு விடும் சிரமம்.. தீவிரமாக முதலே... மூச்சுவிட கடினம் என்ற அறிகுறி தென்பட்டதும்.. மருத்துவமனையை அடைவதின் ஊடாக நீங்கள் உங்களை சிரமப்படுத்தல் இன்றி சிகிச்சைக்கு உப்படுத்திக் கொள்ளலாம். 

படி 3 , 4, 5 கூடிய சிக்கல் தன்மையின் படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வரிசைப்படுத்தலை மேலே படத்தில் இடமிருந்து வலம் காணலாம்.

படி 3 ஐ விட படி 4 ம் 5 சிக்கல் தன்மை கூடியவை. 

4. கொவிட்-19 வெளிப்புறத் தொற்றகற்றலை.. பேபி வைப் (baby wipes)பை பயன்படுத்தி செய்யலாமா.. உபயோகமா..?!

பதில் இல்லை என்பதுதான்.

பேபி வைப்புக்கு பதிலாக.. அற்ககோல் வைப் பாவிப்பதே சிறந்தது. ஆனால்.. இதனை உடலின் வெளிமேற்பரப்பை/உடலை தூய்மைப்படுத்த பயன்படுத்தக் கூடாது. கைகளை சோப் திரவம் பாவித்து கழுவும் விதிமுறைகளைப் பின்பற்றி கழுவ வேண்டு.. அல்லது hand sanitizer (கைகாப்புத் திரவம்) பாவிப்பது நல்லம். உடலை body wash கொண்டு கழுவுதல் சிறப்பு. 

CHW98002 Antibacterial Alcohol Disinfection Wipes Pack of 70 | Medisanitize

 

5. சில வகை மவுத் வாஸ் (வாய்கழுவித் திரவம்)/ பற்பசை பாவிப்பது கொவிட்-19 தொற்றைக் குறைக்குமா..?!

இது தொடர்பில் சில ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளன. ஆம்.. சில வகை மவுத் வாஸ் பாவித்து கொப்பளித்து.. அடிக்கடி வாய் கழுவிக் கொள்வது.. / பற்பசை பாவித்து நாளுக்கு இரண்டு தடவைகள் பல் விளக்கிக் கொள்வது.. கொவிட்-19 தொற்றின் அளவைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால்.. இது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவோ.. அல்லது பரிந்துரைக்கப்படவோ இல்லை.

images?q=tbn:ANd9GcTAdB1UMPaB3QEAzfvaj7qCGGjo-5zTdduck7cNbLp_mg4uVI8cIUwZo7-_HLvsbtgjfu054A8&usqp=CAcimages?q=tbn:ANd9GcRxGZQTriv3kC5ELhtUmeWm9fuOS_2xM2mrvSjFC_v9PkpEiMdgOqPZ7YeOx8804ECCY-O7NQ&usqp=CAc

 

Covid: Mouthwash 'can kill virus in lab in 30 seconds'

https://www.bbc.co.uk/news/uk-wales-54971650

முள்ளுப்பந்து விளையாட்டின்.. இந்த ஆட்டம் இத்தோடு முடிவடைகிறது. தேவை ஏற்படின் ஆட்டம் தொடரும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.