Jump to content

'அமெரிக்காவை விஞ்சி சீனா 2028இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'அமெரிக்காவை விஞ்சி சீனா 2028இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்'

China-US

பட மூலாதாரம், GETTY IMAGES

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணித்து இருக்கிறது பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ( சென்டர் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பிசினஸ் ரிசர்ச் - சி.இ.பி.ஆர்) என்கிற அமைப்பு, என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரு பெரும் பொருளாதாரங்கள் மீண்டு வருவதில் இருக்கும் கால வேறுபாட்டால், இதற்கு முன் கணித்திருந்ததைவிட, சீனா ஐந்து ஆண்டுகள் முன் கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாக உருவாகப் போகிறது என சி.இ.பி.ஆர் அமைப்பு கூறியிருக்கிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவுகள், சீனாவுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன. கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸைச் சீனா கட்டுப்படுத்திய விதம் மற்றும் மேற்குலகில் சீனாவின் நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களால், சீனாவின் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.

2021 முதல் 2025 வரையிலான ஆண்டுகளில் சீனாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகவும், 2026 - 2030 வரை சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கலாம் என்கிறது சி.இ.பி.ஆர். 

அதே நேரத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம், கொரோனாவின் பாதிப்பில் இருந்து 2021-ம் ஆண்டில் ஒரு வலுவான மீட்சியைக் காணலாம். அதன் பிறகு 2022 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் 1.9 சதவீதம் மற்றும் அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் 1.6 சதவீதமும் வளர்ச்சியைக் காணலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது சி.இ.பி.ஆர்.

'சீனா 2028இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்; அமெரிக்கா 2ஆம் இடம் செல்லும்'

பட மூலாதாரம், GETTY IMAGES

டாலர் மதிப்பில் பார்க்கும் போது ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து 2030-ம் ஆண்டு வரை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் எனவும், அதற்குப் பிறகு இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது. 

அப்படி இந்தியா 2030-ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இடம் பிடித்தால், ஜப்பான் நான்காவது இடத்தையும், ஜெர்மனி ஐந்தாவது இடத்தையும் பிடிக்கும்.

சி.இ.பி.ஆர் கணக்குப்படி, பிரிட்டன் தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. 2024-ம் ஆண்டில் பிரிட்டன் பொருளாதாரம் ஆறாவது இடத்துக்குப் போகலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

2020-ம் ஆண்டில், ஒட்டுமொத்த உலகின் மிகப்பெரிய 10 பொருளாதாரங்களின் உற்பத்தியில் 19 சதவீதம் ஐரோப்பாவில் இருந்து வந்தது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் வெளியேறினால், இந்த பங்களிப்பு வரும் 2035-ம் ஆண்டில் 12 சதவீதமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ சரியலாம் என்கிறது சி.இ.பி.ஆர்.

மிக முக்கியமாக, இந்த கொரோனா வைரஸின் தாக்கம், பொருளாதார வளர்ச்சி மந்தமாவதைவிட, பணவீக்கம் அதிகரிப்பதில் எதிரொலிக்கலாம் எனச் சுட்டிக் காட்டியிருக்கிறது சி.இ.பி.ஆர்.
 

https://www.bbc.com/tamil/global-55451890

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.