Jump to content

நான் வசந்தன் - சிறுகதை - நிவேதா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும்  வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது.

நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்கு முன்புவரை நான் கனவில் கூட எண்ணியதில்லை.

அம்மா அப்பா தங்கை எல்லோரையும் விட்டுவிட்டு இந்த அறைக்கு நான் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. வீட்டில் இடம் இல்லாமலோ அல்லது அம்மா அப்பாவோட பிரச்சனை என்றோ நான் வீட்டை விட்டு வரவில்லை. எத்தினை நாட்களுக்குத்தான் அவைக்கு என் விடயம் தெரிஞ்சிடுமோ தெரிஞ்சிடுமோ என்று பயந்து பயந்து இருக்கிறது. மற்றவைக்காக என் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏன் நான் விட்டுட்டு இருக்கோணும்.

சிலநேரம் அம்மாவோ அப்பாவோ என் பிரச்சனையைச் சொன்னால் விளங்கிக்கொண்டிருப்பினம் தான். ஆனால் சொன்ன பிறகு அவை அதிர்ச்சியில ஏதும் சொல்லிவிட்டால் என்னால அதைத் தாங்கேலாமல் இருந்திருக்கும். அதால நான் எடுத்த முடிவு சரிதான் என்று என் மனம் சொன்னதை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

நான் வசந்தன். வயது 24. நல்ல உயரமான ஆண் அழகன். என்னைப் பற்றி  நானே பீத்திறன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. என்னோட கதைக்க ஆசைப்படும் பெண்களை வரிசையில் நிக்கவைக்கலாம். நான் கேட்காட்டிக் கூட பெண்கள் விடாமல் என்னைத் துரத்தினால் நான் அழகன் தானே. ஆறடிக்கு மேல் இருப்பேன். தலை நிறைந்த அடர் முடி. கருப்பும் இல்லாமல் மா நிறமும் இல்லாமல் நல்ல ஒரு நிறம் எனக்கு. அம்மாவின் நிறம் தான் நீ என்று என் தங்கை குறைப்பட்டுக்கொள்வாள். அதற்குக்  காரணமும் இல்லாமல் இல்லை.

பெண் பிள்ளைகள் வெள்ளையாக இருந்தால் தானே எங்கள் பெடியளுக்குப் பிடிக்கும். என் தங்கையோ அப்பாவைப் போல கருமை நிறம். அதற்காக அவளுக்கு என்னிலோ எனக்கு அவளிலோ எள்ளளவும் எரிச்சலோ கோபமோ இருந்ததில்லை. என்னிலும் பார்க்க என்றுதான் சொல்லமுடியும்…. அவளுக்கு என்னில் அளவுகடந்த பாசம். ஒருநாள் கூட பகிடிக்குத் தன்னும் நான் அவளின் நிறம்பற்றிக் கதைத்தது கிடையாது. அம்மாதான் திவாவுக்கு உன்ர நிறம் வந்து உனக்கு அப்பாவின்ர  நிறம் வந்திருக்கலாம். ஆம்பிளையள் கறுப்பாய் இருக்கிறதுதான் களை என்று  தங்கை இல்லாத நேரம் என்னிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டும்போது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு என்னம்மா கதைக்கிறீங்கள். தங்கச்சி என்னிலும் எவ்வளவு வடிவு  என்பேன். அம்மா ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நீ தங்கச்சியை விட்டுக்கொடுக்க மாட்டாய் என்பார்.

எனக்கு சின்னனா நினைவு தெரிஞ்ச நாள்முதல் பெட்டையள் எண்டாலே சரியான விருப்பம். என் அயலட்டையில் ஆறேழு சின்னன்சிறிசுகள் இருக்கினம் தான். மீனாவோடையும் செல்லாவோடயும் சேர்ந்து விளையாடுவதுதான் விருப்பம் எனக்கு. அதிலும் அந்த மீனாவோடையே எப்போதும் இருக்கவேணும்போல, கதைக்கவேணும் போல என் உள்ளக்கிடக்கையைச் சொல்லவேணும்போல ஆசையா இருக்கும். ஆனா அம்மா ஏன்ரா பெட்டையளுக்குப் பின்னால திரியிறாய் என்று அவளவைக்கு முன்னாலேயே ஏசேக்குள்ள அளவேணும்போல இருக்க கண்ணெல்லாம் குளமாயிடும். பொம்பிளைப்பிள்ளை போல அழாதை என்று சொன்னதும் கண்ணீரும் வெளியில வராமல் நிண்டிடும்.

பள்ளிக்கூடம் போனாலும் பெட்டையளோடயே கதைக்கவேணும்போல இருக்கும். ஆனா பெடியள் என்னை இழுத்துக்கொண்டு போவிடுவாங்கள். அதிலும் அந்தக் கரன் அடிக்கடி என்னைக் கட்டிப்பிடிச்சு கடுப்பேத்துவான். என்பாட்டில ஒரு பக்கமாய் போய் நிண்டாலும் விடான். எடேய் வாடா எண்டு என்னைப்  பந்தடிக்க கூட்டிக்கொண்டு போயிடுவான். இருந்தாலும் மார்க்கண்டு வாத்திக்கும் அம்மாவுக்கும் பயந்து விருப்பம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பன். வாத்தி அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரன். தான் தான் எனக்குப் பள்ளிகூடத்தில் காவல்போல அம்மாவைக் காணும்நேரம் ஏதும் வத்திவைப்பார். அதுக்குப் பயந்து அவதானமாக இருப்பன்.

அப்பா வெளிநாடுபோய் எங்களையும் ஸ்பொன்சரில கூப்பிட்ட பிறகு ஊரும் இல்லை அயலுமில்லாமல் நான் சரியாக் கஷ்டப்பட்டுப்போனன். இங்க வந்து மொழி படிக்கிறது கஷ்டம் எண்டா ஒரு சின்ன வீட்டுக்குள்ள அக்கம்பக்கம் எங்கடை ஆட்களும் இல்லாமல்….. அதுகும் ஒருவகையில நின்மதியாத்தான் இருந்துது.

படிக்கட்டும் பிள்ளை எண்டு அப்பா வாங்கித் தந்த கணனியாலதான் என்ர சலிப்பான சிறிய  உலகமே மாறிப்போச்சு. அதுக்காக நான் படிப்பைக் கோட்டை விடேல்லை. அப்பா தான் பாவம். இரண்டு வேலை செய்து என்னையும் தங்கையையும் டியூசனுக்கு அனுப்பி ........ நான் அவையின் நம்பிக்கையைக் கெடுக்காமல் ஒருமாதிரிப் படிச்சு யூனியும் முடிக்கப்போறன். இவ்வளவு நாளும் அரசாங்கம் படிக்கக் காசு தந்தாலும் அம்மாவோடையே மூண்டு வருடங்களும் இருந்து கொஞ்சக் காசும் மிச்சம் பிடிச்சிட்டன். அதிலேதான் இனி மாஸ்டர்ஸ் செய்யவேணும். வீட்டில இருக்கிறது பல விதத்தில நன்மை. சாப்பாடு அந்தந்த நேரத்துக்கு பாசத்தோடு வரும். ஒதுக்குற வேலை, உடுப்புத் தோய்க்கிற வேலை, அதை அயர்ண் பண்ணுற வேலை எதுமே இல்லை. ஆனா ஆம்பிளைப் பிள்ளையாய் பிறந்திட்டு நெடுக அம்மா அப்பாவின் காசில வாழக் கூடாதுதானே. 

இப்ப பகுதி நேர வேலையும் செய்துகொண்டு தான் படிக்கிறன். அந்த வேலை செய்யப் போய்த்தான் எனக்கு அகிலோட பழக்கம் ஏற்பட்டுது. நாங்கள் இருவரும் ஒரே உணவகத்தில் பகுதிநேர வேலை செய்ய ஆரம்பிக்க, என்னுடன் தானே வந்து வலியக் கதைக்கவாரம்பிச்சது அகில்தான். பார்க்கப் பார்க்கப் பாத்துக்கொண்டே இருக்கலாம் போல் அழகு. நல்ல சுருள் முடி. எகிப்து நாட்டின் ஒரு தங்க நிறமும் உயரமும் கூர்மையும் என்னை மட்டுமல்ல யாரையுமே ஈர்க்கத்தான் செய்யும். வேலை முடிந்த பின்னரும் இருவரும் எங்காவது அமர்ந்து ஏதாவது குடித்தபடி பேசவாரம்பித்தது படிப்படியாக அதிகரித்து நான் வீட்டில் வந்து இரவு தூங்கிவிட்டு காலையில் மட்டும் வீட்டில் உணவருந்துவது என்றாகி இப்ப கொஞ்ச நாட்களாக அம்மாவும் தங்கையும் கூட "நீ இப்ப முன்னை மாதிரி இல்லை" என்று சொல்லுமளவு அகிலின் நெருக்கம் அதிகமாகி ...... அப்போதுதான் அகிலுடனேயே எந்நேரமும் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டுப்போனது. 

அகிலின் எண்ணம் எதுவென வடிவாத் தெரியாது நானாக வாய் திறந்து ஏதும் கேட்டு அது தப்பாகி அகிலின் நட்பையே இழந்திடுவேனோ என்ற பயமும் கூடவே இருக்க, அன்று என் அதிட்டம்... நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அகிலே என்னை அணைத்து முத்தமிட்டபோது எல்லாமே எங்கள் இருவருக்கும் புரிந்துபோனது.

அதன் பின்தான் அகிலே நாங்கள் இருவரும் ஒரு தனி வீடு எடுத்து இருந்தால் என்ன என்று கேட்டபோது குப்பென்று மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். அப்பவும் மனம் பயத்தில் திக் திக் என்று அடித்துக்கொண்டதுதான். தங்கை இருக்கிறாள். அம்மா என்னைத் தனியா இருக்க விடுவாவோ? அவர்களைவிட்டு வந்து இருப்பது சரிதானா? என்று ஒருவாரமாக மண்டையைப் போட்டு உருட்டியதில்த்தான் அந்த ஐடியாவை அகிலே தந்தது. ஆனாலும் அகிலைப் பிரிந்து இருப்பதிலும் பார்க்க பெற்றோரையும் தங்கையையும் பிரிந்து இருக்க முடியும் என்று மனம் அல்லாடிப் பின் வெல்ல, சரி இரண்டுபேரும் தனியாக வாழ ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்ததுதான். எனது மாஸ்டர்ஸ் படிப்பை தூரவாக ஓர் இடத்தில் தெரிவு செய்து அங்கு எனக்கு இடமும் கிடைத்தது என் நல்ல காலம்.

அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு  இதே வேலையாய் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன்.

"நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா" 

"நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே" என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற உறவுகளை ஜீரணித்து பலகாலமாகி விட்டது ....கதை நல்லாயிருக்கு.....!   😁

Link to comment
Share on other sites

இதை காலத்தின் மாற்றம் என்பதா அல்லது கொடுமை என்பதா புரியவில்லை.. கதையின் கருவில் குழப்பம் இருந்தாலும் அதை சொன்ன விதம் அழகு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2020 at 12:45, சுவைப்பிரியன் said:

உணர்வுகள் பல விதம்.

வருகைக்கு நன்றி சுவைப்பிரியன். கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

கடுமையாய் கடிபடுற ஆக்களுக்கு நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை...  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2020 at 20:49, suvy said:

இதுபோன்ற உறவுகளை ஜீரணித்து பலகாலமாகி விட்டது ....கதை நல்லாயிருக்கு.....!   😁

கருத்துக்கு நன்றி அண்ணா

3 hours ago, nige said:

இதை காலத்தின் மாற்றம் என்பதா அல்லது கொடுமை என்பதா புரியவில்லை.. கதையின் கருவில் குழப்பம் இருந்தாலும் அதை சொன்ன விதம் அழகு...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நிகே

18 minutes ago, குமாரசாமி said:

கடுமையாய் கடிபடுற ஆக்களுக்கு நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை...  😁

உங்குதான் எல்லாம் பூட்டியாச்சே. வீட்டில சும்மாதானே இருக்கு சனம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்குதான் எல்லாம் பூட்டியாச்சே. வீட்டில சும்மாதானே இருக்கு சனம் 😀

வீட்டிலை நிக்கிறதும் சரி ஜெயில்லை நிக்கிறதும் சரி....அவையின்ரை கண்டிசன் கொன்றோல் இருக்கே சொல்லி வேலையில்லை....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வீட்டிலை நிக்கிறதும் சரி ஜெயில்லை நிக்கிறதும் சரி....அவையின்ரை கண்டிசன் கொன்றோல் இருக்கே சொல்லி வேலையில்லை....😎

😂

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

😂

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

யோவ் கந்தையர்! பின்னீட்டீர்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

மனுசிமாருக்கு ஒண்டு எண்டால் மன்னர்மார் கலங்கிப்போவது  பாசம் எல்லோ...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

யோவ் கந்தையர்! பின்னீட்டீர்...😁

நன்றி குமாரசாமியண்ணை வணக்கம். மீண்டும்  நாளை சந்திப்போம்😁👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kandiah57 said:

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

இது போற்றுதலா தூற்றுதலா என்று தெரியுதே  இல்லையே 🙁

 

3 minutes ago, குமாரசாமி said:

மனுசிமாருக்கு ஒண்டு எண்டால் மன்னர்மார் கலங்கிப்போவது  பாசம் எல்லோ...:cool:

தொல்லை 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டாம் பந்தி படிக்கும் போது ஒருவித லயிப்போடு அறையில் படுத்து இருக்கிறேன் என்ற வரிகளை கண்டதும் மேற்கொண்டு படிக் விருப்பம் இலல்லாது போயிற்று.காரணம் முதல் கறிவேப்பிலை இப்போ என்ன கசாயம் குடித்துத்துட்டு இருக்கிறீர்களோ...மிகுதி சொல்ல தோன்றவில்லை மனங்கள் பலவிதம்...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. 👌பகிர்விற்கு நன்றி..!👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

நீங்கள் கொஞ்சம் லேட்.😃

Funny Boy , Roobha என்று படங்கள் எல்லாம் பார்த்திருக்கின்றம். அதனால் இந்தக் கதையில மேலோட்டமாக சொன்னது கடுமையாக குத்தாது.

அடுத்தது, ஆண்களை வர்ணிக்க நீங்கள் உங்கள் மனசை முழுமையாகத் திறக்கவேண்டும்😆. அப்போதுதான் வர்ணனை கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி தெறித்து ஓடும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நீங்கள் கொஞ்சம் லேட்.😃

 

அடுத்தது, ஆண்களை வர்ணிக்க நீங்கள் உங்கள் மனசை முழுமையாகத் திறக்கவேண்டும்😆. அப்போதுதான் வர்ணனை கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி தெறித்து ஓடும்😁

உண்மைதான். அந்தத் தற்துணிவு எனக்கு இல்லை

11 hours ago, யாயினி said:

நான் இரண்டாம் பந்தி படிக்கும் போது ஒருவித லயிப்போடு அறையில் படுத்து இருக்கிறேன் என்ற வரிகளை கண்டதும் மேற்கொண்டு படிக் விருப்பம் இலல்லாது போயிற்று.காரணம் முதல் கறிவேப்பிலை இப்போ என்ன கசாயம் குடித்துத்துட்டு இருக்கிறீர்களோ...மிகுதி சொல்ல தோன்றவில்லை மனங்கள் பலவிதம்...😀

இப்பவெல்லாம் எந்தக் காசாயமும் குடிப்பதில்லை.😂

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை.. 👌பகிர்விற்கு நன்றி..!👍

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் போதே இப்படித் தான் போகும் என்று ஊகித்து விட்டேன் ...நான் இது வரைக்கும் வேற நாட்டு ஓரின சேர்க்கையாளர்களை கண்டு இருக்கிறேனே தவிர எங்கட தமிழர்களை இது வரைக்கும் கண்டதில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2020 at 23:36, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
On 27/12/2020 at 23:36, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது போற்றுதலா தூற்றுதலா என்று தெரியுதே  இல்லையே 🙁

தூற்றப்படும் எழுத்தளான்தான்.  போற்றப்படும் எழுத்தளானகவரமுடியும்...ஆனால் நான் உங்களைத்தூற்றவில்லை.😁👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

கதையை வாசிக்கும் போதே இப்படித் தான் போகும் என்று ஊகித்து விட்டேன் ...நான் இது வரைக்கும் வேற நாட்டு ஓரின சேர்க்கையாளர்களை கண்டு இருக்கிறேனே தவிர எங்கட தமிழர்களை இது வரைக்கும் கண்டதில்லை 

 

இப்ப அதுவும் கூடிக்கொண்டு வருது

8 hours ago, Kandiah57 said:

 

நீங்கள் தூற்றினால் கூட எனக்கு எதுவும் இல்லை 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.