Jump to content

நான் வசந்தன் - சிறுகதை - நிவேதா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும்  வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது.

நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்கு முன்புவரை நான் கனவில் கூட எண்ணியதில்லை.

அம்மா அப்பா தங்கை எல்லோரையும் விட்டுவிட்டு இந்த அறைக்கு நான் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. வீட்டில் இடம் இல்லாமலோ அல்லது அம்மா அப்பாவோட பிரச்சனை என்றோ நான் வீட்டை விட்டு வரவில்லை. எத்தினை நாட்களுக்குத்தான் அவைக்கு என் விடயம் தெரிஞ்சிடுமோ தெரிஞ்சிடுமோ என்று பயந்து பயந்து இருக்கிறது. மற்றவைக்காக என் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏன் நான் விட்டுட்டு இருக்கோணும்.

சிலநேரம் அம்மாவோ அப்பாவோ என் பிரச்சனையைச் சொன்னால் விளங்கிக்கொண்டிருப்பினம் தான். ஆனால் சொன்ன பிறகு அவை அதிர்ச்சியில ஏதும் சொல்லிவிட்டால் என்னால அதைத் தாங்கேலாமல் இருந்திருக்கும். அதால நான் எடுத்த முடிவு சரிதான் என்று என் மனம் சொன்னதை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

நான் வசந்தன். வயது 24. நல்ல உயரமான ஆண் அழகன். என்னைப் பற்றி  நானே பீத்திறன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. என்னோட கதைக்க ஆசைப்படும் பெண்களை வரிசையில் நிக்கவைக்கலாம். நான் கேட்காட்டிக் கூட பெண்கள் விடாமல் என்னைத் துரத்தினால் நான் அழகன் தானே. ஆறடிக்கு மேல் இருப்பேன். தலை நிறைந்த அடர் முடி. கருப்பும் இல்லாமல் மா நிறமும் இல்லாமல் நல்ல ஒரு நிறம் எனக்கு. அம்மாவின் நிறம் தான் நீ என்று என் தங்கை குறைப்பட்டுக்கொள்வாள். அதற்குக்  காரணமும் இல்லாமல் இல்லை.

பெண் பிள்ளைகள் வெள்ளையாக இருந்தால் தானே எங்கள் பெடியளுக்குப் பிடிக்கும். என் தங்கையோ அப்பாவைப் போல கருமை நிறம். அதற்காக அவளுக்கு என்னிலோ எனக்கு அவளிலோ எள்ளளவும் எரிச்சலோ கோபமோ இருந்ததில்லை. என்னிலும் பார்க்க என்றுதான் சொல்லமுடியும்…. அவளுக்கு என்னில் அளவுகடந்த பாசம். ஒருநாள் கூட பகிடிக்குத் தன்னும் நான் அவளின் நிறம்பற்றிக் கதைத்தது கிடையாது. அம்மாதான் திவாவுக்கு உன்ர நிறம் வந்து உனக்கு அப்பாவின்ர  நிறம் வந்திருக்கலாம். ஆம்பிளையள் கறுப்பாய் இருக்கிறதுதான் களை என்று  தங்கை இல்லாத நேரம் என்னிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டும்போது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு என்னம்மா கதைக்கிறீங்கள். தங்கச்சி என்னிலும் எவ்வளவு வடிவு  என்பேன். அம்மா ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நீ தங்கச்சியை விட்டுக்கொடுக்க மாட்டாய் என்பார்.

எனக்கு சின்னனா நினைவு தெரிஞ்ச நாள்முதல் பெட்டையள் எண்டாலே சரியான விருப்பம். என் அயலட்டையில் ஆறேழு சின்னன்சிறிசுகள் இருக்கினம் தான். மீனாவோடையும் செல்லாவோடயும் சேர்ந்து விளையாடுவதுதான் விருப்பம் எனக்கு. அதிலும் அந்த மீனாவோடையே எப்போதும் இருக்கவேணும்போல, கதைக்கவேணும் போல என் உள்ளக்கிடக்கையைச் சொல்லவேணும்போல ஆசையா இருக்கும். ஆனா அம்மா ஏன்ரா பெட்டையளுக்குப் பின்னால திரியிறாய் என்று அவளவைக்கு முன்னாலேயே ஏசேக்குள்ள அளவேணும்போல இருக்க கண்ணெல்லாம் குளமாயிடும். பொம்பிளைப்பிள்ளை போல அழாதை என்று சொன்னதும் கண்ணீரும் வெளியில வராமல் நிண்டிடும்.

பள்ளிக்கூடம் போனாலும் பெட்டையளோடயே கதைக்கவேணும்போல இருக்கும். ஆனா பெடியள் என்னை இழுத்துக்கொண்டு போவிடுவாங்கள். அதிலும் அந்தக் கரன் அடிக்கடி என்னைக் கட்டிப்பிடிச்சு கடுப்பேத்துவான். என்பாட்டில ஒரு பக்கமாய் போய் நிண்டாலும் விடான். எடேய் வாடா எண்டு என்னைப்  பந்தடிக்க கூட்டிக்கொண்டு போயிடுவான். இருந்தாலும் மார்க்கண்டு வாத்திக்கும் அம்மாவுக்கும் பயந்து விருப்பம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பன். வாத்தி அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரன். தான் தான் எனக்குப் பள்ளிகூடத்தில் காவல்போல அம்மாவைக் காணும்நேரம் ஏதும் வத்திவைப்பார். அதுக்குப் பயந்து அவதானமாக இருப்பன்.

அப்பா வெளிநாடுபோய் எங்களையும் ஸ்பொன்சரில கூப்பிட்ட பிறகு ஊரும் இல்லை அயலுமில்லாமல் நான் சரியாக் கஷ்டப்பட்டுப்போனன். இங்க வந்து மொழி படிக்கிறது கஷ்டம் எண்டா ஒரு சின்ன வீட்டுக்குள்ள அக்கம்பக்கம் எங்கடை ஆட்களும் இல்லாமல்….. அதுகும் ஒருவகையில நின்மதியாத்தான் இருந்துது.

படிக்கட்டும் பிள்ளை எண்டு அப்பா வாங்கித் தந்த கணனியாலதான் என்ர சலிப்பான சிறிய  உலகமே மாறிப்போச்சு. அதுக்காக நான் படிப்பைக் கோட்டை விடேல்லை. அப்பா தான் பாவம். இரண்டு வேலை செய்து என்னையும் தங்கையையும் டியூசனுக்கு அனுப்பி ........ நான் அவையின் நம்பிக்கையைக் கெடுக்காமல் ஒருமாதிரிப் படிச்சு யூனியும் முடிக்கப்போறன். இவ்வளவு நாளும் அரசாங்கம் படிக்கக் காசு தந்தாலும் அம்மாவோடையே மூண்டு வருடங்களும் இருந்து கொஞ்சக் காசும் மிச்சம் பிடிச்சிட்டன். அதிலேதான் இனி மாஸ்டர்ஸ் செய்யவேணும். வீட்டில இருக்கிறது பல விதத்தில நன்மை. சாப்பாடு அந்தந்த நேரத்துக்கு பாசத்தோடு வரும். ஒதுக்குற வேலை, உடுப்புத் தோய்க்கிற வேலை, அதை அயர்ண் பண்ணுற வேலை எதுமே இல்லை. ஆனா ஆம்பிளைப் பிள்ளையாய் பிறந்திட்டு நெடுக அம்மா அப்பாவின் காசில வாழக் கூடாதுதானே. 

இப்ப பகுதி நேர வேலையும் செய்துகொண்டு தான் படிக்கிறன். அந்த வேலை செய்யப் போய்த்தான் எனக்கு அகிலோட பழக்கம் ஏற்பட்டுது. நாங்கள் இருவரும் ஒரே உணவகத்தில் பகுதிநேர வேலை செய்ய ஆரம்பிக்க, என்னுடன் தானே வந்து வலியக் கதைக்கவாரம்பிச்சது அகில்தான். பார்க்கப் பார்க்கப் பாத்துக்கொண்டே இருக்கலாம் போல் அழகு. நல்ல சுருள் முடி. எகிப்து நாட்டின் ஒரு தங்க நிறமும் உயரமும் கூர்மையும் என்னை மட்டுமல்ல யாரையுமே ஈர்க்கத்தான் செய்யும். வேலை முடிந்த பின்னரும் இருவரும் எங்காவது அமர்ந்து ஏதாவது குடித்தபடி பேசவாரம்பித்தது படிப்படியாக அதிகரித்து நான் வீட்டில் வந்து இரவு தூங்கிவிட்டு காலையில் மட்டும் வீட்டில் உணவருந்துவது என்றாகி இப்ப கொஞ்ச நாட்களாக அம்மாவும் தங்கையும் கூட "நீ இப்ப முன்னை மாதிரி இல்லை" என்று சொல்லுமளவு அகிலின் நெருக்கம் அதிகமாகி ...... அப்போதுதான் அகிலுடனேயே எந்நேரமும் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டுப்போனது. 

அகிலின் எண்ணம் எதுவென வடிவாத் தெரியாது நானாக வாய் திறந்து ஏதும் கேட்டு அது தப்பாகி அகிலின் நட்பையே இழந்திடுவேனோ என்ற பயமும் கூடவே இருக்க, அன்று என் அதிட்டம்... நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அகிலே என்னை அணைத்து முத்தமிட்டபோது எல்லாமே எங்கள் இருவருக்கும் புரிந்துபோனது.

அதன் பின்தான் அகிலே நாங்கள் இருவரும் ஒரு தனி வீடு எடுத்து இருந்தால் என்ன என்று கேட்டபோது குப்பென்று மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். அப்பவும் மனம் பயத்தில் திக் திக் என்று அடித்துக்கொண்டதுதான். தங்கை இருக்கிறாள். அம்மா என்னைத் தனியா இருக்க விடுவாவோ? அவர்களைவிட்டு வந்து இருப்பது சரிதானா? என்று ஒருவாரமாக மண்டையைப் போட்டு உருட்டியதில்த்தான் அந்த ஐடியாவை அகிலே தந்தது. ஆனாலும் அகிலைப் பிரிந்து இருப்பதிலும் பார்க்க பெற்றோரையும் தங்கையையும் பிரிந்து இருக்க முடியும் என்று மனம் அல்லாடிப் பின் வெல்ல, சரி இரண்டுபேரும் தனியாக வாழ ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்ததுதான். எனது மாஸ்டர்ஸ் படிப்பை தூரவாக ஓர் இடத்தில் தெரிவு செய்து அங்கு எனக்கு இடமும் கிடைத்தது என் நல்ல காலம்.

அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு  இதே வேலையாய் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன்.

"நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா" 

"நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே" என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற உறவுகளை ஜீரணித்து பலகாலமாகி விட்டது ....கதை நல்லாயிருக்கு.....!   😁

Link to comment
Share on other sites

இதை காலத்தின் மாற்றம் என்பதா அல்லது கொடுமை என்பதா புரியவில்லை.. கதையின் கருவில் குழப்பம் இருந்தாலும் அதை சொன்ன விதம் அழகு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2020 at 12:45, சுவைப்பிரியன் said:

உணர்வுகள் பல விதம்.

வருகைக்கு நன்றி சுவைப்பிரியன். கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

கடுமையாய் கடிபடுற ஆக்களுக்கு நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை...  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2020 at 20:49, suvy said:

இதுபோன்ற உறவுகளை ஜீரணித்து பலகாலமாகி விட்டது ....கதை நல்லாயிருக்கு.....!   😁

கருத்துக்கு நன்றி அண்ணா

3 hours ago, nige said:

இதை காலத்தின் மாற்றம் என்பதா அல்லது கொடுமை என்பதா புரியவில்லை.. கதையின் கருவில் குழப்பம் இருந்தாலும் அதை சொன்ன விதம் அழகு...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நிகே

18 minutes ago, குமாரசாமி said:

கடுமையாய் கடிபடுற ஆக்களுக்கு நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை...  😁

உங்குதான் எல்லாம் பூட்டியாச்சே. வீட்டில சும்மாதானே இருக்கு சனம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்குதான் எல்லாம் பூட்டியாச்சே. வீட்டில சும்மாதானே இருக்கு சனம் 😀

வீட்டிலை நிக்கிறதும் சரி ஜெயில்லை நிக்கிறதும் சரி....அவையின்ரை கண்டிசன் கொன்றோல் இருக்கே சொல்லி வேலையில்லை....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வீட்டிலை நிக்கிறதும் சரி ஜெயில்லை நிக்கிறதும் சரி....அவையின்ரை கண்டிசன் கொன்றோல் இருக்கே சொல்லி வேலையில்லை....😎

😂

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

😂

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

யோவ் கந்தையர்! பின்னீட்டீர்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

மனுசிமாருக்கு ஒண்டு எண்டால் மன்னர்மார் கலங்கிப்போவது  பாசம் எல்லோ...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

யோவ் கந்தையர்! பின்னீட்டீர்...😁

நன்றி குமாரசாமியண்ணை வணக்கம். மீண்டும்  நாளை சந்திப்போம்😁👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kandiah57 said:

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

இது போற்றுதலா தூற்றுதலா என்று தெரியுதே  இல்லையே 🙁

 

3 minutes ago, குமாரசாமி said:

மனுசிமாருக்கு ஒண்டு எண்டால் மன்னர்மார் கலங்கிப்போவது  பாசம் எல்லோ...:cool:

தொல்லை 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டாம் பந்தி படிக்கும் போது ஒருவித லயிப்போடு அறையில் படுத்து இருக்கிறேன் என்ற வரிகளை கண்டதும் மேற்கொண்டு படிக் விருப்பம் இலல்லாது போயிற்று.காரணம் முதல் கறிவேப்பிலை இப்போ என்ன கசாயம் குடித்துத்துட்டு இருக்கிறீர்களோ...மிகுதி சொல்ல தோன்றவில்லை மனங்கள் பலவிதம்...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. 👌பகிர்விற்கு நன்றி..!👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

நீங்கள் கொஞ்சம் லேட்.😃

Funny Boy , Roobha என்று படங்கள் எல்லாம் பார்த்திருக்கின்றம். அதனால் இந்தக் கதையில மேலோட்டமாக சொன்னது கடுமையாக குத்தாது.

அடுத்தது, ஆண்களை வர்ணிக்க நீங்கள் உங்கள் மனசை முழுமையாகத் திறக்கவேண்டும்😆. அப்போதுதான் வர்ணனை கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி தெறித்து ஓடும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நீங்கள் கொஞ்சம் லேட்.😃

 

அடுத்தது, ஆண்களை வர்ணிக்க நீங்கள் உங்கள் மனசை முழுமையாகத் திறக்கவேண்டும்😆. அப்போதுதான் வர்ணனை கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி தெறித்து ஓடும்😁

உண்மைதான். அந்தத் தற்துணிவு எனக்கு இல்லை

11 hours ago, யாயினி said:

நான் இரண்டாம் பந்தி படிக்கும் போது ஒருவித லயிப்போடு அறையில் படுத்து இருக்கிறேன் என்ற வரிகளை கண்டதும் மேற்கொண்டு படிக் விருப்பம் இலல்லாது போயிற்று.காரணம் முதல் கறிவேப்பிலை இப்போ என்ன கசாயம் குடித்துத்துட்டு இருக்கிறீர்களோ...மிகுதி சொல்ல தோன்றவில்லை மனங்கள் பலவிதம்...😀

இப்பவெல்லாம் எந்தக் காசாயமும் குடிப்பதில்லை.😂

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை.. 👌பகிர்விற்கு நன்றி..!👍

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் போதே இப்படித் தான் போகும் என்று ஊகித்து விட்டேன் ...நான் இது வரைக்கும் வேற நாட்டு ஓரின சேர்க்கையாளர்களை கண்டு இருக்கிறேனே தவிர எங்கட தமிழர்களை இது வரைக்கும் கண்டதில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2020 at 23:36, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
On 27/12/2020 at 23:36, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது போற்றுதலா தூற்றுதலா என்று தெரியுதே  இல்லையே 🙁

தூற்றப்படும் எழுத்தளான்தான்.  போற்றப்படும் எழுத்தளானகவரமுடியும்...ஆனால் நான் உங்களைத்தூற்றவில்லை.😁👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

கதையை வாசிக்கும் போதே இப்படித் தான் போகும் என்று ஊகித்து விட்டேன் ...நான் இது வரைக்கும் வேற நாட்டு ஓரின சேர்க்கையாளர்களை கண்டு இருக்கிறேனே தவிர எங்கட தமிழர்களை இது வரைக்கும் கண்டதில்லை 

 

இப்ப அதுவும் கூடிக்கொண்டு வருது

8 hours ago, Kandiah57 said:

 

நீங்கள் தூற்றினால் கூட எனக்கு எதுவும் இல்லை 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.