Jump to content

ஸ்டார்கள் சொதப்பினால் மேலும் மேலும் வாய்ப்பு, அஸ்வின் சொதப்பினால் உடனே வெளியே- சுனில் கவாஸ்கர் பொருமல்


Recommended Posts

ஸ்டார்கள் சொதப்பினால் மேலும் மேலும் வாய்ப்பு, அஸ்வின் சொதப்பினால் உடனே வெளியே- சுனில் கவாஸ்கர் பொருமல்

குழந்தைப் பிறப்புக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சென்ற கோலியையும் அதே காரணத்துக்காக விடுப்பு கொடுக்கப்படாத டி.நடராஜனையும் ஒப்பிட்டு இருவருக்கும் தனித்தனி நீதியா என்று கேட்டு பரபரப்பு ஏற்படுத்திய சுனில் கவாஸ்கர் அஸ்வினுக்கு ஒரு நீதி மற்ற ஸ்டார் பேட்ஸ்மென்களுக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 
ஸ்டார்கள் சொதப்பினால் மேலும் மேலும் வாய்ப்பு, அஸ்வின் சொதப்பினால் உடனே வெளியே- சுனில் கவாஸ்கர் பொருமல்
சுனில் கவாஸ்கர்
 
குழந்தைப் பிறப்புக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சென்ற கோலியையும் அதே காரணத்துக்காக விடுப்பு கொடுக்கப்படாத டி.நடராஜனையும் ஒப்பிட்டு இருவருக்கும் தனித்தனி நீதியா என்று கேட்டு பரபரப்பு ஏற்படுத்திய சுனில் கவாஸ்கர் அஸ்வினுக்கு ஒரு நீதி மற்ற ஸ்டார் பேட்ஸ்மென்களுக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தி இந்து, ஸ்போர்ட்ஸ்டார் ஆங்கில ஊடகத்தில் தான் எழுதிய பத்தி ஒன்றில் கவாஸ்கர் கடுமையாக இந்திய அணி நிர்வாகத்தின் பாரபட்சப் போக்குகளைச் சாடி எழுதியுள்ளார். மேலும் பவுலர்களுக்கு ஒரு விதி அணியில் நன்கு காலூன்றி விட்ட பேட்ஸ்மென்களுக்கு வேறொரு விதி என்றும் அவர் சாடியுள்ளார்.

அதாவது அஸ்வின் நேரடியாக உள்ளதை உள்ளபடியே கூறுபவர் இதனால் அவருக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறும் சுனில் கவாஸ்கர், “அஸ்வினின் பவுலிங் திறமைகள் மீது காட்டுமிராண்டித்தனமானவர்களே சந்தேகம் கொள்ள முடியும். ஆனால் அவர் சில வேளைகளில் ஒதுக்கப்படுவது பவுலிங் திறமைகளின் மீது ஏற்பட்ட சந்தேகங்களுக்காக அல்ல, அஸ்வின் அணிக்கூட்டங்களில் தன் மனதில் பட்டதை நேரடியாக சொல்லி விடக்கூடியவர் மற்றவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
 
 
ravichandran-ashwin-1024x683.jpg
ரவிசந்திரன் அஸ்வின்
 



4 டெஸ்ட் சதங்களையும் 350 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள அஸ்வின் போன்ற ஒரு பவுலரை எந்த நாடும் வரவேற்கவே செய்யும். ஒரு போட்டியில் அவர் விக்கெட்டுகளைக் குவிக்கவில்லை என்றால் உடனே அடுத்த போட்டிக்கு உட்கார வைக்கப்படுவார். ஆனால் ஸ்டார் பேட்ஸ்மென்களுக்கு இது நடப்பதில்லை, அவர்கள் எவ்வளவு சொதப்பினாலும் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் அஸ்வினுக்கோ வேறொரு நீதி்” என்று சுனில் கவாஸ்கர் பொருமித்தள்ளியுள்ளார்.

2017ம் ஆண்டு அஸ்வின் மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசியாக ஒருநாள் போட்டியில் ஆடினார் அஸ்வின், அந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின், இந்தியா வெற்றி பெற்றது. அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து அனாவசியமாகக் கழற்றி விடப்பட்டார்.தினசரி தனது பவுலிங்கை மேம்படுத்தி புதிய புதிய பாணிகளை வளர்த்தெடுத்து வரும் அஸ்வின் அன்று அடிலெய்ட் பிட்சுக்கு ஏற்றவாறு தன் பந்து வீச்சை மாற்றிக் கொண்டு அபாரமாக வீசினார், ரன் மெஷின் ஸ்மித்தை அற்புதமான பந்தில் காலி செய்தார். நிச்சயம் 2017-ல் கடைசியாக மே.இ.தீவுகளுக்கு எதிராக வீசிய அஸ்வின் இப்போது தன்னிடம் வேறு சில பவுலிங் ஆயுதங்களையும் கூர் தீட்டி வைத்திருப்பார். எனவே கவாஸ்கர் கூறுவது போல் அவரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மீண்டும் அணியில் அழைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

https://tamil.news18.com/news/sports/cricket-different-people-different-rules-sunil-gavaskar-mut-384299.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.