Jump to content

நாட்டின் இறையாண்மையை எங்கும் விட்டுக் கொடுக்க முடியாது: அட்மிரல் சரத் வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக் கூறலை  வலியுறுத்தி  அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படும் புதிய பிரேரணை குறித்து அரசாங்கம்  உரிய கவனம் செலுத்தும்.

நாட்டின் இறையாண்மையை சர்வதேச மட்டத்தில் எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது. என  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/141727/dadadada.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம் பெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடர் குறித்து வினவிய போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா ,பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் பொறுப்பு கூறலை வலியுறுத்தி மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படும்  புதிய பிரேரணை  குறித்து அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தும்.

 புதிய பிரேரணையில்  எவ்வகையான விடயங்கள் உள்ளடக்கப்படும் என்பதில் அதிக அவதானம் செலுத்தப்படும். நாட்டின்  இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த பிரேரணைக்கும் இணக்கமாக செயற்பட  மாட்டோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட 30/1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். என்பதை தெளிவாக குறிப்பிட்டோம்.

நாட்டுக்கு எதிரான  பிரேரணைகளுக்கு அடிபணிய மாட்டோம். என  நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 30/1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்குவதில் இருந்து விலகினோம்.நாட்டின் சுயாதீனத்தன்மையினை கருத்திற் கொண்டே அரசாங்கம் எந்நிலையிலும் செயற்படும்.

இலங்கை தொடர்பில்  சர்வதேச மட்டத்தில் கொண்டு வரப்படும் பிரேரணைகள் அனைத்தையும் ஏற்க வேண்டிய தேவை கிடையாது. நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விடயங்களுக்கு அனுசரணை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிவிவகார கொள்கை திருத்தப்பட்டுள்ளது.அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் பொதுத்தன்மையுடன் செயற்படும். எத்தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்பட மாட்டாது.

நாட்டுக்கு எதிராக செயற்படும் சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலகவும் தயார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுவே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றார்.

நாட்டின் இறையாண்மையை எங்கும் விட்டுக் கொடுக்க முடியாது: அட்மிரல் சரத் வீரசேகர | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எங்கை என்ன கதைக்கிறது என்பதே தெரியாது... சண்டித்தனம் தான் அரசியல் என நினைப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

இவருக்கு எங்கை என்ன கதைக்கிறது என்பதே தெரியாது... சண்டித்தனம் தான் அரசியல் என நினைப்பு..

பழக்கதோஷம் விடுங்கோ. ஒன்று மூக்குடைபடுவார் அன்றேல் சரணாகதியாவார். குரைக்கிற......கடியாது என்பது முதுமொழி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இறையாண்மை,அப்பிடி ஒன்று இலங்கைக்கு இருக்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சீனாவிற்கு விட்டு கொடுத்ததற்கு என்ன பெயராம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாதவூரான் said:

அதென்ன இறையாண்மை,அப்பிடி ஒன்று இலங்கைக்கு இருக்கோ

இருக்கென்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இனப்பிரச்சினையை முறியடிக்க வெளிநாடுகள் உதவி எந்த இறையாண்மையும் இல்லாமல் பெறுவார்கள், இயற்கை வளங்களை விற்கும்போது எந்த இறையாண்மையும் கருத்தில் இருக்காது, பொருந்தாத சட்டங்கள் இயற்றும்போது இறையாண்மை கணக்கெடுக்கப்படாது. இறையாண்மை என்று எதைச் சொல்கிறார்கள் என்று அவர்களுக்கே புரியுதோ என்னவோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.