Jump to content

ஆங்கிலமும் தமிழரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, tulpen said:

சுவிற்சர்லாந்தில் மூன்றாவது தலைமுறை பிள்ளைகள் கூட தமிழ் வகுப்பிற்கு செல்வதை காண்பது மகிழ்வு. பிள்ளைகள் தமிழை கற்பதற்கான தூண்டுதலை கொடுக்க வேண்டியவர்கள் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மொழி அறிஞர்களும் தான். 

அடுத்த தலைமுறை தமிழை மறந்துவிடுமோ என்று அளவுக்கு மிஞ்சி கவலைப்படுவது முகநூல்களில் தமிழ் மொழியின் பெருமைகளை அள்ளி வீசுவதிலும், இருக்கும் ஆர்வத்தில் சிறு பகுதிகூட தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய வருடாவருடம்  செய்யவேண்டிய இலக்கண சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இல்லை. இதை செய்ய வேண்டியவர்கள் தமிழ் மொழி அறிஞர்களே. ஐரோப்பிய மொழிகளில் வருடாவருடம் மொழியியில் அறிஞர்களின் சிபார்சின் பெயரில் புதிய rechtschreibung (Orthography) உள்ளடங்கலான புதிய Duden வெளியிடப்படும். 

பெரியாரின் எழுத்து சீர்திருத்த‍த்திற்கு பிறகு தமிழில் இப்படியான இலக்கண சீர்திருத்தங்கள் செய்யபட்டதாக நான் அறியவில்லை.  தமிழில் உள்ள எழுத்துருக்களை ஒரே தட்டச்சு வடிவமைப்பில் தட்டச்சு செய்ய இன்னமும் முடியவில்லை.  Word, Excel ஆகியவற்றில் தமிழை பயன்படுத்தும் போது ஏற்படும் சொல்திருத்தி,இலக்கண திருத்தி போன்ற வசதிகளை பயன்படுத்த தமிழ் மொழியில் ஏற்படுத்தப்டவேண்டிய பல இலக்கண சீர்திருத்தங்கள் மேற்கொள்ளாமல் தமிழ் அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக கடத்த முடியாது. புள்ளிவிபர திணைக்களம் புள்ளிவிபரங்களை தமிழில் வைத்திருப்பதை விட ஆங்கிலத்தில் மிக இலகுவாக பேணி பாதுகாக்க முடியும். 

ஆகவே என்னைப்பொறுத்த வரை உடனடியாக செய்யப்படவேண்டியது தமிழ் மொழி இலக்கண சீர்திருத்தங்களை துரித கதியில் மேற்கொள்ளுவதே. 

தமிழ் மொழி அகராதி அமைப்பு ஒன்று இருக்கிறதா? எனக்கு தெரிய இல்லை. 

அறத்தமிழ், க்ரியா போன்ற அகராதிகள் உண்டு ஆனால் ஆங்கிலத்தில் கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் செய்வது போல ஒவ்வொரு வருடமும் புதிய சொற்களுக்கு அங்கிகாரம் கொடுக்கும் நடைமுறை இல்லை.

ஆகவே அவரவர் தம் விருப்பபடி புதிய சொற்களை உருவாக்கிறனர். 

தமிழை முதுகலை பாடமாக படிக்க கூடிய ஒரு பல்கலைகழகத்தை மையமாக வைத்து,  உலக தமிழாய்ந்த நிபுணர்கள் 20 பேரை கூட்டி, உள்ள அகராதிகள் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பெரும் அகராதியை வெளியிட்டு, வருடாந்தம் புதுபிக்கும் படி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி ஸ்கொலர்ஷிப் என்று ஓடுப்பட்டுத் திரியும் தாயகப் பகுதிகளில்கூட வளரக் கஷ்டப்படுகின்றது எனவும் ஆண்டு ஐந்தில் இருக்கும் பல பிள்ளைகளின் வாசிக்கும் திறன் மிகவும் குறைவு எனவும் அண்மையில் வாசித்த ஆய்வுக்கட்டுரை (பொதுவெளியில் இன்னமும் வரவில்லை) வரைபில் பார்த்தேன். அந்த நீண்ட ஆய்வுக் கட்டுரை வெளிவந்தபின்னர் யாழில் பதிகின்றேன்.

என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உள்ள சிறுவர்களுக்கு ஆங்கில அறிவுடன், ஆளுமைகளை வளர்க்கும் soft skills சொல்லிக்கொடுக்கப்பட்டால்தான் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் உண்டாகும். 

புலம்பெயர் நாடுகளில் இலங்கையில் இருந்து தமிழ் ஆசிரியர்களை வரவழைத்தால் மாத்திரமே தமிழ் அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கலாம். மற்றும்படி தமிழ்ப் பாடசாலைகள் பரதம், வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள் மட்டும்தான் அடுத்தடுத்த தலைமுறைகளில் பழகும்.

 

Link to comment
Share on other sites

11 minutes ago, goshan_che said:

தமிழ் மொழி அகராதி அமைப்பு ஒன்று இருக்கிறதா? எனக்கு தெரிய இல்லை. 

அறத்தமிழ், க்ரியா போன்ற அகராதிகள் உண்டு ஆனால் ஆங்கிலத்தில் கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் செய்வது போல ஒவ்வொரு வருடமும் புதிய சொற்களுக்கு அங்கிகாரம் கொடுக்கும் நடைமுறை இல்லை.

ஆகவே அவரவர் தம் விருப்பபடி புதிய சொற்களை உருவாக்கிறனர். 

தமிழை முதுகலை பாடமாக படிக்க கூடிய ஒரு பல்கலைகழகத்தை மையமாக வைத்து,  உலக தமிழாய்ந்த நிபுணர்கள் 20 பேரை கூட்டி, உள்ள அகராதிகள் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பெரும் அகராதியை வெளியிட்டு, வருடாந்தம் புதுபிக்கும் படி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

 

உண்மை. அப்படி ஒரு அகராதி தேவை. அத்துடன் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுதுடன் இலக்கண திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவையே தற்போது உள்ளது என்பது எனது கருத்து.  எந்த சொல்லை சேர்த்தெழுவது தனி தனி சொல் என்ன, என்பது குறித்த வழிகாட்டல் இல்லாமல் பல  தமிழ் புத்தகங்கள் வெளிவருபவது பார்க்கிறோம்.  என்ன இருந்தாலும் மொழியியல் அறிஞர்கள் ஒன்று கூடி தான் இதை செய்ய முடியும்.  Word  ல் இலக்கண திருத்தியால் தமிழ் சொல்களின் தவறுகளை இனங்காண்பது தற்போதைய நிலையில் கடினமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2020 at 20:34, goshan_che said:

இதில் ஆக கூடிய பகிடி என்னவென்றால், புலம்பெயர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் அம்மா, அப்பா என்றே அழைக்கின்றனர்.

ஆனால் ஊரில் இவர்களை பல வீடுகளிற்கு (வட கிழக்கிலும்) கூட்டி போகும் போது அங்கே பிள்ளைகள் டாடி மம்மி என்கிறன.

அதே போல் இங்கிலீஸ் மீடியம், இண்டர் நேசனல் ஸ்கூல் என்று தமிழ் வாசிக்க தெரியாத ஒரு சமூகம் ஊரிலேயேயும் உருவாகிறது. இங்கேயாவது நாம் வார இறுதியில் தமிழை படிபிக்கின்றோம்.

 

 

அதோடு, இங்கு எமது பிள்ளைகளுக்கு நாங்கள் தமிழ் பெயர் வைக்கின்றோம் அனால் இலங்கையில் ஆங்கிலப்பெயர் வைக்கிறார்கள். (எல்லோரும் அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=38813

 

Sathasivam papers on Sumerian-Tamil connections see the light of day

[TamilNet, Wednesday, 20 September 2017, 23:37 GMT]
Four pioneering research papers on the Dravidian connections between ancient Sumerian and Tamil, written between 1964 and 1987 by Eezham Tamil scholar, the late Prof A Sathasivam, are now available as a book. Writing a note to one of those papers in 1965, renowned linguist Prof T. Burrow said that Sathasivam breaks new ground in seeking to relate Dravidian with Sumerian, and added that if it were to be accepted the theory would be of considerable importance for the prehistory of both Dravidian and Sumerian. Brought out by the efforts of Mrs T Sathasivam and edited by Dr. Siva Thiagarajah, the book titled “Proto Sumero Dravidian: The Common Origin of Sumerian and Dravidian Languages,” has been published this year by the History and Heritage Unit of the Tamil Information Centre in the UK.
 

Proto Sumero Dravidian: Papers by Prof Sathasivam
 
 
Proto Sumero Dravidian: Papers by Prof Sathasivam
 

The papers are only a small but valuable fraction of the quarter a century research undertaken by Prof Sathasivam. He was working on a magnum opus, an etymological dictionary of Sumero Dravidian.

Commenting on his research, another renowned linguist Prof M. B. Emeneau wrote in 1965 that the analysis he had begun would be waited for with great interest, because of the most interesting historical and prehistorical implications of this hypothesis.

Sathasivam’s research gains new significance today because of the current advancements in coupling linguistics with DNA studies.

Unfortunately, his untimely demise in 1988 halted the completion of the work, but he has left behind volumes of manuscripts. Mrs Sathasivam should be given moral support and encouragement to bring them out in print for the great benefit of world scholarship.

The book that has been published now includes a monograph he prepared at the universities of Pennsylvania and California in 1964-1965, two papers he later read at the International Conference Seminar of Tamil Studies in 1966 and 1987, and another paper he read at the Seminar on Dravidian Linguistics, Annamalainagar in 1969.
 

* * *



Sumerian civilization was one of the earliest of world humanity. 6000 years ago, it was flourishing in the cities, Ur, Uruk, Eridu, Larsa, Lagesh, Nippur etc., in lower Mesopotamia, which is roughly modern Iraq.

The authors of the Sumerian civilization were different from the later Babylonians and the present day Semitic populations. The Sumerians themselves were immigrants to Sumeria.

Unlike the Indus writing, the Cuneiform writings of the Sumerians became possible for decipherment with phonetic and semantic values, because of the availability of Semitic Akkadian inscriptions of later times using the same script and trilingual inscriptions in Akkadian, Elamite and old Persian.

Ever since the decipherment of Sumerian, seeing it different from Aryan or Semitic, theories were postulated as early as in 1912, linking Sumerian with Dravidian and Indus Valley.

Sathasivam found the Sumerian language as described in Sumerian grammars possessing almost identical characteristics with those of his reconstruction of prehistoric Tamil.

In his monograph he has brought in 501 cognate sets to compare Sumerian with various Dravidian languages.

Noting Sumerian and Dravidian as agglutinative languages, Sathasivam says that both have genetic relationship.

“The Sumerian language of the Archaic (3500-3000 BC) and Ur dynastic (3000-2400 BC) periods had preserved well its Proto-Dravidian elements,” Sathasivam observes.

“Both Sumerians and Dravidians spoke the same language and probably lived in some mountainous region for a long time before they separated from each other,” he further observes.

He concludes that Sumerian language fits in neatly as a member of the Dravidian family.

Pointing out Sumer meaning cultivated land, and citing the S/ K interchange, Sathasivam compares it with Kumari meaning cultivation in hills in Tamil, a piece of ground in a jungle in Kannada and Kumeru meaning a waste land cleared for cultivation in Tulu. It is interesting to note that the Dravidian strain is preserved in Sinhala too, in which Kumburu means paddy field.
 

* * *


 

Professor A Sathasivam
Professor A Sathasivam (1926 - 1988 )
 

Born in 1926 in Vaddukkoaddai, Jaffna, Sathasivam had a brilliant and interesting academic career.

He became a traditional Tamil Pandit first, before going from Jaffna College to the then University of Ceylon in Colombo to do Tamil honours and Master’s degrees, and then to proceed to Oxford to do doctoral research under Prof Burrow. His research on Tamil verbs was a source used in the Dravidian Etymological Dictionary.

At the University of Ceylon in the early 1950s he was a student of Prof K. Kanapathippillai, who is even today highly admired for his farsightedness in training and preparing his students in various branches of Tamil studies. Sathasivam was chosen for linguistics.

Sathasivam served as Professor in the University of Ceylon and in the University of California. Apart from his scholarship in linguistics, he is also remembered for the anthology of Eezham Tamil poetry he compiled, covering a period of nearly 2000 years.

Dr. Siva Thiagarajah, the editor of Sathasivam’s papers, is a multi-disciplinary academic. He is a medical doctor-turned Ph.D. holder in Medical Genetics, specialized in prehistoric DNA studies. He has authored two voluminous books on peoples and cultures of early Ilangkai and on the Kantharodai civilization of Jaffna. He has a special taking on Sumeria. One of his early publications was the Tamil translation of the Epic of Gilkamesh, a Sumerian epic, said to be the earliest of that genre of literature.

The 1964 - monograph of Prof Sathasivam was spotted by social anthropologist Mr. S. Visahan, while he was working at the British Library and an interest generated in the UK to bring it out in print. Mrs. Sathasivam who did the original typing of the manuscript 53 years ago, came forward to resurrect the research into a publication.

The book deserves attention of all in the field of world linguistics, Sumerian studies and Dravidian studies.

கடஞ்சா, இணைப்பிற்கு நன்றி.

ஆனால் பேராசிரியர் சதாசிவத்தின் "சுமேரிய மொழி திராவிட மொழி" என்ற எடுகோளையல்லவே நான் கேட்டது? 

கீழடி ஆய்வில் எப்படி சுமேரியர்களோடு தொடர்பு காட்டப் பட்டிருக்கிறது என்றே கேட்டேன். ஏதாவது இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஆங்கிலமொழியில் கற்றால் மட்டும்தான் அது சாத்தியமா??? ஆங்கிலத்தைத் தனியாக வெளியே படித்தால்  போதாதா???

நீங்கள் வேற்று மொழிச் சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கிறீர்கள். இந்தக் கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டுமே? 

 ஐந்து வெவ்வேறு பாடங்களை ஆங்கிலத்தில் கற்கும் பிள்ளை, தமிழை ஒரு பாடமாக மட்டும் எடுக்கும் போது எந்த மொழியில் கூடுதல் பாண்டித்தியம் காட்டும் என நினைக்கிறீர்கள்? அதே பிள்ளை தமிழை வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பாரிய உந்துதல், ஊக்கமெல்லாம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் போதனாமொழியில் இந்த ஊக்கம் தேவையில்லை, ஏனெனில் அது தொழிலுக்கும் கல்விக்கும் இன்றியமையாததாக ஆகி விடும். 

இதே காரணங்களுக்காகத் தான் ஊரில் ஆங்கில மூலத்தில் கற்பிக்க பல பெற்றோர்  முனைப்புக் காட்டுகின்றனர். இதனால் நன்மைகள் விளைகின்றன. தனியார் துறையில் தொழில் வாய்ப்புகள் எட்டும் கனியாக மாறுகின்றன.

தமிழை அல்லது சிங்களத்தை மட்டும்  போதனா மொழியாகக் கொண்ட பட்டதாரிகளே அரச வேலை  வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மட்டும் தான் செய்ய முடிகின்றது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vaasi said:

அதோடு, இங்கு எமது பிள்ளைகளுக்கு நாங்கள் தமிழ் பெயர் வைக்கின்றோம் அனால் இலங்கையில் ஆங்கிலப்பெயர் வைக்கிறார்கள். (எல்லோரும் அல்ல)

உண்மைதான்.

தமிழ் கிறிஸ்தவர்கள் விவிலிய பெயரை அப்படி வைப்பது ஓகே, ஆனால் ஏனையவர்கள் கூட, தஸ், புஸ், இஸ் என்று பெயர் வைப்பார்கள் 😀

எனது மகனுக்கான பெயரை கேட்டு ரொம்ப லோங்கா இருக்கு. பள்ளியில் கஸ்டபடபோறார் என்று பலர் கவலைபட்டார்கள்.

பரவாயில்லை நம் பேரை அவர்கள் சொல்லியே ஆக வேண்டிய நிலைக்கு நாம் வந்தால் அவர்கள் கவலை படமாட்டார்கள் என்று விட்டு விட்டேன்🤣.

ஆனால் வைத்தியசாலையில் கிழக்காசிய தாதிகள் அட்சரம் பிசகாமல் உச்சரித்து நைஸ் நேம் என்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

தமிழ் மொழி அகராதி அமைப்பு ஒன்று இருக்கிறதா? எனக்கு தெரிய இல்லை. 

அறத்தமிழ், க்ரியா போன்ற அகராதிகள் உண்டு ஆனால் ஆங்கிலத்தில் கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் செய்வது போல ஒவ்வொரு வருடமும் புதிய சொற்களுக்கு அங்கிகாரம் கொடுக்கும் நடைமுறை இல்லை.

ஆகவே அவரவர் தம் விருப்பபடி புதிய சொற்களை உருவாக்கிறனர். 

தமிழை முதுகலை பாடமாக படிக்க கூடிய ஒரு பல்கலைகழகத்தை மையமாக வைத்து,  உலக தமிழாய்ந்த நிபுணர்கள் 20 பேரை கூட்டி, உள்ள அகராதிகள் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பெரும் அகராதியை வெளியிட்டு, வருடாந்தம் புதுபிக்கும் படி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

 

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் உள்ள அறிஞர்கள் கூடி இலத்திரனியல் சாதனங்களுக்கான சொற்களை உருவாக்கினார்கள். ஆனாலும் அவை எல்லாம் பயன்பாட்டில் உள்ளன என்று சொல்ல முடியாது. பின்னர் புலிகள் காலத்தில் ஈழத்திலும் பல புதிய சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகதத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர்  அறிவரசன் ஐயா தான் அச்சொற்களைக் கொடுத்தார். அவர் தற்போது இறந்துவிட்டார். புலம்பெயர் நாடுகளில் எங்கள் பாடநூல்களில்கூட அவரே பல புதிய சொற்களை உருவாக்கிச் சேர்த்தார். ஆனாலும் பல பொருட்களுக்கு இன்னமும் தமிழ்ச் சொற்கள் இல்லை என்பது பெருங் குறை. பல தமிழ் அறிஞர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஒன்றுசேர்ந்து தமிழுக்கு எதுவும் செய்யத்தான் அவர்களுக்கு முடியவில்லை.

பல்கலைக்கழகங்களுக்கு இருக்கை அமைக்கிறேன் பேர்வழி என்று இங்கு கொஞ்சப்பேர் சேர்ந்து கோடிக்கணக்கான பணத்தை விரயமாக ஓடித்த திரிகிறார்கள். அந்தப் பணத்தை அறிஞர்களுக்கு ஊதியமாகக் கொடுத்து தமிழை அடுத்த நிலைக்குக்கொண்டுசெல்ல யாருமே முனையவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

தமிழ் மொழி ஸ்கொலர்ஷிப் என்று ஓடுப்பட்டுத் திரியும் தாயகப் பகுதிகளில்கூட வளரக் கஷ்டப்படுகின்றது எனவும் ஆண்டு ஐந்தில் இருக்கும் பல பிள்ளைகளின் வாசிக்கும் திறன் மிகவும் குறைவு எனவும் அண்மையில் வாசித்த ஆய்வுக்கட்டுரை (பொதுவெளியில் இன்னமும் வரவில்லை) வரைபில் பார்த்தேன். அந்த நீண்ட ஆய்வுக் கட்டுரை வெளிவந்தபின்னர் யாழில் பதிகின்றேன்.

என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உள்ள சிறுவர்களுக்கு ஆங்கில அறிவுடன், ஆளுமைகளை வளர்க்கும் soft skills சொல்லிக்கொடுக்கப்பட்டால்தான் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் உண்டாகும். 

புலம்பெயர் நாடுகளில் இலங்கையில் இருந்து தமிழ் ஆசிரியர்களை வரவழைத்தால் மாத்திரமே தமிழ் அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கலாம். மற்றும்படி தமிழ்ப் பாடசாலைகள் பரதம், வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள் மட்டும்தான் அடுத்தடுத்த தலைமுறைகளில் பழகும்.

 

தமிழ் கற்ற பிள்ளைகளில் பலர் இங்கும் தமிழைக் கற்பிக்கின்றார்கள். பலர் நாம் கதைப்பதுபோலவே தமிழைக் கதைக்கின்றனர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ் AL எடுக்கின்றனர். ஆனாலும் எம்மிடமுள்ள சொல்லறிவு அவர்களுக்குப் போதாது. அதேபோலத்தான் காலை பயிலும் மாணவர்களின் நிலையும். சுரத்தட்டு பயில்வோர் மட்டும் அதிகளவில் ஓரளவுக்குப் புலமையுடன் காணப்படுகின்றனர். வாய்ப்பாட்டு மற்றும் வயலின், வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிப்போர் முற்றுமுழுதாக அதுபற்றித் தெரிந்தவர்கள் என்று கூற முடியாது. அவர்களின் ஆசிரியர் எதை சொல்லிக்கொடுத்தாரோ அவற்றை மட்டுமேதான் தம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் தன்மைதான் இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை ஒருத்தர் தமிழ் பாடசாலை திறக்க வேணும் என்டு ஒற்றைக் காலில் நின்டு திறந்தார்.ஆனால் அவர் தம் பிள்ளைகளுடன் கதைப்பது இங்கைத்தையான் மொழியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

கடஞ்சா, இணைப்பிற்கு நன்றி.

ஆனால் பேராசிரியர் சதாசிவத்தின் "சுமேரிய மொழி திராவிட மொழி" என்ற எடுகோளையல்லவே நான் கேட்டது? 

கீழடி ஆய்வில் எப்படி சுமேரியர்களோடு தொடர்பு காட்டப் பட்டிருக்கிறது என்றே கேட்டேன். ஏதாவது இருக்கிறதா?

ஏழாம் கட்ட ஆய்வு இப்பதான் நடக்கிறது. எப்படியும் பத்தாம் கட்ட ஆய்வு வரும்வரை பொறுத்திருங்கள். ஏனெனில் அதன்பின்தான் நீங்கள் நம்பும் அறிஞர்கள் வாய்விட்டுச் சொல்வார்கள். 

16 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை ஒருத்தர் தமிழ் பாடசாலை திறக்க வேணும் என்டு ஒற்றைக் காலில் நின்டு திறந்தார்.ஆனால் அவர் தம் பிள்ளைகளுடன் கதைப்பது இங்கைத்தையான் மொழியில்.

அவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம்????😀

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் உள்ள அறிஞர்கள் கூடி இலத்திரனியல் சாதனங்களுக்கான சொற்களை உருவாக்கினார்கள். ஆனாலும் அவை எல்லாம் பயன்பாட்டில் உள்ளன என்று சொல்ல முடியாது. பின்னர் புலிகள் காலத்தில் ஈழத்திலும் பல புதிய சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகதத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர்  அறிவரசன் ஐயா தான் அச்சொற்களைக் கொடுத்தார். அவர் தற்போது இறந்துவிட்டார். புலம்பெயர் நாடுகளில் எங்கள் பாடநூல்களில்கூட அவரே பல புதிய சொற்களை உருவாக்கிச் சேர்த்தார். ஆனாலும் பல பொருட்களுக்கு இன்னமும் தமிழ்ச் சொற்கள் இல்லை என்பது பெருங் குறை. பல தமிழ் அறிஞர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஒன்றுசேர்ந்து தமிழுக்கு எதுவும் செய்யத்தான் அவர்களுக்கு முடியவில்லை.

பல்கலைக்கழகங்களுக்கு இருக்கை அமைக்கிறேன் பேர்வழி என்று இங்கு கொஞ்சப்பேர் சேர்ந்து கோடிக்கணக்கான பணத்தை விரயமாக ஓடித்த திரிகிறார்கள். அந்தப் பணத்தை அறிஞர்களுக்கு ஊதியமாகக் கொடுத்து தமிழை அடுத்த நிலைக்குக்கொண்டுசெல்ல யாருமே முனையவில்லை.

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் புதிய கலைசொற்களை உருவாக்குவதுடன் நின்றுவிடாது, மொழியியல் அறிஞர்கள் காலத்ததின் தேவைக்கேற்ப  இலக்கண திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழை அடுத்த தலைமுறை பிள்ளைகள் அதிகம் சிரமமின்றி பயன்படுத்த அது மிக முக்கியம் என்பதை, எமது மொழியியல் அறிஞர்கள் கண்டு கொள்வதே இல்லை. அடுத்த தலைமுறை பிள்ளைகள் எந்த மொழியையும் டிகிற்றல் சாதனங்களில் தான் உபயோகிக்கப்போகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.   அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் மற்றய மொழிகளில் இலக்கணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது போன்ற திருத்தங்கள் அவசியம். 

நடைமுறை பயன் பாட்டிற்கு உதவாத எந்த மொழியும் சிறிது சிறிதாக அழியவே செய்யும். அது இயற்கை. அதைப் புரியாது, முன்தோன்றி மூத்த மொழி என்று வெற்று பழம் பெருமை பேசுவதில் எந்த பயனும் இல்லை. மொழியியல்  அறிஞர்கள் ஒன்று கூடி தமிழ்மொழி இலக்கணங்களை நவீனமயப்படுத்தி update செய்யாமல் விட்டால், எதிர்காலத்தில் தமிழ் பழமையான பயன்றற மொழியாகிவிடும் என்பது உண்மையே. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் புதிய கலைசொற்களை உருவாக்குவதுடன் நின்றுவிடாது, மொழியியல் அறிஞர்கள் காலத்ததின் தேவைக்கேற்ப  இலக்கண திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழை அடுத்த தலைமுறை பிள்ளைகள் அதிகம் சிரமமின்றி பயன்படுத்த அது மிக முக்கியம் என்பதை, எமது மொழியியல் அறிஞர்கள் கண்டு கொள்வதே இல்லை. அடுத்த தலைமுறை பிள்ளைகள் எந்த மொழியையும் டிகிற்றல் சாதனங்களில் தான் உபயோகிக்கப்போகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.   அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் மற்றய மொழிகளில் இலக்கணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது போன்ற திருத்தங்கள் அவசியம். 

நடைமுறை பயன் பாட்டிற்கு உதவாத எந்த மொழியும் சிறிது சிறிதாக அழியவே செய்யும். அது இயற்கை. அதைப் புரியாது, முன்தோன்றி மூத்த மொழி என்று வெற்று பழம் பெருமை பேசுவதில் எந்த பயனும் இல்லை. மொழியியல்  அறிஞர்கள் ஒன்று கூடி தமிழ்மொழி இலக்கணங்களை நவீனமயப்படுத்தி update செய்யாமல் விட்டால், எதிர்காலத்தில் தமிழ் பழமையான பயன்றற மொழியாகிவிடும் என்பது உண்மையே. 

 

மாறாதது என்பது மாறாதது என்கிற வார்த்தை மட்டுமே.

ஆயிரம், ஏன் சில நூறு வருடங்கள் முந்திய தமிழை இப்போ யாழில் எழுதினாலே நான் உட்பட்ட பலர் இது என்ன புது மொழி என குழம்பி நிற்போம்.

ஆகவே தமிழ் இலக்கணத்தை எளிமையாக்குவது இன்றியமையாததே.

முன்பு நான் நினைப்பேன் எமக்கு அதிக எழுத்துகள், சைனீசை போல simplified மொழி வடிவம் ஒன்றை நாமும் உருவாக்கலாம் என்று.

ஆனால் ரோமனைஸ்ட் முறையில் மிக இலகுவாக இப்போ தட்டச்சும் போது, ஒரு simplified வடிவம் தேவையில்லை என்றே படுகிறது.

அதேசமயம் தமிழில் புணர்சி விதிகள் எல்லாம் ஏதோ அணு விஞ்ஞான தத்துவம் போல் மிக சிக்கலாக இருக்கிறது.

எனது அடிப்படை கல்வித்தளம் முழுக்க முழுக்க தமிழில்தான். பாடசாலையில் கற்ற சமன், ஆன், முரோ, பத்மினி (😆) ஆங்கிலத்தை விட வீட்டில் சொல்லி தந்த ஆங்கிலமே அந்த மொழியை பரிச்சயம் ஆக்கியது. தமிழில் நல்ல பரிட்சை பெறுபேறுளையும் எடுத்தேன்.

ஆனாலும் மிக அடிப்படையான சொற்களை புணர்த்துவதில் கூட இன்றுவரை தடுமாற்றம்தாம்.

அந்நிய மொழி, வளரும் போது வீட்டில் பேசாத மொழி எனும் போதும் ஆங்கிலத்தில் இந்த சிக்கல் இல்லை.

ஆங்கிலத்திலும் சிக்கலான இலக்கண விதிகள் உள்ளன ஆனால் அதில் ஒரு குறைந்த பட்ச லொஜிக் இருப்பது போல படுகிறது.

தமிழின் இலக்கண விதிகள் பெரிதும் எழுந்தமானமாக இருப்பது போலவும் படுகிறது.

அல்லது எனக்குத்தான் படிப்பித்தவர்கள் ஒழுங்காக படிபிக்கவில்லையோ?

Link to comment
Share on other sites

22 minutes ago, goshan_che said:

மாறாதது என்பது மாறாதது என்கிற வார்த்தை மட்டுமே.

ஆயிரம், ஏன் சில நூறு வருடங்கள் முந்திய தமிழை இப்போ யாழில் எழுதினாலே நான் உட்பட்ட பலர் இது என்ன புது மொழி என குழம்பி நிற்போம்.

ஆகவே தமிழ் இலக்கணத்தை எளிமையாக்குவது இன்றியமையாததே.

முன்பு நான் நினைப்பேன் எமக்கு அதிக எழுத்துகள், சைனீசை போல simplified மொழி வடிவம் ஒன்றை நாமும் உருவாக்கலாம் என்று.

ஆனால் ரோமனைஸ்ட் முறையில் மிக இலகுவாக இப்போ தட்டச்சும் போது, ஒரு simplified வடிவம் தேவையில்லை என்றே படுகிறது.

அதேசமயம் தமிழில் புணர்சி விதிகள் எல்லாம் ஏதோ அணு விஞ்ஞான தத்துவம் போல் மிக சிக்கலாக இருக்கிறது.

எனது அடிப்படை கல்வித்தளம் முழுக்க முழுக்க தமிழில்தான். பாடசாலையில் கற்ற சமன், ஆன், முரோ, பத்மினி (😆) ஆங்கிலத்தை விட வீட்டில் சொல்லி தந்த ஆங்கிலமே அந்த மொழியை பரிச்சயம் ஆக்கியது. தமிழில் நல்ல பரிட்சை பெறுபேறுளையும் எடுத்தேன்.

ஆனாலும் மிக அடிப்படையான சொற்களை புணர்த்துவதில் கூட இன்றுவரை தடுமாற்றம்தாம்.

அந்நிய மொழி, வளரும் போது வீட்டில் பேசாத மொழி எனும் போதும் ஆங்கிலத்தில் இந்த சிக்கல் இல்லை.

ஆங்கிலத்திலும் சிக்கலான இலக்கண விதிகள் உள்ளன ஆனால் அதில் ஒரு குறைந்த பட்ச லொஜிக் இருப்பது போல படுகிறது.

தமிழின் இலக்கண விதிகள் பெரிதும் எழுந்தமானமாக இருப்பது போலவும் படுகிறது.

அல்லது எனக்குத்தான் படிப்பித்தவர்கள் ஒழுங்காக படிபிக்கவில்லையோ?

தமிழ் மொழி அறிஞர்களில் உள்ள மரபுசார் பழமை பேண் தன்மையே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக, நான் கருதுகிறேன். தமிழ் எழுத்து சீர்திருத்த கருத்துக்கள்  1930 களில் முளை விட்டபோது, 1935ல் இருந்து பெரியார் தனது “குடியரசு” இதழில் அவ்வெழுத்துக்களை பயன் படுத்தியதோடு, தமிழ் மொழியின் எழுத்து சீர்திருத்தத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தி தலையங்கமும் வெளியிட்டார். தமிழ் மொழி தன்னை வளப்படுத்தி காலத்திற்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ளாது, பழைய இதிகாச, புராண புரட்டுக்களுடன் மாத்திரம் நின்றால், காட்டுமிராண்டி மொழியாகிவிடும் என று எச்சரித்தார்.  ஆனால் அவ்வெழுத்து முறை அனைத்து தமிழ் அறிஞர்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த 40 வருடங்களுக்கு மேல் ஆயிற்று. இத்தனைக்கும் எழுத்து சீர்திருத்தம் என்பது பாரிய திருத்தம் அல்ல. மிக சிறி மாற்றதையே ஏற்றுக்கோள்ள மனமின்மை காலந்தாழ்த்தியது.  இன்றைய கணணி உலகில் அந்த சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காவிட்டால் இப்போது தமிழ் எழுத இன்னும் பல மடங்கு சிரமப்பட்டிருப்போம்.

தகவல் தொழில்நுட்பம் அடைந்த இந்த காலத்திலாவது துரித கதியில் தேவையான இலக்கண மாற்றங்களை ஆய்வு செய்து,  மாற்றவேண்டும். ஆனால் இது முழுக்க முழுக்க தமிழ் மொழியியலாளர்களையே சாரும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனமின்றி இருந்துவிட்டு எதிர்கால பிள்ளைகளை குற்றம் சொல்வதில் பயனில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் இருக்கும் நாடுகளை பொறுத்தவரை ஜேர்மனியில் வாழும் தமிழ்பிள்ளைகள் நன்றாக அறுத்து உறுத்து தமிழ் கதைப்பார்கள்.

இது நான் இங்கிலாந்து ,கனடா,அமெரிக்க  பிள்ளைகளை கவனித்த அளவில்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏழாம் கட்ட ஆய்வு இப்பதான் நடக்கிறது. எப்படியும் பத்தாம் கட்ட ஆய்வு வரும்வரை பொறுத்திருங்கள். ஏனெனில் அதன்பின்தான் நீங்கள் நம்பும் அறிஞர்கள் வாய்விட்டுச் சொல்வார்கள். 

அவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம்????😀

அது சரி, நாங்கள் தான் பொறுத்திருக்க வேணும்! பத்தாம் கட்ட ஆய்வின் முடிவை ஞானக்கண்ணால் பார்க்கும் சக்தி பெற்ற நீங்கள் இப்பவே முடிவு செய்து இங்கே வெளியிட்டு விட முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நான்கிற்கு மேற்ப்பட்ட தமிழ்ப்பாடசாலைகள்(இந்திய தமிழர்களால் நடத்தப்படும் பாடசாலைகள் கணக்கில் சேர்க்கவில்லை), அதில் ஒரு பாடசாலையில் நான் பார்த்த, பங்குபற்றிய, கேட்ட அனுபவத்திலிருந்து சில:

- இங்கே பாலர் பள்ளி தொடங்கி HSC வரை வகுப்புக்கள் உள்ளன, ஆண்டு 3ல் Opportunity Class எனும் பரீட்சைக்குப் படிப்பதற்காக தமிழ் வகுப்பு இடையில் நிறுத்தப்படும் ஒரு பிள்ளை பின்பு ஆண்டு 6 Selective School பரீட்சை எடுத்த பின்பே திரும்பவும் வருகிறார்கள்.. அதுவும் பாதிப்பேரே திரும்பவும் வருகிறார்கள்..

- இந்த ஆண்டு 3 தொடக்கம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு தமிழ்மொழிபாடத்தில் உள்ள பளுவை கொஞ்சம் குறைத்தால், சிலவேளைகளில் பல மாணவர்கள் இடைநிற்காமல் தொடர்ந்து தமிழ்ப்பாடசாலை வர சந்தர்ப்பங்கள் அதிகரிக்கலாம்

- இரண்டாவது, இங்கேயுள்ள பரீட்சை முறையும் எதிர்பார்ப்பும். இங்கே பிறந்தபிள்ளையின் முதலாவது கற்றல்மொழி ஆங்கிலம் என்பதை பலசமயங்களில் மறந்துவிடுகிறார்களோ என நினைப்பதுண்டு.. பாலர்பள்ளியில் - ஆரம்பபள்ளியில் உள்ள குழந்தைக்கு ஆங்கிலத்தில் உரையாடித்தான் சிலநேரங்களில் விளங்கப்படுத்தமுடியும், ஆனால் அதை விரும்புவதில்லை என்பதால் இரண்டாம், மூன்றாம் தலைமுறை பிள்ளைகள் வருவது குறைவு. பரீட்சைகளும் சில சமயங்களில் கடினமே. 

- பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் நடத்தையும். இங்கே தமது பிள்ளைகளின் முதன்மையான பாடசாலைகளில் போய், எனது பிள்ளைக்கு ஏன் அதிக புள்ளிகள் வழங்கவில்லை, அந்த வகுப்பில் போடவேண்டாம் etc etc என கேட்கமாட்டார்கள், ஆனால்
தமிழ்பாடசாலைகளுக்கு பல தலையிடிகளை தருவார்கள், பிள்ளைகளையும் நிறுத்திவிடுவார்கள். 

- சிலர் இருக்கிறார்கள் கலைவிழாவரையும் தான்பிள்ளைகளை அனுப்புவோர்..

- மேல் வகுப்பை எடுத்துக் கொண்டாலும் பிரச்சனைகள்  உள்ளது ஆனால் மாணவர்கள் விரும்பியே படிப்பதாலும், கற்பிப்பதில் சிக்கல்கள் குறைவு, அவர்களுடைய தமிழ்மொழி அறிவு பாராட்டுதலுக்குரியது.. சில சமயங்களில் என்னை ஆச்சரியப்படவும் வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ்மொழியில் இலக்கியம் படைப்பார்கள் என அதிகம் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் தமிழ் மொழி மீது பற்று உள்ளது

- இப்பொழுது இங்குள்ளவர்கள் இன்னொரு விஷயத்தையும் பெரிதுபடுத்துவதால், இன்னமும் எத்தனை பிள்ளைகள் தமிழை HSC எடுப்பார்கள் என தெரியவில்லை. இங்கே, இலங்கையிலிருந்து 12 அல்லது 13 வயதில் வரும் பிள்ளைக்கு, இந்த HSC தமிழ்மொழி பரீட்சை அதிக கடினமில்லை. ஆகையால் அவர்களுடன் இங்கே பிறந்து வளரும் பிள்ளையும் சேர்ந்தே பரீட்சை எழுதுவதால் இங்கே பிறந்த பிள்ளைக்கு அது தாக்கத்தை ஏற்படுத்துமென சிலர் கூறுகிறார்கள். என்னைக்கேட்டால் அப்படி 12, 13 வயதிலோ அல்லது அங்கே பிறந்து சில வருடங்கள் பாடசாலையில் தமிழ் மொழியில் மட்டுமே கல்வி கற்ற பிள்ளை இங்கே ஆங்கிலத்தில் பல பாடங்கள் கல்விகற்க தடுமாறுவது பற்றி அவர்கள் யோசிக்கவில்லை என்றே நினைக்கதோன்றுகிறது. 

- அடுத்தது, கற்பிக்கும் முறை, முதலில் பிள்ளை தமிழை பேச வேண்டும் பின்பே எழுத வேண்டும்.. காதில் விழுந்து கருத்திலும் சிந்தையிலும் படியவேண்டும்.. அதைவிடுத்து முன்பே உயிர் எழுத்தையும் உயிர்மெய் எழுத்தையும் எழுத வேண்டும் என்றால் கடினமே. இலகுவான மொழிநடையிலோ கற்பிக்கும் முறை, சிறுவயது பிள்ளைகளுக்கு அவர்களின் தரத்திற்கு/வயதிற்கு ஏற்ப எம்மை மாற்றி படிப்பிக்கவேண்டும்,இல்லாவிடில் பிள்ளைகளை கவருவதும் கடினமே.

இப்படி பல காரணங்கள் உண்டு தனியே பெற்றோரை மட்டும் கூறுவது சரியானதாகப்படவில்லை. இந்தப்பிரச்சனை எங்களுக்கு மட்டுமல்ல நான் கலந்துக்கொண்ட வகுப்பில் வந்திருந்த Mandarin மொழி படிப்பிக்கும் ஒருவரும் பரிமாறிக்கொண்ட கருத்துக்கள். ஆகையால் எங்களுடைய எண்ணங்களும் கல்விகற்பிக்கும் முறைகளும் மாற்றம் இல்லாவிடில் நாங்கள் எதிர்பார்க்கும் விடயங்களில் அதிக முன்னேற்றத்தை அடையமுடியாது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.