Jump to content

ஈழத்தமிழர் தம்மைத் தேசஇனமாக உலகுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் தம்மைத் தேசஇனமாக உலகுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டு

 
Untitled-3-2.jpg
 79 Views

ஈழத்தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமெனப் போராடியமை வரலாறு. ஆனால் 17.05.1946 இல் பிரித்தானிய ஆட்சிக்குழு ஆணையகம் இலங்கைக்கான புதிய அரசியலமைப்புப் பிரகடனத்தை வெளியிட்டது. இது ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்காது, தங்களது காலனித்துவ ஆட்சிக்குப் பதிலாகச் சிங்களக் காலனித்துவ ஆட்சி ஒன்றை ஈழத்தமிழர்கள் மேல் தோற்றுவித்தது. ஈழத்தமிழர்களுக்கு இந்தச் சிங்கள காலனித்துவம் பிரித்தானியாவால் ஏற்படுத்தப்பட்டதன் 75ஆவது ஆண்டு 2021இல் தொடங்குகின்றது.

இவ்வேளையில் ஈழத்தமிழர் பிரச்சினையை காலனித்துவத்தில் இருந்து விடுதலை அளிப்பதற்குரிய அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் எடுத்து நோக்க வேண்டும் என்பது பலமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

இதனை விடுத்து ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை சிங்கள பௌத்த பேரினவாத அரசின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே எடுத்து நோக்கும் உலக வழமையே 1956 முதல் இன்றுவரை 65 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈழத்தமிழர்களை சிங்கள அரசு இனஅழிப்புக்கு உள்ளாக்கி வருவதற்கான மூல காரணமாகிறது.

இதன் தொடர்ச்சியாகவே ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களின் இருப்பைக் குலைக்கும் இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்புச் செயற்பாடுகள் என்பவற்றைச் செய்கிறது.

இந்த இனஅழிப்பைச் சிறீலங்கா நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் தேசிய பாதுகாப்பு நடைமுறைகள் என்ற பெயரில் நியாயப்படுத்தி ஈழத்தமிழரின் செயற்பாட்டைப் பயங்கரவாதமென திரிபுவாதம் செய்து வருகிறது. இவ்வாறு அரசு என்னும் தகுதியைத் தனது சர்வாதிகார அரசுக்கு நிலைநாட்டிக் கொள்ளும் சிறீலங்கா, தனது இனஅழிப்புக்குத் தடையாக உள்ளனவற்றை நீக்கிட இன்றைய அரசியலமைப்பை முழுதாக மாற்றிப் புதிய அரசியலமைப்பையும் விரைவில் உருவாக்கவுள்ளது. இந்த புதிய அரசியலமைப்பின் நோக்கம் வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத்தீவில் வரலாற்றுத் தாயகத்தையும் தன்னாட்சி உரிமையையும் தேசியத் தன்மையையும் உடைய ஈழத்தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் மறுத்து, சிறீலங்கா என்னும் நாடு சிங்கள இனத்தவருக்கும், பௌத்த மதத்தவருக்குமே இறைமையும், தன்னாதிக்கமும் உடைய நாடு என நிலைநிறுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் மானிடவியல், தொல்லியல், சமூகவியல் தொன்மையைத் தொடர்ச்சியை படைபலப் பின்னணியில் அழிப்பதைப் பௌத்தத்தின் தொன்மையை தமிழர் தாயகங்களில் மீள்நிறுவுதலுக்கான புனிதச் செயற்திட்டமாக 2020 முதல் சிறீலங்கா முன்னெடுக்கத் தொடங்கி, சைவத் திருத்தலங்களில் எல்லாம் முன்னால் பௌத்த விகாரையையும் அமைக்கும் மதச்சுதந்திர மறுப்பையும் தொடங்கியுள்ளது.

இந்நேரத்தில் இன்றைய ஈழத்தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சிறீலங்காப் பாராளுமன்றத்துள்ளும், வெளியிலும் ஈழத்தமிழர்களின் இறைமையும், தன்னாதிக்கமும் கவனத்தில் எடுக்கப்பட்டு ஆட்சிமுறை மாற்றங்கள் அமைய வேண்டும் என்னும் முக்கியமான வேண்டுகோளை முன்வைத்து வருகின்றார்.

இந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இவரின் தந்தைவழிப் பேரனும், ஈழத்தமிழ்த் தலைவர்களுள் முக்கியமானவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக விளங்கியவருமான அமரர்  ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் 03.11.1945 அன்று அன்றைய காலனித்துவச் செயலகத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கை அமைகிறது,  பிரித்தானியாவின் இந்திய அலுவலகப் பதிவு CO 54/987/1, No 96 இலக்கப் பதிவில் இன்றும் காணக்கூடிய  அந்த அறிக்கை அரசியல் நிர்ணயசபை ஒன்றைத் தமிழர்களையும் உள்ளடக்கி அமையாமல் விட்டமையே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு மூலகாரணமெனத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இவ் அறிக்கையைத் தொடர்ந்து 15.01.1946ஆம் திகதி  அன்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் எஸ் சிவசுப்பிரமணியம் அவர்கள் காலனித்துவ செயலகத்திற்கு அனுப்பிய CO 54/986/ 9. No9ஆம் இலக்க அறிக்கை ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினமல்ல தேசஇனம் என்பதைத் தெளிவாக பிரித்தானிய காலனித்துவ அரசிடம் வலியுறுத்தியது.

இவ்வுண்மைகளின் அடிப்படையில், ஈழத்தமிழர் தங்களைத் தேச இனமாகப் பிரித்தானியாவுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டில் ஈழத்தமிழர்கள் காலெடுத்து வைக்கும் இந்நேரத்தில், தாயகத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர்கள் தங்கள் இனத்துவத்தைச் சிறுபான்மையினமல்ல, ஈழத்துத் தேச இனம் என்ற உரிமை கோரலுடன் வெளிப்படுத்துவதன் மூலமே சிறீலங்காவின் ஒரு இனம் ஒரு மதச் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஈழத்தமிழர் உரிமைகளை 2021இல் நிலைநாட்டலாம் என்பதே இலக்கின் கருத்தாக அமைகிறது.

 

https://www.ilakku.org/?p=37988

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.