Jump to content

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வடக்கு , கிழக்கில் இரு இடங்கள் பரிந்துரை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வடக்கு , கிழக்கில் இரு இடங்கள் பரிந்துரை.!

Screenshot-2020-12-28-11-22-52-703-com-a 

கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழமாக இருக்கும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.

மன்னாரில் மறிச்சுக்கட்டு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏரகம ஆகிய இடங்களில் நிலத்தடி நீா் மட்டம் 30 அடிக்குக் கீழே உள்ளது. இந்நிலையில் இந்த இடங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க ஏற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது அவர்களின் உடலில் இருக்கும் கொரோனா வைரஸ் நிலத்தடி நீருடன் கலந்து பரவலாம் என இலங்கை அரசு தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, நிலத்தடி நீர் மிக ஆழமாக உள்ள பொருத்தமான இடங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீா் வழங்கல் அமைச்சா் வாசுதேவவிடம் கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து அமைச்சின் புவியியலாளர்கள் ஆய்வு செய்து நிலத்தடி நீடி மிகவும் ஆழமாகக் காணப்படும் இரு இடங்களை அடையாளம் கண்டு அறிக்கையளித்துள்ளனர்.

இந்த அறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

http://aruvi.com/article/tam/2020/12/28/20896/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசம்தானென்றபடியால் ஒருபிரச்சனையுமில்லாமல் ஒமேன்றுவாங்கள். இது தெரியாமல். சிவாஜிலிங்கமும் ஆரனல்டும் மூனாக்களோட சேர்ந்து போராட்டம் செய்யிறது நல்லதுக்கில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragaa said:

தமிழர் பிரதேசம்தானென்றபடியால் ஒருபிரச்சனையுமில்லாமல் ஒமேன்றுவாங்கள். இது தெரியாமல். சிவாஜிலிங்கமும் ஆரனல்டும் மூனாக்களோட சேர்ந்து போராட்டம் செய்யிறது நல்லதுக்கில்லை

நல்லகாலம் நல்லுரடியை சுட்டிகாட்டேல்ல...ஆர்னோல்டு அந்த நிபந்தனையுடந்தான் பங்குடெத்தவரோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மலைப்பாங்கான கண்டி.. மாவனல்ல.. கேகாலை இங்கினை அடக்கலாம் தானே. எதுக்கு நிலத்தடி நீரை நம்பி வாழும் வடக்குக் கிழக்கில் புதைக்கனும். 

Link to comment
Share on other sites

On 29/12/2020 at 02:09, goshan_che said:

இரகம இல்லை இறக்காமம்.

அவர் சிங்களத்தில் அப்படியே எழுதி இருக்கிறார்போல . இருந்தாலும் அந்த 30 அடி ஆழம் எல்லாக்காலத்திரும் இருக்காது. இந்த மழைக்காலத்தில் நீர் மடடம மிகவும் உயரமாக இருக்கும். எனவே இவர்கள் கணிப்பு சரியானது இல்லை. அப்படி என்றால் அம்பந்தோடடையும் வறண்ட பிரதேசம் , அங்கும் நிலத்தடி நீர் ஆழத்தில்தாம் காணப்படும். இருந்தாலும், உலக நாடுகளில் எல்லாம் புதைக்கும்போது இவர்களது தர்க்கம் அர்த்தமற்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.