Jump to content

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு நீதி கோரி யாழ்.நகரில் போராட்டம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு நீதி கோரி யாழ்.நகரில் போராட்டம்.!

Screenshot-2020-12-28-11-28-50-823-com-a 

கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதை நிறுத்தக்கோரி நாடளாவிய ரீதியில் முனைப்புப் பெற்றுவரும் போராட்டத்தின் தொடராக யாழ்ப்பாணத்தின் நகர் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

அரசே உனது பலத்தை சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் சிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கத்திற்கு அனுமதியளித்திடு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ்.சமூகம் முன்னெடுத்த குறித்த போராட்டத்தில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட் உட்பட்டவர்களும் திரளான முஸ்லிம், தமிழ் மக்களும் பங்குகொண்டிருந்தனர்.

http://aruvi.com/article/tam/2020/12/28/20894/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நட‌க்கின்றது நாட்டில் ....தமிழ் சிங்கள பிரிவினை போய் இப்ப ....முஸ்லீம்,கிறிஸ்தவ பெளத்த இந்து என பல் முனை பிரிவினை தொடங்கி விட்டதே ...இது நன்மையா?  தீமையா?சிறிலங்கா தேசியத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

என்னப்பா நட‌க்கின்றது நாட்டில் ....தமிழ் சிங்கள பிரிவினை போய் இப்ப ....முஸ்லீம்,கிறிஸ்தவ பெளத்த இந்து என பல் முனை பிரிவினை தொடங்கி விட்டதே ...இது நன்மையா?  தீமையா?சிறிலங்கா தேசியத்திற்கு

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்

அவர்கள்தான் சொர்க்கத்தில் யாரையோ வேணுமென்று போராடுகினம் இவை ரெண்டு பேரும் எண்ணத்துக்கு போய் அங்கு நிக்கினம் .🤣

இப்படி முன்னமே சேர்ந்து இருந்தால் கொஞ்சம் வேகமாய் பிரச்சனைகள் தீர்க்கப்ட்டு இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி முன்னமே சேர்ந்து இருந்தால் கொஞ்சம் வேகமாய் பிரச்சனைகள் தீர்க்கப்ட்டு இருக்கும் .

 

இதுக்குப் பிறகு இன்னும் வேகமாக எரிப்பு நடக்கும்...

அவர்கள்தான் சொர்க்கத்தில் யாரையோ வேணுமென்று போராடுகினம் இவை ரெண்டு பேரும் எண்ணத்துக்கு போய் அங்கு நிக்கினம்

அவைக்கும் சேர்த்துத்தான் அங்கை புக்கிங் நடக்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறீத்துவர்கள் இதனை சமயத்தின் பெயரால் எதிர்ப்பது பிழையான முன்னுதாரணம்... 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்.. 😂

சிவாஜிலிங்கத்த சொல்லேல்லத் தானே! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வாலி said:

சிவாஜிலிங்கத்த சொல்லேல்லத் தானே! 😂

பிற அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் இந்தாள் எவ்வளவோ மேல்..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கிறீஸ்தவருக்கு தமிழ் இந்துகளை விட்டால் வேறு வழியில்லை.

தமிழ் இந்துகளுக்கு தமிழ் கிறீஸ்தவரை விட்டால் வேறு வழியில்லை.

மிகுதி எல்லாரும் தமக்கு தேவையான போது வந்து சேருவார்கள் தேவை முடிந்ததும் ஆப்படிப்பார்கள் ( மாட்டிறச்சி விடயத்தில் இந்து+பெளத்தம், இப்போ கிறிஸ்தவம்+முஸ்லிம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஏதாவது தொடர் வெடிகள் கைவசம் வைத்து அப்பப்ப கொளுத்திப்போட்டு மக்களை திசை மாறி அதன் பின்னால் ஓட வைக்கும் சிங்களத்தின் யுக்தி இது. அவன் எதையாவது சாதிக்க நினைத்தால், இப்படியான சந்தர்ப்பங்களை இயற்கையும் அளிக்கிறது அவனுக்கு. 

Link to comment
Share on other sites

On 28/12/2020 at 20:58, Kapithan said:

கிறீத்துவர்கள் இதனை சமயத்தின் பெயரால் எதிர்ப்பது பிழையான முன்னுதாரணம்... 🤥

இதில் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை எனபதை கவனத்தில் கொள்ளவும். எனவே சுமந்திரனைப்பற்றி மேலதிக தகவல்களை எழுதினால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.