Jump to content

இலங்கையில் புற்று நோயாளர்கள் அதிகரிக்க காரணம் என்ன? – மருத்துவர் . சி.யமுனாநந்தா கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புற்று நோயாளர்கள் அதிகரிக்க காரணம் என்ன? – மருத்துவர் . சி.யமுனாநந்தா கருத்து

 
1-156.jpg
 44 Views

இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது குறித்து மருத்துவர் . சி.யமுனாநந்தா விளக்குகையில்,

பெரும்பாலான புற்று நோயாளர்கள் மிகவும் பிந்திய நிலையிலேயே இனம் காணப்பட்டு வருகின்றனர். பிந்திய நிலையில் இனம் காணப்படும் நோயாளர்கள் குணமடையும் வீதம் குறைவாகும்.

மேலும் இது பெரும் பொருளாதார சுமையினை ஏற்படுத்துகின்றது. ஆரம்ப நிலைகளில் புற்று நோயினைக் கண்டறிந்தால் சிகிச்சை வெற்றியளிக்கும் வீதம் அதிகமாகும், எனவே புற்று நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக மருத்துவ ஆலோசனை வழங்களில் முறையான நடைமுறை அவசியமாகும். புற்று நோயாளர்கள் பல தடவைகள் படிப்படியான நோய் அறிகுறிகளுடன் வைத்திய சேவையை நாடிய போதிலும் பிந்திய நிலையிலேயே கண்டறியப்படுகின்றனர்.

(விசேட சேவை வழங்கல்) அமைப்பாக புற்று நோயினை ஆரம்ப நிலையில் கண்டறியும் நிலையம் வைத்தியசாலைகளில் இயங்குதல் அவசியமாகும். இதன் மூலம் வெளி நோயாளர் பிரிவில் ஒரே தடவையில் குறுகிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனையினை மேற்கொள்ளலாம்.

புற்று நோயினை ஆரம்ப நிலையில் இனம் காணும் சிகிச்சை நிலையத்தினால் பொதுவான புற்று நோய்களான

வாய்ப் புற்று நோய்
மார்பகப் புற்று நோய்
கருப்பைப் புற்று நோய் ஆகியவற்றைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இலங்கையில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்று நோய்களில் ஆண்களில் கண்டறியப்படும் புற்று நோய்களில் வாய்ப் புற்று நோய் 16 வீதம் ஆகவும் பெண்களில் கண்டறியப்படும் புற்று நோய்களில் மார்பகப் புற்று நோய் 25 வீதம் ஆகவும் காணப்படுகின்றது. தைரோயிட் புற்று நோய், கருப்பைக் கழுத்துப் புற்று நோய் என்பன சுமார் 10வீதமாகக் காணப்படுகின்றன.

மார்பகப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் கருப்பைக் கழுத்துப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் வாய்ப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் இலங்கை சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஒன்பது மாவட்டங்களிலும் புற்று நோயினை ஆரம்ப நிலையில் கண்டறியும் நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்கு உரிய புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறியும் மருத்துவ ஆலோசனைப் பிரிவு யாழ் போதனா வைத்தியசாலையிலும் இயங்கவுள்ளது.

புற்று நோயினை கண்டறிதலில் நோய் அறிகுறி அற்றவர்களில் விசேட பரிசோதனைகள் குறிப்பாக கருப்பைக் கழுத்துப் புற்று நோய் , மார்பகப் புற்று நோய் என்பனவற்றுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. நோய் அறிகுறி உடையவர்களில் விசேடமாக குருதிப் பரிசோதனை, கதிர்ப் படங்கள், மாதிரிக் குழியவியல், இழைவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

புற்று நோய் இறப்புக்களில் 30 – 50வீதம் தவிர்க்கக் கூடியவை. மேலும் ஆபத்தான பழக்கவழக்கங்களை விலத்துவதனால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் குறைவடையும். குறிப்பாக வெற்றிலை, பாக்கு மெல்லுதல், புகைப் பிடித்தல், மதுபானம் பாவித்தல் என்பன புற்று நோய்க்கு இட்டுச் செல்லும். அடுத்து ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், உடற் பயிற்சிகளும் சரியான உடல் நிறையைப் பேணுதலும் புற்று நோய் எம்மை அணுகாது காக்கும்.

உடலில் ஏற்படும் பரம்பரையலகு விவகாரங்கள் சில வேளைகளில் புற்று நோயினை ஏற்படுத்தலாம். மேலும் நமது பாவனையில் உள்ள இரசாயன நச்சுக்களும் புற்று நோயினை ஏற்படுத்தலாம்.

பொதுவான புற்று நோய்களாவன:

1. நுரையீரல் புற்று நோய்
2. மார்பகப் புற்று நோய்
3. உணவுக் கால்வாய்ப் புற்று நோய்
4. ஈரல்ப் புற்று நோய்
5. சுதையி புற்று நோய்
6. சிறு நீரகப் புற்று நோய்
7. கருப்பைப் புற்று நோய்
8. சூலகப் புற்று நோய்
9. மூளைப் புற்று நோய்
10. குருதிப் புற்று நோய்
11. முன்னிற்கும் சுரப்பிப் புற்று நோய்
12. என்புப் புற்று நோய

புற்று நோய்க்கான சிகிச்சையில் புற்று நோய் இழையங்களை அகற்றும் சத்திர சிகிச்சை, புற்று நோய்க் கலங்களை அழிக்கும் மருந்து மாத்திரைகள், ஓமோன் சிகிச்சைகள், கதிரியக்க சிகிச்சைகள் என்பன தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றுக்கு மேலாக உளவள ஆற்றுப்படுத்தல், வலி நீக்க சிகிச்சைகள், ஆன்மீக ஆற்றுப்படுத்தல் என்பனவும் இன்றியமையாதனவாகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=38019

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.