Jump to content

304 விளையாட்டினை முதலாவதாக இணையவழியில் உருவாக்கிய தமிழன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

304 விளையாட்டினை முதலாவதாக இணையவழியில் உருவாக்கிய தமிழன்

இன்றைய உலக ஒழுங்குமுறைக்கு அமைவாக மிகவும் சவாலான சூழ்நிலையில் இணைய வழிமூலமாக (Online) விளையாடும் வகையில் 304 (THREE - NOUGHT - FOUR) என்று அழைக்கப்படும் விளையாட்டு மிகமிக சிறப்பாக இணையத்தளத்தில் (the304game.com) வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் இவ் விளையாட் டின் முதலாவது உலகக்கிண்ணப் போட்டியும் இணைய வழித்தடமூடாக ஏற்பாடுசெய்யப்பட்டு நடந்தேறியிருக்கின்றது.

304 விளையாட்டானது இலங்கையில் மிகவும் பிரபலமானது குறிப்பாக தமிழ் மக்களிடையே உயர்கல்வி நிலையாளர்கள் முதல் சாதாரண பாமரமக்கள் வரை 80 வயது தாண்டியும் பலதரப்பட்ட மக்களாலும் விளையாடப்பட்டு வந்தது.

இதற்கென எழுதப்பட்ட விதிமுறைகள் எதுவும் இல்லாது விளையாடப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலும் போட்டிகள் சச்சரவாக முடிவடையும். ஆனாலும் மறு நிமிடமே அதே குழுவினரே இணைந்து விளையாடுவார்கள்.

இவ்வாறாக எழுதப்படாத, ஒழுங்கு படுத்தப்படாத, விதிகளோடு விளையாடப்பட்டு வந்தமையே ஏனைய உலக மக்களிடத்தில் சென்றடையத் தவறிவிட்டது.

இந்த நிலைமையில் கணனி தொழில்நுட்ப துறையில் பயணித்து வரும் கனடா வாழ் ஈழத்தவரான திரு மகேன் வாகீசன் அவர்களது சிந்தனை இன்று ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளுடன் நெறிப்படுத்தப்பட்ட இணைய முறையில் விளையாடும் வகையில் 304 விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருப்பது இவ்விளையாட்டில் ஏற்பட்டுள்ள ஓர் புரட்சியே.

 

 

COVID-19 வைரஸின் தொற்றுக்கால உலகளாவிய ஆரம்ப முடக்க காலத்தில், ஆக்கபூர்வமான சமூகமயமாக்கலிற்கான அவசியம் அனைவர்க்குமே ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இணையவழி 304 விளையாட்டு மென்பொருள் உருவாக்கும் சிந்தனை திரு மகேன் வாகீசனுக்கு ஏற்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலான இவரது முயற்சியே, இன்று நாமனைவரும் நட்புறவை தொடர்ந்து பேணும்வகையிலும், அன்பான உணர்வுகள் பேணப்படும் வகையிலும், நல்லதொரு வாய்ப்பை இவ்விளையாட்டு அனைவருக்கும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

அத்துடன் 304 விளையாட்டை விளையாட விரும்பும் அனைவருமே, இதனை நிகழ்நேர, மற்றும் மெய்நிகர் விளையாட்டாகவும், விளையாடும்வகையில், அவர் உருவாக்கியமையானது, 304 விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் எனும் நிலையையும் தொட்டுவிட்டிருக்கிறது.

தற்போது, 25 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் the304game.com என்ற இந்த இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். மற்றும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் தங்கள் நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்.

இந்த விளையாட்டை மற்ற சமூகத்திரும் விளையாடும் வகையில் செயற்படுத்தி அறிமுகப்படுத்துவதே அடுத்த முக்கிய இலக்காகும். விளையாட்டின் செயற்பாட்டு ஒலி ஒளி விளக்க வீடியோப்பதிவுகள் புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதன்மூலம் தங்கள் நண்பர்களுடன் இணைந்து எளிதாக புரிந்துகொண்டு விளையாடமுடியும். இந்த இணைய முகப்பு பயன்பாட்டு முறைகள் அனைத்துமே மிக எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதாரண கணனிகள் அனைத்திலும் கூகிள் குறோம் வழித்தடம் மூலமே விளையாட முடியும்.

கைத்தொலைபேசி (Mobile Phone) மற்றும் ரபிலெற் (Tablet) களில் விளையாடக்கூடிய முறைகள் மட்டும் இன்னும் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் இவற்றிற்கான ஒழுங்கமைப்பு முறைகள் 2021 ம் ஆண்டின் மத்திய பகுதிக்குள் நிறைவுபெற்றுவிடும்.

304 விளையாட்டு சமூகத்தின் மற்றொரு மைல்கல் சாதனை கனடாவின் திரு.சிவகுமார் நவரத்னம் தலைமையிலான the304game.com இன் 1 வது 304 விளையாட்டு உலக போட்டி ஆகும். the304game.com இணையம் இருந்தமையினால் மட்டுமே, இந்த உலகக்கிண்ணப் போட்டியை உலகம் முழுவதும் உள்ள நம்மவர்களை இணைத்து நடாத்த முடிந்திருந்தது

அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், நோர்வே, இலங்கை, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் the304game.com நடத்திய இம்முதலாவது உலகக்கிண்ணப்போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

போட்டி முடிவுகள்

வெற்றியாளர்கள்

பிரான்ஸ் : (தங்கராசா சிவசிறி, யோகசிங்கம் தம்பா (சுரேன்))

இரண்டாம் இடம்

கனடா : (அருண் நந்தகுமாரன், சிவா இராசியா, ரவி ரவீந்திரன்)

மூன்றாம் இடம்

இலங்கை : (சுரேந்திரநாத் சுரேந்திரகுமார், பிருத்விராஜ் அருள்குமாரன்)
 

 

https://www.canadamirror.com/canada/04/297203

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதெல்லாம் கூட நடக்குதா.திரு மகேன் வாகீசன் க்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட இதெல்லாம் கூட நடக்குதா.திரு மகேன் வாகீசன் க்கு வாழ்த்துக்கள்

நம்ம சிநேகிதம்தான்!

ஃபோனில் விளையாடக்கூடிய அப்ஸும், நண்பர்கள் இல்லாமல் வேர்ச்சுவல் பிளேயர்ஸுடன் விளையாடக்கூடிய வசதிகளையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வேலை நடக்கின்றது என்று சொன்னார்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Firefox யிலும் விடுகிறதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Firefox யிலும் விடுகிறதே

Firefox ஒரு browser (உலாவி). இப்போது 304 game desktop வேர்சனாக இருப்பதால் browserகளில்தான் விளையாடமுடியும்.

விரைவில் தனியே app ஆக வரவுள்ளது. அதன் பின்னர் browser தேவையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 16:37, கிருபன் said:

நம்ம சிநேகிதம்தான்!

ஃபோனில் விளையாடக்கூடிய அப்ஸும், நண்பர்கள் இல்லாமல் வேர்ச்சுவல் பிளேயர்ஸுடன் விளையாடக்கூடிய வசதிகளையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வேலை நடக்கின்றது என்று சொன்னார்😀

என்னதான் நாலு பேர் இருந்து கைமடக்கி கம்மாரிசு அடிக்க இயலுமோ இந்த இணையத்தில

Link to comment
Share on other sites

16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னதான் நாலு பேர் இருந்து கைமடக்கி கம்மாரிசு அடிக்க இயலுமோ இந்த இணையத்தில

காட்சை மேசியில் தூக்கி எறிந்து (கோபத்தில்) நான் வரவில்லை உங்களோடு விளையாட எனும் கண்கொள்ளா காட்சியை இணையத்தில் காண முடியாது ,தனி.

மகேன் வாகீசனுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

காட்சை மேசியில் தூக்கி எறிந்து (கோபத்தில்) நான் வரவில்லை உங்களோடு விளையாட எனும் கண்கொள்ளா காட்சியை இணையத்தில் காண முடியாது ,தனி.

மகேன் வாகீசனுக்கும் வாழ்த்துக்கள்.

தற்போது மழைக்காலம் பல வாத்திமார்களுக்கு இதுதான் பொழுது போக்கு ஆனால் இந்த கொரோனாவால் விளையாட முடியல நுணா சரியான மனஸ்த்தாபம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் நேருக்கு நேர் இருந்துகொண்டு கம்மாரிசு அடிச்சு எதிரணியை திணறடிக்கிற த்ரில் ஆன்லைன்ல கிடைக்குமோ தெரியேல்லை 🙄

Link to comment
Share on other sites

எனக்கு மிகப் பிடித்த விளையாட்டு இது. ஊரில் கரண்ட் இல்லா காலங்களில் ஆடப் பழகி பின்னர் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் இணைந்து விளையாடிவரைக்கும் அருமையான நினைவுகள். அதுவும் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் விளையாடும் போது தோற்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி, அவர்களும் அப்படிச் செய்ய..... ம்ம்ம் ...அது ஒரு கனா காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஜென்மம் சாபல்யம் அடைந்தது போன்ற ஒரு உணர்வு.......பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன் & இதற்காக அயராது உழைத்த அனைவருக்கும்.........!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கார்ட்ஸ் லொத்தர் எதுவும் தொடுவதில்லை இன்றுவரை  பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன்க்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

அதுவும் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் விளையாடும் போது தோற்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி, அவர்களும் அப்படிச் செய்ய..... ம்ம்ம் ...அது ஒரு கனா காலம்.

🤔சே..……சே……நிழலி நல்ல பொடியன்🤣

2 hours ago, பெருமாள் said:

 

கார்ட்ஸ் லொத்தர் எதுவும் தொடுவதில்லை இன்றுவரை  பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன்க்கு .

நானும் உங்க கேஸ்தான். ஆனால் லொத்தர் அபப்ப போடுவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் உங்க கேஸ்தான். ஆனால் லொத்தர் அபப்ப போடுவன். 

லொத்தர் எப்படி போடுவது என்று தெரியாது வேலை இடங்களில் 16 வருடங்களுக்கு முன்பு குருப் லொத்தர் போட  என்னை இழுப்பினம் நான் சம்மதிப்பதில்லை ஆனாலும் என் சம்மதம் இல்லாமல் என்பெயரை போட்டு எடுப்பினம் ஆனாலும் நான் சொல்லியபடிதான் நடக்கும் விழவே  விழாது பல சமயங்களில் மின்சி போனால் ஆளுக்கு 1500 மேல் வராது அப்படி வரும்பணத்தை கூட வேண்டுவதில்லை  அதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்கும் விளையாட்டுக்கள் . 

எல்லாத்தையும் விட மோசமானது சுரண்டல் லொத்தர் வேலையில்  ஒருநாள் அப்போது தற்காலிக வேலையாளுக்கு 50 பவுன்தான் சம்பளம் வேலை முடிந்து வீடு போகாமல் மூலை கடைகளில் ஒரு பியரை  வாங்கி அடித்தபடி சுரண்ட தொடங்குவினம் கடைசியில் 100 பவுனுக்கு மேல் சுரண்டி களைத்து வீடு செல்வினம்  இப்ப நம்மாட்கள் திருந்தி விட்டினம்  வெம்பிளியில் [[பிள்ளையார் மறு  பெயரை கொண்ட கடையில்  பின்பக்கம் பின்னேர பொழுதுகளில் கவனியுங்க இந்திய வடமாநிலத்தவர் சுரண்டிக்கொண்டு இருப்பினம் இந்த குளிரிலும் .

On 29/12/2020 at 13:47, கிருபன் said:

Firefox ஒரு browser (உலாவி). இப்போது 304 game desktop வேர்சனாக இருப்பதால் browserகளில்தான் விளையாடமுடியும்.

விரைவில் தனியே app ஆக வரவுள்ளது. அதன் பின்னர் browser தேவையில்லை

வாகீசன் எனும் பெயர் உடையவர்கள் அநேகமாக உடம்பாய் இருப்பதன் மர்மம் விளங்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

லொத்தர் எப்படி போடுவது என்று தெரியாது வேலை இடங்களில் 16 வருடங்களுக்கு முன்பு குருப் லொத்தர் போட  என்னை இழுப்பினம் நான் சம்மதிப்பதில்லை ஆனாலும் என் சம்மதம் இல்லாமல் என்பெயரை போட்டு எடுப்பினம் ஆனாலும் நான் சொல்லியபடிதான் நடக்கும் விழவே  விழாது பல சமயங்களில் மின்சி போனால் ஆளுக்கு 1500 மேல் வராது அப்படி வரும்பணத்தை கூட வேண்டுவதில்லை  அதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்கும் விளையாட்டுக்கள் . 

எல்லாத்தையும் விட மோசமானது சுரண்டல் லொத்தர் வேலையில்  ஒருநாள் அப்போது தற்காலிக வேலையாளுக்கு 50 பவுன்தான் சம்பளம் வேலை முடிந்து வீடு போகாமல் மூலை கடைகளில் ஒரு பியரை  வாங்கி அடித்தபடி சுரண்ட தொடங்குவினம் கடைசியில் 100 பவுனுக்கு மேல் சுரண்டி களைத்து வீடு செல்வினம்  இப்ப நம்மாட்கள் திருந்தி விட்டினம்  வெம்பிளியில் [[பிள்ளையார் மறு  பெயரை கொண்ட கடையில்  பின்பக்கம் பின்னேர பொழுதுகளில் கவனியுங்க இந்திய வடமாநிலத்தவர் சுரண்டிக்கொண்டு இருப்பினம் இந்த குளிரிலும் .

வாகீசன் எனும் பெயர் உடையவர்கள் அநேகமாக உடம்பாய் இருப்பதன் மர்மம் விளங்கவில்லை .

ஓம் அதை நானும் கண்டுள்ளேன். அதை விட மோசம் fruit machines. சில சிக்கின் கடையில் கூட எங்கட ஆக்கள் வச்சிருக்கினம். விளையாட வாறதும் இவையள்தான். இதை விட பெட்டிங் செண்டர் உள்ளே போனாலும் நாத்தம் எடுக்கும் உடுப்புகளோடு கூட தமிழர் பலர் இருப்பதை காணலாம்.

நான் நேசனல் லொட்டரி எப்பவாவது 105 மில்லியன் போன்ற அறிவிப்பை கண்டால், வாங்கும் சாமானோடு ஒன்று வாங்குவேன்.

விழுந்தால் ஊருக்கு எஸ் ஆகிவிடலாம் (அதுவும் இன்னும் 10 வருடத்துக்கு முடியாது) என்ற நப்பாசைதான் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதை விட பெட்டிங் செண்டர் உள்ளே போனாலும் நாத்தம் எடுக்கும் உடுப்புகளோடு கூட தமிழர் பலர் இருப்பதை காணலாம்.

அது வேறை கதை கவன்சில் கொடுத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கிழமைக்கு ஒருக்கா போய் குளித்து விட்டு வரும் கூட்டம் அதுகள் அதுவும் நடக்குதோ தெரியாலை அதுகளுக்கு கொரனோ  தொத்து  கிடையாது நிறைய T  செல்லுடன்  திரிகிற கூட்டம் .😁அதுசரி பெட்டிங்  செண்டருக்கு நீங்கள் ஏன்  போனீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அது வேறை கதை கவன்சில் கொடுத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கிழமைக்கு ஒருக்கா போய் குளித்து விட்டு வரும் கூட்டம் அதுகள் அதுவும் நடக்குதோ தெரியாலை அதுகளுக்கு கொரனோ  தொத்து  கிடையாது நிறைய T  செல்லுடன்  திரிகிற கூட்டம் .😁அதுசரி பெட்டிங்  செண்டருக்கு நீங்கள் ஏன்  போனீர்கள் ?

அது பெரிய கதை பொஸ். குதிரையில ஏறின ஒருத்தர வீட்டுக்காரர் கேட்டு இறக்க முயற்சித்த கதை. ஒரு மாரி இறக்கியாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அது பெரிய கதை பொஸ். குதிரையில ஏறின ஒருத்தர வீட்டுக்காரர் கேட்டு இறக்க முயற்சித்த கதை. ஒரு மாரி இறக்கியாச்சு.

அங்கு ஏறின கூட்டம் லேசிலை  இரங்காயினம் கவனம் நீங்கள் .

2 hours ago, goshan_che said:

நான் நேசனல் லொட்டரி எப்பவாவது 105 மில்லியன் போன்ற அறிவிப்பை கண்டால், வாங்கும் சாமானோடு ஒன்று வாங்குவேன்.

அது ஒரு போதும் விழாது சாமானியர்களை  முட்டாள்களாக்கும்  விளையாட்டு அது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.