Jump to content

304 விளையாட்டினை முதலாவதாக இணையவழியில் உருவாக்கிய தமிழன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

304 விளையாட்டினை முதலாவதாக இணையவழியில் உருவாக்கிய தமிழன்

இன்றைய உலக ஒழுங்குமுறைக்கு அமைவாக மிகவும் சவாலான சூழ்நிலையில் இணைய வழிமூலமாக (Online) விளையாடும் வகையில் 304 (THREE - NOUGHT - FOUR) என்று அழைக்கப்படும் விளையாட்டு மிகமிக சிறப்பாக இணையத்தளத்தில் (the304game.com) வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் இவ் விளையாட் டின் முதலாவது உலகக்கிண்ணப் போட்டியும் இணைய வழித்தடமூடாக ஏற்பாடுசெய்யப்பட்டு நடந்தேறியிருக்கின்றது.

304 விளையாட்டானது இலங்கையில் மிகவும் பிரபலமானது குறிப்பாக தமிழ் மக்களிடையே உயர்கல்வி நிலையாளர்கள் முதல் சாதாரண பாமரமக்கள் வரை 80 வயது தாண்டியும் பலதரப்பட்ட மக்களாலும் விளையாடப்பட்டு வந்தது.

இதற்கென எழுதப்பட்ட விதிமுறைகள் எதுவும் இல்லாது விளையாடப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலும் போட்டிகள் சச்சரவாக முடிவடையும். ஆனாலும் மறு நிமிடமே அதே குழுவினரே இணைந்து விளையாடுவார்கள்.

இவ்வாறாக எழுதப்படாத, ஒழுங்கு படுத்தப்படாத, விதிகளோடு விளையாடப்பட்டு வந்தமையே ஏனைய உலக மக்களிடத்தில் சென்றடையத் தவறிவிட்டது.

இந்த நிலைமையில் கணனி தொழில்நுட்ப துறையில் பயணித்து வரும் கனடா வாழ் ஈழத்தவரான திரு மகேன் வாகீசன் அவர்களது சிந்தனை இன்று ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளுடன் நெறிப்படுத்தப்பட்ட இணைய முறையில் விளையாடும் வகையில் 304 விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருப்பது இவ்விளையாட்டில் ஏற்பட்டுள்ள ஓர் புரட்சியே.

 

 

COVID-19 வைரஸின் தொற்றுக்கால உலகளாவிய ஆரம்ப முடக்க காலத்தில், ஆக்கபூர்வமான சமூகமயமாக்கலிற்கான அவசியம் அனைவர்க்குமே ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இணையவழி 304 விளையாட்டு மென்பொருள் உருவாக்கும் சிந்தனை திரு மகேன் வாகீசனுக்கு ஏற்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலான இவரது முயற்சியே, இன்று நாமனைவரும் நட்புறவை தொடர்ந்து பேணும்வகையிலும், அன்பான உணர்வுகள் பேணப்படும் வகையிலும், நல்லதொரு வாய்ப்பை இவ்விளையாட்டு அனைவருக்கும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

அத்துடன் 304 விளையாட்டை விளையாட விரும்பும் அனைவருமே, இதனை நிகழ்நேர, மற்றும் மெய்நிகர் விளையாட்டாகவும், விளையாடும்வகையில், அவர் உருவாக்கியமையானது, 304 விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் எனும் நிலையையும் தொட்டுவிட்டிருக்கிறது.

தற்போது, 25 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் the304game.com என்ற இந்த இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். மற்றும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் தங்கள் நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்.

இந்த விளையாட்டை மற்ற சமூகத்திரும் விளையாடும் வகையில் செயற்படுத்தி அறிமுகப்படுத்துவதே அடுத்த முக்கிய இலக்காகும். விளையாட்டின் செயற்பாட்டு ஒலி ஒளி விளக்க வீடியோப்பதிவுகள் புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதன்மூலம் தங்கள் நண்பர்களுடன் இணைந்து எளிதாக புரிந்துகொண்டு விளையாடமுடியும். இந்த இணைய முகப்பு பயன்பாட்டு முறைகள் அனைத்துமே மிக எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதாரண கணனிகள் அனைத்திலும் கூகிள் குறோம் வழித்தடம் மூலமே விளையாட முடியும்.

கைத்தொலைபேசி (Mobile Phone) மற்றும் ரபிலெற் (Tablet) களில் விளையாடக்கூடிய முறைகள் மட்டும் இன்னும் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் இவற்றிற்கான ஒழுங்கமைப்பு முறைகள் 2021 ம் ஆண்டின் மத்திய பகுதிக்குள் நிறைவுபெற்றுவிடும்.

304 விளையாட்டு சமூகத்தின் மற்றொரு மைல்கல் சாதனை கனடாவின் திரு.சிவகுமார் நவரத்னம் தலைமையிலான the304game.com இன் 1 வது 304 விளையாட்டு உலக போட்டி ஆகும். the304game.com இணையம் இருந்தமையினால் மட்டுமே, இந்த உலகக்கிண்ணப் போட்டியை உலகம் முழுவதும் உள்ள நம்மவர்களை இணைத்து நடாத்த முடிந்திருந்தது

அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், நோர்வே, இலங்கை, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் the304game.com நடத்திய இம்முதலாவது உலகக்கிண்ணப்போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

போட்டி முடிவுகள்

வெற்றியாளர்கள்

பிரான்ஸ் : (தங்கராசா சிவசிறி, யோகசிங்கம் தம்பா (சுரேன்))

இரண்டாம் இடம்

கனடா : (அருண் நந்தகுமாரன், சிவா இராசியா, ரவி ரவீந்திரன்)

மூன்றாம் இடம்

இலங்கை : (சுரேந்திரநாத் சுரேந்திரகுமார், பிருத்விராஜ் அருள்குமாரன்)
 

 

https://www.canadamirror.com/canada/04/297203

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதெல்லாம் கூட நடக்குதா.திரு மகேன் வாகீசன் க்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட இதெல்லாம் கூட நடக்குதா.திரு மகேன் வாகீசன் க்கு வாழ்த்துக்கள்

நம்ம சிநேகிதம்தான்!

ஃபோனில் விளையாடக்கூடிய அப்ஸும், நண்பர்கள் இல்லாமல் வேர்ச்சுவல் பிளேயர்ஸுடன் விளையாடக்கூடிய வசதிகளையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வேலை நடக்கின்றது என்று சொன்னார்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Firefox யிலும் விடுகிறதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Firefox யிலும் விடுகிறதே

Firefox ஒரு browser (உலாவி). இப்போது 304 game desktop வேர்சனாக இருப்பதால் browserகளில்தான் விளையாடமுடியும்.

விரைவில் தனியே app ஆக வரவுள்ளது. அதன் பின்னர் browser தேவையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 16:37, கிருபன் said:

நம்ம சிநேகிதம்தான்!

ஃபோனில் விளையாடக்கூடிய அப்ஸும், நண்பர்கள் இல்லாமல் வேர்ச்சுவல் பிளேயர்ஸுடன் விளையாடக்கூடிய வசதிகளையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வேலை நடக்கின்றது என்று சொன்னார்😀

என்னதான் நாலு பேர் இருந்து கைமடக்கி கம்மாரிசு அடிக்க இயலுமோ இந்த இணையத்தில

Link to comment
Share on other sites

16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னதான் நாலு பேர் இருந்து கைமடக்கி கம்மாரிசு அடிக்க இயலுமோ இந்த இணையத்தில

காட்சை மேசியில் தூக்கி எறிந்து (கோபத்தில்) நான் வரவில்லை உங்களோடு விளையாட எனும் கண்கொள்ளா காட்சியை இணையத்தில் காண முடியாது ,தனி.

மகேன் வாகீசனுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

காட்சை மேசியில் தூக்கி எறிந்து (கோபத்தில்) நான் வரவில்லை உங்களோடு விளையாட எனும் கண்கொள்ளா காட்சியை இணையத்தில் காண முடியாது ,தனி.

மகேன் வாகீசனுக்கும் வாழ்த்துக்கள்.

தற்போது மழைக்காலம் பல வாத்திமார்களுக்கு இதுதான் பொழுது போக்கு ஆனால் இந்த கொரோனாவால் விளையாட முடியல நுணா சரியான மனஸ்த்தாபம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் நேருக்கு நேர் இருந்துகொண்டு கம்மாரிசு அடிச்சு எதிரணியை திணறடிக்கிற த்ரில் ஆன்லைன்ல கிடைக்குமோ தெரியேல்லை 🙄

Link to comment
Share on other sites

எனக்கு மிகப் பிடித்த விளையாட்டு இது. ஊரில் கரண்ட் இல்லா காலங்களில் ஆடப் பழகி பின்னர் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் இணைந்து விளையாடிவரைக்கும் அருமையான நினைவுகள். அதுவும் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் விளையாடும் போது தோற்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி, அவர்களும் அப்படிச் செய்ய..... ம்ம்ம் ...அது ஒரு கனா காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஜென்மம் சாபல்யம் அடைந்தது போன்ற ஒரு உணர்வு.......பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன் & இதற்காக அயராது உழைத்த அனைவருக்கும்.........!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கார்ட்ஸ் லொத்தர் எதுவும் தொடுவதில்லை இன்றுவரை  பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன்க்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

அதுவும் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் விளையாடும் போது தோற்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி, அவர்களும் அப்படிச் செய்ய..... ம்ம்ம் ...அது ஒரு கனா காலம்.

🤔சே..……சே……நிழலி நல்ல பொடியன்🤣

2 hours ago, பெருமாள் said:

 

கார்ட்ஸ் லொத்தர் எதுவும் தொடுவதில்லை இன்றுவரை  பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன்க்கு .

நானும் உங்க கேஸ்தான். ஆனால் லொத்தர் அபப்ப போடுவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் உங்க கேஸ்தான். ஆனால் லொத்தர் அபப்ப போடுவன். 

லொத்தர் எப்படி போடுவது என்று தெரியாது வேலை இடங்களில் 16 வருடங்களுக்கு முன்பு குருப் லொத்தர் போட  என்னை இழுப்பினம் நான் சம்மதிப்பதில்லை ஆனாலும் என் சம்மதம் இல்லாமல் என்பெயரை போட்டு எடுப்பினம் ஆனாலும் நான் சொல்லியபடிதான் நடக்கும் விழவே  விழாது பல சமயங்களில் மின்சி போனால் ஆளுக்கு 1500 மேல் வராது அப்படி வரும்பணத்தை கூட வேண்டுவதில்லை  அதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்கும் விளையாட்டுக்கள் . 

எல்லாத்தையும் விட மோசமானது சுரண்டல் லொத்தர் வேலையில்  ஒருநாள் அப்போது தற்காலிக வேலையாளுக்கு 50 பவுன்தான் சம்பளம் வேலை முடிந்து வீடு போகாமல் மூலை கடைகளில் ஒரு பியரை  வாங்கி அடித்தபடி சுரண்ட தொடங்குவினம் கடைசியில் 100 பவுனுக்கு மேல் சுரண்டி களைத்து வீடு செல்வினம்  இப்ப நம்மாட்கள் திருந்தி விட்டினம்  வெம்பிளியில் [[பிள்ளையார் மறு  பெயரை கொண்ட கடையில்  பின்பக்கம் பின்னேர பொழுதுகளில் கவனியுங்க இந்திய வடமாநிலத்தவர் சுரண்டிக்கொண்டு இருப்பினம் இந்த குளிரிலும் .

On 29/12/2020 at 13:47, கிருபன் said:

Firefox ஒரு browser (உலாவி). இப்போது 304 game desktop வேர்சனாக இருப்பதால் browserகளில்தான் விளையாடமுடியும்.

விரைவில் தனியே app ஆக வரவுள்ளது. அதன் பின்னர் browser தேவையில்லை

வாகீசன் எனும் பெயர் உடையவர்கள் அநேகமாக உடம்பாய் இருப்பதன் மர்மம் விளங்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

லொத்தர் எப்படி போடுவது என்று தெரியாது வேலை இடங்களில் 16 வருடங்களுக்கு முன்பு குருப் லொத்தர் போட  என்னை இழுப்பினம் நான் சம்மதிப்பதில்லை ஆனாலும் என் சம்மதம் இல்லாமல் என்பெயரை போட்டு எடுப்பினம் ஆனாலும் நான் சொல்லியபடிதான் நடக்கும் விழவே  விழாது பல சமயங்களில் மின்சி போனால் ஆளுக்கு 1500 மேல் வராது அப்படி வரும்பணத்தை கூட வேண்டுவதில்லை  அதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்கும் விளையாட்டுக்கள் . 

எல்லாத்தையும் விட மோசமானது சுரண்டல் லொத்தர் வேலையில்  ஒருநாள் அப்போது தற்காலிக வேலையாளுக்கு 50 பவுன்தான் சம்பளம் வேலை முடிந்து வீடு போகாமல் மூலை கடைகளில் ஒரு பியரை  வாங்கி அடித்தபடி சுரண்ட தொடங்குவினம் கடைசியில் 100 பவுனுக்கு மேல் சுரண்டி களைத்து வீடு செல்வினம்  இப்ப நம்மாட்கள் திருந்தி விட்டினம்  வெம்பிளியில் [[பிள்ளையார் மறு  பெயரை கொண்ட கடையில்  பின்பக்கம் பின்னேர பொழுதுகளில் கவனியுங்க இந்திய வடமாநிலத்தவர் சுரண்டிக்கொண்டு இருப்பினம் இந்த குளிரிலும் .

வாகீசன் எனும் பெயர் உடையவர்கள் அநேகமாக உடம்பாய் இருப்பதன் மர்மம் விளங்கவில்லை .

ஓம் அதை நானும் கண்டுள்ளேன். அதை விட மோசம் fruit machines. சில சிக்கின் கடையில் கூட எங்கட ஆக்கள் வச்சிருக்கினம். விளையாட வாறதும் இவையள்தான். இதை விட பெட்டிங் செண்டர் உள்ளே போனாலும் நாத்தம் எடுக்கும் உடுப்புகளோடு கூட தமிழர் பலர் இருப்பதை காணலாம்.

நான் நேசனல் லொட்டரி எப்பவாவது 105 மில்லியன் போன்ற அறிவிப்பை கண்டால், வாங்கும் சாமானோடு ஒன்று வாங்குவேன்.

விழுந்தால் ஊருக்கு எஸ் ஆகிவிடலாம் (அதுவும் இன்னும் 10 வருடத்துக்கு முடியாது) என்ற நப்பாசைதான் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதை விட பெட்டிங் செண்டர் உள்ளே போனாலும் நாத்தம் எடுக்கும் உடுப்புகளோடு கூட தமிழர் பலர் இருப்பதை காணலாம்.

அது வேறை கதை கவன்சில் கொடுத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கிழமைக்கு ஒருக்கா போய் குளித்து விட்டு வரும் கூட்டம் அதுகள் அதுவும் நடக்குதோ தெரியாலை அதுகளுக்கு கொரனோ  தொத்து  கிடையாது நிறைய T  செல்லுடன்  திரிகிற கூட்டம் .😁அதுசரி பெட்டிங்  செண்டருக்கு நீங்கள் ஏன்  போனீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அது வேறை கதை கவன்சில் கொடுத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கிழமைக்கு ஒருக்கா போய் குளித்து விட்டு வரும் கூட்டம் அதுகள் அதுவும் நடக்குதோ தெரியாலை அதுகளுக்கு கொரனோ  தொத்து  கிடையாது நிறைய T  செல்லுடன்  திரிகிற கூட்டம் .😁அதுசரி பெட்டிங்  செண்டருக்கு நீங்கள் ஏன்  போனீர்கள் ?

அது பெரிய கதை பொஸ். குதிரையில ஏறின ஒருத்தர வீட்டுக்காரர் கேட்டு இறக்க முயற்சித்த கதை. ஒரு மாரி இறக்கியாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அது பெரிய கதை பொஸ். குதிரையில ஏறின ஒருத்தர வீட்டுக்காரர் கேட்டு இறக்க முயற்சித்த கதை. ஒரு மாரி இறக்கியாச்சு.

அங்கு ஏறின கூட்டம் லேசிலை  இரங்காயினம் கவனம் நீங்கள் .

2 hours ago, goshan_che said:

நான் நேசனல் லொட்டரி எப்பவாவது 105 மில்லியன் போன்ற அறிவிப்பை கண்டால், வாங்கும் சாமானோடு ஒன்று வாங்குவேன்.

அது ஒரு போதும் விழாது சாமானியர்களை  முட்டாள்களாக்கும்  விளையாட்டு அது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.