Jump to content

சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல்

 

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%டந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வு பல அரங்குகளில் நடைபெற்று வருகின்றது.

தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் 4-ஆம் நாளான நேற்று முன்தினம் (27/12/2020) அன்று கேரளாவின் பிரபல ராப் இசைப் பாடகர் வேடன் மற்றும் மேலும் பல பாடகர்கள், பறை இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தமது இசை நிகழ்வை வழங்கியிருந்தனர்.

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%இதில் இந்தியாவின் பிரபல ராப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ‘அறிவு’ எழுதிய ஈழத் தமிழர்களின் உரிமை மற்றும் அவர்களின் விடுதலைக்கான கோரிக்கையை வலியுறுத்தும் பாடல் ஒன்றும் ஈழத்தை சேர்ந்த சாந்தினி (அருணா) என்பவரால் பாடப்பட்டது. மேலும் எழுவர் விடுதலை, திருநங்கைகளின் பிரச்சனைகள் குறித்தும் கவிதை மற்றும் பாடல்கள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மார்கழி மாதம் கர்நாடக சங்கீத பாடல்கள் மட்டுமே சபாக்களில் பாடப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் பறை, ஒப்பாரி, நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற மக்களிசையை உள்ளடக்கிய ஓர் இசை நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படுகின்றது.

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%

 

 

https://thinakkural.lk/article/101729

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.