Jump to content

எனது பார்வையில் 2020ஆம் ஆண்டு


Recommended Posts

2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு  மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. 

இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்மண்ணை விட்டுப் பிரிந்த ஒருவர் மீண்டும் வந்து தாய்மண்ணின் வாசனையை குதூகலத்துடன் நுகரும் அனுபவம் போன்றது இது; அந்த மகிழ்ச்சிக்கு ஈடேது!

இன்னும், பொருட்களை நுகரும் இன்பத்திலும் மனித உறவுகளுடனான ஆரோக்கியமான தொடர்பு தரும் இன்பமே பேரின்பம் என மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர் உணர்த்திய ஆண்டும் இதுவே. எனினும், இன்னோர் விதத்தில் பொருள்சார் உலகின் நிலையற்ற தன்மையையும் பல்வேறு நிகழ்வுகள் மூலம் மீண்டும் வலியுறுத்திய ஆண்டும் இதுவே! 

இவ்வாறான நிலையற்ற உலகையும், எல்லா உயிர்களையும் தன் பேராற்றலால் ஆட்டுவிக்கும் நிலையான ஓர் மாபெரும் சக்தியையே இறைவன் எனக் கூறுகிறோம் என்பதையும், அந்த சக்தியையே நம் கலாசாரம், வாழ்க்கை முறை, பக்குவநிலை போன்ற அம்சங்களைப் பொறுத்து பல்வேறு மதக் கூறுகளாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் என்பதையும் மீண்டும் பலமாக இடித்துரைத்த ஆண்டும் இந்த 2020ஏ. 

எம்மை நேர்வழிப்படுத்த முன்னோர்கள் அமைத்த பல்வேறு பாதைகளே இந்த மதங்கள் என்பதையும், நம் உன்னத இலக்கை நோக்கி ரசனையுடன் அவரவர் பாதைகளில் பயணிக்காமல் அதில் குப்பைகளை வீசியும், சாலை விதிகளை மீறியும், பிற பாதைகள் பற்றி விமர்சித்தலுமே சாலை விபத்துக்கள் போலாம் மதச்சண்டைகளாம் என்பதையும் உணர்த்தியது இவ்வாண்டு. 

எனினும், இப்பாதைகளில் பயணம் செய்து பழகிய பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனை உணர இப்பாதைகளில் மட்டும் பயணம் செய்ய வேண்டியதில்லை என்றும், நீ இருக்கும் இடத்திலேயே, ஏன் உனக்குள்ளேயே அந்த இறைவன் இருக்கிறான் என்பதை மீண்டும் தெளிவாக உணர வைத்ததும் இந்த 2020ஏ. கூடவே மதம் எனும் பாதை இல்லாமலேயே பல ஞானியர் நம் கற்பனைக்கெட்டாத வேறு பல மார்க்கங்கள் மூலம் அந்தப் பேராற்றலை உணர்ந்தும், அடைந்தும் இருப்பரோ எனவும் சிந்திக்க வைத்தது இவ்வாண்டு. 

இறுதியாக, ஆன்மீகமும் நம் வாழ்வை நெறிப்படுத்த நமக்கு அவசியமான ஓர் அறிவியலே என்றும், நம் வாழ்க்கைப் படிநிலைகளுக்கும், பக்குவத்துக்கும் ஏற்ப அந்த அறிவை வளர்க்கவும், அதன் மூலம் பயன் பெறவும் முடியும் என்றும் உணர்த்தியது இந்த 2020. அந்த அறிவியலில் முதிர்ச்சி பெற்றவன் ஆசை துறந்து உலகை வெல்லும் ஞானியாகிறான் என்பதையும், அதில் குழந்தை போலப் பாடம் பயில்பவன் இங்கே யாழில் எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதையும், இடைப்பட்ட நிலையில் பலர் ஆன்மீக வழியில் இவ்வுலக வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்பதையும் இந்த ஆண்டு எனக்கு உணர்த்தியது. 

மொத்தத்தில் என் பார்வையில் 2020ஆம் ஆண்டு ஓர் சாபமல்ல; வரமே! வரமே!! வரமே!!! 😊

நன்றி 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மல்லிகை வாசம் said:

மொத்தத்தில் என் பார்வையில் 2020ஆம் ஆண்டு ஓர் சாபமல்ல; வரமே! வரமே!! வரமே!!! 😊

மரணங்களும் கெடுபிடிகளும் இருந்தாலும் இயற்கை இந்த உலகை கொரோனா மூலம் சீரமைக்கின்றது என்றே நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
உங்கள் கட்டுரைக்கு நன்றி மல்லைகைவாசம்.👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் வீடுகளில் “சும்மா” இருக்கினம் போலுள்ளது. 2020 இல்தான் நான் அதிகநேரம் ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை செய்திருக்கின்றேன்.  

லொக்டவுன் வந்தபோது வீட்டிலிருந்து வேலை என்பதால் மூன்று மணிநேரம் மிச்சப்படும் என்பதால் நிறையப் படிக்கலாம், புதிய skills பழகலாம், மத்தியானம் ஒரு மணித்தியாலம் நடை பயிலலாம் என்று எல்லாம் கணக்குப்போட்டிருந்தேன். ஆனால் 10 நிமிஷம் சாப்பிடவே நேரம் கிடைக்காத வேலையாகப் போய், weekend இலும் சில தடவைகள் வேலை செய்யவேண்டியாகிவிட்டது. Work-life balance தொலைந்த வருடம் இதுதான். லீவு எடுத்துத்தான் வேலையில் இருந்து விடுபட முடிந்தது. இப்ப லீவில் நின்றாலும் வாட்ஸப்புக்களாலும் உதவிகேட்டு வரும்போது செய்யவேண்டியதாக உள்ளது!

புது வருஷம் வக்சீன் போட்டு, புதுவேலை தேடுவதுதான் நோக்கம். 

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

மரணங்களும் கெடுபிடிகளும் இருந்தாலும் இயற்கை இந்த உலகை கொரோனா மூலம் சீரமைக்கின்றது என்றே நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
உங்கள் கட்டுரைக்கு நன்றி மல்லைகைவாசம்.👍🏽

உண்மை தான் அண்ணை. அந்த இயற்கை தான் கடவுள் என்பது சரி தான் போலும். நன்றி அண்ணை. 😊

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

2020 இல்தான் நான் அதிகநேரம் ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை செய்திருக்கின்றேன்.  

லொக்டவுன் வந்தபோது வீட்டிலிருந்து வேலை என்பதால் மூன்று மணிநேரம் மிச்சப்படும் என்பதால் நிறையப் படிக்கலாம், புதிய skills பழகலாம், மத்தியானம் ஒரு மணித்தியாலம் நடை பயிலலாம் என்று எல்லாம் கணக்குப்போட்டிருந்தேன். ஆனால் 10 நிமிஷம் சாப்பிடவே நேரம் கிடைக்காத வேலையாகப் போய், weekend இலும் சில தடவைகள் வேலை செய்யவேண்டியாகிவிட்டது. Work-life balance தொலைந்த வருடம் இதுதான்.

IT துறையில் இருக்கும் எனது சில நண்பர்கள் நீங்கள் எழுதியது போலவே சொன்னார்கள். அலுவலகத்தில் போய் வேலை செய்த காலங்கள் இதைவிடப் பரவாயில்லை என்கிறார்கள். திடீர் மாற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாத சூழ்நிலை தான் இவ்வாறான அழுத்தங்களுக்குக் காரணமோ தெரியவில்லை. 

நன்றி கிருபன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி வேல இல்லை.....மிகச்சிறப்பான கட்டுரை மல்லிகை......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 12:37, மல்லிகை வாசம் said:

2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு  மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. 

இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்மண்ணை விட்டுப் பிரிந்த ஒருவர் மீண்டும் வந்து தாய்மண்ணின் வாசனையை குதூகலத்துடன் நுகரும் அனுபவம் போன்றது இது; அந்த மகிழ்ச்சிக்கு ஈடேது!

இன்னும், பொருட்களை நுகரும் இன்பத்திலும் மனித உறவுகளுடனான ஆரோக்கியமான தொடர்பு தரும் இன்பமே பேரின்பம் என மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர் உணர்த்திய ஆண்டும் இதுவே. எனினும், இன்னோர் விதத்தில் பொருள்சார் உலகின் நிலையற்ற தன்மையையும் பல்வேறு நிகழ்வுகள் மூலம் மீண்டும் வலியுறுத்திய ஆண்டும் இதுவே! 

இவ்வாறான நிலையற்ற உலகையும், எல்லா உயிர்களையும் தன் பேராற்றலால் ஆட்டுவிக்கும் நிலையான ஓர் மாபெரும் சக்தியையே இறைவன் எனக் கூறுகிறோம் என்பதையும், அந்த சக்தியையே நம் கலாசாரம், வாழ்க்கை முறை, பக்குவநிலை போன்ற அம்சங்களைப் பொறுத்து பல்வேறு மதக் கூறுகளாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் என்பதையும் மீண்டும் பலமாக இடித்துரைத்த ஆண்டும் இந்த 2020ஏ. 

எம்மை நேர்வழிப்படுத்த முன்னோர்கள் அமைத்த பல்வேறு பாதைகளே இந்த மதங்கள் என்பதையும், நம் உன்னத இலக்கை நோக்கி ரசனையுடன் அவரவர் பாதைகளில் பயணிக்காமல் அதில் குப்பைகளை வீசியும், சாலை விதிகளை மீறியும், பிற பாதைகள் பற்றி விமர்சித்தலுமே சாலை விபத்துக்கள் போலாம் மதச்சண்டைகளாம் என்பதையும் உணர்த்தியது இவ்வாண்டு. 

எனினும், இப்பாதைகளில் பயணம் செய்து பழகிய பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனை உணர இப்பாதைகளில் மட்டும் பயணம் செய்ய வேண்டியதில்லை என்றும், நீ இருக்கும் இடத்திலேயே, ஏன் உனக்குள்ளேயே அந்த இறைவன் இருக்கிறான் என்பதை மீண்டும் தெளிவாக உணர வைத்ததும் இந்த 2020ஏ. கூடவே மதம் எனும் பாதை இல்லாமலேயே பல ஞானியர் நம் கற்பனைக்கெட்டாத வேறு பல மார்க்கங்கள் மூலம் அந்தப் பேராற்றலை உணர்ந்தும், அடைந்தும் இருப்பரோ எனவும் சிந்திக்க வைத்தது இவ்வாண்டு. 

இறுதியாக, ஆன்மீகமும் நம் வாழ்வை நெறிப்படுத்த நமக்கு அவசியமான ஓர் அறிவியலே என்றும், நம் வாழ்க்கைப் படிநிலைகளுக்கும், பக்குவத்துக்கும் ஏற்ப அந்த அறிவை வளர்க்கவும், அதன் மூலம் பயன் பெறவும் முடியும் என்றும் உணர்த்தியது இந்த 2020. அந்த அறிவியலில் முதிர்ச்சி பெற்றவன் ஆசை துறந்து உலகை வெல்லும் ஞானியாகிறான் என்பதையும், அதில் குழந்தை போலப் பாடம் பயில்பவன் இங்கே யாழில் எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதையும், இடைப்பட்ட நிலையில் பலர் ஆன்மீக வழியில் இவ்வுலக வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்பதையும் இந்த ஆண்டு எனக்கு உணர்த்தியது. 

மொத்தத்தில் என் பார்வையில் 2020ஆம் ஆண்டு ஓர் சாபமல்ல; வரமே! வரமே!! வரமே!!! 😊

நன்றி 😊

நல்ல கட்டுரை. 

நீங்கள் சொன்னதை போல்தான் நானும் உணர்கிறேன்.  எனக்கு தெரிந்த ஒருவரையும் கொவிட்டுக்கு பலி கொடுக்கவில்லை என்பதால். நீங்களும் என்னை போல் அதிகம் பாதிப்பில்லாமல் தப்பிய ஆள் என நினைக்கிறேன்.

ஆனால் என்னுடன் வேலை செய்யும் ஒருத்தி 5 உறவுகளை 3 மாதத்தில் இழந்துள்ளார். அப்படியானவர்கள் இந்த ஆண்டை வரமாக பார்க்க மாட்டார்கள். 

ஒரே விடயம் அனுபவத்தின் அடிப்படையில் எப்படி எதிர் எதிர் முடிவுகளை தருகிறது என்பது ஆச்சரியமே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020 என்னைப்பொறுத்தவரையில் வேலையில் அதிகவேலைப்பளூவினால் அவதி, ஆகையால் 2020 நல்லதொரு ஆண்டாக ஏற்கமுடியவில்லை. அதேநேரம் எனக்கு தெரிந்தவர்கள், செய்திகளின் படி அதிகரித்த வீட்டுவன்முறை சம்பவங்கள், இரத்த உறவுகளின் மரணத்தில் பங்கேற்கமுடியாத நிலை, மன உளைச்சல்,
வருமான இழப்பு என பட்டியல் நீள்கிறது. 
ஆகையால் அவரவருக்கு கிடைத்த அனுபவங்களின் படியே சாபமா வரமா எனக்கூறலாம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற ஆண்டு... தினமும் கொரொனாவுக்கு, பயந்து கொண்டே வாழ்ந்ததால்... மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

சொல்லி வேல இல்லை.....மிகச்சிறப்பான கட்டுரை மல்லிகை......!   👍

நன்றி சுவி அண்ணா. எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 😊💐

Link to comment
Share on other sites

13 hours ago, goshan_che said:

நீங்கள் சொன்னதை போல்தான் நானும் உணர்கிறேன்.  எனக்கு தெரிந்த ஒருவரையும் கொவிட்டுக்கு பலி கொடுக்கவில்லை என்பதால். நீங்களும் என்னை போல் அதிகம் பாதிப்பில்லாமல் தப்பிய ஆள் என நினைக்கிறேன்.

கோஷன்,

உண்மை தான். கொறோனா நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் தான். ஆனாலும் 2020இன் ஆரம்பத்திலிருந்தே என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் மிகக் கடினமான அனுபவங்களைத் தந்தன. என் இதுவரை கால வாழ்க்கையிலும் கற்காத பல பாடங்களை அந்த அனுபவங்கள் தந்தன. அந்தக் கடினமான சூழலை, lockdownஆல் ஏற்பட்ட விளைவுகள் மேலும் பாதித்தன. என் நிம்மதியை மிகவும் பாதித்த ஆண்டு 2020தான். எனினும் அந்தக் கசப்பான அனுபவங்கள் தந்த பாடங்கள் தான் என்னை முன்னரிலும் சிறந்த ஆளாக்கியது என்றே கூறவேண்டும்!

 

13 hours ago, goshan_che said:

ஆனால் என்னுடன் வேலை செய்யும் ஒருத்தி 5 உறவுகளை 3 மாதத்தில் இழந்துள்ளார். அப்படியானவர்கள் இந்த ஆண்டை வரமாக பார்க்க மாட்டார்கள். 

நிச்சயமாக கோஷன். இன்னும் சொல்லப்போனால், தற்போது லண்டன் நகரில் வசிப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்துச் சாபமிட்டிருப்பார்களோ என்னமோ!

 

Link to comment
Share on other sites

14 hours ago, goshan_che said:

ஒரே விடயம் அனுபவத்தின் அடிப்படையில் எப்படி எதிர் எதிர் முடிவுகளை தருகிறது என்பது ஆச்சரியமே.

அதேபோல எனது இந்தக் கண்ணோட்டத்தை நான் கடந்த சில வருடங்களாகக் கொண்டிருக்கும் எனது ஆன்மீகப் பார்வை ஆக்கிரமித்தது என்று தான் சொல்லவேண்டும்.

அதுவே பொருளாதார, சமூக, சுகாதார, உளவியல் என்று பல்வேறு lens ஊடாகப் பார்ப்பவர்கள் கூறும் முடிவு இன்னும் பல்வேறு வகைப்பட்டனவாக இருக்கலாம்!

கருத்துக்கு நன்றி கோஷன். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 😊💐

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

2020 என்னைப்பொறுத்தவரையில் வேலையில் அதிகவேலைப்பளூவினால் அவதி, ஆகையால் 2020 நல்லதொரு ஆண்டாக ஏற்கமுடியவில்லை. அதேநேரம் எனக்கு தெரிந்தவர்கள், செய்திகளின் படி அதிகரித்த வீட்டுவன்முறை சம்பவங்கள், இரத்த உறவுகளின் மரணத்தில் பங்கேற்கமுடியாத நிலை, மன உளைச்சல்,
வருமான இழப்பு என பட்டியல் நீள்கிறது. 
ஆகையால் அவரவருக்கு கிடைத்த அனுபவங்களின் படியே சாபமா வரமா எனக்கூறலாம்.. 

பிரபா, 

நீங்கள் கூறியதுபோல கொறானா, lockdown இவற்றால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மிக அதிகம் தான். பலரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கும் ஆண்டு தான் 2020.

எனினும் அவற்றின் பாதிப்பின் அளவு, அதனை ஒருவரால் தாங்கிக் கொள்ளும் தன்மை, அதிலிருந்து கற்ற பாடங்கள் மற்றும் பாதிப்பாக இருந்தாலும் அதனால் ஏற்பட்ட நீண்ட கால நன்மை (அல்லது தீமை) போன்றனவே ஒவ்வொருவரும் வரமா, சாபமா எனத் தீர்மானிக்கும் என்பது என் கருத்து.

கருத்துக்கு நன்றிகளும், இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும் பிரபா! 😊💐

41 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற ஆண்டு... தினமும் கொரொனாவுக்கு, பயந்து கொண்டே வாழ்ந்ததால்... மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கவில்லை.

சிறி அண்ணா,

பலருக்கு இது மகிழ்ச்சியான ஆண்டு அல்லத் தான். வலிகளும், இழப்புக்களும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் அவற்றால் கற்ற பாடங்களும், சில எதிர்பாராத நன்மைகளுமே இந்தப் புத்தாண்டையும், இனி வரும் ஆண்டுகளையும் நிம்மதியாகவாவது கடக்க உதவும் என்பது என் எண்ணம்.

கருத்துக்கு நன்றிகளும், இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும் சிறி அண்ணா! 😊💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

அதேபோல எனது இந்தக் கண்ணோட்டத்தை நான் கடந்த சில வருடங்களாகக் கொண்டிருக்கும் எனது ஆன்மீகப் பார்வை ஆக்கிரமித்தது என்று தான் சொல்லவேண்டும்.

அதுவே பொருளாதார, சமூக, சுகாதார, உளவியல் என்று பல்வேறு lens ஊடாகப் பார்ப்பவர்கள் கூறும் முடிவு இன்னும் பல்வேறு வகைப்பட்டனவாக இருக்கலாம்!

கருத்துக்கு நன்றி கோஷன். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 😊💐

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்துகள்.

நிச்சயமாக உங்கள் ஆன்மீக ஈடுபாடு இதில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது மறுகவியலாலது.

நாம் முன்பே அலசியதுதான், எனக்கு மதங்கள் மீது அறவே பிடிப்பில்லை, இறை மீது சந்தேகம். ஆயினும் வளர்ந்த சூழல் காரணமாக பலத்த ஆன்மீக பரிச்சயம், குறிப்பாக நிலையாமை தத்துவம் மீது ஆழ்ந்த பிடிப்பு உண்டு.

கடவுள் நம்பிக்கையற்ற ஆன்மீகம் என்பது ஒரு முரண்பதமாக இருக்கும்.  விதியியல் (நடப்பதுதான் நடக்கும் -fatalism) எனலாம் என நினக்கிறேன்.

நிச்சயமாக இந்த fatalistic outlook இந்த ஆண்டை கடந்து போக உதவியது என்பதும், இதன் சில கூறுகளை வரமாக பார்க்க வைத்தது என்பது என்னளவிலும் உண்மையே.

 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

கடவுள் நம்பிக்கையற்ற ஆன்மீகம் என்பது ஒரு முரண்பதமாக இருக்கும்.  விதியியல் (நடப்பதுதான் நடக்கும் -fatalism) எனலாம் என நினக்கிறேன்.

என் எண்ணக்கருவின்படி, மதம் = ஆன்மீகம் + கலாசாரம் (+ கிரியைகள், பழக்கவழக்கங்கள், மற்றும் உலகியல் சார்ந்த பிற அம்சங்கள்).

மேலுள்ள சமன்பாட்டில் ஆன்மீகம் என்பது உலகிலுள்ள எல்லா மனிதரிலும் உள்ள ஆன்மாவின் உணர்வு என்பது இன்றளவில் நான் கொண்டிருக்கும் நம்பிக்கை/ புரிதல். கலாசாரம் போன்ற மற்றய அம்சங்கள் இடம், காலம் போன்றவற்றுக்கேற்ப மாறுபட்டதன் விளைவுகளே பல்வேறு மதங்கள் என்பது என் புரிதல். 

இவ்வுலகத்தோடு ஒட்டி வாழ்வதற்கு கலாச்சாரம் போன்றவை கலந்த ஆன்மீகம், அதாவது மதம் அவசியமானது என்பதே என்போன்றவர்களின் பார்வை. இதற்குக் காரணம் சிறு வயதில் நம்மை நம் சமூகம் பழக்கப்படுத்திய (conditioning)விதம், சமயக் கல்வி போன்றவையாகும். நம்மில் அனேகருக்கு ஆன்மீகத்தை உணர்த்த முதற் படி மதங்களாகவே இருந்திருக்கும். வளர்ந்து நம் பகுத்தறிவு மூலம் கலாச்சாரம் போன்ற அம்சங்களைத் தவிர்த்து முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கும்போது இல்வாழ்க்கை, வேலை மற்றும் பல உலகியல் விடயங்கள் அந்த எண்ணத்துக்குத் தடை போடுகின்றன. (இவற்றை எல்லாம் வென்றவர்களே நமது யோகர், ரமணர் போன்ற உண்மையான ஞானிகள். அவர்கள் மதங்களைக் கடந்த ஓரளவு தூய ஆன்மீகவாதிகள் என்பது என் எண்ணம்.) 

ஆகவே, எம் வயது, அனுபவம் போன்றவை அதிகரிக்க அதிகரிக்க எம் எல்லோருக்கும் மேலான ஒரு பேராற்றலைத் (இறைவனை?) தேடிப் பயணிக்கும்போது, மறுபக்கத்தில் உலகியல் விடயங்களையும் புறக்கணிக்க இயலாத சூழலிலும், தற்போதய மும்முரமான வாழ்க்கைமுறையிலும் ஓர் ஊன்றுகோலாக மதங்கள் என் போன்றவர்களுக்குத் துணை புரிவதாக நான் எண்ணுகிறேன். அதிகம் பக்குவப்பட்ட நிலையில் எல்லா மதங்களிலும் உள்ள அடிப்படை ஒற்றுமையை உணர்தலும், உலகியலைத் துறக்கும் அதியுச்ச நிலையில் மதங்களாகிய ஊன்றுகோலைத் தூக்கி எறிந்துவிட்டுத் துறவிகளாவதும் அவரவர் பக்குவநிலையைப் பொறுத்தது என நினைக்கிறேன். 

அப்படியான உச்ச நிலையை அடையத் தயாராகாத என் போன்றவர்கள் எந்த மதங்களிலும் உள்ள நல்ல அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது என நினைக்கிறோம். அரிசியில் தேவையற்ற கல்லையும், நெல்லையும் நூறு வீதம் பொறுக்க நேரமின்மையால் ஓரளவுக்கு பெரிய கற்களை, நெல்லுகளைப் பொறுக்கிவிட்டு களையப்படாத சிறு கற்கள், நெல்லுகள் இன்னும் இருக்கும் தான் என்ற தெளிவுடன் அந்த அரிசியைச் சமைப்பதுபோல. மதங்களின் நல்ல அம்சங்களில் மட்டும் அதீத கவனத்தைச் செலுத்த, குறைகள் தானாகவே புறக்கணிக்கப்பட்டுவிடும். நாமாகக் களைவதும் இலகுவாகிவிடும். இந்த processஇல் தூய ஆன்மீகத்தை நோக்கிப் பயணிப்பது இலகு என்பது என் எண்ணம். 😊

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

விதியியல் (நடப்பதுதான் நடக்கும் -fatalism) எனலாம் என நினக்கிறேன்.

நிச்சயமாக இந்த fatalistic outlook இந்த ஆண்டை கடந்து போக உதவியது என்பதும், இதன் சில கூறுகளை வரமாக பார்க்க வைத்தது என்பது என்னளவிலும் உண்மையே.

விதி பற்றிய எனது சமீபத்தைய எண்ணக்கரு, இதில் fixed மற்றும் variable பகுதிகள் இருக்கலாம் என்பதாகும். Will power கூடக் கூட விதியை மாற்றுவது இலகு எனினும், மாற்ற முடியாத சில பகுதிகளும் உண்டு என்பது இன்றளவில் என் எண்ணம். புது அனுபவங்கள், தகவல்கள் இந்த எண்ணத்தை எதிர்காலத்தில் மாற்றலாம். தவிரவும் பல்வேறு துறை சார்ந்த விடயங்கள அலசி ஆராய்ந்தால் தான் இது பற்றிய தெளிவு கூடும். அதனால் முயச்சி பலித்தால் மதி, இல்லையேல் விதி என்பதே தற்போதய என் நம்பிக்கை! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, மல்லிகை வாசம் said:

என் எண்ணக்கருவின்படி, மதம் = ஆன்மீகம் + கலாசாரம் (+ கிரியைகள், பழக்கவழக்கங்கள், மற்றும் உலகியல் சார்ந்த பிற அம்சங்கள்).

மேலுள்ள சமன்பாட்டில் ஆன்மீகம் என்பது உலகிலுள்ள எல்லா மனிதரிலும் உள்ள ஆன்மாவின் உணர்வு என்பது இன்றளவில் நான் கொண்டிருக்கும் நம்பிக்கை/ புரிதல். கலாசாரம் போன்ற மற்றய அம்சங்கள் இடம், காலம் போன்றவற்றுக்கேற்ப மாறுபட்டதன் விளைவுகளே பல்வேறு மதங்கள் என்பது என் புரிதல். 

இவ்வுலகத்தோடு ஒட்டி வாழ்வதற்கு கலாச்சாரம் போன்றவை கலந்த ஆன்மீகம், அதாவது மதம் அவசியமானது என்பதே என்போன்றவர்களின் பார்வை. இதற்குக் காரணம் சிறு வயதில் நம்மை நம் சமூகம் பழக்கப்படுத்திய (conditioning)விதம், சமயக் கல்வி போன்றவையாகும். நம்மில் அனேகருக்கு ஆன்மீகத்தை உணர்த்த முதற் படி மதங்களாகவே இருந்திருக்கும். வளர்ந்து நம் பகுத்தறிவு மூலம் கலாச்சாரம் போன்ற அம்சங்களைத் தவிர்த்து முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கும்போது இல்வாழ்க்கை, வேலை மற்றும் பல உலகியல் விடயங்கள் அந்த எண்ணத்துக்குத் தடை போடுகின்றன. (இவற்றை எல்லாம் வென்றவர்களே நமது யோகர், ரமணர் போன்ற உண்மையான ஞானிகள். அவர்கள் மதங்களைக் கடந்த ஓரளவு தூய ஆன்மீகவாதிகள் என்பது என் எண்ணம்.) 

ஆகவே, எம் வயது, அனுபவம் போன்றவை அதிகரிக்க அதிகரிக்க எம் எல்லோருக்கும் மேலான ஒரு பேராற்றலைத் (இறைவனை?) தேடிப் பயணிக்கும்போது, மறுபக்கத்தில் உலகியல் விடயங்களையும் புறக்கணிக்க இயலாத சூழலிலும், தற்போதய மும்முரமான வாழ்க்கைமுறையிலும் ஓர் ஊன்றுகோலாக மதங்கள் என் போன்றவர்களுக்குத் துணை புரிவதாக நான் எண்ணுகிறேன். அதிகம் பக்குவப்பட்ட நிலையில் எல்லா மதங்களிலும் உள்ள அடிப்படை ஒற்றுமையை உணர்தலும், உலகியலைத் துறக்கும் அதியுச்ச நிலையில் மதங்களாகிய ஊன்றுகோலைத் தூக்கி எறிந்துவிட்டுத் துறவிகளாவதும் அவரவர் பக்குவநிலையைப் பொறுத்தது என நினைக்கிறேன். 

அப்படியான உச்ச நிலையை அடையத் தயாராகாத என் போன்றவர்கள் எந்த மதங்களிலும் உள்ள நல்ல அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது என நினைக்கிறோம். அரிசியில் தேவையற்ற கல்லையும், நெல்லையும் நூறு வீதம் பொறுக்க நேரமின்மையால் ஓரளவுக்கு பெரிய கற்களை, நெல்லுகளைப் பொறுக்கிவிட்டு களையப்படாத சிறு கற்கள், நெல்லுகள் இன்னும் இருக்கும் தான் என்ற தெளிவுடன் அந்த அரிசியைச் சமைப்பதுபோல. மதங்களின் நல்ல அம்சங்களில் மட்டும் அதீத கவனத்தைச் செலுத்த, குறைகள் தானாகவே புறக்கணிக்கப்பட்டுவிடும். நாமாகக் களைவதும் இலகுவாகிவிடும். இந்த processஇல் தூய ஆன்மீகத்தை நோக்கிப் பயணிப்பது இலகு என்பது என் எண்ணம். 😊

புத்தாண்டில் நல்ல புத்தெழுச்சியான கருத்துக்கள் மல்லிகை.

எனது அனுபவத்தில், மதத்தில் நான் அரிசிகளை பொறுக்கி கொண்டாலும் அது கல்லு மூட்டையில் அரிசி தேடுவதை போன்றதாகவே அமைந்தது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்  
பற்றுக பற்று விடற்கு

அதாவது பற்றை அறுக்கும் ஒரே காரணத்துக்காக மட்டும் பற்றற இறவனை பற்றுங்கள் என்கிறது குறள்.

எமது குடும்பத்தின் குருவாக அமைந்தவர் சொல்லுவார் - ஆன்மீகத்தின் உச்சம், பற்றற்ற இறைவன் மீதான பற்றையும் இழந்து பூரண பற்றற்ற நிலையை எய்துவது என்று.

அப்போ ஆன்மீகத்தின் அதி உச்சம் கடவுள் நம்பிக்கை அற்று போதல் என்றும் கொள்ளலாம் என நான் நம்புகிறேன்.

இதைதான் முக்தி என்பதோ?

படி படியாக பற்றினை அழிக்கும் ஒரு வாழ்கையாகத்தான் என் வாழ்க்கை நகர்வதாக உணர்கிறேன்.

பற்றற்றானை பற்றாமலே பற்றறுக்க முடியுமா? பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

அதாவது பற்றை அறுக்கும் ஒரே காரணத்துக்காக மட்டும் பற்றற இறவனை பற்றுங்கள் என்கிறது குறள்.

எமது குடும்பத்தின் குருவாக அமைந்தவர் சொல்லுவார் - ஆன்மீகத்தின் உச்சம், பற்றற்ற இறைவன் மீதான பற்றையும் இழந்து பூரண பற்றற்ற நிலையை எய்துவது என்று.

அப்போ ஆன்மீகத்தின் அதி உச்சம் கடவுள் நம்பிக்கை அற்று போதல் என்றும் கொள்ளலாம் என நான் நம்புகிறேன்.

கோஷன்,

திருக்குறளையோ, ஞானியர் வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் தகுதி எனக்கில்லை. எனினும் அவர்கள் சொன்னதன் உள்ளார்ந்த அர்த்தம் 'இறையாற்றலை உணர்ந்து கொள்வதற்கு மனிதரே உருவாக்கிய மதம் எனும் பாதை மீதான பற்றை, வெறுங் குறியீடாக மட்டும் நினைக்கும் இறைவன் என்ற பொருளின் மீதான பற்றை அழித்துவிட வேண்டும்' என்பதாக இருக்கலாம் என்பது என் ஊகம். காலி வீதி எனும் மதத்திலோ, அதனூடாக நாம் பயணிக்கும் பேருந்து எனும் இறைவன் மீதோ தீவிர பற்றை வைத்தால் கோல் fஏஸ் எனும் பிரபஞ்ச சக்தியை/பேராற்றலை உணரவோ, அடையவோ முடியாது என்ற அர்த்தமாக இருக்கலாம். அந்தப் பேராற்றல் தான் உண்மையான இறைவன் என்பதும், அந்தப் பேராற்றல் தான் உங்களுள், என்னுள், ஏன் வேற்று மதத்தவர், சாதியர் என்றோ, துரோகி, எதிரி என்றோ புறந்தள்ளும் மனிதர், அனைத்து உயிரினம், சடப்பொருள் எனச் சர்வத்திலும் வியாபித்திருக்கும் இறையாற்றல் என்றும் பல ஞானியர் சொல்லிச் சென்றுள்ளனர். ஆகவே குறியீடுகளில் பற்று வைப்பதை ஒழித்து எம்முள் உறைந்திருக்கும் பேராற்றலை உணர்தலும், அதுவே பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கிறது என்பதை அனுபவத்தால் உணர்ந்து அதனுடன் நம் ஆன்மா இரண்டறக் கலத்தலே ஆன்மாவின் அதியுச்ச குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் ஞானியர் சொல்வர். அதுவே பேரின்பநிலை என்றும், பிறப்பற்ற நிலை என்றும் சொல்வர்.

ஆனால் நான் இதை தத்துவார்த்தமாக மட்டுமே உணர்கிறேன். ருசியும், மணமும் மிக்க சிக்கன் பிரியாணியைக் கண்டதும் அந்தத் தத்துவார்த்த அறிவு கூட மாயமாய் மறைந்துவிடுகிறது. இப்படி மில்லியன் கணக்கில் ஆசைகள். இந்த லட்சணத்தில் வாழ்நாள் முழுவதும் பற்றற்று, இறையாற்றலை உணர்தல் என்பது என்போன்றோருக்குச் சாத்தியமல்ல. அது சாத்தியமானால் நானும் இறைவனே. ஆனால் எனது கர்ம வினையால் விளைந்த தேகத்துடன், உலகியல் மாயையுடன் பெரும் போராட்டம் செய்தே இதைச் சாதிக்கலாம். சாத்தியமில்லா இலக்கு அது.

ஆகவே, தற்போதைக்கு 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதை ஓரளவுக்குச் செயற்படுத்தி, பற்றற்று ஆத்மார்த்தமாக எம் கடமைகளைச் செய்வது தான் இறைவனை உணர ஓரளவுக்குச் சாத்தியமான வழி என நினைக்கிறேன். இது கூட சவால்கள் நிறைந்தது தான். ஆகவே இங்கும் முடிந்தவரை மதியைப் பயன்படுத்திச் செய்வது; முடியாவிடில் விதியென நினைத்து அமைதி கொள்வது தான் வழி! 

Computerஆல் அதை உருவாக்கிய மனிதனை முழுவதுமாப் புரிந்து கொள்ள முடியுமா? மனிதன் பிரபஞ்சப் பேராற்றலை (இறைவனை?) புரிய முயல்வது அதைவிடக் கடினமானது என்பது என் எண்ணம். 🙂

 

 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

படி படியாக பற்றினை அழிக்கும் ஒரு வாழ்கையாகத்தான் என் வாழ்க்கை நகர்வதாக உணர்கிறேன்.

பற்றற்றானை பற்றாமலே பற்றறுக்க முடியுமா? பார்க்கலாம்.

நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் தான் இதைப் படிப்படியாகச் செய்கின்றன என நினைக்கிறேன். கண்ணதாசன் 'அந்த அனுபவம் தான் கடவுள்' என்று கூறியதன் பொருள் இது தானோ தெரியவில்லை.

நான் நம்பும் பிரபஞ்சப் பேராற்றல் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் கோஷன்! 😊 அருமையான கருத்தாடலுக்கு மிக்க நன்றி. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020.. பலருக்கு துன்பம்...

எனக்கு..

ஆண்டின் ஆரம்பத்திலேயே விடுமுறைக்கு கிளம்பும் பழக்கம் என்பதால்.. ஈழம் சென்று வந்தது.

பின்னர் சுவிஸ்லாந்து போய் வந்தது.

அப்புறம் உள்ளூரிலும் இயற்கையோடு அதிக காலம் கழிக்கக் கூடிய ஆண்டாக அமைந்தது.

ஆக கொலிடே விடயத்தில் குறை வைக்காத ஆண்டு.

வேலையில்.. பதவி உயர்வும்.. உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் தந்த ஆண்டு.

மத்திய லண்டனுக்கு கூட காரில் வேலைக்கு போய்வரக் கூடிய சலுகைகள் தந்த ஆண்டு. வழமையாக.. சத்தமும் சனக்கூட்டமும் நிறைந்த நிலக்கீழ் தொடரூந்து தான் தஞ்சம்... கடந்த ஆண்டில்... அது மாறியது.

சமூகத்துக்கான சேவையில்..

சமூகத்திற்கு மனம் திருப்திப்பட சேவை ஆற்றக் கூடிய வாய்ப்பை தந்த ஆண்டு. 

மேலும்.. ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் ஓய்வின்றிய உழைப்பு என்றாலும்.. ஆண்டின் முதல் பாதியில்.. நிறைய ஓய்வு.. குறிப்பாக கொவிட்-19 முதல் அலையின் போது.

சொந்தங்கள் பந்தங்களுக்கு உதவக் கூடிய ஆண்டாகவும் அமைந்தது.

நிதியியல் நிலையில் முன்னேற்றம் தந்த ஆண்டு.

எவருக்கு எப்படியோ.. நமக்கு முன்னேற்ற கரமான ஆண்டு. கொவிட் 19 பீதி ஒன்றைத் தவிர. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மல்லிகை வாசம் said:

கோஷன்,

திருக்குறளையோ, ஞானியர் வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் தகுதி எனக்கில்லை. எனினும் அவர்கள் சொன்னதன் உள்ளார்ந்த அர்த்தம் 'இறையாற்றலை உணர்ந்து கொள்வதற்கு மனிதரே உருவாக்கிய மதம் எனும் பாதை மீதான பற்றை, வெறுங் குறியீடாக மட்டும் நினைக்கும் இறைவன் என்ற பொருளின் மீதான பற்றை அழித்துவிட வேண்டும்' என்பதாக இருக்கலாம் என்பது என் ஊகம். காலி வீதி எனும் மதத்திலோ, அதனூடாக நாம் பயணிக்கும் பேருந்து எனும் இறைவன் மீதோ தீவிர பற்றை வைத்தால் கோல் fஏஸ் எனும் பிரபஞ்ச சக்தியை/பேராற்றலை உணரவோ, அடையவோ முடியாது என்ற அர்த்தமாக இருக்கலாம். அந்தப் பேராற்றல் தான் உண்மையான இறைவன் என்பதும், அந்தப் பேராற்றல் தான் உங்களுள், என்னுள், ஏன் வேற்று மதத்தவர், சாதியர் என்றோ, துரோகி, எதிரி என்றோ புறந்தள்ளும் மனிதர், அனைத்து உயிரினம், சடப்பொருள் எனச் சர்வத்திலும் வியாபித்திருக்கும் இறையாற்றல் என்றும் பல ஞானியர் சொல்லிச் சென்றுள்ளனர். ஆகவே குறியீடுகளில் பற்று வைப்பதை ஒழித்து எம்முள் உறைந்திருக்கும் பேராற்றலை உணர்தலும், அதுவே பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கிறது என்பதை அனுபவத்தால் உணர்ந்து அதனுடன் நம் ஆன்மா இரண்டறக் கலத்தலே ஆன்மாவின் அதியுச்ச குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் ஞானியர் சொல்வர். அதுவே பேரின்பநிலை என்றும், பிறப்பற்ற நிலை என்றும் சொல்வர்.

ஆனால் நான் இதை தத்துவார்த்தமாக மட்டுமே உணர்கிறேன். ருசியும், மணமும் மிக்க சிக்கன் பிரியாணியைக் கண்டதும் அந்தத் தத்துவார்த்த அறிவு கூட மாயமாய் மறைந்துவிடுகிறது. இப்படி மில்லியன் கணக்கில் ஆசைகள். இந்த லட்சணத்தில் வாழ்நாள் முழுவதும் பற்றற்று, இறையாற்றலை உணர்தல் என்பது என்போன்றோருக்குச் சாத்தியமல்ல. அது சாத்தியமானால் நானும் இறைவனே. ஆனால் எனது கர்ம வினையால் விளைந்த தேகத்துடன், உலகியல் மாயையுடன் பெரும் போராட்டம் செய்தே இதைச் சாதிக்கலாம். சாத்தியமில்லா இலக்கு அது.

ஆகவே, தற்போதைக்கு 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதை ஓரளவுக்குச் செயற்படுத்தி, பற்றற்று ஆத்மார்த்தமாக எம் கடமைகளைச் செய்வது தான் இறைவனை உணர ஓரளவுக்குச் சாத்தியமான வழி என நினைக்கிறேன். இது கூட சவால்கள் நிறைந்தது தான். ஆகவே இங்கும் முடிந்தவரை மதியைப் பயன்படுத்திச் செய்வது; முடியாவிடில் விதியென நினைத்து அமைதி கொள்வது தான் வழி! 

Computerஆல் அதை உருவாக்கிய மனிதனை முழுவதுமாப் புரிந்து கொள்ள முடியுமா? மனிதன் பிரபஞ்சப் பேராற்றலை (இறைவனை?) புரிய முயல்வது அதைவிடக் கடினமானது என்பது என் எண்ணம். 🙂

 

 

சிந்திக்க வைத்த கருத்து பகிர்வுக்கு நன்றி மல்லிகை.

நான் மேலே கோடிட்ட உங்கள் கருத்தில் உள்ள தர்க்க நியாயத்தை நான் முழுமையாக ஏற்கிறேன்.

இதனால்தான் கடவுள் நம்பிக்கையை ஒரேயடியாக மறுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நீங்கள் சொல்வது போல் உலகியல் இன்பங்கள் சிலதை கண்டதும் குரங்கு மனம் அலைபாய்ந்தாலும், காலப்போக்கில் அவற்றின் மீதானா ஈர்ப்பு குறைவதாகவே உணர்கிறேன்.

ஆனால் பாச வலைதான் மோசமான பற்றாக இருக்கிறது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

அப்பிடி ஆர் நிக்கினம் எண்டதிலை இரண்டு பெயரை இழுத்து விடுங்கோ தங்கச்சி....:cool:
நீங்கள் தான்யாழ்கள தைரிய லட்சுமி ஆச்சே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி ஆர் நிக்கினம் எண்டதிலை இரண்டு பெயரை இழுத்து விடுங்கோ தங்கச்சி....:cool:
நீங்கள் தான்யாழ்கள தைரிய லட்சுமி ஆச்சே 😁

நீங்கள் ,கோசான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

நீங்கள் ,கோசான் 

நான் ஓகே.....ஆனால் கோசான் அப்பிடி இல்லையே.....சும்மா  அவரை வம்புக்கு இழுக்காட்டில் பத்தியப்படாதோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.