Jump to content

எனது பார்வையில் 2020ஆம் ஆண்டு


Recommended Posts

7 hours ago, nedukkalapoovan said:

எவருக்கு எப்படியோ.. நமக்கு முன்னேற்ற கரமான ஆண்டு. கொவிட் 19 பீதி ஒன்றைத் தவிர. 

மகிழ்ச்சி நெடுக்ஸ். ஆக லண்டன் காரரின் சாபத்தில் ஒரு பகுதி குறைந்தது எனக்கு!😆 கருத்துக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!😊💐

17 hours ago, மல்லிகை வாசம் said:

தற்போது லண்டன் நகரில் வசிப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்துச் சாபமிட்டிருப்பார்களோ என்னமோ!

 

4 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

ஆஹா...! இன்னொரு லண்டன் ஆளின் சாபத்திலிருந்தும் தப்பித்தேன். மகிழ்ச்சி. 2019, 2020 போல் அல்லாமல் மிகச் சிறப்பான 2021ஆக அமைய வாழ்த்துக்கள் ரதி!😊💐 கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

இதைதான் சனாதன தர்மம் “தத்துவ மசி” என்கிறதாக சைவசமய புத்தகத்தில் படித்த நியாபகம்.

நீ அதுவாகிறாய்.

எதுவாகிறாய்? எதுவாக விரும்புகிறாயோ அதுவாகிறாய்😀.

இதைதான் law of attraction, power of the universe என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் ஆழ்மனதில் “ஐசடிக்கும் வேலை வேண்டும்” என பதிந்து விட்டால், ஐசடிக்கும் வேலை கிடைக்குமாம் 🤣.

பிறப்பிலேயே மஹா சோம்பேறி என்பதால் எனக்கு இப்படி அமைந்தது என நினைக்கிறேன்🤣

4 hours ago, குமாரசாமி said:

நான் ஓகே.....ஆனால் கோசான் அப்பிடி இல்லையே.....சும்மா  அவரை வம்புக்கு இழுக்காட்டில் பத்தியப்படாதோ?

இந்த விளக்கம் உங்களுக்கும் பொருந்துமோ🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நன்றி பகிர்வுக்கு

6 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

ரதி இன்னும் 1 வருடத்துக்கு வெளியில போக முடியாது, தயவு செய்து எரிச்சல் படக்கூடாது😊

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நல்லது உடையார், 2021ம் ஜாலியாகவும், வரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!😊💐நன்றி😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மல்லிகை வாசம் said:

மதியைப் பயன்படுத்திச் செய்வது; முடியாவிடில் விதியென நினைத்து அமைதி கொள்வது தான் வழி

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

என்னுடைய வாழ்க்கை அனுபவத்தில்/ என்னைச் சார்ந்த நட்புவட்டத்தில் நான் கண்டது மதியானவர்களின் சதியால்/செயலால் மதியற்றவர்களின் வாழ்க்கையோ/மற்றவர்களுக்கு தீங்கு மனதாலும் நினையாதவர்களின் வாழ்க்கையோ தடம் மாறும் போது கடவுளும் பாராபட்சமாகதானே இருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எங்களை மீறி நடந்த/நடக்கும் விஷயங்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட ஏன் என்ற கேள்வி எழுவதையும் தடுக்கமுடியவில்லை

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சந்தேகம் உள்ளது.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2021 at 18:43, மல்லிகை வாசம் said:

எனினும் அவற்றின் பாதிப்பின் அளவு, அதனை ஒருவரால் தாங்கிக் கொள்ளும் தன்மை, அதிலிருந்து கற்ற பாடங்கள் மற்றும் பாதிப்பாக இருந்தாலும் அதனால் ஏற்பட்ட நீண்ட கால நன்மை (அல்லது தீமை) போன்றனவே ஒவ்வொருவரும் வரமா, சாபமா எனத் தீர்மானிக்கும் என்பது என் கருத்து.

உண்மையே.. எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

Link to comment
Share on other sites

46 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மதியானவர்களின் சதியால்/செயலால் மதியற்றவர்களின் வாழ்க்கையோ/மற்றவர்களுக்கு தீங்கு மனதாலும் நினையாதவர்களின் வாழ்க்கையோ தடம் மாறும் போது கடவுளும் பாராபட்சமாகதானே இருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எங்களை மீறி நடந்த/நடக்கும் விஷயங்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட ஏன் என்ற கேள்வி எழுவதையும் தடுக்கமுடியவில்லை

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சந்தேகம் உள்ளது.. 

பிரபா,

என் மனதிலும் இதே கேள்வி உண்டு; காலங்காலமாகப் பலராலும் கேட்கப்படும் கேள்வி இது.

மூத்தோர், ஞானிகள் சொன்னது, மற்றும் எனது குறுகியகால அனுபவங்களை வைத்துச் சொல்கிறேன், அநியாயமாகத் தண்டிக்கப்படும் 'நல்லோரும்' ஏதோ ஒரு காலகட்டத்தில் தவறிழைத்திருப்பர்; அத்தவறு முற்பிறவியிலும் நிகழ்ந்திருக்கலாம்; அதன் விளைவை அவர்கள் நல்லவர்களாக வாழும்போது அனுபவிக்கையில், நமக்கு அது அநியாயமாகப்படுகிறது. ஜோதிடம், காண்டம் போன்றவற்றில் இந்த முற்பிறவி பாவ, புண்ணியங்களைக் குறிப்பிட்டு அவற்றின் விளைவே இப்பிறவியிலோ, மறுபிறவிகளிலோ குறிப்பிட்ட பலனை அனுபவிப்போம் என்று சொல்வார்கள். இது ஒரு சுழற்சி என நம்புகிறேன். 

இது தவிர அண்மைக் காலமாக எனது நம்பிக்கை, நமது எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நாம் நினைத்துப் பார்த்திராத சக்தி உண்டு. எனவே புறத்தில் நல்லவர்களாகத் தோன்றினாலும், நல்ல செயல்கள் செய்தாலும் கூட அவர்கள் சிந்தனையில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருந்தால் அதன் விளைவைப் பாதகமான சம்பவங்களாக அனுபவிப்பர் என்பது என் எண்ணக்கரு. நமக்குள்ளே இருக்கும் காந்த சக்தி தான் இதன் காரணம் என்பர். இது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன என அறிகிறேன். எல்லாவற்றையும் ஆராய்வதைவிட, எது நடந்தாலும் ஏற்று முடிந்தவரை நன்மை மட்டுமே செய்து, விளைவை எமக்கு மேலான பிரபஞ்சப்பேராற்றலிடமே விட்டுவிட்டு, நன்றியுணர்ச்சி, அன்புணர்வு, மன்னிக்கும் உணர்வு இவற்றுடன், நேர்மறை எண்ணங்களை வளர்த்தால் என்றோ ஒரு நாள் அதற்கான சாதகமான விளைவை நாம் பெறுவோம் என்பது எனது சமீபத்தைய நம்பிக்கை! 😊

 

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

உண்மை தான் பிரபா. பிறப்பாலும், வளர்ப்பாலும் வருவது என்பார்கள். (Nature & Nurture)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மல்லிகை வாசம் said:

முற்பிறவியிலும் நிகழ்ந்திருக்கலாம்; அதன் விளைவை அவர்கள் நல்லவர்களாக வாழும்போது அனுபவிக்கையில், நமக்கு அது அநியாயமாகப்படுகிறது

முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. 

32 minutes ago, மல்லிகை வாசம் said:

நமது எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நாம் நினைத்துப் பார்த்திராத சக்தி உண்டு

அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? 

தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள்

ஒவ்வொருவருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை.. பாதிப்புக்களும் வித்தியாசமானவை..ஆனாலும் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையே.. எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

பிரபா.... நிச்சயமாக, இது, தான்... 
மற்றையவற்றுக்கு, முன்...  முதன் முதலாய்...
எமது மனதையும்,  உடலையும்  தயார் படுத்தும்.

Link to comment
Share on other sites

39 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. 

"எல்லாம் கர்மவினை தான்" என யாராவது என்னிடம் சொல்லும்போது இதே கேள்வியையே நான் கேட்டதுண்டு; என்ன தான் தவறு செய்தோம் எனக் கூறித் தண்டனையை உடனேயே தந்துவிட்டால் கர்மவினையும் சேராது, நம் தவறையும் நாம் உணரும் வாய்ப்பாகவும் அமையுமே என நினைப்பதுண்டு. ஆனால் அதைத் தீர்மானிப்பது நாமல்லவே எனச் சொல்வார்கள்; "இறைவனின் விளையாட்டில் நாம் எல்லாம் பொம்மைகள்; நம்மை ஆட்டுவிப்பவனின் முடிவு அது" என்பார்கள். அப்போது 'இறைவன் நல்லவரா? கெட்டவரா?' என்ற கேள்வி கூட என் மனதில் எழும். 'ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்' என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வரும். கீழே இணைத்துள்ளேன்:

வரிகள்:

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் 
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி 
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் 

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது 
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி 
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் 
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் 

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் 
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும் 
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை 
நமக்காக நம் கையால் செய்வது நன்று 


ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும் 
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை 
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் 
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் 


நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை 
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க 
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த 
வேதனையும் மாறும் மேகத்தை போல 

Link to comment
Share on other sites

57 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? 

மற்றோரைச் சபித்தோர், துன்புறுத்தியோர் தற்காலிகமாக நன்றாக வாழலாம் / அது போல் வெளி உலகிற்குத் தோன்றலாம்; ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு நிலைக்காது என்றோ அல்லது அதன் விளைவை அவர்கள் உண்மையில் அனுபவித்தாலும் வெளியில் நமக்குத் தெரிவதில்லை என்பார்கள் மூத்தோர். விளைவுகள் எதுவும் ஓர் இரவில் நடந்துவிடாது. சில நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம்; எப்படியோ இறைவன் உரியதை உரிய நேரத்தில், உரிய அளவில் திரும்பித் தருவான் என்பர். தம் ஆயுட் காலத்தில் பலவற்றைப் பார்த்த முதியோர், ஞானிகளின் இந்த அனுபவ மொழிகளை நம்புவதைத் தவிர நமக்கு ஏதும் மாற்று வழி உண்டோ! 😊

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள்

'மெய்யெனப்படுவது' பகுதி தானே! கேள்விகளால் நானும் கற்கிறேன். என் அறிவுக்கெட்டியதை நான் எழுதுகிறேன். நீங்களும் எழுதுகிறீர்கள். இங்கே என்னிலும் பல மூத்த அனுபவசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்களயும் அறிய ஆவல். ஆரோக்கியமான விவாதத்தால் எல்லோரும் சேர்ந்து உண்மையை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதில் நான் திருப்தியடைகிறேன். ஆரோக்கியமான கேள்விகள், கருத்துக்களுக்கு நன்றி பிரபா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:
22 hours ago, மல்லிகை வாசம் said:

 

 

என்னைப்பொறுத்தவரை, எமது கண்களுக்கு தெரியாத சக்தியைவிட எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும். ஆனால் அதற்கும் ஏதாவது காரணங்களை கூறுபவர்களும் உண்டு.

உங்களது நேரத்திற்கும், நல்லதொரு
விளக்கத்திற்கும் மிகவும் நன்றி..

Link to comment
Share on other sites

21 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை, எமது கண்களுக்கு தெரியாத சக்தியைவிட எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும். ஆனால் அதற்கும் ஏதாவது காரணங்களை கூறுபவர்களும் உண்டு.

பிரபா,

நீங்கள் குறிப்பிட்ட மனசாட்சி தான் கடவுள் என்றும் ஒரு சாரார் சொல்வர். கடவுள் எம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார், நம் ஆன்மாவும் கடவுளின் ஓர் வடிவமே என்றெல்லாமும் சொல்வார்கள். இன்னும், 'அன்பே சிவம்' என்றார் திருமூலர். இதுபோன்ற நோக்குகளின் பின்னால் ஒளிந்துள்ள உண்மை ஒன்றே என்பது என் எண்ணம்; அதாவது ஒரே உண்மையை அவரவர் உணர்ந்தபடி அவரவர் வார்த்தைகளில் சொல்லியிருக்கின்றனர் ஞானியர் என்பது என் எண்ணம். 

ஆகவே, நீங்கள் குறிப்பிட்டபடி 'எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும்' என்பதும் என் பார்வையில் ஓர் ஆன்மீக உணர்வே! பார்வைகள் வேறெனினும், உங்களது இந்தக் கூற்றுடன் உடன்படுகிறேன்; தத்துவச் சிக்கல்கள் இல்லாத இக்கூற்று எளிமையாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் உள்ளது.😊

நல்ல கருத்தாடல். நன்றி பிரபா.😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎01‎-‎2021 at 02:30, உடையார் said:

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நன்றி பகிர்வுக்கு

ரதி இன்னும் 1 வருடத்துக்கு வெளியில போக முடியாது, தயவு செய்து எரிச்சல் படக்கூடாது😊

நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே 😁

 பத்த வைக்கிறார் மை லாட்....😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

 பத்த வைக்கிறார் மை லாட்....😆

🤣

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.