Jump to content

எனது பார்வையில் 2020ஆம் ஆண்டு


Recommended Posts

7 hours ago, nedukkalapoovan said:

எவருக்கு எப்படியோ.. நமக்கு முன்னேற்ற கரமான ஆண்டு. கொவிட் 19 பீதி ஒன்றைத் தவிர. 

மகிழ்ச்சி நெடுக்ஸ். ஆக லண்டன் காரரின் சாபத்தில் ஒரு பகுதி குறைந்தது எனக்கு!😆 கருத்துக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!😊💐

17 hours ago, மல்லிகை வாசம் said:

தற்போது லண்டன் நகரில் வசிப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்துச் சாபமிட்டிருப்பார்களோ என்னமோ!

 

4 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

ஆஹா...! இன்னொரு லண்டன் ஆளின் சாபத்திலிருந்தும் தப்பித்தேன். மகிழ்ச்சி. 2019, 2020 போல் அல்லாமல் மிகச் சிறப்பான 2021ஆக அமைய வாழ்த்துக்கள் ரதி!😊💐 கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

இதைதான் சனாதன தர்மம் “தத்துவ மசி” என்கிறதாக சைவசமய புத்தகத்தில் படித்த நியாபகம்.

நீ அதுவாகிறாய்.

எதுவாகிறாய்? எதுவாக விரும்புகிறாயோ அதுவாகிறாய்😀.

இதைதான் law of attraction, power of the universe என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் ஆழ்மனதில் “ஐசடிக்கும் வேலை வேண்டும்” என பதிந்து விட்டால், ஐசடிக்கும் வேலை கிடைக்குமாம் 🤣.

பிறப்பிலேயே மஹா சோம்பேறி என்பதால் எனக்கு இப்படி அமைந்தது என நினைக்கிறேன்🤣

4 hours ago, குமாரசாமி said:

நான் ஓகே.....ஆனால் கோசான் அப்பிடி இல்லையே.....சும்மா  அவரை வம்புக்கு இழுக்காட்டில் பத்தியப்படாதோ?

இந்த விளக்கம் உங்களுக்கும் பொருந்துமோ🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நன்றி பகிர்வுக்கு

6 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

ரதி இன்னும் 1 வருடத்துக்கு வெளியில போக முடியாது, தயவு செய்து எரிச்சல் படக்கூடாது😊

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நல்லது உடையார், 2021ம் ஜாலியாகவும், வரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!😊💐நன்றி😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மல்லிகை வாசம் said:

மதியைப் பயன்படுத்திச் செய்வது; முடியாவிடில் விதியென நினைத்து அமைதி கொள்வது தான் வழி

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

என்னுடைய வாழ்க்கை அனுபவத்தில்/ என்னைச் சார்ந்த நட்புவட்டத்தில் நான் கண்டது மதியானவர்களின் சதியால்/செயலால் மதியற்றவர்களின் வாழ்க்கையோ/மற்றவர்களுக்கு தீங்கு மனதாலும் நினையாதவர்களின் வாழ்க்கையோ தடம் மாறும் போது கடவுளும் பாராபட்சமாகதானே இருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எங்களை மீறி நடந்த/நடக்கும் விஷயங்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட ஏன் என்ற கேள்வி எழுவதையும் தடுக்கமுடியவில்லை

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சந்தேகம் உள்ளது.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2021 at 18:43, மல்லிகை வாசம் said:

எனினும் அவற்றின் பாதிப்பின் அளவு, அதனை ஒருவரால் தாங்கிக் கொள்ளும் தன்மை, அதிலிருந்து கற்ற பாடங்கள் மற்றும் பாதிப்பாக இருந்தாலும் அதனால் ஏற்பட்ட நீண்ட கால நன்மை (அல்லது தீமை) போன்றனவே ஒவ்வொருவரும் வரமா, சாபமா எனத் தீர்மானிக்கும் என்பது என் கருத்து.

உண்மையே.. எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

Link to comment
Share on other sites

46 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மதியானவர்களின் சதியால்/செயலால் மதியற்றவர்களின் வாழ்க்கையோ/மற்றவர்களுக்கு தீங்கு மனதாலும் நினையாதவர்களின் வாழ்க்கையோ தடம் மாறும் போது கடவுளும் பாராபட்சமாகதானே இருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எங்களை மீறி நடந்த/நடக்கும் விஷயங்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட ஏன் என்ற கேள்வி எழுவதையும் தடுக்கமுடியவில்லை

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சந்தேகம் உள்ளது.. 

பிரபா,

என் மனதிலும் இதே கேள்வி உண்டு; காலங்காலமாகப் பலராலும் கேட்கப்படும் கேள்வி இது.

மூத்தோர், ஞானிகள் சொன்னது, மற்றும் எனது குறுகியகால அனுபவங்களை வைத்துச் சொல்கிறேன், அநியாயமாகத் தண்டிக்கப்படும் 'நல்லோரும்' ஏதோ ஒரு காலகட்டத்தில் தவறிழைத்திருப்பர்; அத்தவறு முற்பிறவியிலும் நிகழ்ந்திருக்கலாம்; அதன் விளைவை அவர்கள் நல்லவர்களாக வாழும்போது அனுபவிக்கையில், நமக்கு அது அநியாயமாகப்படுகிறது. ஜோதிடம், காண்டம் போன்றவற்றில் இந்த முற்பிறவி பாவ, புண்ணியங்களைக் குறிப்பிட்டு அவற்றின் விளைவே இப்பிறவியிலோ, மறுபிறவிகளிலோ குறிப்பிட்ட பலனை அனுபவிப்போம் என்று சொல்வார்கள். இது ஒரு சுழற்சி என நம்புகிறேன். 

இது தவிர அண்மைக் காலமாக எனது நம்பிக்கை, நமது எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நாம் நினைத்துப் பார்த்திராத சக்தி உண்டு. எனவே புறத்தில் நல்லவர்களாகத் தோன்றினாலும், நல்ல செயல்கள் செய்தாலும் கூட அவர்கள் சிந்தனையில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருந்தால் அதன் விளைவைப் பாதகமான சம்பவங்களாக அனுபவிப்பர் என்பது என் எண்ணக்கரு. நமக்குள்ளே இருக்கும் காந்த சக்தி தான் இதன் காரணம் என்பர். இது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன என அறிகிறேன். எல்லாவற்றையும் ஆராய்வதைவிட, எது நடந்தாலும் ஏற்று முடிந்தவரை நன்மை மட்டுமே செய்து, விளைவை எமக்கு மேலான பிரபஞ்சப்பேராற்றலிடமே விட்டுவிட்டு, நன்றியுணர்ச்சி, அன்புணர்வு, மன்னிக்கும் உணர்வு இவற்றுடன், நேர்மறை எண்ணங்களை வளர்த்தால் என்றோ ஒரு நாள் அதற்கான சாதகமான விளைவை நாம் பெறுவோம் என்பது எனது சமீபத்தைய நம்பிக்கை! 😊

 

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

உண்மை தான் பிரபா. பிறப்பாலும், வளர்ப்பாலும் வருவது என்பார்கள். (Nature & Nurture)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மல்லிகை வாசம் said:

முற்பிறவியிலும் நிகழ்ந்திருக்கலாம்; அதன் விளைவை அவர்கள் நல்லவர்களாக வாழும்போது அனுபவிக்கையில், நமக்கு அது அநியாயமாகப்படுகிறது

முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. 

32 minutes ago, மல்லிகை வாசம் said:

நமது எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நாம் நினைத்துப் பார்த்திராத சக்தி உண்டு

அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? 

தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள்

ஒவ்வொருவருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை.. பாதிப்புக்களும் வித்தியாசமானவை..ஆனாலும் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையே.. எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

பிரபா.... நிச்சயமாக, இது, தான்... 
மற்றையவற்றுக்கு, முன்...  முதன் முதலாய்...
எமது மனதையும்,  உடலையும்  தயார் படுத்தும்.

Link to comment
Share on other sites

39 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. 

"எல்லாம் கர்மவினை தான்" என யாராவது என்னிடம் சொல்லும்போது இதே கேள்வியையே நான் கேட்டதுண்டு; என்ன தான் தவறு செய்தோம் எனக் கூறித் தண்டனையை உடனேயே தந்துவிட்டால் கர்மவினையும் சேராது, நம் தவறையும் நாம் உணரும் வாய்ப்பாகவும் அமையுமே என நினைப்பதுண்டு. ஆனால் அதைத் தீர்மானிப்பது நாமல்லவே எனச் சொல்வார்கள்; "இறைவனின் விளையாட்டில் நாம் எல்லாம் பொம்மைகள்; நம்மை ஆட்டுவிப்பவனின் முடிவு அது" என்பார்கள். அப்போது 'இறைவன் நல்லவரா? கெட்டவரா?' என்ற கேள்வி கூட என் மனதில் எழும். 'ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்' என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வரும். கீழே இணைத்துள்ளேன்:

வரிகள்:

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் 
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி 
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் 

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது 
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி 
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் 
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் 

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் 
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும் 
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை 
நமக்காக நம் கையால் செய்வது நன்று 


ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும் 
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை 
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் 
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் 


நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை 
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க 
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த 
வேதனையும் மாறும் மேகத்தை போல 

Link to comment
Share on other sites

57 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? 

மற்றோரைச் சபித்தோர், துன்புறுத்தியோர் தற்காலிகமாக நன்றாக வாழலாம் / அது போல் வெளி உலகிற்குத் தோன்றலாம்; ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு நிலைக்காது என்றோ அல்லது அதன் விளைவை அவர்கள் உண்மையில் அனுபவித்தாலும் வெளியில் நமக்குத் தெரிவதில்லை என்பார்கள் மூத்தோர். விளைவுகள் எதுவும் ஓர் இரவில் நடந்துவிடாது. சில நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம்; எப்படியோ இறைவன் உரியதை உரிய நேரத்தில், உரிய அளவில் திரும்பித் தருவான் என்பர். தம் ஆயுட் காலத்தில் பலவற்றைப் பார்த்த முதியோர், ஞானிகளின் இந்த அனுபவ மொழிகளை நம்புவதைத் தவிர நமக்கு ஏதும் மாற்று வழி உண்டோ! 😊

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள்

'மெய்யெனப்படுவது' பகுதி தானே! கேள்விகளால் நானும் கற்கிறேன். என் அறிவுக்கெட்டியதை நான் எழுதுகிறேன். நீங்களும் எழுதுகிறீர்கள். இங்கே என்னிலும் பல மூத்த அனுபவசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்களயும் அறிய ஆவல். ஆரோக்கியமான விவாதத்தால் எல்லோரும் சேர்ந்து உண்மையை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதில் நான் திருப்தியடைகிறேன். ஆரோக்கியமான கேள்விகள், கருத்துக்களுக்கு நன்றி பிரபா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:
22 hours ago, மல்லிகை வாசம் said:

 

 

என்னைப்பொறுத்தவரை, எமது கண்களுக்கு தெரியாத சக்தியைவிட எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும். ஆனால் அதற்கும் ஏதாவது காரணங்களை கூறுபவர்களும் உண்டு.

உங்களது நேரத்திற்கும், நல்லதொரு
விளக்கத்திற்கும் மிகவும் நன்றி..

Link to comment
Share on other sites

21 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை, எமது கண்களுக்கு தெரியாத சக்தியைவிட எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும். ஆனால் அதற்கும் ஏதாவது காரணங்களை கூறுபவர்களும் உண்டு.

பிரபா,

நீங்கள் குறிப்பிட்ட மனசாட்சி தான் கடவுள் என்றும் ஒரு சாரார் சொல்வர். கடவுள் எம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார், நம் ஆன்மாவும் கடவுளின் ஓர் வடிவமே என்றெல்லாமும் சொல்வார்கள். இன்னும், 'அன்பே சிவம்' என்றார் திருமூலர். இதுபோன்ற நோக்குகளின் பின்னால் ஒளிந்துள்ள உண்மை ஒன்றே என்பது என் எண்ணம்; அதாவது ஒரே உண்மையை அவரவர் உணர்ந்தபடி அவரவர் வார்த்தைகளில் சொல்லியிருக்கின்றனர் ஞானியர் என்பது என் எண்ணம். 

ஆகவே, நீங்கள் குறிப்பிட்டபடி 'எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும்' என்பதும் என் பார்வையில் ஓர் ஆன்மீக உணர்வே! பார்வைகள் வேறெனினும், உங்களது இந்தக் கூற்றுடன் உடன்படுகிறேன்; தத்துவச் சிக்கல்கள் இல்லாத இக்கூற்று எளிமையாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் உள்ளது.😊

நல்ல கருத்தாடல். நன்றி பிரபா.😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎01‎-‎2021 at 02:30, உடையார் said:

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நன்றி பகிர்வுக்கு

ரதி இன்னும் 1 வருடத்துக்கு வெளியில போக முடியாது, தயவு செய்து எரிச்சல் படக்கூடாது😊

நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே 😁

 பத்த வைக்கிறார் மை லாட்....😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

 பத்த வைக்கிறார் மை லாட்....😆

🤣

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.