Jump to content

எனது பார்வையில் 2020ஆம் ஆண்டு


Recommended Posts

7 hours ago, nedukkalapoovan said:

எவருக்கு எப்படியோ.. நமக்கு முன்னேற்ற கரமான ஆண்டு. கொவிட் 19 பீதி ஒன்றைத் தவிர. 

மகிழ்ச்சி நெடுக்ஸ். ஆக லண்டன் காரரின் சாபத்தில் ஒரு பகுதி குறைந்தது எனக்கு!😆 கருத்துக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!😊💐

17 hours ago, மல்லிகை வாசம் said:

தற்போது லண்டன் நகரில் வசிப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்துச் சாபமிட்டிருப்பார்களோ என்னமோ!

 

4 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

ஆஹா...! இன்னொரு லண்டன் ஆளின் சாபத்திலிருந்தும் தப்பித்தேன். மகிழ்ச்சி. 2019, 2020 போல் அல்லாமல் மிகச் சிறப்பான 2021ஆக அமைய வாழ்த்துக்கள் ரதி!😊💐 கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

இதைதான் சனாதன தர்மம் “தத்துவ மசி” என்கிறதாக சைவசமய புத்தகத்தில் படித்த நியாபகம்.

நீ அதுவாகிறாய்.

எதுவாகிறாய்? எதுவாக விரும்புகிறாயோ அதுவாகிறாய்😀.

இதைதான் law of attraction, power of the universe என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் ஆழ்மனதில் “ஐசடிக்கும் வேலை வேண்டும்” என பதிந்து விட்டால், ஐசடிக்கும் வேலை கிடைக்குமாம் 🤣.

பிறப்பிலேயே மஹா சோம்பேறி என்பதால் எனக்கு இப்படி அமைந்தது என நினைக்கிறேன்🤣

4 hours ago, குமாரசாமி said:

நான் ஓகே.....ஆனால் கோசான் அப்பிடி இல்லையே.....சும்மா  அவரை வம்புக்கு இழுக்காட்டில் பத்தியப்படாதோ?

இந்த விளக்கம் உங்களுக்கும் பொருந்துமோ🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நன்றி பகிர்வுக்கு

6 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

ரதி இன்னும் 1 வருடத்துக்கு வெளியில போக முடியாது, தயவு செய்து எரிச்சல் படக்கூடாது😊

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நல்லது உடையார், 2021ம் ஜாலியாகவும், வரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!😊💐நன்றி😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மல்லிகை வாசம் said:

மதியைப் பயன்படுத்திச் செய்வது; முடியாவிடில் விதியென நினைத்து அமைதி கொள்வது தான் வழி

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

என்னுடைய வாழ்க்கை அனுபவத்தில்/ என்னைச் சார்ந்த நட்புவட்டத்தில் நான் கண்டது மதியானவர்களின் சதியால்/செயலால் மதியற்றவர்களின் வாழ்க்கையோ/மற்றவர்களுக்கு தீங்கு மனதாலும் நினையாதவர்களின் வாழ்க்கையோ தடம் மாறும் போது கடவுளும் பாராபட்சமாகதானே இருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எங்களை மீறி நடந்த/நடக்கும் விஷயங்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட ஏன் என்ற கேள்வி எழுவதையும் தடுக்கமுடியவில்லை

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சந்தேகம் உள்ளது.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2021 at 18:43, மல்லிகை வாசம் said:

எனினும் அவற்றின் பாதிப்பின் அளவு, அதனை ஒருவரால் தாங்கிக் கொள்ளும் தன்மை, அதிலிருந்து கற்ற பாடங்கள் மற்றும் பாதிப்பாக இருந்தாலும் அதனால் ஏற்பட்ட நீண்ட கால நன்மை (அல்லது தீமை) போன்றனவே ஒவ்வொருவரும் வரமா, சாபமா எனத் தீர்மானிக்கும் என்பது என் கருத்து.

உண்மையே.. எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

Link to comment
Share on other sites

46 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மதியானவர்களின் சதியால்/செயலால் மதியற்றவர்களின் வாழ்க்கையோ/மற்றவர்களுக்கு தீங்கு மனதாலும் நினையாதவர்களின் வாழ்க்கையோ தடம் மாறும் போது கடவுளும் பாராபட்சமாகதானே இருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எங்களை மீறி நடந்த/நடக்கும் விஷயங்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட ஏன் என்ற கேள்வி எழுவதையும் தடுக்கமுடியவில்லை

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சந்தேகம் உள்ளது.. 

பிரபா,

என் மனதிலும் இதே கேள்வி உண்டு; காலங்காலமாகப் பலராலும் கேட்கப்படும் கேள்வி இது.

மூத்தோர், ஞானிகள் சொன்னது, மற்றும் எனது குறுகியகால அனுபவங்களை வைத்துச் சொல்கிறேன், அநியாயமாகத் தண்டிக்கப்படும் 'நல்லோரும்' ஏதோ ஒரு காலகட்டத்தில் தவறிழைத்திருப்பர்; அத்தவறு முற்பிறவியிலும் நிகழ்ந்திருக்கலாம்; அதன் விளைவை அவர்கள் நல்லவர்களாக வாழும்போது அனுபவிக்கையில், நமக்கு அது அநியாயமாகப்படுகிறது. ஜோதிடம், காண்டம் போன்றவற்றில் இந்த முற்பிறவி பாவ, புண்ணியங்களைக் குறிப்பிட்டு அவற்றின் விளைவே இப்பிறவியிலோ, மறுபிறவிகளிலோ குறிப்பிட்ட பலனை அனுபவிப்போம் என்று சொல்வார்கள். இது ஒரு சுழற்சி என நம்புகிறேன். 

இது தவிர அண்மைக் காலமாக எனது நம்பிக்கை, நமது எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நாம் நினைத்துப் பார்த்திராத சக்தி உண்டு. எனவே புறத்தில் நல்லவர்களாகத் தோன்றினாலும், நல்ல செயல்கள் செய்தாலும் கூட அவர்கள் சிந்தனையில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருந்தால் அதன் விளைவைப் பாதகமான சம்பவங்களாக அனுபவிப்பர் என்பது என் எண்ணக்கரு. நமக்குள்ளே இருக்கும் காந்த சக்தி தான் இதன் காரணம் என்பர். இது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன என அறிகிறேன். எல்லாவற்றையும் ஆராய்வதைவிட, எது நடந்தாலும் ஏற்று முடிந்தவரை நன்மை மட்டுமே செய்து, விளைவை எமக்கு மேலான பிரபஞ்சப்பேராற்றலிடமே விட்டுவிட்டு, நன்றியுணர்ச்சி, அன்புணர்வு, மன்னிக்கும் உணர்வு இவற்றுடன், நேர்மறை எண்ணங்களை வளர்த்தால் என்றோ ஒரு நாள் அதற்கான சாதகமான விளைவை நாம் பெறுவோம் என்பது எனது சமீபத்தைய நம்பிக்கை! 😊

 

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

உண்மை தான் பிரபா. பிறப்பாலும், வளர்ப்பாலும் வருவது என்பார்கள். (Nature & Nurture)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மல்லிகை வாசம் said:

முற்பிறவியிலும் நிகழ்ந்திருக்கலாம்; அதன் விளைவை அவர்கள் நல்லவர்களாக வாழும்போது அனுபவிக்கையில், நமக்கு அது அநியாயமாகப்படுகிறது

முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. 

32 minutes ago, மல்லிகை வாசம் said:

நமது எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நாம் நினைத்துப் பார்த்திராத சக்தி உண்டு

அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? 

தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள்

ஒவ்வொருவருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை.. பாதிப்புக்களும் வித்தியாசமானவை..ஆனாலும் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையே.. எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

பிரபா.... நிச்சயமாக, இது, தான்... 
மற்றையவற்றுக்கு, முன்...  முதன் முதலாய்...
எமது மனதையும்,  உடலையும்  தயார் படுத்தும்.

Link to comment
Share on other sites

39 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. 

"எல்லாம் கர்மவினை தான்" என யாராவது என்னிடம் சொல்லும்போது இதே கேள்வியையே நான் கேட்டதுண்டு; என்ன தான் தவறு செய்தோம் எனக் கூறித் தண்டனையை உடனேயே தந்துவிட்டால் கர்மவினையும் சேராது, நம் தவறையும் நாம் உணரும் வாய்ப்பாகவும் அமையுமே என நினைப்பதுண்டு. ஆனால் அதைத் தீர்மானிப்பது நாமல்லவே எனச் சொல்வார்கள்; "இறைவனின் விளையாட்டில் நாம் எல்லாம் பொம்மைகள்; நம்மை ஆட்டுவிப்பவனின் முடிவு அது" என்பார்கள். அப்போது 'இறைவன் நல்லவரா? கெட்டவரா?' என்ற கேள்வி கூட என் மனதில் எழும். 'ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்' என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வரும். கீழே இணைத்துள்ளேன்:

வரிகள்:

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் 
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி 
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் 

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது 
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி 
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் 
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் 

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் 
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும் 
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை 
நமக்காக நம் கையால் செய்வது நன்று 


ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும் 
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை 
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் 
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் 


நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை 
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க 
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த 
வேதனையும் மாறும் மேகத்தை போல 

Link to comment
Share on other sites

57 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? 

மற்றோரைச் சபித்தோர், துன்புறுத்தியோர் தற்காலிகமாக நன்றாக வாழலாம் / அது போல் வெளி உலகிற்குத் தோன்றலாம்; ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு நிலைக்காது என்றோ அல்லது அதன் விளைவை அவர்கள் உண்மையில் அனுபவித்தாலும் வெளியில் நமக்குத் தெரிவதில்லை என்பார்கள் மூத்தோர். விளைவுகள் எதுவும் ஓர் இரவில் நடந்துவிடாது. சில நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம்; எப்படியோ இறைவன் உரியதை உரிய நேரத்தில், உரிய அளவில் திரும்பித் தருவான் என்பர். தம் ஆயுட் காலத்தில் பலவற்றைப் பார்த்த முதியோர், ஞானிகளின் இந்த அனுபவ மொழிகளை நம்புவதைத் தவிர நமக்கு ஏதும் மாற்று வழி உண்டோ! 😊

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள்

'மெய்யெனப்படுவது' பகுதி தானே! கேள்விகளால் நானும் கற்கிறேன். என் அறிவுக்கெட்டியதை நான் எழுதுகிறேன். நீங்களும் எழுதுகிறீர்கள். இங்கே என்னிலும் பல மூத்த அனுபவசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்களயும் அறிய ஆவல். ஆரோக்கியமான விவாதத்தால் எல்லோரும் சேர்ந்து உண்மையை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதில் நான் திருப்தியடைகிறேன். ஆரோக்கியமான கேள்விகள், கருத்துக்களுக்கு நன்றி பிரபா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:
22 hours ago, மல்லிகை வாசம் said:

 

 

என்னைப்பொறுத்தவரை, எமது கண்களுக்கு தெரியாத சக்தியைவிட எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும். ஆனால் அதற்கும் ஏதாவது காரணங்களை கூறுபவர்களும் உண்டு.

உங்களது நேரத்திற்கும், நல்லதொரு
விளக்கத்திற்கும் மிகவும் நன்றி..

Link to comment
Share on other sites

21 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை, எமது கண்களுக்கு தெரியாத சக்தியைவிட எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும். ஆனால் அதற்கும் ஏதாவது காரணங்களை கூறுபவர்களும் உண்டு.

பிரபா,

நீங்கள் குறிப்பிட்ட மனசாட்சி தான் கடவுள் என்றும் ஒரு சாரார் சொல்வர். கடவுள் எம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார், நம் ஆன்மாவும் கடவுளின் ஓர் வடிவமே என்றெல்லாமும் சொல்வார்கள். இன்னும், 'அன்பே சிவம்' என்றார் திருமூலர். இதுபோன்ற நோக்குகளின் பின்னால் ஒளிந்துள்ள உண்மை ஒன்றே என்பது என் எண்ணம்; அதாவது ஒரே உண்மையை அவரவர் உணர்ந்தபடி அவரவர் வார்த்தைகளில் சொல்லியிருக்கின்றனர் ஞானியர் என்பது என் எண்ணம். 

ஆகவே, நீங்கள் குறிப்பிட்டபடி 'எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும்' என்பதும் என் பார்வையில் ஓர் ஆன்மீக உணர்வே! பார்வைகள் வேறெனினும், உங்களது இந்தக் கூற்றுடன் உடன்படுகிறேன்; தத்துவச் சிக்கல்கள் இல்லாத இக்கூற்று எளிமையாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் உள்ளது.😊

நல்ல கருத்தாடல். நன்றி பிரபா.😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎01‎-‎2021 at 02:30, உடையார் said:

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நன்றி பகிர்வுக்கு

ரதி இன்னும் 1 வருடத்துக்கு வெளியில போக முடியாது, தயவு செய்து எரிச்சல் படக்கூடாது😊

நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே 😁

 பத்த வைக்கிறார் மை லாட்....😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

 பத்த வைக்கிறார் மை லாட்....😆

🤣

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.