Jump to content

இந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்


Recommended Posts

இந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் : கோப்புப்படம்

மெல்போர்ன்

இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முதலில் நிறுத்தினால்தான் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாடியுள்ளார்.

அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தி்ல் தோற்கடித்து இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

 
 

கடந்த இரு போட்டிகளாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், ஸ்மித் ஆட்டம் படுமோசம். அதிலும் ஸ்மித் கடந்த 4 இன்னிங்ஸ்களில் 1,1,0,8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடந்த இரு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் சேர்த்த அதிகபட்சமே கேப்டன் பெய்ன் அடித்த 73 ரன்கள்தான்.

2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை. எந்த வீரர்களின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தொடவில்லை.

1609250200756.jpg

இதுபோன்ற ஏராளமான சொதப்பல்களை பேட்டிங்கில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

''இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை நிறுத்தினால்தான், ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும். அடிலெய்டில் 191, மெல்போர்னில் 195, 200 ரன்கள் அடித்தது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியான ரன்களாக எனக்குத் தெரியவில்லை. பேட்டிங் நன்றாகச் செய்யவேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் இல்லாமல் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இந்திய அணி வீரர்கள், பேட்டிங்கில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவுட் ஆவதைப் பார்த்து அவர்கள் கவலைப்படவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தாலும் ரன்களைச் சேர்த்தார்கள். ஓவருக்கு 2.5 ரன்களை வேகமாகச் சேர்த்தார்கள். ஆனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கில் ரன் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமே காணப்படவில்லை.

வீரர்கள் தேர்வு குறித்து ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழுவினர் பல கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் தாங்கள் எவ்வாறு விளையாடினோம் என்பது குறித்து மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியம் என நான் நினைக்கிறேன்.

கடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பெருமைப்படக்கூடிய வகையில் எந்த பார்ட்னர்ஷிப்பும் அமைக்கவில்லை. அடிலெய்டில் அணி மீது விழுந்த கீறல்கள், விரிசல்கள் பூசி மெழுகப்பட்டன. ஸ்மித் இன்னும் தனது இயல்பான ஆட்டத்துக்கு வரவில்லை.

வார்னர் அணியில் இல்லை, லாபுஷேன் எதிர்பார்த்த ஸ்கோர் செய்யவில்லை. இப்போதுள்ள சூழலில் வார்னர் அணிக்குத் திரும்ப வேண்டியது அவசியம். ஸ்மித் அதிகமான ரன்கள் அடிக்க வேண்டும். லாபுஷேன் தனது ஃபார்முக்கு வர வேண்டும்''.

இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்

https://www.hindutamil.in/news/sports/616796-ponting-slams-australian-batsmen-for-lacking-intent-against-indian-bowlers.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி இந்த தொடரைக்கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம், குறிப்பாக தமிழக வீரர் நடராயன் அடுத்த போட்டிகளில் பஙகு பற்றினால் இன்னும் சாதகமாக அமையும் என்றே தோன்றுகிறது ஏனெனில் அவுஸ்திரேலிய ஆரம்ப ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் கால் நகர்வுகளை செய்யும் போது இயல்பாகவே பந்தின் திசைக்கு முதலில் கால்களை பந்து வீசுவதற்கு முன்பாகவே நகர்த்தி பின்னர் பந்தின் அளவுகளுக்கேற்ப கால்களை அனுசரித்துக்கொள்கிறார்கள் ( அடிப்படையில் பந்து வீசுபவரின் கையில் இருந்து பந்து விடுபடும் போது பந்து வீச்சாளரின் மணிக்கட்டை கவனித்து பந்து அளவினைக்கணித்து பின்னர் பந்தின் திசையைக்கேற்ப கால்களை நகர்த்துவதுதான் மரபு) நடராயன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இலக்கு மேலாக வந்து ஆட்டக்காரரின் இலக்கிற்கு வெளியே புதிய பந்தினை வீசி இலக்கு நோக்கி பந்தினை திருப்பும் போது அவுஸ்திரேலிய ஆட்டக்காரர்களின் கால்களில் பட்டு ஆட்டமிழக்க அதிகளவான சந்தர்ப்பங்கள் உண்டு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.