Jump to content

இறந்துபோன இணை; உடலருகில் அமர்ந்து துக்கம் அனுசரித்த அன்னப் பறவையால் 23 ரயில்கள் காத்திருப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம்

இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம்

29 Dec 2020 20:46

இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று.

ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர போலிசார் தெரிவித்தனர்.

அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகருவதாயில்லை.

அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன. 

தீயணைப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு  உயிருடனிருந்த அன்னப் பறவையை அவ்விடத்தில் இருந்து அகற்றினர். பத்திரமாக மீட்கப்பட்ட அது, பின்னர் ஃபுல்டா நதியில் விடப்பட்டது.

சுமார் 50 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில்கள் அந்தத் தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தன.

கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் நேற்று வெளியாகின.

பொதுவாக, அன்னப் பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் தான் வாழும் என பிரிட்டனின் ராயல் சொசைட்டி பறவைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

https://www.tamilmurasu.com.sg/world/story20201229-58490.html?fbclid=IwAR1GDZ0qpEpMjFeJrP-jSINqBn79LBpfWxuQD3UuNdpM3u0MllgCs_1R1Mc

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:
இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம்

இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம்

இதுவே இலங்கை இந்தியாவாக இருந்தால்  அன்னப்பறவை ஒரே சதக்...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணை அன்னப்  பறவைக்காக... 
23 ரயில்கள் நிறுத்தப் பட்ட  நிகழ்வு,
ஜேர்மனியில்,  மட்டுமே நடக்கும். ❤️

அதனால்... ஜேர்மன்  தமிழராக இருப்பதில்,  பெருமைப் படுகின்றேன்.  :)

தகவலுக்கு... நன்றி, பெருமாள்.  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இணை அன்னப்  பறவைக்காக... 
23 ரயில்கள் நிறுத்தப் பட்ட  நிகழ்வு,
ஜேர்மனியில்,  மட்டுமே நடக்கும். ❤️

அதனால்... ஜேர்மன்  தமிழராக இருப்பதில்,  பெருமைப் படுகின்றேன்.  :)

தகவலுக்கு... நன்றி, பெருமாள்.  👍

சும்மா சொல்லக்கூடாது ஜேர்மன்காரர் நாய்,பூனை குருவியளிலை சரியான பாசம்...பிள்ளைமாதிரி கவனிப்பினம்

451bd97053bb4b242f6604afe7f3df11.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஜெர்மன் காரரும் உச்சி குளிர்ந்தது காணும் 😀 இந்த செய்தி சிங்கப்பூர் இணையதளம் தமிழ்முரசு தான் போட்டிருக்கு நம்ம இணையங்கள் செத்த வீட்டு செய்தி கூட்டமைப்பின் கூத்துக்கள் போடுவதில் படு பிஸியாய்  இருக்கினம் .

தமிழ்நாடு ரஜனியின் பொய்களில் மயங்கி கிடக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்.......

சந்தோசமாகப் போற திரிய யாம் ஏன் திரிக்கணும் என்றேன்... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

ஆனால்.......

சந்தோசமாகப் போற திரிய யாம் ஏன் திரிக்கணும் என்றேன்... 😂😂

வாங்கோ வாங்கோ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கோ அங்காள பக்கம் எங்கடை தலைவர்மார் என்கிறவையல்  பண்ணுற கூத்து பார்த்து தலைவலியே வந்துடும் போல் இருக்கு .கொஞ்ச நாளைக்கு அரசியல் பார்க்காமல் இருந்தால் நல்லது போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

இரண்டு ஜெர்மன் காரரும் உச்சி குளிர்ந்தது காணும் 😀 இந்த செய்தி சிங்கப்பூர் இணையதளம் தமிழ்முரசு தான் போட்டிருக்கு நம்ம இணையங்கள் செத்த வீட்டு செய்தி கூட்டமைப்பின் கூத்துக்கள் போடுவதில் படு பிஸியாய்  இருக்கினம் .

தமிழ்நாடு ரஜனியின் பொய்களில் மயங்கி கிடக்கு .

பல அரசியல் தீர்வுகள் முடிவுகள் அப்பலோ ஆஸ்பத்திரியிலைதான் எடுக்கிறார்களாம்  உண்மையோ?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பல அரசியல் தீர்வுகள் முடிவுகள் அப்பலோ ஆஸ்பத்திரியிலைதான் எடுக்கிறார்களாம்  உண்மையோ?😁

அப்பலோ... ஆசுப்பத்திரி, எனும் போதே... குலை நடுங்குது.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

அப்பலோ... ஆசுப்பத்திரி, எனும் போதே... குலை நடுங்குது.  🤣

அப்பலோ அல்ல. அப்பாலே போ ஆசுப்பத்திரி.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அப்பலோ அல்ல. அப்பாலே போ ஆசுப்பத்திரி.. 😂

ஓகோ... அதைத்தான், இப்படி... சூசகமாக அழைக்கிறார்களா... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

அப்பலோ... ஆசுப்பத்திரி, எனும் போதே... குலை நடுங்குது.  🤣

இதுகளை யோசிக்கத்தான் கண்ணிலை தண்ணி வருது...😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறந்து போன மனிதவாழ்வை மிருகங்களும் பறவைகளும்  ஞாபகப்படுத்துகின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இதுகளை யோசிக்கத்தான் கண்ணிலை தண்ணி வருது...😂

 

அட... கறுமமே, இப்பிடி எல்லாம்... சினிமா பைத்தியங்கள் இருக்குமா
இவர்களில்... பெரும்பாலோனோர், கஸ்ரப்  பட்டு உழைக்கும்... 
கூலித்  தொழிலாளர்களாம். 😡

இப்படியான... உடுப்புகள், தைக்கவே... எவ்வளவு காசு,  செலவு செய்திருப்பார்கள்.
அதனை... தனது, குடும்பத்திற்கு கொடுத்திருந்தால், 
அவர்களின் மனைவியும், பிள்ளைகளும்.... எவ்வளவு, சந்தோசம் அடைந்து இருப்பார்கள். ❤️
சரியான... விசர் கூட்டங்கள்.  🥵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட... கறுமமே, இப்பிடி எல்லாம்... சினிமா பைத்தியங்கள் இருக்குமா
இவர்களில்... பெரும்பாலோனோர், கஸ்ரப்  பட்டு உழைக்கும்... 
கூலித்  தொழிலாளர்களாம். 😡

இப்படியான... உடுப்புகள், தைக்கவே... எவ்வளவு காசு,  செலவு செய்திருப்பார்கள்.
அதனை... தனது, குடும்பத்திற்கு கொடுத்திருந்தால், 
அவர்களின் மனைவியும், பிள்ளைகளும்.... எவ்வளவு, சந்தோசம் அடைந்து இருப்பார்கள். ❤️
சரியான... விசர் கூட்டங்கள்.  🥵

இல்லை அண்ணா இது ஒரு தொழில்.

ரஜனி தேர்தலில் நின்றிருந்தால் கொஞ்ச காசு பார்திருப்பார்கள். இப்போ அதிலும் மண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இல்லை அண்ணா இது ஒரு தொழில்.

ரஜனி தேர்தலில் நின்றிருந்தால் கொஞ்ச காசு பார்திருப்பார்கள். இப்போ அதிலும் மண்.

கோசான்... நேற்று,  நீங்கள் தானே.... ரஜனியிடம் இருந்து காசா?
என்ற தொனியில், நாலு கேள்விக் குறி போட்டு... பதில் எழுதி இருந்தீர்கள். :grin:

அப்படி... இருக்க,  இந்த  ரசிக குஞ்சுகள்...
யாரிடம்.. பணத்தை, எதிர் பார்த்து... இந்த "கோமாளி"  வேசம்  போட்டவர்கள்   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கோசான்... நேற்று,  நீங்கள் தானே.... ரஜனியிடம் இருந்து காசா?
என்ற தொனியில், நாலு கேள்விக் குறி போட்டு... பதில் எழுதி இருந்தீர்கள். :grin:

அப்படி... இருக்க,  இந்த  ரசிக குஞ்சுகள்...
யாரிடம்.. பணத்தை, எதிர் பார்த்து... இந்த "கோமாளி"  வேசம்  போட்டவர்கள்   🤣

ரஜனி தேர்தலில் நின்றால், அத்தனை தொகுதியிலும் நிற்பவர்கள் ஆளுக்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என்று ஒரு கேள்வி கேட்டே சீட் ஒதுக்கபடும்.

சில வசதி படைத்த வேட்பாளர்கள் தாமே செலவழிப்பார்கள்.

உதிரி கட்சிகள், டெபாசிட்டே தேறாது என தெரிந்தும் போட்டியில் குதித்தவர்கள், அவர்கள் யார் திட்டபடி வாக்கை பிரிக்க இறங்கினார்களோ (அமித்ஷா) அவர்களிடம் வாங்கி செலவழிப்பார்கள். அல்லது மணல் மாபியா போன்றவர்கள் இவர்களுக்கு பின்னால் இருந்து பண சப்ளை செய்வார்கள்.

இது எல்லா கட்சியும் செய்வதுதான். அப்படி செலவழிக்கும் பணத்தில் கொஞ்சம் இப்படியானவர்களுக்கும் பொசியும்.

சுற்றுலா சீசன் போல, எலக்சன் சீசனும் அன்றாடம் காய்சிகள் காசு பார்க்கும் சீசன்தான்.

ஆனால் தலைவர்கள் சொந்த காசை செலவழிப்பது மிக குறைவு. எனக்கு தெரிய விஜயகாந்த் மட்டும்தான்.

அதுவும் கருணாநிதி, ஜெயா, ரஜனி, ஸ்டாலின், சீமான், வைகோ போன்றவர்கள் - நோ சான்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சுற்றுலா சீசன் போல, எலக்சன் சீசனும் அன்றாடம் காய்சிகள் காசு பார்க்கும் சீசன்தான்.

200 வீத உண்மை அவர்களுக்கு உள்ள பிரச்சனை  அரசியல் தெளிவின்மை அந்த தெழிவைத்தான்  சீமான் கொடுக்கிறார் .

அடிபட்டு  போவது என்று முடிவாகின பின் எதுக்கும் பயப்பிட கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

அந்த அன்னம் என்னாச்சு.🤪

அருகில் இருந்து அழுத அன்னத்தை ஆத்துல விட்டாச்சுது, அமரரான அன்னத்தை ஆழப்  புதைச்சாச்சுது ........!  🦢 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சும்மா சொல்லக்கூடாது ஜேர்மன்காரர் நாய்,பூனை குருவியளிலை சரியான பாசம்...பிள்ளைமாதிரி கவனிப்பினம்

451bd97053bb4b242f6604afe7f3df11.jpg

செல்லப் பிராணிகளில் அன்பு வைப்பதில் தப்பில்லை ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் லேதிக கவனிப்புக்கள்..நெற்றியில் குங்குமம் சந்தணம் வைப்பது..சாமித் தட்டில் கொண்டு போய் விட்டு சாமிக்கு வைச்ச அதே சாப்பாட்டை வைப்பதும் நன்றாகவா இருக்கிறது..அண்மையில் இங்கு ஒரு தாயார் தன் பெண் பிள்ளைக்கு $3.000 டொலர்களுக்கு நாய் வாங்கிக் கொடுத்திருகிறா ஏன் என்று கேட்டால்  பிள்ளை தவறான வழிகளில் போகாமல் நாயோடு வீட்டில் இருக்கட்டும் என்று  வாங்கிக் கொடுதாராம்...பிறிதொரு இடத்தில் வீட்டு கதவை தட்டினால் அப்பா வாறார் போய் பாரு என்று சொல்லி விட்டால் அது கதவருகில் வந்து பார்த்துக் கொண்டே இருக்கும்..சில பேர் இப்படித் தான் தூக்கு காவடி..வின்றரில் எல்லாம் பாவங்கள் நடக்க இயலாது கஸ்ரம் தான் ஆனால் சிறிது வந்த வழியையும் பார்க்க வேண்டும்.ச்சே என்ன உலகம் இது.இப்படித் தான் நம் மக்களின் முன்னேற்றங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

செல்லப் பிராணிகளில் அன்பு வைப்பதில் தப்பில்லை ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் லேதிக கவனிப்புக்கள்..நெற்றியில் குங்குமம் சந்தணம் வைப்பது..சாமித் தட்டில் கொண்டு போய் விட்டு சாமிக்கு வைச்ச அதே சாப்பாட்டை வைப்பதும் நன்றாகவா இருக்கிறது..அண்மையில் இங்கு ஒரு தாயார் தன் பெண் பிள்ளைக்கு $3.000 டொலர்களுக்கு நாய் வாங்கிக் கொடுத்திருகிறா ஏன் என்று கேட்டால்  பிள்ளை தவறான வழிகளில் போகாமல் நாயோடு வீட்டில் இருக்கட்டும் என்று  வாங்கிக் கொடுதாராம்...பிறிதொரு இடத்தில் வீட்டு கதவை தட்டினால் அப்பா வாறார் போய் பாரு என்று சொல்லி விட்டால் அது கதவருகில் வந்து பார்த்துக் கொண்டே இருக்கும்..சில பேர் இப்படித் தான் தூக்கு காவடி..வின்றரில் எல்லாம் பாவங்கள் நடக்க இயலாது கஸ்ரம் தான் ஆனால் சிறிது வந்த வழியையும் பார்க்க வேண்டும்.ச்சே என்ன உலகம் இது.இப்படித் தான் நம் மக்களின் முன்னேற்றங்கள்..

இங்கு மண்டபிரசர் ஏறாமல் இருக்க தனிமையை போக்க என்று செல்லப்பிராணிகளை வளர்ப்பது பலரால் வரவேற்கப்பட்ட ஒன்று அதுக்காக 3000 டொலர் எல்லாம் ஓவர் பிள்ளைகள் வளர்ந்து யுனி வேலை என்று ஓட  பெறோர்கள் இருவருக்கும் தனித்து விடப்பட்டதை போன்ற உணர்வை அனுபவிக்க வேண்டி வரும் அப்படியான நேரம்களில் பிள்ளைகளே ஒரு குட்டி நாய் ஒன்றை கொண்டுவந்து முதலில் தாங்கள்தான் வளர்க்கப்போவதாய் சொல்வார்கள் கடைசியில் வளர்ப்பது அப்பாவும் அம்மாவும்தான் அதிலும் நாய் முடி என்றாலே அருவருக்கும் அம்மா கூட அன்பாய் இருப்பது பெரும் அதிசயமாய் இருக்கும் இங்கு பலவீடுகளில் இந்த கதை வித்தியாசம் இல்லாமல் ஒரே கதையாய் இருக்கும் .

காலம் வெகுவேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

200 வீத உண்மை அவர்களுக்கு உள்ள பிரச்சனை  அரசியல் தெளிவின்மை அந்த தெழிவைத்தான்  சீமான் கொடுக்கிறார் .

அடிபட்டு  போவது என்று முடிவாகின பின் எதுக்கும் பயப்பிட கூடாது .

🤣 அரசியல் தெளிவின்மையை பயன்படுத்தி கட்டுகதைகள் கூறி தம் விம்பத்தை பெருக்கும் ஒருவர் நிச்சயம் தெளிவை உருவாக்க வல்லவர்தான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

செல்லப் பிராணிகளில் அன்பு வைப்பதில் தப்பில்லை ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் லேதிக கவனிப்புக்கள்..நெற்றியில் குங்குமம் சந்தணம் வைப்பது..சாமித் தட்டில் கொண்டு போய் விட்டு சாமிக்கு வைச்ச அதே சாப்பாட்டை வைப்பதும் நன்றாகவா இருக்கிறது..அண்மையில் இங்கு ஒரு தாயார் தன் பெண் பிள்ளைக்கு $3.000 டொலர்களுக்கு நாய் வாங்கிக் கொடுத்திருகிறா ஏன் என்று கேட்டால்  பிள்ளை தவறான வழிகளில் போகாமல் நாயோடு வீட்டில் இருக்கட்டும் என்று  வாங்கிக் கொடுதாராம்...பிறிதொரு இடத்தில் வீட்டு கதவை தட்டினால் அப்பா வாறார் போய் பாரு என்று சொல்லி விட்டால் அது கதவருகில் வந்து பார்த்துக் கொண்டே இருக்கும்..சில பேர் இப்படித் தான் தூக்கு காவடி..வின்றரில் எல்லாம் பாவங்கள் நடக்க இயலாது கஸ்ரம் தான் ஆனால் சிறிது வந்த வழியையும் பார்க்க வேண்டும்.ச்சே என்ன உலகம் இது.இப்படித் தான் நம் மக்களின் முன்னேற்றங்கள்..

எனக்கும் உந்த செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஏற்பில்லை. 

குதிரை மாரி பெரிய நாயாளோட போவது, சும்மா போற வயது போன ஆக்கள் ரோட்டை கடந்து மறு பக்கத்தால் போகுங்கள் பாவம்.

நாய் வீதியில் அசுத்தம் செய்தால் அதை பொறுக்குவது 10% மட்டுமே. ஏனையவை அடுத்து வாறவன் சப்பாத்துக்கு பொலிஷ் போடுற கூட்டம் 🤣

எத்தனையோ நாய்கள் பிள்ளையளை குதறி சாகடிச்ச சம்பவங்களும் உண்டு.

இந்த நாடுகளில் கூட foster care இல் இருந்து அவதிபடும் பிள்ளைகள் ஏராளம். சொந்த பிள்ளையள் வீட்டை விட்டு வெளிகிட்டால் இப்படி பிள்ளைகளை எடுத்து பார்த்தால் புண்ணியமாகும்.

ஆனால் காசு கொடுத்து நாய் வாங்குவினம். 

இது இப்ப பெரிய தொழில் நாய்குட்டிகள் நல்ல விலையில் போகும். களவெடுத்து கூட விக்கிறார்கள்.

எல்லாம் சுயநலம்தான், ஒல்லி குச்சான் உடம்புகாரர் சிறுத்தை போல நாயோட போறது ஒரு பாதுகாப்பு🤣

அதே போல் ஒரு வயதுக்கு பிறகு பிள்ளைகளை அதிகாரம் பண்ண முடியாது, நாய் ஒரு பிஸ்கேட்டை போட்டால் எப்பவும் வாலாட்டும் 🤣.

கார், வீடு மாரி இதுவும் ஒரு fashion accessory தான். 

ஊரில மீன் முள்ளை நாய்க்கு போட்டு வீட்டுக்கு வெளில விட்ட ஆக்கள்தான் எல்லாரும்🤣. இப்ப வெள்ளைகாரன் மாரி நாய்க்கு தனிரூம், இன்சூரண்ஸ், கோவிலில் ராசி சொல்லி அர்ச்சனை🤣.

பிராணிகளை அதன் வாழ்விடத்தில் இயற்கையாக வாழ விட முடியாத சுயநலமிகள்.

என்ன செய்வது ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் பொறுத்து போக வேண்டியதுதான் வேறு வழியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣 அரசியல் தெளிவின்மையை பயன்படுத்தி கட்டுகதைகள் கூறி தம் விம்பத்தை பெருக்கும் ஒருவர் நிச்சயம் தெளிவை உருவாக்க வல்லவர்தான் 🤣

அண்ணெய்  அது அவர்கள் நாடு சீமான் அந்த நாட்டுக்காரர் அங்கு அவர்கள் என்ன செய்தாலும் எங்களுக்கு ஒன்றும் இல்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.