Jump to content

இறந்துபோன இணை; உடலருகில் அமர்ந்து துக்கம் அனுசரித்த அன்னப் பறவையால் 23 ரயில்கள் காத்திருப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

அண்ணெய்  அது அவர்கள் நாடு சீமான் அந்த நாட்டுக்காரர் அங்கு அவர்கள் என்ன செய்தாலும் எங்களுக்கு ஒன்றும் இல்லை 

பெரும்ஸ்,

உப்பிடி பார்த்தா... யாழில் தமிழக, உலக செய்திகள் என்ற பகுதியே இருக்க கூடாது🤣. தனியே ஊர்புதினம் மட்டும். 

 

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பெரும்ஸ்,

உப்பிடி பார்த்தா... யாழில் தமிழக, உலக செய்திகள் என்ற பகுதியே இருக்க கூடாது🤣. தனியே ஊர்புதினம் மட்டும். 

 

சீமான் அவர்களால் எங்களுக்கு என்னபாதிப்பு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

சீமான் அவர்களால் எங்களுக்கு என்னபாதிப்பு ?

நான் எங்க பாஸ் சீமானால எங்களுக்கு பாதிப்பு என்று எழுதினான்?

அவரால் எங்களுக்கு பாதிப்பும் இல்லை ஆதாயமும் இல்லை, எப்போதும் வரப்போவதும் இல்லை.

சீமானை, British National Party, AfD, Front Nationale, Britain First, Steve Banon, Mary Lepen, ராஜபக்ஸ, கிட்டதட்ட அத்தனை சிங்கள அரசியல்வாதிகள் ..... இவர்கள் எல்லாரையும் நான் எதிர்க்க ஒரு காரணம்தான்.... இனவாதம், இனத்தூய்மைவாதம்.

இனத்தூய்மைவாதம் எங்கே எழுந்தாலும் அது என் இனத்தில் இருந்தே என்றாலும் எதிர்க்க படவேண்டியது, இதில் சமரசத்துக்கு இடமில்லை.

இவ்வாறு சிங்கள மக்கள் எதிர்த்து இருந்தால் இலங்கை இரத்த காடாக மாறி இராது.

நாளை தமிழ் நாடும் மாறக்கூடாது.

ஒரு தமிழனாகவும், தனிப்பட்டும் அந்த கரிசனை எனக்கு தமிழ்நாடு மீது உண்டு.

இங்கே எழுதும் பலர் அவர்களாகவே அவர்களை அறியாமலே ஒத்து கொள்ளும் விடயம்.

அவர்கள் சீமானை ஆதரிப்பது எமக்கு ஏதாவது நடக்கும் என்ற ஒற்றை சுயநல எதிர்பர்ப்பில் மட்டுமே.

அவர்களுக்கு தமிழ் நாடு நாசாமாய் போனாலும் அங்கே ஒட்ட முடியாத சாதிய பிளவுகள் வந்தாலும், சங்கிகள் ஆட்சிக்கு வந்தாலும் கவலை இல்லை.

சுருங்க சொல்லின், தமிழ் நாடு நாசமாய் போனாலும் பரவாயில்லை சீமான் வந்து எமக்கு ஏதும் நடக்குமா? என்பதுதான் முக்கியம்.

என்னை பொறுத்தவரை

1. சீமான் வந்தாலும் அப்படி எமக்கு ஒன்றும் நடவாது

2. அப்படி நடப்பதே ஆயினும் தமிழ்நாட்டை நாசாமக்கிதான் அது நடக்கும் என்றால், அப்படி நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை போல கடைந்தெடுத்த சுயநலம் வேறு இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

சீமான் அவர்களால் எங்களுக்கு என்னபாதிப்பு ?

பாஸ்,

இப்பதான் நாற்சந்தியை பார்த்தேன். என்ன பாஸ் இது, எவ்வளவு சொல்லியும் கேளாமை. புது வருசமும் அதுவா.☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 அரசியல் தெளிவின்மையை பயன்படுத்தி கட்டுகதைகள் கூறி தம் விம்பத்தை பெருக்கும் ஒருவர் நிச்சயம் தெளிவை உருவாக்க வல்லவர்தான் 🤣

நான் சீமானை முற்று முழுதாக வரவேற்க/ விரும்ப காரணம்  தமிழ்நாட்டுக்கு,தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல அரசியல் திட்ட கொள்கைகளை சொல்வதால் நடைமுறையில் செய்து காட்டுவதால் மட்டுமே.

  அவரது ஈழம் கொள்கைகள் எனக்கு இரண்டாம் பட்சமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

அருகில் இருந்து அழுத அன்னத்தை ஆத்துல விட்டாச்சுது, அமரரான அன்னத்தை ஆழப்  புதைச்சாச்சுது ........!  🦢 

குட்டி கவிதை மாதிரி இருக்கே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நான் சீமானை முற்று முழுதாக வரவேற்க/ விரும்ப காரணம்  தமிழ்நாட்டுக்கு,தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல அரசியல் திட்ட கொள்கைகளை சொல்வதால் நடைமுறையில் செய்து காட்டுவதால் மட்டுமே.

  அவரது ஈழம் கொள்கைகள் எனக்கு இரண்டாம் பட்சமே.

எனக்கு அவரின் கொள்கையில் ஏற்பில்லாதவை 2 மட்டும். 

1. இனத்தூய்மைவாதம்

2. திராவிட கொள்கையை, இந்துதுவாவுடன் சமன் செய்து இரண்டும் ஒன்றுதான் என நிறுவ முயற்சிப்பது. திராவிட வழி வந்த இயக்கங்களின் தவறை கொள்கையின் தவறாக சித்தரிப்பது, கூட்டமைப்பின் தவறுக்காக தமிழ் தேசிய அரசியல் பிழை என்பதை போன்றது. திராவிட அரசியல் காலமாற்றத்தில் தமிழ் தேசிய அரசியலாக பரிணாமிக்க வேண்டும். என் ஆசையும் அதுதான். அதை செய்ய கூடிய நிலையில் இருந்தும், சீமான் திராவிடம் v தமிழ் தேசியம் என்ற இல்லாத சண்டையை உருவாக்குகிறார். மொழி வழி மாநில பிரிவின் பின், திராவிட அரசியலின் அடுத்த கட்டமே தமிழ் தேசிய அரசியல் என்ற நிலையை சீமான் எடுப்பதற்கு அவருக்கு எந்த தடையும் இல்லை. திமுக, அதிமுகவை ஏன் திக வை எதிர்க கூட திராவிட கொள்கையை எதிர்க்க தேவையில்லை.

இவர்கள் எல்லாம் திராவிட கொள்கையை மடைமாற்றிய திருடர்கள், நான்தான் பெரியாரின் பேரன், திராவிட கொள்கையை இந்த திருடர்களிடம் இருந்து மீட்டு அதன் அடுத்த கட்டமான தமிழ் தேசிய அரசியலாக பரிணமிக்க வைப்பதே எனது அரசியல் என்ற நிலைபாட்டை சீமான் இலகுவாக எடுத்திருக்கலாம். 

ஆனால் அப்படி ஒரு நிலை எடுக்காமல், திராவிட அரசியலை புறம் தள்ளி, தமிழ் நாட்டை பெரியார் நீக்கம் செய்ய நினைப்பதில்தான் - இவர் சங்கிகளின் ஏஜன் என்ற சந்தேக பொறி விழுகிறது. தொடரும் செயல்கள், மாறி மாறி பேசுவது இந்த சந்தேகத்தை வலுவாக்குகிறது. 

இந்த இரு பெரும் ஆபத்துகளோடு (தமிழ் நாட்டில் வாழ்பவர்களை சாதி வாரியாக இப்போ இருப்பதிலும் பெரிதாக பிரித்து விடுவது, பெரியாரை நீக்கி சங்கிகளை வர விடுவது) அவரின் பசுமை கொள்கைகள் உட்பட்ட கொள்கைகளால் வரும் நன்மை, மிக சிறியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னப் பறவையே இனத்தூய்மை காக்குது. இதில தமிழன் மட்டும் எல்லாத்துக்கையும் கலந்து காணாமல் போகனுமாம்.

தமிழன் தமிழ் நாட்டை ஆளனும்.. வந்தவர் எல்லாம் வாழலாம்.. என்பது எப்படி இனத்தூய்மை வாதம் என்று யாருக்காவது புரியுது?!

பிரிட்டனை.. பிரிட்டிஸார் தான் ஆள முடியும். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும். அப்படி இருந்தும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மொழி பேசும்.. பிறமொழியர்கள் தான் தமிழ் நாட்டை திராவிட நாடாக்கி சீரழிச்சிருக்கிறார்கள். தமிழ்நாடு மாத்திரமே.. வேற்றுமொழியாளர்கள் தன்னை ஆள அனுமதித்த ஒரேஒரு மாநிலம். தமிழன் காட்டிய சகிப்புத்தன்மையும்.. பரந்தமனப்பான்மையுமே அவன் இன்று அனுபவிக்கும் அடிமை நிலைக்கு முக்கிய காரணம்.

இதனால் தான் சொன்னார்கள்.. தனக்குப் பின் தான் தானம். முதல் நம் மண்ணை மக்களை கவனிப்பம். அப்புறம் மாற்றானைப் பற்றி யோசிப்பம். 

இதன் பின்னும்.. சீமான் பேசுவது இனத்தூய்மை வாதம் என்போரை என்னென்று அழைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பாஸ்,

இப்பதான் நாற்சந்தியை பார்த்தேன். என்ன பாஸ் இது, எவ்வளவு சொல்லியும் கேளாமை. புது வருசமும் அதுவா.☹️

கலைத்தால்  நல்லதுதானே நிறைய நேரம் கிடைக்கும் பாஸ் இந்த வ்ருடம் வாங்கிய 27 புத்தகம் ஒன்று கூட முடிக்கவில்லை எல்லாம் நுனிப்புல் மேய்ச்சல் தான் .

கோபம் என்பது அவசியம் தமிழனுக்கு தேவை 😁

Link to comment
Share on other sites

5 minutes ago, nedukkalapoovan said:

அன்னைப் பறவையே இனத்தூய்மை காக்குது. இதில தமிழன் மட்டும் எல்லாத்துக்கையும் கலந்து காணாமல் போகனுமாம்.

அன்னப்பறவை இனத்தூய்மை காத்ததா?😀 அது தான் இவுலகில் அன்னம் என்ற பறவையே இன்று இல்லை. தமிழ் இலக்கியங்களில் மாத்திரம்  வாழ்ந்து விட்டு தனது  இனத்தூய்மைவாத முட்டாள்த்தனத்தினால் இவுலகில் இருந்து காலாவதியாகி விட்டது. 

2 minutes ago, பெருமாள் said:

கோபம் என்பது அவசியம் தமிழனுக்கு தேவை 😁

இருக்கலாம் ஆனால் மனிதனுக்கு அது  தேவையில்லை

 மனித முன்னேற்றத்துக்கு அது எதிர் மறையானது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

இருக்கலாம் ஆனால் மனிதனுக்கு அது  தேவையில்லை

 மனித முன்னேற்றத்துக்கு அது எதிர் மறையானது.  

நான்  சொன்னது தமிழர்களுக்கு .

Link to comment
Share on other sites

26 minutes ago, பெருமாள் said:

நான்  சொன்னது தமிழர்களுக்கு .

நான் சொன்னது மனிதர்களுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

British என்பது ஒரு இனம் (ethnicity/race) அல்ல. Nationality.  
English, Welsh, Scottish வட அயர்லாந்தில் Irish. இவைதான் பிரிட்டனில் உள்ள இனங்கள்.

இந்த இனங்களுக்கு வெளியானவரும் பிரதமர் ஆகியுள்ளனர்.

பென்சமீன் டிஸ்ரேலி (1804) பிரித்தானிய பிரதமர் பிறப்பால் யூதன் (ethnic Jew). பின்னர் மதத்தால் கிறிஸ்தவர். ஆனால் இனம் யூதம்தான்.

பொரிஸ் ஜான்சன் - பாட்டன் ஒரு துருக்கியர். 

அது மட்டும் அல்ல, பிரித்தானிய அரச குடும்பத்தில் கூட இப்போதைய ராணியின் தாயார் மட்டுமே Scottish. இதை தவிர்ந்த ராணியின் மூதாதைகள் எல்லாம் ஜேர்மன் இனத்தவர்கள்.

அவர்களின் குடும்ப பெயரே Saxe-Coburg-Gotha 1ம் யுத்த காலத்தில் மன்னர் மக்கள் ஜேர்மனுடன் போர் புரியும் மக்கள் கடுப்பாவார்கள் என்பதால் அரச ஆணை மூலம் இதை Windsor என மாற்றினார்.

ஆகவே பிரிட்டனில் இனதூய்மைவாத அடிப்படையில் தலைமை தேர்வு இல்லை.

குடியுரிமைக்கும் (nationality/citizenship) இன அடையாளத்துக்கும் (ethnicity/race) இடையான வேறுபாட்டை விளங்கி கொண்டால், இதை இலகுவாக விளங்கலாம்.

இவ்வளவு காலம் யூகேயில் வாழ்ந்த பின்னும் British என்பது ஒரு இன அடையாளம் இல்லை என்பதை விளங்க முடியாதவ்ர்களுக்கு, இனத்தூய்மைவாத அரசியல் என்றால் என்ன என்று விளங்காதது வியப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

British என்பது ஒரு இனம் (ethnicity/race) அல்ல. Nationality.  
English, Welsh, Scottish வட அயர்லாந்தில் Irish. இவைதான் பிரிட்டனில் உள்ள இனங்கள்.

இந்த இனங்களுக்கு வெளியானவரும் பிரதமர் ஆகியுள்ளனர்.

பென்சமீன் டிஸ்ரேலி (1804) பிரித்தானிய பிரதமர் பிறப்பால் யூதன் (ethnic Jew). பின்னர் மதத்தால் கிறிஸ்தவர். ஆனால் இனம் யூதம்தான்.

பொரிஸ் ஜான்சன் - பாட்டன் ஒரு துருக்கியர். 

அது மட்டும் அல்ல, பிரித்தானிய அரச குடும்பத்தில் கூட இப்போதைய ராணியின் தாயார் மட்டுமே Scottish. இதை தவிர்ந்த ராணியின் மூதாதைகள் எல்லாம் ஜேர்மன் இனத்தவர்கள்.

அவர்களின் குடும்ப பெயரே Saxe-Coburg-Gotha 1ம் யுத்த காலத்தில் மன்னர் மக்கள் ஜேர்மனுடன் போர் புரியும் மக்கள் கடுப்பாவார்கள் என்பதால் அரச ஆணை மூலம் இதை Windsor என மாற்றினார்.

ஆகவே பிரிட்டனில் இனதூய்மைவாத அடிப்படையில் தலைமை தேர்வு இல்லை.

குடியுரிமைக்கும் (nationality/citizenship) இன அடையாளத்துக்கும் (ethnicity/race) இடையான வேறுபாட்டை விளங்கி கொண்டால், இதை இலகுவாக விளங்கலாம்.

இவ்வளவு காலம் யூகேயில் வாழ்ந்த பின்னும் British என்பது ஒரு இன அடையாளம் இல்லை என்பதை விளங்க முடியாதவ்ர்களுக்கு, இனத்தூய்மைவாத அரசியல் என்றால் என்ன என்று விளங்காதது வியப்பல்ல.

 

1 hour ago, nedukkalapoovan said:

தமிழன் தமிழ் நாட்டை ஆளனும்.. வந்தவர் எல்லாம் வாழலாம்.. என்பது எப்படி இனத்தூய்மை வாதம் என்று யாருக்காவது புரியுது?!

இது சார்ந்து தான் இனத்தூய்மை வாதம் கேள்விப்படுத்தப்பட்டுள்ளது.

1 hour ago, nedukkalapoovan said:

பிரிட்டனை.. பிரிட்டிஸார் தான் ஆள முடியும். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும். அப்படி இருந்தும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மொழி பேசும்.. பிறமொழியர்கள் தான் தமிழ் நாட்டை திராவிட நாடாக்கி சீரழிச்சிருக்கிறார்கள். தமிழ்நாடு மாத்திரமே.. வேற்றுமொழியாளர்கள் தன்னை ஆள அனுமதித்த ஒரேஒரு மாநிலம். தமிழன் காட்டிய சகிப்புத்தன்மையும்.. பரந்தமனப்பான்மையுமே அவன் இன்று அனுபவிக்கும் அடிமை நிலைக்கு முக்கிய காரணம்.

இது தேசியம்.. மற்றும்.. மொழிசார்ந்து பேசப்பட்டுள்ளது.

பிரிட்டிஷார் என்பது அவர்களது தேசியம். அந்த தேசிய அடையாளம் உள்ளவர்கள் மட்டுமே பிரிட்டனை ஆள முடியும். அப்படியே தான் மொழிசார்.. தேசியங்களும் கூட. உதாரணம் பிரஞ்ச். பிரஞ்ச் சாராதோர் பிரான்ஸை ஆள முடியாது. இவற்றை தூய தேசிய வாதம் என்று சொல்ல முடியாது. 

அதேபோல்.. தமிழ்நாட்டை தமிழன் ஆளனும் என்பது மொழித் தேசியம். தமிழருள் பல இனங்களின் கலப்பு உள்ளது. இனத்தூய்மை இங்கு எங்குள்ளது.

இவைதான் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளனவே தவிர..

அது விளங்காமல் அண்ணர் அடிச்சு விடுறார்.. தானே எல்லாம் அறிந்தோன் சபையோன் கணக்கில். இந்தத் தலைக்கனம் தான் தமிழரை மாரடிக்க வைத்துள்ளது மாற்றானிடத்தில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

பொரிஸ் ஜான்சன் - பாட்டன் ஒரு துருக்கியர். 

ஜோன்சனை துருக்கியில் போய் லெக்சன்  கேக்கச்சொல்லுங்கோ அப்ப தெரியும்... உங்கள் தத்துவமும் சிந்தனைகளும்.

எதையும் கதையும் கதையுங்கள். ஆனால் தமிழினத்தின் அடிமடியில் கை வைக்காதீர்கள்.
துரோக கூட்டங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஜோன்சனை துருக்கியில் போய் லெக்சன்  கேக்கச்சொல்லுங்கோ அப்ப தெரியும்... உங்கள் தத்துவமும் சிந்தனைகளும்.

எதையும் கதையும் கதையுங்கள். ஆனால் தமிழினத்தின் அடிமடியில் கை வைக்காதீர்கள்.
துரோக கூட்டங்கள்.

பச்சை முடிந்து போயிற்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அன்னப்பறவை இனத்தூய்மை காத்ததா?😀 அது தான் இவுலகில் அன்னம் என்ற பறவையே இன்று இல்லை. தமிழ் இலக்கியங்களில் மாத்திரம்  வாழ்ந்து விட்டு தனது  இனத்தூய்மைவாத முட்டாள்த்தனத்தினால் இவுலகில் இருந்து காலாவதியாகி விட்டது. 

அப்படின்னா.. மனிதன் குரங்குடன் கலக்கலாமே. கலந்தாலும் வளமான இனமாக முடியாது. முதலில் இனம் என்பதற்கான பதத்தை சரியாக விளங்கிக் கொள்வது அவசியம். 

 மொழித் தேசியம்.. இது தூய்மைவாதம் அல்ல. அந்தந்த மக்களின் தனி மொழிசார் தேசியமாகும். தமிழன் என்பவன்.. ஒரு தமிழ் தேசியம் சார்ந்தவனே அன்றி.. அவன் தனி இனத்தூய்மையானவன் அல்ல. அங்கு இனத்தூய்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாட்டை.. மொழித் தேசிய பூகோளபிராந்தியத்தை அந்த பிராந்திய மொழிசார்ந்தோன் பெரும்பான்மை மொழி சார்ந்தோன் ஆளனும் என்பது ஒரு தூய்மை வாதமே கிடையாது. அதுதான் உலக தேசியங்களின் அடிப்படையே ஆகும். தேசியம் என்பது பல இனங்களின் ஒருமொழித் தோற்றமாகும். 

Link to comment
Share on other sites

27 minutes ago, nedukkalapoovan said:

 

இது சார்ந்து தான் இனத்தூய்மை வாதம் கேள்விப்படுத்தப்பட்டுள்ளது.

இது தேசியம்.. மற்றும்.. மொழிசார்ந்து பேசப்பட்டுள்ளது.

பிரிட்டிஷார் என்பது அவர்களது தேசியம். அந்த தேசிய அடையாளம் உள்ளவர்கள் மட்டுமே பிரிட்டனை ஆள முடியும். அப்படியே தான் மொழிசார்.. தேசியங்களும் கூட. உதாரணம் பிரஞ்ச். பிரஞ்ச் சாராதோர் பிரான்ஸை ஆள முடியாது. இவற்றை தூய தேசிய வாதம் என்று சொல்ல முடியாது. 

பிரெஞ்ச் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சாரகோசி  ஹங்கேரிய இன வம்சாவளி.  Zivilisation அடைந்த மனிதர்கள் இனதூயமைவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள். காட்டுமிரண்டுகள் தான்  இன தூய்மைவாதத்தை ஆதரிப்பவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

பிரெஞ்ச் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சாரகோசி  ஹங்கேரிய இன வம்சாவளி.  Zivilisation அடைந்த மனிதர்கள் இனதூயமைவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள். காட்டுமிரண்டுகள் தான்  இன தூய்மைவாதத்தை ஆதரிப்பவர்கள். 

மீண்டும்.. உங்களை நீங்களே தான் காட்டுமிராண்டி என்று கூறுகிறீர்கள்.

தமிழர்கள்.. ஒரு தேசிய மொழி வழித்தோன்றல்கள். தூய இனமல்ல. உங்கள் உதாரணத்தில் வந்தவர்.. ஹங்கேரிய வம்சாவளி ஆகினும்.. பிரஞ்ச் தேசிய அடையாளம் சுமக்காமல்.. பிரான்ஸ் சனாதிபதி ஆகவில்லை.

அதேபோல் தான்.. தமிழ் நாட்டை தமிழ் தேசியம் சார்ந்த அடையாளம் தாங்கியோன் தான் ஆளனும். திராவிட மாயை போர்த்திக் கொண்டு தமிழ் தேசியத்தின் சார்பற்றவர்கள்.. தமிழ் நாட்டை.. தமிழ் தேசிய இனத்தை ஆளக் கூடாது. இதில் எங்கு இனத்தூய்மை வாதம் உள்ளது..??!

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

ஜோன்சனை துருக்கியில் போய் லெக்சன்  கேக்கச்சொல்லுங்கோ அப்ப தெரியும்... உங்கள் தத்துவமும் சிந்தனைகளும்.

எதையும் கதையும் கதையுங்கள். ஆனால் தமிழினத்தின் அடிமடியில் கை வைக்காதீர்கள்.
துரோக கூட்டங்கள்.

ஜோன்சன் ஏன் துருக்கிக்கு சென்று தேர்தஙில் நிற்க வேண்டும்? கேள்வியில் லொஜிக் இல்லையே? பாட்டன்  துருக்கியர் என்றால் அவர் இங்கிலாந்து வந்து இங்கு  குடியேறியவர். இங்கு  தான் வாழ் முடியும்  இங்கு தான் மக்கள் ஆதரவுடன் நாட்டை ஆளவும் முடியும்.

5 minutes ago, nedukkalapoovan said:

மீண்டும்.. உங்களை நீங்களே தான் காட்டுமிராண்டி என்று கூறுகிறீர்கள்.

தமிழர்கள்.. ஒரு தேசிய மொழி வழித்தோன்றல்கள். தூய இனமல்ல. உங்கள் உதாரணத்தில் வந்தவர்.. ஹங்கேரிய வம்சாவளி ஆகினும்.. பிரஞ்ச் தேசிய அடையாளம் சுமக்காமல்.. பிரான்ஸ் சனாதிபதி ஆகவில்லை.

அதேபோல் தான்.. தமிழ் நாட்டை தமிழ் தேசியம் சார்ந்த அடையாளம் தாங்கியோன் தான் ஆளனும். திராவிட மாயை போர்த்திக் கொண்டு தமிழ் தேசியத்தின் சார்பற்றவர்கள்.. தமிழ் நாட்டை.. தமிழ் தேசிய இனத்தை ஆளக் கூடாது. இதில் எங்கு இனத்தூய்மை வாதம் உள்ளது..??!

தமிழ் நாட்டில் தமிழர்கள் இப்படியான இனத்தூய்மைவாதத்தை ஆதரிக்கவில்லை. சீமான் வகையறாக்கள் மட்டுமே  இனவெறியை கக்குகிறார்கள். மனிதர்களான தமிழரகள் அதை ஆதரிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தேசியம், மொழி வழி தேசியம், மொழிசாரா தேசியம் என்பவற்றை இனத்தோடு போட்டு குழப்பி கொண்டு அந்த குழப்ப நிலையில் இருந்தே மற்றையவர்களுக்கு வகுப்பு எடுத்தலும் நடக்கிறது.

அவர்கள் தாம் பிடித்த காலுக்கு மூன்றைக்கால் எனும் பேர்வழிகள், என்பதால் இந்த பதில் அவர்களுக்கானதல்ல, ஒரு பொது விளக்கத்துக்கு.

பிரிடிஷ் -மொழி சாரா  தேசியம், இனமல்ல. மொழி வழி தேசியமும் அல்ல.

அமெரிக்கன் - மொழி சாரா தேசியம், இனமல்ல. மொழி வழி தேசியமும் அல்ல.

பிரெஞ் - இனம், அதே சமயம் மொழி சார் தேசியம், மொழி சாரா தேசியம் மூன்றும்.

தமிழ் - இனம், மொழிசார் தேசியம். ஆனால்  தமிழர் நிலம் ஒரு நாடாகும் வரை மொழி சாரா தேசியம் இல்லை.

ஒரு காலத்தில் தமிழ் நாடோ, அல்லது இலங்கையின் வட கிழக்கோ தனி நாடாகினால் அப்போது பிரெஞ் போல 3ம்  தமிழுக்கும் பொருந்தும்.

இனி உதாரணமாக இரு நபர்களை பார்ப்போம்

சீமான்

இனம் - தமிழ்

மொழி சார் தேசியம் - தமிழ்

மொழி சாரா தேசியம் - இந்தியன்

ஸ்டாலின்

இனம் - தெலுங்கு (600 களுக்கு முன் ஆந்திராவில் இருந்த வந்த வம்சாவளி) என்று வைப்போம்.

மொழி சார் தேசியம் - தமிழ் (வேறு மொழி ஏதும் பேசுவதாக ஆதாரம் இல்லை, வாழ்கை, படிப்பு முழுவதும் தமிழ் நாட்டில், தமிழ் அல்லது ஆங்கிலத்தில், தமிழ் நாட்டுக்கு வெளியே நினவில் உள்ள மூதாதை யாரும் வாழவில்லை).

மொழி சாரா தேசியம் - இந்தியன்.

இங்கே சீமான் தன்னை தமிழன் என்றும் ஸ்டாலினை தெலுங்கன் என்றும் கூறுவது இன அடிப்படையில் மட்டுமே.

ஆகவேதான் நாங்கள் யாரும் சீமானை தூய-தேசிய அரசியல் செய்வதாக கூறுவதில்லை. அவர் செய்வது இனத்தூய்மை அரசியல். 

மொழி சார் தேசியத்தை, மொழி சாரா தேசியத்தை பிறப்பின் பின் மாற்றலாம் அல்லது மேலதிகமாக பெற்று கொள்ளலாம்.

ஆனால் இன அடையாளத்தை மாற்ற முடியாது. வேணும் என்றால் பிறப்பிலே கலப்பின அடையாளம் பெறலாம்( நடிகர் விஜை தமிழ்-மலையாளி) .

உதாரணமாக,

கோசானுக்கு (இவர் இங்கிலாந்தில் வாழ்பவர்)

இனம் -தமிழ்

மொழி சார் தேசியம் - பிறப்பில் தமிழ், பின்னர் இங்கிலிஷ் (இங்கிலிஷ் இன அடையாளம் வேறு, மொழி சார் தேசியம் வேறு). 

மொழி சாரா தேசியம் - பிரிடிஷ் (முன்னர் சிறி லங்கன்).

மொழி சாரா தேசியமும் குடியுரிமையும் அநேகமாக ஒன்றாய் இருக்கும் ஆனல் எப்போதும் அப்படி இருக்க தேவையில்லை.

யூகேயின் கெட்ட காலம் நாளைக்கு யூகேயின் பிரதமராக கோஷான் வரும் நிலை வந்தால் !

அவரால் வர முடியும். அவர் வர முடியாது என்று வாதாடுபவர்கள் இன அடிபடையில் மட்டுமே வாதாட முடியும். அதுதான் இனத்தூய்மை அரசியல்.

இது கொஞ்சம் சிக்கலான விடயம். இலகுவில் விளங்காது.

ஆனால் சீமான் முன்வைப்பது தேசிய அடையாள அடிப்படையிலான வேறுபாடு அல்ல.

முழுக்க முழுக்க இன அடிப்படையிலான வேறுபாட்டையே.

ஆகவே சீமான் செய்வது இனத்தூய்மைவாத அரசியலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜோன்சனை துருக்கியில் போய் லெக்சன்  கேக்கச்சொல்லுங்கோ அப்ப தெரியும்... உங்கள் தத்துவமும் சிந்தனைகளும்.

எதையும் கதையும் கதையுங்கள். ஆனால் தமிழினத்தின் அடிமடியில் கை வைக்காதீர்கள்.
துரோக கூட்டங்கள்.

அண்ணை உதென்ன நேற்று நல்லா கதைச்சு போட்டு இன்டைக்கு பழையபடி துரோக கூட்டம் அது இது எண்டுறியள். புது வரிசமும் அதுவுமா.

சரி கேள்விக்கு வாறன்:

ஜோன்சனின் பாட்டி துருக்கி போய், அங்கேயே வாழ்ந்து மடிந்து, தந்தையும் அங்கே பிறந்து, ஜோன்சனும் அங்கே பிறந்து, ஜோன்சன் 3 தலைமுறையாக துருக்கிய மொழி சார் தேசியத்தையும், மொழி சாரா தேசியத்தையும் கை கொண்டபின், 

100 ஆண்டுகளுக்கு முன் உன் பாட்டி பிரிட்டனில் இருந்து இங்கே வந்தவர் எனவே நீ துருக்கியின் தலைவராக வர முடியாது என்று சொன்னால் - அது நிச்சயமான இனத்தூய்மைவாதம்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோச் நெடுக்கு நாளை வேலை உங்களை  போல் நம்மளை போல் WORK FROM  ஹோம்  அல்ல  இணைத்த  பாட்டு எப்படி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

கோச் நெடுக்கு நாளை வேலை உங்களை  போல் நம்மளை போல் WORK FROM  ஹோம்  அல்ல  இணைத்த  பாட்டு எப்படி ?

இல்லையெண்டா போல? வந்து எப்படியோ முயலுக்கு மூன்றரைக்கால் என்றுதானே எழுதப்போறார் 🤣.

பாட்டு அந்த மாரி பொஸ். இது சீமானின் மேடையில் முன்பும் பாடின பாட்டுதானே?

ஆனால் இதில் ஆலாபனையள் கூடுதாலாய் சேர்த்து கிடக்கு.

பொஸ் - எனக்கும் தமிழன் எண்ட பெருமை எல்லாம் இருக்கு 🤣. உப்பிடியான பாட்டை கேட்டால் சும்மா முறுக்கும்.

தமிழ் தேசிய அரசியலை அவர் முன் தள்ளுவதிலும், பிரபாகரன் படத்தை, கொடியை தூக்கி பட்டி தொட்டிகளில் பரப்புவதிலும் கூட விருப்பம்தான் (குமாரசாமி அண்ணை தலை சுத்தி விழப்போறார் - ஆனால் நான் இருக்கும் போது அவரை புகழ்ந்துபாடியவர்களைதான் விமர்சித்தேனே ஒழிய, இப்போ அவரை தமிழ்நாட்டில் ஒரு தலைவராக கொண்டு நிறுத்த முயற்சிப்பதில் எனக்கும் ஒப்புத்தான்) . 

பெரியார் கொள்கையை தமிழ் நாட்டில் எதிர்காமல், 600 வருடத்துக்கு முன் ஆந்திராவில் இருந்து வந்த ஒரு தொகை வாக்காளரை பார்த்து கம்பு சுத்தாமல் அரசியலை முன்னெடுத்தால் நான்தான் அவரின் 1ம் ஆதரவாளன்.

 

முன்பே சொன்னது போல மாறி மாறி கதைத்த மிச்சம் எல்லாத்தையும் விட்டு விடலாம். அரசியல்வாதி என்றால் நாக்கு புரளும்தானே.

ஆனால் இந்த ரெண்டு விசயமும், இவர் கையில் எடுக்க தேவையில்லாத விசயங்கள். இதை கையில் எடுப்பது யாருக்கு அனுகூலமா முடியும் என்று பார்த்தால் கோடு நேரே சங்கிகளிடம் போய் நிற்கிறது. அங்கதான் ஆரம்பமாகுது டவுட்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.