Jump to content

கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந்

January 1, 2021
6fe01a7d-be4e-49a6-b1cf-ec5d6db2f099-696

 

தமிழ் மக்களின் வாழ்வியலில் கலைகளுக்கும் சிறப்பான இடமுண்டு. நடனம், நாட்டியம், சிற்பம் செதுக்கல், ஓவியம் என கலைகள் நீண்டு செல்கின்றன. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து இந்த கலைகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆலயங்களை மையமாக கொண்டும் கலைகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஒவ்வொரு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள் இருந்து வந்ததுடன், அவர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை தமது சந்ததிக்கு கொண்டும் சென்றுள்ளனர்.

                கலைஞர்களின் திறமையும், நுணுக்கமும் பலரையும் கவர்ந்துள்ளதுடன், கலைகள் கலைகளுக்காக அல்ல. மக்களுக்காகவே கலைகள் என்ற சிந்தனைக்கு அமைவாக அவர்கள் கலைகளை தமது தொழிலாக கொண்டு வாழ்வாதாரத்தையும் கொண்டு நடத்தியுள்ளனர். மன்னர் ஆட்சிக் காலத்தில் மன்னர்களுக்கு புகழ்பாடி பரிசு பெறுபவர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது கலைகளால் மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதித்து வாழும் கலைஞர்களும் உள்ளனர்.

IMG_1363.jpg

                அந்த வகையில், சிற்பக்கலையில் சிறந்து விளங்கி கோவிட் – 19 தாக்கத்தால் பாதிப்படைந்த வவுனியாவைச் சேர்ந்த ஒரு கலைஞரின் கதையே இது. கடந்த 38 வருடங்களாக சிற்பக்கலை வேலையில் ஈடுபட்டு, தற்போது வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார் 52 வயது அந்தோனி யேசுதாஸ்.

                வவுனியாவின் பின்தங்கிய மீள்குடியேற்ற கிராமமே சுந்தரபுரம். இங்குள்ள மக்களில் பலர் தினக்கூலி  வேலை செய்பவர்களாகவும், சிலர் விவசாயம் செய்பவர்களாகவும் உள்ள நிலையில், கடந்த 38 வருடமாக தனது சொந்த முயற்சியால் தனக்கு தெரிந்த சிற்பத் தொழிலை செய்து, அதன் மூலம் 5 பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு, தமது குடும்பத்தைக் கொண்டு நடத்தி வருகிறார்.

 

IMG_1374.jpg

                கருங்கல்லினைப் பெற்று அதனைக் கொண்டு சிறியளவிலான இயந்திரங்களின் துணையுடன் தெய்வ உருவங்கள், சிலைகள், நினைவு நடுகைக் கற்கள், மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களான அம்மி, ஆட்டுக்கல், கல் உரல் என பலவகையான சிற்பச் செதுக்கல் வேலைகளை செய்து வந்தார். வவுனியா மட்டுமன்றி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, புத்தளம், கிளிநொச்சி என வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கும் தனது கைவண்ணத்தில் சிற்பங்களையும், வீட்டுப் பாவனைப் பொருட்களையும் செதுக்கி கொடுத்து வந்தார்.

                இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஒரு இலட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்ற இவர், தனது மூத்த பெண் பிள்ளைக்கு அந்த வருமானத்தைக் கொண்டு திருமணம் செய்தும் வைத்துள்ளதுடன், நான்கு பிள்ளைகளின் கல்விச் செலவையும், நாளாந்த குடும்ப வாழ்வாதார செலவையும் மேற்கொண்டு வந்தார்.

                இந்நிலையில், கோவிட் – 19 இன் தாக்கத்தால் இவரது சிற்பச் செதுக்கல் வேலைகளும் ஆட்டம் கண்டுள்ளது. ஊரடங்குச்சட்ட அமுல், வெளியிட போக்குவரத்துத் தடை, ஆலய விசேட நிகழ்வுகளுக்கான தடை என்பன காரணமாக சிற்பச் செதுக்கல் வேலைப்பாடுகளுக்கான கேள்வி இல்லாமல் போயுள்ளது. இதனால் வருமானமின்றி தனது நாளாந்த வாழ்வாதாரத்தை போக்குவதற்காக பிள் ளைகளுடன் போராடுகின்றார் இந்த கலைஞர்.

                புலம்பெயர் உறவுகள் பல்வேறு துறையினருக்கும் உதவிகளை வழங்கும் நிலையில், தங்களைப் போன்ற சிற்பக் கலைஞர்களையும் கண்டு கொள்வதுடன், தங்கள் வீட்டு சமையலறையிலும் அடுப்பெரிய உதவ வேண்டும் என்பதே அவரது அங்கலாய்ப்பு. இதுவே இன்று பல சிற்பக்கலைஞர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதே உண்மை.

 

https://www.ilakku.org/?p=38255

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இந்த தொற்றால் பல ஏழைக்குடும்பங்கள் நிலை பரிதாபத்திற்குரியது அரிசி இருந்தால் மரக்கறி இல்லை , கொச்சி இருந்தால் வெங்காயம் இல்லை சில பகுதிகள் முடக்கம் என்பதால் காசு இருந்தும் பொருட் களை வாங்க முடியாத நிலை அது போக பொருட் களை வாங்கவும் பயமாக இருக்கிறது கடைக்காரர்கள் கூட தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்  கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது 

எங்களது வீட்டில் கூட  கொச்சிக்காய் இல்லை கறி சமைக்கப்படுகிறது காரணம் கல்முனை சந்தை முடக்கம் வியாபாரிகள் வேற பரிசோகதர்களால் நிறுத்தப்பட்டுள்ளார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.