Jump to content

சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு.. தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு...  தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்.

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு கூறினார்.

குறித்த ஊடக சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன அழிப்பு யுத்தத்துக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்தான்.

இன்றைய பிரதமர் அன்றைய ஜனாதிபதியாகவும் இன்றைய ஜனாதிபதி  அன்றைய பாதுகாப்பு செயலாளராகவும்  இருந்து அதனை செயற்படுத்தி இருந்தார்கள்.

இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேசளவில் செயற்பட்டு, சர்வதேச விசாரணையை கொண்டு வந்தால் மாத்திரமே இவர்களை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் தமிழர்களை இங்கு வாழவிடப்போவதில்லை.

கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளே தற்போது ஜனநாயக விரோத ஆட்சியை அவர்கள் நடத்துவதற்கு காரணமாக காணப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

 

 

சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு...  தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்.

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தலைமைகளில் ஒருவரில்லையா?

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு...  தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்.

சரியான கூற்று தான். 1948 இலிருந்து 2020 வரையான எல்லா தலைமைகளும் தமிழரின் இன்றைய நிலைக்கு காரணம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தலைமைகளில் ஒருவரில்லையா?

அவர் பாராளுமன்றத்துக்கு வந்து.... இப்ப மூண்டு மாசம் தான்... ஆகுது.
அவருடன்... ஈழ  அரசியலில், 75 வருடமாக கொட்டை  போட்ட..
சம்பந்தன் ஐயாவை... ஒரே, தராசில் நிறுத்துப்  பார்ப்பது,
உங்களுக்கே... நியாயமாய் இருக்கா ⁉️ 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அவர் பாராளுமன்றத்துக்கு வந்து.... இப்ப மூண்டு மாசம் தான்... ஆகுது.
அவருடன்... ஈழ  அரசியலில், 75 வருடமாக கொட்டை  போட்ட..
சம்பந்தன் ஐயாவை... ஒரே, தராசில் நிறுத்துப்  பார்ப்பது,
உங்களுக்கே... நியாயமாய் இருக்கா ⁉️ 🤣

ஓ..... தலைமை இன்னும் சம்பந்தனா? கஜேந்திரனுக்கு வோட்டுப்போட்டது தலைமையை மாற்றுவதற்கு என்று நினைத்து ஏமாந்து போய்விட்டேன். இவர் மணிவண்ணன் போன்றவர்களுடன் சண்டைபிடிக்கும் சின்னப்பொடியன்... சரி ஒரே திராசில் தலைமைகளுடன் சின்னப்பொடியங்களை வைத்து பார்க்க கூடாதுதான். நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே.😃 நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதானே ..அதில் நீங்களும் சேர்த்திதானே....ஒரு மானகரசபையை ஒழுங்காக வைத்திருக்க முடியாதவர்கள் ...என்னத்தைக் கிழிக்கப் போகிறார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

ஓ..... தலைமை இன்னும் சம்பந்தனா? கஜேந்திரனுக்கு வோட்டுப்போட்டது தலைமையை மாற்றுவதற்கு என்று நினைத்து ஏமாந்து போய்விட்டேன். இவர் மணிவண்ணன் போன்றவர்களுடன் சண்டைபிடிக்கும் சின்னப்பொடியன்... சரி ஒரே திராசில் தலைமைகளுடன் சின்னப்பொடியங்களை வைத்து பார்க்க கூடாதுதான். நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே.😃 நன்றி.

குறுக்க நிக்கிற...  கிழட்டு நரியை, ஓரம் கட்டி...
அடுத்த... புது வருசத்துக்குள்ளை, அல்லது தீபாவளிக்குள்ளை...
 தீர்வு தருவார்....  கஜேந்திரன் செல்வராஜா. 👍 

உங்களுக்கு... பொங்கலுக்கு முன், தீர்வு வேணும், எண்டு...
அடம்...  பிடிக்கப், படாது. 

இது... சாணக்கிய அரசியல்,  
நைசாக... சிங்களவனை, மனம் மாற்ற வேணும் கண்டியளோ.... :grin:


இந்த விசயத்தில...  
"சுடுகுது... மடியை, பிடி"  என்று... சொல்லக் கூடாது,  புரிஞ்சுதா... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அவர் பாராளுமன்றத்துக்கு வந்து.... இப்ப மூண்டு மாசம் தான்... ஆகுது.
அவருடன்... ஈழ  அரசியலில், 75 வருடமாக கொட்டை  போட்ட..
சம்பந்தன் ஐயாவை... ஒரே, தராசில் நிறுத்துப்  பார்ப்பது,
உங்களுக்கே... நியாயமாய் இருக்கா ⁉️ 🤣

சரியாகச் சொன்னீர்கள் சிறீ அண்ணா! 

40000 சவப்பெட்டிகளைத் தயார் செய்யுங்கள் என்று சிங்கத்தின் குகைக்குள் நின்றே சவால்விட்ட பின்கதவு கஜே எங்கே!

சிங்கக் கொடியாட்டி வருடாவருடம் தீர்வுவரும் என்று மக்களை மடையராக்கும் சம்பந்தன் எங்கே! 

இருவரையும் ஒரே தராசில் வைக்கக்கூடாது தான்.

வெள்ளை வானில் கடத்தப்பட்ட தன் சகோதரனை கோத்தாவுடன் டீல் பேசி விடுவித்த பாசக்கார பயபுள்ள பின்கதவு கஜே இப்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து 3 மாதங்கள மும்முர முயற்சியில் இருப்பார் என நம்பலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாலி said:

---வெள்ளை வானில் கடத்தப்பட்ட தன் சகோதரனை கோத்தாவுடன் டீல் பேசி விடுவித்த பாசக்கார பயபுள்ள பின்கதவு கஜே இப்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து 3 மாதங்கள மும்முர முயற்சியில் இருப்பார் என நம்பலாம். 

வெள்ளை.... வானில், கடத்தியது... டக்ளஸ் கும்பல்.

வாலி... 
காலி  வீதியில், வெள்ளவத்தையில், 
ஒரு பிரபலமான தமிழ்க் கடையின் முன்... 
பலரும் பார்க்கக் கூடியதாக... 
டக்ளஸ் தேவானந்தாவின்.. அடியாட்களே, கஜனின் சகோதரரை கடத்தினார்கள்.

அதனை...  சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், 
நோர்வே தூதரகமும்... தான், கையாண்டது. 

உங்களுக்கு... விருப்பம் இல்லாதவர்கள், மீது....

கோத்தா, கீத்தா... என்று, 
உண்மைக்கு... புறம்பான செய்திகளை, சொல்வது... அழகல்ல. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளை.... வானில், கடத்தியது... டக்ளஸ் கும்பல்.

வாலி... 
காலி  வீதியில், வெள்ளவத்தையில், 
ஒரு பிரபலமான தமிழ்க் கடையின் முன்... 
பலரும் பார்க்கக் கூடியதாக... 
டக்ளஸ் தேவானந்தாவின்.. அடியாட்களே, கஜனின் சகோதரரை கடத்தினார்கள்.

அதனை...  சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், 
நோர்வே தூதரகமும்... தான், கையாண்டது. 

உங்களுக்கு... விருப்பம் இல்லாதவர்கள், மீது....

கோத்தா, கீத்தா... என்று, 
உண்மைக்கு... புறம்பான செய்திகளை, சொல்வது... அழகல்ல. 

 

இந்த அணுகுமுறை எல்லோர் விடயத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளை.... வானில், கடத்தியது... டக்ளஸ் கும்பல்.

வாலி... 
காலி  வீதியில், வெள்ளவத்தையில், 
ஒரு பிரபலமான தமிழ்க் கடையின் முன்... 
பலரும் பார்க்கக் கூடியதாக... 
டக்ளஸ் தேவானந்தாவின்.. அடியாட்களே, கஜனின் சகோதரரை கடத்தினார்கள்.

அதனை...  சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், 
நோர்வே தூதரகமும்... தான், கையாண்டது. 

உங்களுக்கு... விருப்பம் இல்லாதவர்கள், மீது....

கோத்தா, கீத்தா... என்று, 
உண்மைக்கு... புறம்பான செய்திகளை, சொல்வது... அழகல்ல. 

 

சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், நோர்வே தூதரகமும் கையாளும் அளவுக்கு மேல் மட்டத்தில் கஜேக்கு செல்வாக்கு இருந்திருக்கின்றது. அந்த மேல் மட்டம் எது? சாதாரண மக்களுக்கு இது சாத்தியமானதாக இருந்ததா? 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யச் சொன்ன இவர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாலி said:

இந்த அணுகுமுறை எல்லோர் விடயத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்றதா?

சின்னப் பிள்ளை மாதிரி.... வாதிட வேண்டாம் வாலி.
ஒவ்வொரு அணுகு முறையும்... கால, நேர, சந்தர்ப்ப அளவுகளில் மாறு படலாம். 

கொழும்பு... காலி வீதியில், ஒரு  "வெள்ளை வான்"  ஆள்  கடத்தல் என்பதற்கும்...

ஊரில்... ஒரு, குக்கிராமத்தில்... நடக்கும்,
"வெள்ளை வான்" கடத்தலுக்கும்  பாரிய வித்தியாசம் உள்ளது.

என்ன... இருந்தாலும், நீங்கள்... டக்ளஸ் கடத்தினான், 
என்பதை... ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.....  
என்பது... தெள்ளத்  தெளிவாக தெரிந்த உண்மை.  :grin:

7 minutes ago, வாலி said:

சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், நோர்வே தூதரகமும் கையாளும் அளவுக்கு மேல் மட்டத்தில் கஜேக்கு செல்வாக்கு இருந்திருக்கின்றது. அந்த மேல் மட்டம் எது? சாதாரண மக்களுக்கு இது சாத்தியமானதாக இருந்ததா? 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யச் சொன்ன இவர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? 

மீண்டும்... மேலே, உள்ள... எனது பதிவை வாசிக்கவும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு டக்ளஸ் கடத்தினானா,  சிங்கள ராணுவம் கடத்தியதா அல்லது வேறு எவர் கடத்தினரா என்பது முக்கியமல்ல. ஒரு வெள்ளை வான் கடத்தல் இடம் பெற்றிருக்கின்றது. உடனே நோர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் தலையிட்டிருக்கின்றன. கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் ( விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி) இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இருந்ததா?

உங்கள் கருத்துப்படி டக்ளஸ் வெள்ளவத்தையில் கடத்த நேர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் கோத்தாவிடம் பேசி விடுவித்து இருக்கின்றன. சூப்பர் டீல்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

இங்கு டக்ளஸ் கடத்தினானா,  சிங்கள ராணுவம் கடத்தியதா அல்லது வேறு எவர் கடத்தினரா என்பது முக்கியமல்ல. ஒரு வெள்ளை வான் கடத்தல் இடம் பெற்றிருக்கின்றது. உடனே நோர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் தலையிட்டிருக்கின்றன. கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் ( விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி) இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இருந்ததா?

உங்கள் கருத்துப்படி டக்ளஸ் வெள்ளவத்தையில் கடத்த நேர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் கோத்தாவிடம் பேசி விடுவித்து இருக்கின்றன. சூப்பர் டீல்👍

உங்கள் பாசையில்...  
உங்களுக்கு... 
கோத்தாவுடன், கஜேந்திரன்...
 "டீல்" பண்ணியதற்கான... ஆதாரங்கள் இருந்தால்,
முன் வையுங்களேன்.... நாங்களும், ஒருக்கால் பாப்பம்.    🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

உங்கள் கருத்துப்படி டக்ளஸ் வெள்ளவத்தையில் கடத்த நேர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் கோத்தாவிடம் பேசி விடுவித்து இருக்கின்றன. சூப்பர் டீல்👍

எஜமானின் கட்டளைகளை அடிமைகள் தலைமேற் கொண்டு  செய்யும் போது அந்தக் கட்டளைகளின்  பொறுப்பாளி எஜமானே. ஒட்டுக்குழுக்கள் அனைத்தும் கோத்தாவின் அடிமைகளே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம். கே.  சிவாஜிலிங்கம் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள்!

“தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லர் செல்­வ­ராஜா கஜேந்­தி­ர­னின் தம்பி கடத்­தப்­பட்ட போது கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம் ஓடி­போய் கடத்­தப்­பட்ட சகோ­த­ரனை கஜேந்­தி­ரன் மீட்டு வந்­தார். ஆனால் ஊரான் வீட்­டுப் பிள்­ளை­கள் வெள்ளை வானில் கடத்­தப்­பட்­டார்­கள். அப்­போது கடத்­தப்­பட்­ட­வர்­களை காப்­பற்ற என்ன செய்­தார்­கள்.“

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.