Jump to content

கிராமத்து விடியல்


Recommended Posts

மண்டும் இருள் கலைந்து செங்கொண்டைச் சேவல் சிலிர்த்தெழுந்து கொக்கரக்கோவென்று தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே கறவை மாடும் மடி நிரம்பி அம்மா என்றழைக்கும்!

காக்கை கரையும் கருவானம் வெளுக்கும் பறவையினங்கள் சிறகடிக்கும் வண்டினங்கள் ரீங்காரமடிக்கும் குயிலினங்கள் பாட்டிசைக்கும்!

மேற்கில் மதி மறையும்... கீழ்க் கதிரும் மேலெழும்பும் விளக்குமாற்றோசை தெருவெல்லாம் இரையும் கேணிக் கரையில் வளைக் குடங்கள் கிண்கிணிக்கும் அதிகாலைத் துயிலெழுந்து தையலும் கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலை கட்டி துளசிமாடம் வலம் வரும்!

விண்ணும் மண்ணும் உறவென வாழ்ந்து மண்ணின் சுவாசமே உயிர் சுவாசமாய் நேசித்து கதிரெழு முன் இருளுடையில் நீர் குடைந்திட முத்து மணிகளைப் போல் நெல்மணிகளை விதைத்திட பல மாந்தரும் சோற்றில் கை வைக்க தமை வருத்தி சேற்றில் கை வைத்து ஏறு பூட்டி வயலில் உழவர் பெருமக்காள் இறங்குவார்!

பொழுது மைகரைந்து தெளிவாகப் புலரும் இதமான தென்றல் காற்று முகத்தில் ஓங்கி அறையும் மாணிக்கச் செம்பரிதி நீலக்கடலை விட்டெழும்பும் தோணி வலை வீசி தோய் துறைக்கு மீண்டு வரும்!

சீருடையில் தேன் சிட்டுக்களாக தேனிதழ் குறுநகையுடன் சிட்டென இளையோர் செந்தமிழாம் மால் மொழியை பயில சின்னச் சுட்டு விரல் பிடித்து ஆனா எழுதி உள்ளத்தில் அறிவு விதைக்க இளங் காலையிலே கள்ளமில்லா ஞானச்சாலை செல்லுவார்!

சோர்வுற்ற பொழுதிலேயோர் இயற்கை அழகில் முகிழ்த்து ஈடற்றுப் பொலிந்த உயிர்ப்புடன் கூடிய கிராமத்து அழகிய சீர்வுற்ற விடியலைக் காண்மின் நேர்வுற்ற துயரால் நைவுற்ற உள்ளம் இன்பம் பெறும் கோடி... உளத்தினில் நீடிய இன்பம் துய்த்துப் போம்!

-தமிழ்நிலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரிகள் அழகாக வர்ணிக்க பட்டுள்ளன பாராட்டுக்கள்  👏

Link to comment
Share on other sites

14 hours ago, தமிழ்நிலா said:

சோர்வுற்ற பொழுதிலேயோர் இயற்கை அழகில் முகிழ்த்து ஈடற்றுப் பொலிந்த உயிர்ப்புடன் கூடிய கிராமத்து அழகிய சீர்வுற்ற விடியலைக் காண்மின் நேர்வுற்ற துயரால் நைவுற்ற உள்ளம் இன்பம் பெறும் கோடி... உளத்தினில் நீடிய இன்பம் துய்த்துப் போம்!

தமிழ்நிலா,

கிராமத்தில் பிறந்து எனது பதின்ம வயது முழுவதையும் அங்கேயே கழித்தவன் என்ற வகையில் உங்கள் கவி வரிகள் என்னை 20,  30 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. 🌱

அந்த இன்பநிலை தற்போது அங்கு போனால் கிடைக்குமோ என்பது சந்தேகமே. அந்நாட்கள் மீண்டும் வராதா என ஏங்க வைத்தது உங்கள் கவிதை. என் வாழ் நாளை இப்படி ஒரு கிராமத்தில் நிறைவு செய்தால் நன்றாக இருக்குமே என்றும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். பார்ப்போம். 😊

வரிகளும், வர்ணனைகளும் சிறப்பு. நல்ல நினைவுகளை மீளவும் நினைத்து இன்புறச்செய்த உங்கள் கவிதைக்கு நன்றி தமிழ்நிலா! 🙏😊

இப்படி நல்ல கவிதைகளைத் தாருங்கள். அதில் மூழ்கித் திளைக்க ஆவலாயுள்ளோம்! 

(பிற்குறிப்பு: இந்தக் கவிதைக்குத் தகுந்த வரவேற்பு இங்கு யாழில் இன்னமும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.)

Link to comment
Share on other sites

3 hours ago, மல்லிகை வாசம் said:

தமிழ்நிலா,

கிராமத்தில் பிறந்து எனது பதின்ம வயது முழுவதையும் அங்கேயே கழித்தவன் என்ற வகையில் உங்கள் கவி வரிகள் என்னை 20,  30 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. 🌱

அந்த இன்பநிலை தற்போது அங்கு போனால் கிடைக்குமோ என்பது சந்தேகமே. அந்நாட்கள் மீண்டும் வராதா என ஏங்க வைத்தது உங்கள் கவிதை. என் வாழ் நாளை இப்படி ஒரு கிராமத்தில் நிறைவு செய்தால் நன்றாக இருக்குமே என்றும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். பார்ப்போம். 😊

வரிகளும், வர்ணனைகளும் சிறப்பு. நல்ல நினைவுகளை மீளவும் நினைத்து இன்புறச்செய்த உங்கள் கவிதைக்கு நன்றி தமிழ்நிலா! 🙏😊

இப்படி நல்ல கவிதைகளைத் தாருங்கள். அதில் மூழ்கித் திளைக்க ஆவலாயுள்ளோம்! 

(பிற்குறிப்பு: இந்தக் கவிதைக்குத் தகுந்த வரவேற்பு இங்கு யாழில் இன்னமும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.)

உங்கள் அன்பான அழகான பாராட்டுக்கு மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2021 at 16:16, தமிழ்நிலா said:

சீருடையில் தேன் சிட்டுக்களாக தேனிதழ் குறுநகையுடன் சிட்டென இளையோர் செந்தமிழாம் மால் மொழியை பயில சின்னச் சுட்டு விரல் பிடித்து ஆனா எழுதி உள்ளத்தில் அறிவு விதைக்க இளங் காலையிலே கள்ளமில்லா ஞானச்சாலை செல்லுவார்

தமிழீழ வாழ்வியலை படம் பிடித்து காட்டிய கவிதை பகிர்விற்கு நன்றி .👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகிய கிராமத்தின் காலைப் பொழுது உங்களின் தூரிகையால் துலங்கி நிக்கிறது அதே பொழுதில் எதையோ தொலைத்து விட்டு தவிக்கும் ஏக்கமும் மனதில்......பாராட்டுக்கள் நிலா .....!  👍

Link to comment
Share on other sites

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழ வாழ்வியலை படம் பிடித்து காட்டிய கவிதை பகிர்விற்கு நன்றி .👍

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

On 1/4/2021 at 00:33, நிலாமதி said:

வரிகள் அழகாக வர்ணிக்க பட்டுள்ளன பாராட்டுக்கள்  👏

மிக்க நன்றிகள் நிலாக்கா🙂

On 1/4/2021 at 12:45, suvy said:

ஒரு அழகிய கிராமத்தின் காலைப் பொழுது உங்களின் தூரிகையால் துலங்கி நிக்கிறது அதே பொழுதில் எதையோ தொலைத்து விட்டு தவிக்கும் ஏக்கமும் மனதில்......பாராட்டுக்கள் நிலா .....!  👍

மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.