Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2021]


Recommended Posts

வணக்கம்,

2021 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

எங்கள் மண் பகுதியில் அநாமேதய இணையத் தளம் ஒன்றிலிருந்து இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள் எனும் திரியில் இருந்து களவிதிகளை மீறும் பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி! எனும் திரியில் ஆரோக்கியமற்ற தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் பல நீக்கப்பட்டு திரியும் பூட்டப்பட்டுள்ளது.

களவிதிகளை மதிக்காது கருத்துக்கள் வைப்பவர்கள்மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

'நழுவ விட்ட வாய்ப்புக்களும் இழந்து போன ஜனநாயகமும்.     முறிந்த பனை. பகுதி 1    - அத்தியாயம் 1' எனும் திரி நீக்கப்படுகின்றது.

முறிந்த பனையின் அரசியல் என்பது புலிகளை, அவர்களின் போராட்டத்தினை கண் மூடித்தனமாக எதிர்ப்பவர்களின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும், தமிழர்களின் போராட்ட அரசியலை மலினப்படுத்தும் ஒன்றாகவும் உள் நாட்டிலும், சர்வதேச மட்டத்திலு கட்டமைக்கப்பட்டு விட்ட ஒன்றென்பதாலும் அது யாழ் இணையத்தின் பிரதான போக்கிற்கு எதிரானதாக உள்ளதாலும் நீக்கப்படுகின்றது.

இவ்வாறான சர்ச்சைக்குரிய தொடர்களை, பதிவுகளை வெளியிடுகின்றவர்கள், அவற்றை யாழில் இணைக்க முன் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்வது அவசியம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.

நன்றி

யாழ் நிர்வாகம்

Link to comment
Share on other sites

அநாமேதய இணையத்தளம் ஒன்றில் இருந்து இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும், மூலம் குறிப்பிடப்படாமல் இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும், நிகழ்வும் அகழ்வும் பிரிவில் இணைக்கப்பட்ட தகவல் ஒன்றும் நீக்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites

தமிழக செய்திகள் பிரிவில் இணைக்கப்பட்ட மூலமோ அல்லது ஆதாரமோ இன்றி ஊகத்தின் அடிப்படையில் திரிக்கப்பட்ட திரி அகற்றப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தமிழக தேர்தல் தொடர்பான செய்திகளை இங்கு பதிவிடுகின்றவர்களின் கவனத்துக்கு:

தமிழக தேர்தல் தொடபான செய்திகளினை பதிவிடும் போது, தமிழகத்து பிரதான ஊடகங்களில் இருந்து செய்திகளை பதிவிடவும். பிரதான ஊடகங்களில் வரும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களது பேட்டிகள், தமிழக கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகள், கருத்துக்கணிப்புகள், அரசியல் கட்டுரைகள் என்பனவற்றை ஒரு தரமான பத்திரிகை ஆசிரியருக்கு உரிய கண்ணோட்டத்துடன் நோக்கி பதிவிடவும்.

எக்காரணம் கொண்டும் அரசியல் கட்சிகளின் பிரச்சார உரைகள், பேச்சுகள்,வேட்பாளர்களின் உரைகள், இவை தொடர்பான காணொளிகள், அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தளங்களில் இருந்தும், பினாமி தளங்களில் இருந்தும் வெளியாகும் காணொளிகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். அத்துடன் ஏக வசனத்தில் அமையும் மீம்ஸ்கள், யாழ் களத்தில் சக உறவுகளுக்கிடையிலான கருத்துப்பரிமாற்றங்களின் போது தவிர்க்க வேண்டிய சொற்கள், வர்ணணைகள், கேலிகள் அடங்கிய மீம்ஸ்கள் போன்றனவற்றை முற்றாகத் தவிர்க்கவும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"கொறோனோ கோவிந்தா ஏமாற்று கணக்கியல்" எனும் சதிக்கோட்பாடுகளை வலியுறுத்தும் உண்மைக்கு புறம்பான கட்டுரை நீக்கப்படுகின்றது.

பெருந்தொற்று காலம் ஒன்றில், இலட்சக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கொண்ட , சதிக்கோட்பாடுகளை கொண்ட கட்டுரைகளை தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சில கட்சிசார் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழக தேர்தல் சம்பந்தமாக செய்திகளையும், காணொளிகளையும், பிற பதிவுகளையும் இணைப்பவர்கள் களவிதிகளைக் கடைபிடித்தல் வேண்டும்.


11. அரசியல் கட்சிசார் பதிவுகள்
அரசியல் கட்சிசார் பதிவுகள் தொடர்பான விதிகள்:

  • யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களை, அவர்கள் நம்பும்/ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தளம் என்பதால், அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்றவை எழுத்தில், படங்களில், காணொளிகளில், சமூகவலை இணைப்புக்களில் பதிதல் முற்றாகத் தவிர்க்கப்படல்வேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளங்களில் இருந்தோ, சமூகவலை தளங்களில் இருந்தோ கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தூண்டும் அரசியல் கட்சிகளைப் பற்றிய காத்திரமான விமர்சனங்கள், அவதானிப்புக்கள், கருத்துக்கள் பதியப்படலாம்.

 

Link to comment
Share on other sites

என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு எனும் திரி யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் இருந்து சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

சீமான்  - ஒரு பார்வை எனும் திரி தமிழும் நயமும் பகுதியில் இருந்து செய்தி திரட்டி பகுதிக்கு நகர்த்தப்பட்டு திரியும் மூடப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்) பகுதியில் இருந்து இரண்டு பதிவுகள் நீக்கப்ப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

சீமான் என்ற ஒரு தனி நபர் தமிழினத்திற்கே ஆபத்து! - சுப. உதயகுமார் எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

தமிழக கட்சிகளின் குழாயடி சண்டைகளுக்கு யாழ் கருத்துக்களத்தை பாவித்தல் தவிர்க்கப்படவேண்டும். மேலும், பதிவுக்கான மூலமும் கொடுக்கப்படவில்லை.

தொடர்புடைய களவிதிகள்:

அரசியல் கட்சிசார் பதிவுகள்
அரசியல் கட்சிசார் பதிவுகள் தொடர்பான விதிகள்:

  • யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களை, அவர்கள் நம்பும்/ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தளம் என்பதால், அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்றவை எழுத்தில், படங்களில், காணொளிகளில், சமூகவலை இணைப்புக்களில் பதிதல் முற்றாகத் தவிர்க்கப்படல்வேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளங்களில் இருந்தோ, சமூகவலை தளங்களில் இருந்தோ கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தூண்டும் அரசியல் கட்சிகளைப் பற்றிய காத்திரமான விமர்சனங்கள், அவதானிப்புக்கள், கருத்துக்கள் பதியப்படலாம்.


மூலம்

  • யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகள், பதிவுகள், ஆக்கங்கள் வேறு இடத்திலிருந்து பெறப்பட்டதாயின், பதிவுகளின் அடியில் நேரடி மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்.
  • நேரடி மூல இணைப்பு  பதிவுகளை உறுதிப்படுத்த கட்டாயம் கொடுக்கப்படல் வேண்டும்.

 

Link to comment
Share on other sites

"பிரபாகரன் பட்டினி கிடந்தா அப்படி கொழுகொழுவென அம்சமாக இருந்தார்... கொழுத்துப்போய் பசாரிக்காரி மாதிரி இருக்கியே&: அனந்தியின் பெயரில் பிரபாகரனை கொச்சைப்படுத்தும் சீமான் கட்சியினர்! -" எனும் திரி யாழ் கள விதிகளுக்கு முரணாக அமைந்தமையால் நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

விஞ்ஞான பூர்வமான / மருத்துவ ரீதியிலான எந்த ஆதாரமும் இன்றி சமூகவலைத்தளம் ஒன்றில் இருந்து நலமோடு நாம் வாழ பகுதியில் பகிரப்பட்ட ஒரு திரி நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

'ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'ஏழாம் திகதி... முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

தமிழ் ஈழக் காற்றே - புலம்பெயர் தமிழர்களின் வலியை பதிவு செய்த வைரமுத்து.!  எனும் திரியில்  இருந்து அநாவசியமான கருத்துக்களும் அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது எனும் திரியில் சக கள உறுப்பினர்கள் மீதான பண்பற்ற சொல்லாடல்கள், ஊகங்கள், தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதிகளை மீறாமல் ஆரோக்கியமான கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து எனும் திரியில் இருந்து காணொளி ஒன்றும் அரட்டைக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. 

திரிகளில் அநாவசியமான அரட்டைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

எப்படி டார்லிங்' (Kohomada Sudu) text - பலர் வைத்தியசாலையில் எனும் திரி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து செய்தி திரட்டி பகுதிக்கு நகர்த்தபட்டுள்ளது.

ஊர்ப்புதினம் பகுதியானது முக்கியமான தாயகச் செய்திகளை நம்பகத்தன்மையான இணையத்தளங்களில் இருந்து இணைப்பதற்கான பகுதி என்பதனை தலைப்புக்களை தொடங்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

யாழ் களம் சுய ஆக்கங்களை ஊக்குவிக்கின்றது. எனினும், மஞ்சள் பத்திரிகை பதிவுகள் போன்றவற்றைத் தவிர்த்து கருத்துக்களத்தின் தரத்தினை பேணும், கருத்தாடலை ஊக்குவிக்கும்  ஆக்கங்களையே விரும்புகின்றது.

Link to comment
Share on other sites

'கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை' எனும் திரியில் எழுதப்பட்ட மலினமான கருத்துகள் நீக்கப்பட்டு அவ்வாறான மலினமான கருத்துக்களை ஊக்குவிக்கும் வண்ணம் இடப்பட்ட பச்சை புள்ளிகளும் அகற்றப்பட்டன.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!' என்ற திரியிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட தலைப்பிற்குத் தொடர்பில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுத் திரி பூட்டப்படுகிறது.

Link to comment
Share on other sites

மெய்யெனப் படுவது பகுதியில் இணைக்கப்பட்ட மூலமில்லாத  தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது. எதுவித விஞ்ஞான அடிப்படையுமற்ற தகவல்களை கருத்துக்களத்தில் இணைப்பதை கள உறுபினர்கள் தவிர்க்கவேண்டும்.

 

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.