Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2021]


Recommended Posts

"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" எனும் திரியில் இருந்து அநாவசிய அரட்டைத்தனமான கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து எனும் திரியில் இருந்து தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் தலைப்புக்கு உட்பட்டு கருத்தாடலைப் புரியவேண்டும்.

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்துக்கள், தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதி:

  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  •  துரோகி, பச்சோந்தி, பன்னாடை, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான, அருவருப்பான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
Link to comment
Share on other sites

சமூக வலைத்தளத்தில் இருந்து அநாகரீகமான தலைப்புடன் இணைக்கப்பட்ட, காழ்ப்புணர்வுடன் எழுதப்பட்ட திரி நீக்கப்பட்டது.

பதிவுகளை இணைப்பவர்கள் கண்ட குப்பைகளை இங்கு இணைக்காமல் பொறுப்புணர்வுடன் இணைக்குமாறு வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

அரசியல் பிரவேசம்::ரஜினி மீண்டும் ஆலோசனை.! திரியில் இனத்தை குறிப்பிட்டு அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் எனும் திரியில் இருந்து அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் திரியின் தலைப்புடன் ஒட்டி கருத்தாடல் புரியவேண்டும். சக கள உறவுகளின் அடையாளங்கள், தொழில் பற்றிய ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் முழுமையாக நீக்கப்படும்.

Link to comment
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட லண்டனில் வாழும் யாழ் தமிழர் கப்பம் கேட்டாரா? எனும் திரி நீக்கப்பட்டுள்ளது. 

யாழ் களம் கள உறுப்பினர்கள் சுயமாக ஆக்கங்களை, செய்திகள் பற்றிய அலசல்களை எழுத எப்போதும் ஊக்குவிக்கின்றது. எனினும் இவை கருத்துக்களத்தில் பொருத்தமான பிரிவுகளில் பதியப்படவேண்டும்.

ஊர்ப் புதினம் பகுதி தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகளுக்கான பகுதி. புதிய தலைப்புக்களைத் திறப்பதற்கான இயல்நிலை (default) பகுதி அல்ல. 

இப்பகுதியிலும், பிற செய்திக்கான பகுதிகளிலும் முகநூல் சுவரில் எழுதுவது போன்று   கருத்துக்களை புதிய திரிகளைத் திறந்து பதிவது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். மேலும், புதிய செய்திகளுக்கான திரிகள் நம்பத்தன்மையான ஊடகங்களில் உள்ள செய்தியை மாத்திரமே முதல் பதிவாகக்கொண்டிருக்கவேண்டும். அதனையொட்டிய கருத்துக்கள் இருந்தால், அவற்றினை செய்தியை முழுமையாக இணைத்த பின்னர் கருத்தாகவே பதியலாம். 

இந்நடைமுறை தமிழகச் செய்திகள், உலக நடப்பு போன்ற செய்திப் பிரிவுகளிலும் கடைப்பிடிக்கவேண்டும்.

செய்தி பற்றிய கருத்துக்கான அல்லது அலசலுக்கான மூலச் செய்தி பிறமொழியில் (எ.கா. ஆங்கிலம்) இருந்தால், மூலச் செய்தி முழுமையாக யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கப்பட்டு, அது பற்றிய கருத்தினையும் தமிழில் அப்பகுதியிலேயே வைத்து கருத்தாடலைத் தொடரலாம்.

செய்திகள் பற்றிய பத்திக் குறிப்புக்கள் போன்ற நீண்ட கருத்துக்கள், ஆய்வுகள், அலசல்கள் நிகழ்வும் அகழ்வும் பகுதியில் மாத்திரமே பதியப்படவேண்டும்.

இவையெல்லாம் களவிதிகளிலும், ஒவ்வொரு கருத்துக்கள பிரிவுகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், முகநூலையும், யூடியூப் காணொளிகளையும் இணைப்பது பற்றி விதிகள் தெளிவாக உள்ளன. காணொளிகளின் உள்ளடக்கங்களைக் குறிப்பிடாமலும், வெளியிணைப்புக்களை மாத்திரம் காட்டும் பதிவுகளும், செம்பாலை (செய்திக்களம்) பகுதியில் உள்ள பிரிவுகளில் இணைக்கப்பட்டால் அவை நீக்கப்படும். இவை கள உறுப்பினர்களின் சுயமான காணொளிகளாக இருக்கும்பட்சத்தில் மாத்திரமே அனுமதிக்கப்படும்.

எனவே, புதிய திரிகளை திறக்க்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும்.

 

Link to comment
Share on other sites

அல்பமான பெண்கள் யார் தெரியுமா? எனும் திரி யாழ் இணையத்தின் தரத்துக்கு ஒவ்வாத காரணத்தினால் நீக்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'சிறையில் இருந்து வந்த... சாட்டை துரைமுருகனின், காணொளி' என்ற தலைப்பிலிருந்து அனாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.' என்ற திரி பூட்டப்படுகிறது.

Link to comment
Share on other sites

எந்தவொரு விளக்கமுல் இல்லாமல் காணொளிகள் இணைக்கப்பட்ட இரு திரிகள் நீக்கப்பட்டன. 

காணொளிகள் பற்றிய விதிகள்:
 

6. காணொளிகள்
அதிக பார்வையாளர்களைச் சென்றடையும் வண்ணம் காணொளிப் பதிவுகளின் பெருக்கம் அதிகரித்து வருவதனை யாழ் களம் வரவேற்று உள்வாங்குகின்றது.  யாழ் கருத்துக்களத்தில் ஆரம்பிக்கப்படும் திரிகளில், பதியப்படும் கருத்துக்களில், ஆக்கங்களில் இணைக்கப்படும் காணொளிகள் தொடர்பான விதிகள்:

  • காணொளிகளை இணைக்கும் கள உறுப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
  • காணொளிகளை முழுமையாகப் பார்த்து அவை யாழ் களவிதிகளை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இணைத்தல் வேண்டும்.
  • காணொளிகளை முழுமையாகப் பார்த்து மட்டுறுத்துவது நிர்வாகத்தினருக்கு நடைமுறைச் சாத்தியமில்லை என்பதனால்  இணைக்கும் கள உறுப்பினரே அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
  • இணைக்கப்படும் காணொளிகள் கருத்தாடலைத் தூண்டுவதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும், பயனுள்ள தகவல்களை பார்வையாளருக்குத் தருவதாகவும் இருத்தல்வேண்டும்.
  • காணொளிகளை இணைக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகக் கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும். கள உறுப்பினர்களின் சொந்தமான காணொளிகளுக்கு இந்த விதி தளர்த்தப்படுகின்றது. அத்துடன் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் இணைக்கப்படும் காணொளிகளுக்கும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது. ஆயினும் திரியொன்றில் (குறிப்பாகப் பொழுதுபோக்குத் திரிகளில்)  சிறுகால இடைவெளியில்  அளவுக்கதிகமாக காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலும் அறிய

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உள்ளடக்கம் பற்றிய எந்தவிதமான விளக்கமும் இல்லாமல் காணொளிகள் இணைக்கப்பட்டு இருந்த ஒரு திரி நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இறந்த ஒருவரை மலினப்படுத்தி ஆதாரம் இன்றி, செவிவழித் தகவலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட "டாக்டர்...தண்ணியப் போட்டால்... தண்ணீரில மிதக்க வேண்டுமா?..." திரி நீக்கப்படுகின்றது. 

செய்திகளை இணைப்பவர்கள் யாழ் இணையம் கொசிப் தளமும் அல்ல, நாலம்தர டப்லொயிட் தளமும் அல்ல என்பதை நினைவில் கொள்க. ஒருவரை பற்றிய,அவரது இயல்பைப் பற்றி எழுதும் போது பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் எழுதுதல் அவசியம் என்பதையும் கருத்தில் கொள்க.

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் திறக்கப்பட்ட 'திரி ஒன்றினை மூடுதல்' என்ற திரி மூடப்படுகிறது. இது தொடர்பான விளக்கம் இதில் குறிப்பிட்ட திரியில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரம் தேவையானால் நிர்வாகத்திடம் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! எனும் திரியிலிருந்து சக உறுப்பினர்களை சீண்டும் வகையில் பதியப்பட்ட கருத்துக்களும், பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

தலைப்புக்கு சம்பந்தமில்லாத அநாவசிய உரையாடல்களை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் கருத்துக்களமானது ஆரோக்கியமான கருத்தாடலையே விரும்புகின்றது. எனினும் அண்மைக்காலமாக கருத்துக்களத்தில் திரிகளில் பல அநாவசியமான கருத்தாடல்கள் உருவாகி அவை தனிமனித தாக்குதல்களாகவும், நையாண்டிகளாகவும் மாறி வருவதை அவதானித்துள்ளோம்.

பலதடவைகள் அறிவுறுத்தியும், நிர்வாகத்தின் அறிவித்தல்களை சட்டைசெய்யாதோர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முக்கியமாக கல்வி, தொழில், உடற்தோற்றம், சமூகநிலை போன்றவற்றை சுட்டி இழிவுபடுத்துவதும், நையாண்டிகள் செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இதனைக் கவனத்தில்கொண்டு, அநாவசிய உரையாடல்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் ஈடுபடுமாறு கள உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

 தொடர்புடைய விதிகளில் சில: 

 

 

  • சக கருத்தாளரின் தனியுரிமைகளை மீறும் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடற்தோற்றம், கல்வி, சமூகநிலை, பால்நிலை, இன்ன பிற நிலைகளைச் சுட்டி  பண்பற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், நையாண்டி செய்வதும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும். கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

போதியளவு கருத்தாடியமையாலும் கருத்தாளார்கள் மீதான சேறடிப்புகளாக திரி மாற்றமடைந்து செல்வதனாலும் 'கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்' எனும் திரி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி எனும் திரியில் கருத்து ஒன்றில் இணைக்கப்பட்ட மலினமான மீமி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அதையொட்டிய கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

நிர்வாக உறுப்பினர்கள் சகல கருத்துக்களையும் கவனிப்பதில்லை. எனவே, களவிதிகளுக்கு முரணானதாகக் காணப்படுபவற்றை முறைப்பாட்டு (report) முறைமூலம் நிர்வாகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தினால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன் எனும் திரியில் சக கள உறுப்பினரை பண்பற்ற முறையில் சுட்டும் சொல்லாடல் உள்ள கருத்தும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்பான களவிதிகள்:

  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.

 

 

 

Link to comment
Share on other sites

செய்தி திரட்டியில் பதியப்பட்ட கொசிப் செய்தி ஒன்று நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

செய்திகளுக்கு பின்னூட்டமாக கருத்துகளுக்கு பதிலாக மீம்ஸ்களை இணைப்பதை முற்றாகத் தவிர்க்கவும். அத்துடன் ஒருமையில் அழைக்கும், கள விதிகளுக்கு முரணாண சொற்றாடல்கள் இருக்கும் மீம்ஸ்களை யாழில் எந்தப்பகுதியிலும் இணைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். மீறி இணைக்கப்படும் மீம்ஸ்கள் நீக்கப்படுவதுடன், அவ்வாறு நீக்கப்படுவதை கண்ட பின்னும் மீண்டும் மீண்டும் இணைப்பவர்களது கருத்துகள் மட்டுறுத்துனரின் பார்வைக்குட்படுத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

'தமிழ் இனமா? மொழியா?' என்ற தலைப்பில் சக கருத்தாளைரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம் எனும் திரியில் சக கள உறுப்பினர்களை சீண்டும் ஆரோக்கியமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காத கள உறுப்பினர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

அநாமதேய இணையத்தளத்தில் இருந்து ஊர் புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று மட்டுறுத்துநர் பார்வைக்கு நகர்த்தப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தமிழக கட்சிகளுக்கு இடையிலான குடுமிபிடி சண்டைகள் தொடர்பான செய்தி ஒன்று நீக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையிலான இத்தகைய சண்டைகள் தொடர்பான செய்திகளை/ தரக்குறைவான மீம்ஸ்களை இணைப்பதை தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.