Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2021]


Recommended Posts

"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" எனும் திரியில் இருந்து அநாவசிய அரட்டைத்தனமான கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து எனும் திரியில் இருந்து தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் தலைப்புக்கு உட்பட்டு கருத்தாடலைப் புரியவேண்டும்.

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்துக்கள், தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதி:

  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  •  துரோகி, பச்சோந்தி, பன்னாடை, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான, அருவருப்பான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
Link to comment
Share on other sites

சமூக வலைத்தளத்தில் இருந்து அநாகரீகமான தலைப்புடன் இணைக்கப்பட்ட, காழ்ப்புணர்வுடன் எழுதப்பட்ட திரி நீக்கப்பட்டது.

பதிவுகளை இணைப்பவர்கள் கண்ட குப்பைகளை இங்கு இணைக்காமல் பொறுப்புணர்வுடன் இணைக்குமாறு வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

அரசியல் பிரவேசம்::ரஜினி மீண்டும் ஆலோசனை.! திரியில் இனத்தை குறிப்பிட்டு அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் எனும் திரியில் இருந்து அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் திரியின் தலைப்புடன் ஒட்டி கருத்தாடல் புரியவேண்டும். சக கள உறவுகளின் அடையாளங்கள், தொழில் பற்றிய ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் முழுமையாக நீக்கப்படும்.

Link to comment
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட லண்டனில் வாழும் யாழ் தமிழர் கப்பம் கேட்டாரா? எனும் திரி நீக்கப்பட்டுள்ளது. 

யாழ் களம் கள உறுப்பினர்கள் சுயமாக ஆக்கங்களை, செய்திகள் பற்றிய அலசல்களை எழுத எப்போதும் ஊக்குவிக்கின்றது. எனினும் இவை கருத்துக்களத்தில் பொருத்தமான பிரிவுகளில் பதியப்படவேண்டும்.

ஊர்ப் புதினம் பகுதி தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகளுக்கான பகுதி. புதிய தலைப்புக்களைத் திறப்பதற்கான இயல்நிலை (default) பகுதி அல்ல. 

இப்பகுதியிலும், பிற செய்திக்கான பகுதிகளிலும் முகநூல் சுவரில் எழுதுவது போன்று   கருத்துக்களை புதிய திரிகளைத் திறந்து பதிவது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். மேலும், புதிய செய்திகளுக்கான திரிகள் நம்பத்தன்மையான ஊடகங்களில் உள்ள செய்தியை மாத்திரமே முதல் பதிவாகக்கொண்டிருக்கவேண்டும். அதனையொட்டிய கருத்துக்கள் இருந்தால், அவற்றினை செய்தியை முழுமையாக இணைத்த பின்னர் கருத்தாகவே பதியலாம். 

இந்நடைமுறை தமிழகச் செய்திகள், உலக நடப்பு போன்ற செய்திப் பிரிவுகளிலும் கடைப்பிடிக்கவேண்டும்.

செய்தி பற்றிய கருத்துக்கான அல்லது அலசலுக்கான மூலச் செய்தி பிறமொழியில் (எ.கா. ஆங்கிலம்) இருந்தால், மூலச் செய்தி முழுமையாக யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கப்பட்டு, அது பற்றிய கருத்தினையும் தமிழில் அப்பகுதியிலேயே வைத்து கருத்தாடலைத் தொடரலாம்.

செய்திகள் பற்றிய பத்திக் குறிப்புக்கள் போன்ற நீண்ட கருத்துக்கள், ஆய்வுகள், அலசல்கள் நிகழ்வும் அகழ்வும் பகுதியில் மாத்திரமே பதியப்படவேண்டும்.

இவையெல்லாம் களவிதிகளிலும், ஒவ்வொரு கருத்துக்கள பிரிவுகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், முகநூலையும், யூடியூப் காணொளிகளையும் இணைப்பது பற்றி விதிகள் தெளிவாக உள்ளன. காணொளிகளின் உள்ளடக்கங்களைக் குறிப்பிடாமலும், வெளியிணைப்புக்களை மாத்திரம் காட்டும் பதிவுகளும், செம்பாலை (செய்திக்களம்) பகுதியில் உள்ள பிரிவுகளில் இணைக்கப்பட்டால் அவை நீக்கப்படும். இவை கள உறுப்பினர்களின் சுயமான காணொளிகளாக இருக்கும்பட்சத்தில் மாத்திரமே அனுமதிக்கப்படும்.

எனவே, புதிய திரிகளை திறக்க்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும்.

 

Link to comment
Share on other sites

அல்பமான பெண்கள் யார் தெரியுமா? எனும் திரி யாழ் இணையத்தின் தரத்துக்கு ஒவ்வாத காரணத்தினால் நீக்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'சிறையில் இருந்து வந்த... சாட்டை துரைமுருகனின், காணொளி' என்ற தலைப்பிலிருந்து அனாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.' என்ற திரி பூட்டப்படுகிறது.

Link to comment
Share on other sites

எந்தவொரு விளக்கமுல் இல்லாமல் காணொளிகள் இணைக்கப்பட்ட இரு திரிகள் நீக்கப்பட்டன. 

காணொளிகள் பற்றிய விதிகள்:
 

6. காணொளிகள்
அதிக பார்வையாளர்களைச் சென்றடையும் வண்ணம் காணொளிப் பதிவுகளின் பெருக்கம் அதிகரித்து வருவதனை யாழ் களம் வரவேற்று உள்வாங்குகின்றது.  யாழ் கருத்துக்களத்தில் ஆரம்பிக்கப்படும் திரிகளில், பதியப்படும் கருத்துக்களில், ஆக்கங்களில் இணைக்கப்படும் காணொளிகள் தொடர்பான விதிகள்:

  • காணொளிகளை இணைக்கும் கள உறுப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
  • காணொளிகளை முழுமையாகப் பார்த்து அவை யாழ் களவிதிகளை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இணைத்தல் வேண்டும்.
  • காணொளிகளை முழுமையாகப் பார்த்து மட்டுறுத்துவது நிர்வாகத்தினருக்கு நடைமுறைச் சாத்தியமில்லை என்பதனால்  இணைக்கும் கள உறுப்பினரே அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
  • இணைக்கப்படும் காணொளிகள் கருத்தாடலைத் தூண்டுவதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும், பயனுள்ள தகவல்களை பார்வையாளருக்குத் தருவதாகவும் இருத்தல்வேண்டும்.
  • காணொளிகளை இணைக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகக் கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும். கள உறுப்பினர்களின் சொந்தமான காணொளிகளுக்கு இந்த விதி தளர்த்தப்படுகின்றது. அத்துடன் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் இணைக்கப்படும் காணொளிகளுக்கும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது. ஆயினும் திரியொன்றில் (குறிப்பாகப் பொழுதுபோக்குத் திரிகளில்)  சிறுகால இடைவெளியில்  அளவுக்கதிகமாக காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலும் அறிய

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உள்ளடக்கம் பற்றிய எந்தவிதமான விளக்கமும் இல்லாமல் காணொளிகள் இணைக்கப்பட்டு இருந்த ஒரு திரி நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இறந்த ஒருவரை மலினப்படுத்தி ஆதாரம் இன்றி, செவிவழித் தகவலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட "டாக்டர்...தண்ணியப் போட்டால்... தண்ணீரில மிதக்க வேண்டுமா?..." திரி நீக்கப்படுகின்றது. 

செய்திகளை இணைப்பவர்கள் யாழ் இணையம் கொசிப் தளமும் அல்ல, நாலம்தர டப்லொயிட் தளமும் அல்ல என்பதை நினைவில் கொள்க. ஒருவரை பற்றிய,அவரது இயல்பைப் பற்றி எழுதும் போது பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் எழுதுதல் அவசியம் என்பதையும் கருத்தில் கொள்க.

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் திறக்கப்பட்ட 'திரி ஒன்றினை மூடுதல்' என்ற திரி மூடப்படுகிறது. இது தொடர்பான விளக்கம் இதில் குறிப்பிட்ட திரியில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரம் தேவையானால் நிர்வாகத்திடம் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! எனும் திரியிலிருந்து சக உறுப்பினர்களை சீண்டும் வகையில் பதியப்பட்ட கருத்துக்களும், பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

தலைப்புக்கு சம்பந்தமில்லாத அநாவசிய உரையாடல்களை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் கருத்துக்களமானது ஆரோக்கியமான கருத்தாடலையே விரும்புகின்றது. எனினும் அண்மைக்காலமாக கருத்துக்களத்தில் திரிகளில் பல அநாவசியமான கருத்தாடல்கள் உருவாகி அவை தனிமனித தாக்குதல்களாகவும், நையாண்டிகளாகவும் மாறி வருவதை அவதானித்துள்ளோம்.

பலதடவைகள் அறிவுறுத்தியும், நிர்வாகத்தின் அறிவித்தல்களை சட்டைசெய்யாதோர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முக்கியமாக கல்வி, தொழில், உடற்தோற்றம், சமூகநிலை போன்றவற்றை சுட்டி இழிவுபடுத்துவதும், நையாண்டிகள் செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இதனைக் கவனத்தில்கொண்டு, அநாவசிய உரையாடல்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் ஈடுபடுமாறு கள உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

 தொடர்புடைய விதிகளில் சில: 

 

 

  • சக கருத்தாளரின் தனியுரிமைகளை மீறும் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடற்தோற்றம், கல்வி, சமூகநிலை, பால்நிலை, இன்ன பிற நிலைகளைச் சுட்டி  பண்பற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், நையாண்டி செய்வதும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும். கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

போதியளவு கருத்தாடியமையாலும் கருத்தாளார்கள் மீதான சேறடிப்புகளாக திரி மாற்றமடைந்து செல்வதனாலும் 'கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்' எனும் திரி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி எனும் திரியில் கருத்து ஒன்றில் இணைக்கப்பட்ட மலினமான மீமி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அதையொட்டிய கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

நிர்வாக உறுப்பினர்கள் சகல கருத்துக்களையும் கவனிப்பதில்லை. எனவே, களவிதிகளுக்கு முரணானதாகக் காணப்படுபவற்றை முறைப்பாட்டு (report) முறைமூலம் நிர்வாகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தினால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன் எனும் திரியில் சக கள உறுப்பினரை பண்பற்ற முறையில் சுட்டும் சொல்லாடல் உள்ள கருத்தும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்பான களவிதிகள்:

  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.

 

 

 

Link to comment
Share on other sites

செய்தி திரட்டியில் பதியப்பட்ட கொசிப் செய்தி ஒன்று நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

செய்திகளுக்கு பின்னூட்டமாக கருத்துகளுக்கு பதிலாக மீம்ஸ்களை இணைப்பதை முற்றாகத் தவிர்க்கவும். அத்துடன் ஒருமையில் அழைக்கும், கள விதிகளுக்கு முரணாண சொற்றாடல்கள் இருக்கும் மீம்ஸ்களை யாழில் எந்தப்பகுதியிலும் இணைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். மீறி இணைக்கப்படும் மீம்ஸ்கள் நீக்கப்படுவதுடன், அவ்வாறு நீக்கப்படுவதை கண்ட பின்னும் மீண்டும் மீண்டும் இணைப்பவர்களது கருத்துகள் மட்டுறுத்துனரின் பார்வைக்குட்படுத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

'தமிழ் இனமா? மொழியா?' என்ற தலைப்பில் சக கருத்தாளைரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம் எனும் திரியில் சக கள உறுப்பினர்களை சீண்டும் ஆரோக்கியமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காத கள உறுப்பினர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

அநாமதேய இணையத்தளத்தில் இருந்து ஊர் புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று மட்டுறுத்துநர் பார்வைக்கு நகர்த்தப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தமிழக கட்சிகளுக்கு இடையிலான குடுமிபிடி சண்டைகள் தொடர்பான செய்தி ஒன்று நீக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையிலான இத்தகைய சண்டைகள் தொடர்பான செய்திகளை/ தரக்குறைவான மீம்ஸ்களை இணைப்பதை தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.