Jump to content

ஆன்லைன் லோன் மோசடி; தொடர்ந்து கைதாகும் சீனர்கள்! - பின்னணி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் லோன் மோசடி; தொடர்ந்து கைதாகும் சீனர்கள்! - பின்னணி என்ன?

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடி ( Representational Image )

ஆன்லைன் லோன் ஆப் மூலம் மோசடி செய்ததாக சீனாவைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், " `எம் ரூபி’ என்ற ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலமாகக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தேன். அந்த ஆப்பில் எனது ஆதார், பான் கார்ட் மற்றும் புகைப்படம் போன்ற விவரங்களைப் பதிவேற்றம் செய்து, 5,000 ரூபாய்க் கடன் பெற்றேன். ஒரு வாரத்துக்குப் பின்னர் 1,500 ரூபாய் வட்டி பிடித்த பிறகு 3,500 ரூபாய் எனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் 5,000 ரூபாயைக் கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஆன்லைன் லோன் ஆப்
 
ஆன்லைன் லோன் ஆப்

அந்தக் கடனை கட்ட இன்னொரு ஆப்பில் கடன் பெற்றேன். இப்படி 40 ஆன்லைன் ஆப்களில் கடன் பெற்றிருந்தேன். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கட்டாததால் 100 ரூபாய்க்கு இரண்டு சதவிகித வட்டி கூட்டிச் செல்லப்பட்டது. அந்த நிறுவனத்திலிருந்து தொடர்ந்து பல அழைப்புகள் வந்த வண்ணம் இருத்தன. ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளில் பேசியும், அவதூறாகப் பேசி மிரட்டி குறுஞ்செய்திகளும் வருகின்றன. தொடர்ந்து என் நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, சைபர் கிரைம் பிரிவு, சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவினர் விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையில் புகார்தாரருக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணையை நடத்தினர். இதில், `ட்ரூ கின்டில் டெக்னாலஜி பிரைவேட் லிமிடட்’ என்ற பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மிரட்டி வந்தது தெரியவந்தது. இந்த நிறுவனத்தை பிரமோதா (27) மற்றும் பவான்(28) என்பவர்கள் நடத்திவருவதும். இந்த கால்சென்டர் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த இருவரும் சீனாவைச் சேர்ந்த கும்பலுடன் சேர்ந்து பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீனாவில் உருவாக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட ஆன்லைன் கடன் வழங்கும் செயலி மூலம் தமிழகம், ஆந்திரா, கர்நாடக போன்ற பல மாநிலங்களில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 5,000 முதல் 50,000 ரூபாய் வரை கடன் வழங்கி, அதிக வட்டி கட்டச் சொல்லி மிரட்டி, 300 கோடிக்கும் மேல் கடன் வசூலித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, சீனாவைச் சேர்ந்த ஜீ யோ யமாவோ, வூ யானுலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து லேப்டாப், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

சீனாவைச் சேர்ந்த ஹாங்க் இதற்கு மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. சீனாவிலிருந்து தினமும் இந்தியாவில் உள்ள அவரின் குழுவுக்கு உத்தரவுகளைக் கொடுப்பார். அந்த குழுவினர் அவருக்குக் கீழே உள்ளவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பார்கள். அதன்படி கால் சென்டரில் பணிபுரிபவர்கள் வேலையை மேற்கொள்வார்களாம். ஒரு நாளைக்கு ஒரு ஊழியர் குறைந்தது பத்து பேருக்காவது கடன் வழங்கவேண்டுமாம். இல்லை என்றால் அந்த ஊழியர் வார இறுதியில் பணியை விட்டு நீக்கப்படுவார்களாம். இந்த தொழில் மூலம் வரும் வருமானத்தைப் பிரபல கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பலுக்குப் பின்னால் இருப்பது யார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மோசடி
 
மோசடி

கடன் செயலி இன்ஸ்டால் செய்யும் போது வழங்கப்படும் தகவல்கள் மூலம், அந்த செயலி பயன்படுத்துபவர்களின் மொபைல்களில் உள்ள தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களை எடுத்துவிடுகிறார்கள். மேலும் கடன் வழங்கும் போது கொடுக்கும் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கி விவரங்களைக் கொண்டு வங்கிக் கணக்கை முடக்கி விடுவதாக மிரட்டியும் பணம் வசூல் செய்து வந்துள்ளார்.

புகார் அடிப்படையில் விரைந்து செயலாற்றி குற்றவாளிகளைக் கைது செய்த காவலர்களைசென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்துப் பாராட்டிப் பரிசளித்தார். இதுகுறித்து மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், ``கூகுள் பிளே ஸ்டோரில் 50-க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகள் உள்ளன. அதில் பெரும்பாலான செயலிகள் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவைதான். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 'My Csah, Aurora loan, Quick loan, D money, Rapid loan, Eazy cash, New rupee, Rupee loan' போன்ற 25-க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் ஆப்புகளை உருவாகியுள்ளனர். இந்த ஆப்கள் மூலம் குறைந்த வட்டி என்று ஆசைவார்த்தை காட்டி, கடன் வழங்கி பின்னர் மிரட்டிப் பணம் வசூல் செய்து வந்துள்ளனர்" என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட சீனர்கள்
 
கைது செய்யப்பட்ட சீனர்கள்

தொடர்ந்து பேசிய அவர், ``கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், சீனாவைச் சேர்ந்த ஹாங்க் மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட இரண்டு சீனர்களின் பாஸ்போர்ட் காலாவதியாகியும் அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், செல்போன் ஆகியவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை பத்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளோம். சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கும் பணிகளும் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

 

இன்னொரு சம்பவம்:

தெலங்கானா மாநிலத்தில் இதேபோன்ற ஒரு புகார் போலீஸில் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குபேவோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்ற கால் சென்டர் நிறுவனத்தில் இந்த மோசடி நடைபெற்று வந்தது தெரியவந்தது. மேலும் இந்த நிறுவனம் 11 கடன் வழங்கும் செயலிகளை வடிவமைத்து, அதன் மூலம் கடன் வழங்கி, பின்னர் மிரட்டி வசூல் செய்து வந்தது. இதுதொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர்.

தமிழ்நாடு காவல்துறை
 
தமிழ்நாடு காவல்துறை

தமிழகம், தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட கும்பலுக்கு இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய தெலங்கானா குற்ற வழக்கு விசாரணை குறித்த தகவல்களையும் தமிழக போலீஸார் கேட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும். குறைந்த வட்டி என்று ஆசைகாட்டி மோசடி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படியும், தெரியாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

https://www.vikatan.com/social-affairs/crime/online-loan-app-fraud-four-people-including-two-chinese-arrested

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.