Jump to content

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்னப்பா இது மேட்டுகுடி லீடர் நீங்களே உப்பிடி செய்யலாமோ🤣.

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

large.5B45524F-6A6F-467E-B9A0-FD08F058E8C3.jpeg.a8bf422a38f133324086e5a7adc573fe.jpeg

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இன்று முதல் லண்டனில் அஸ்ரா என்ற ஒரு மருந்து பாவனைக்கு வருகிறதாக அங்குள்ள உறவினர் முலமாக அறிந்தேன்..இது ஒரு ஒக்ஸ்போரட் யூனியின் தயாரிப்பாகும்..பைசர் போன்று அல்லாது சாதரணமான ஒன்று எனவும் அறியக் கூடியதாக இருக்கிறது.பார்க்கலாம்.

அக்கா,
இந்த ஊசி பாவனைக்கு இன்று வந்தாலும் இது பற்றிய அறிவிப்பு கடந்த 30 திகதியே வெளியாகி விட்டது.

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும்.

இந்த முறையின் பரீட்சார்த்த்தத்தின் போது 94-95% சதவீதம் ஆட்களுக்கு நோயெதிர்ப்பு ஏற்பட்டதாக அறியப்பட்டது.

பைசர் வைரஸ் அதி குறைந்த வெப்ப நிலையிலும், மொர்டேர்னா அதை விட கொஞ்சம் குறைந்த வெப்ப நிலையிலும் பேணப்பட வேண்டும்.

ஒன்க்ஸ்போர்ட்/அஸ்டிரா செனக்கா வக்சீன் வெக்டர் தொழில் நுட்பத்தில் தயாரானது. இது இப்போ நடைமுறையில் உள்ள ஏனைய சில வக்சீன்களும் தயாரகும் முறை.

இதில் சிம்பான்சியில் சளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசை எடுத்து அதை மரபணு மாற்றத்துக்கு உள்ளாக்கி, அந்த வலுவற்ற வைரசை எமது உடலில் செலுத்தி அதன் மூலம் நோயெதிர்ப்பு எம் உடலில் தூண்டபடுகிறது.

பரீட்சார்த்த காலத்தில் இது ரெண்டு முழு டோஸ் கொடுத்தவர்களிடம் 62% சதவீதம் நோயெதிர்ப்பையும், (தவறுதலாக) ஒரு முழு டோசும் ஒரு அரை டோசும் கொடுத்தவர்களிடம் 90% பேரில் நோயெதிர்ப்பையும் உண்டாக்கியது.

இது சாதாரண குளிரூட்டி வெப்ப நிலையில் பேணப்படலாம்.

இவை உண்மையில் நிஜத்தில் எவ்வளவு தூரம் பாதுகாப்பு அளிப்பன என்பது இப்போது தெரியவராது.

லொக் டவுனும் வந்துள்ளதால் தொற்று குறைவது வக்சீனாலா அல்லது லொக் டவுனாலா என்ற குழப்பமும் வரும்.

February மாதமளவில் தொற்று கூடினாலும், குறைந்தாலும் அது வக்சீனாலா அல்லது வேறு காரணிகளாலா என்பதை தனியே தொற்று எண்ணிகையை வைத்து மட்டும் சொல்ல முடியாது.

ஆனால் இதற்கும் ஒரு கட்டுப்பாடு பரிசோதனையை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ஆஸ்பத்திரிகளில் இப்போ நியுமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று எண்ணிக்கையையும், பெப்ரவரியில் நியூமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று உடையவர்களின் எண்ணிகையையும் ஒப்பிட்டு வக்சீன்கள் வேலை செய்கிறனவா என ஒரு முடிவுக்கு வர முடியுமாம்.

அதே சமயம், தென்னாபிரிக்காவில் உருவாகியுள்ள வைரசுக்கு எதிராக இப்போ உள்ள 3 வக்சீனும் செயல்படுமா? என்ன சதவிகிதத்தில் என்பது பற்றியும் கேள்விகளை நிபுணர்கள் கேட்கிறார்கள்.

தேவைபடின் தமது வக்சீன்களை விரைவாக அதையும் எதிர்கொள்ளும் படி மாற்ற முடியும் என பைசர் கூறியுள்ளது. இது மொடர்னாவுக்கும் பொருந்தும். 

முடிவாக,

2020 மார்ச்சில் இருந்ததை விட நாம் முன்னேறற்றமான நிலையிலேயே இருக்கிறோம்.

வக்சீன்கள் தொழில்படுகிறதா இல்லையா என்பதை நாம் யாரும் இப்போது கூற முடியாது.

குரல்தரவல்ல அமைப்புகள் இதை சொல்லும் போது யாழின் கொரோனா பதிவுகள் பக்கத்தில் இவை பதியப்படும்.

அதுவரை அரசு சொல்லும் முறைகளை கடைப்பிடிப்போம்.

 

https://www.theguardian.com/society/2021/jan/03/oxford-covid-jab-delivered-this-week-when-vaccines-results

 

https://www.dailymail.co.uk/news/article-9110847/Matt-Hancock-worried-super-infectious-South-African-coronavirus-mutation.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பிரித்தானியா 
புதிய கொரோனா ஏற்றுமதியில் தீவீரமாக இறங்கி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பிரித்தானியா 
புதிய கொரோனா ஏற்றுமதியில் தீவீரமாக இறங்கி இருக்கு 

நாங்கள் வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் சவுத் ஆபிரிக்கா காட்டுதாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நாங்கள் வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் சவுத் ஆபிரிக்கா காட்டுதாம்🤣

உங்களுக்கு கொடுக்கல் வாங்கல் சவுத் ஆப்பிரிக்காவுடன் காலனித்துவ காலம் தொட்டே 
இருக்கிற ஒன்றுதானே. நீங்கள்தான் ஏற்றுமதி செய்ததாக அவர்கள் சொல்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அதுக்கு ஆசிரியர் யூனியன் ஒரே முடிவாய் சொல்லிட்டுது முடியாது என்று .

நிக் அக்கா உசாரான ஆள் போரிஸ் க்கு நேற்றே கேயார் கம்புவிட்டு மாடு களைத்தவர் போரிஸ் அப்படி இப்படி இழுத்து இரவு எட்ட்டில்  கொண்டுபோய் விட்டுருக்கார் பார்ப்பம் என்ன நடக்குது என்று .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’boris johnson nicola sturgeon’ எனச்சொல்லும் உரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்ட லொக் டவுன் கடுமை இல்லை என்று இன்று மறுபடியும் 5 மணிக்கு அறிவிக்க போகின்றார் போரிஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

large.5B45524F-6A6F-467E-B9A0-FD08F058E8C3.jpeg.a8bf422a38f133324086e5a7adc573fe.jpeg

கலோவீனுக்கு வெளிக்கிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது..நக்கல் பண்ண வில்லை அப்படி எடுத்துக் கொள்ள வேணாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும்.

இது முழுமையான தகவல் அல்ல. எல்லா வைரசுக்களும் RNA ஐ கொண்டிருப்பதில்லை. ஆனால் கொவிட் கொண்டிருப்பதால்.. இந்த தொழில்நுட்பம் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இந்த வக்சீனில் இருக்கும்.. mRNA.. கொவிட் வெளிப்புற முள்ளுப்புரதத்தை (Spike protein) உருவாக்கும் தவகலை தான் காவும். முழு கொவிட்டை இது உருவாக்காது. இந்த வக்சீன் செலுத்தப்பட்டதும்.. அந்த முள்ளுப்புரதம் எமது உடற்கலங்களால் உருவாக்கப்பட்டு அதனை தொடர்ந்து தான்.. அன்ரிபாடிகள் அந்த புரதத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்படும். 

முழுமைக்கும் கீழ் உள்ள விளக்கப்பட்டத்தை பார்க்கவும்.

ஏலவே.. ஒரு பயபீதியை சமூக வலையில் உருவாக்கி விட்டுள்ளனர். அதாவது இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்று. அது தவறு.

First Covid Vaccines' Triumph Raises Hope for Cancer Fight - Bloomberg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

இது முழுமையான தகவல் அல்ல. எல்லா வைரசுக்களும் RNA ஐ கொண்டிருப்பதில்லை. ஆனால் கொவிட் கொண்டிருப்பதால்.. இந்த தொழில்நுட்பம் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இந்த வக்சீனில் இருக்கும்.. mRNA.. கொவிட் வெளிப்புற முள்ளுப்புரதத்தை (Spike protein) உருவாக்கும் தவகலை தான் காவும். முழு கொவிட்டை இது உருவாக்காது. இந்த வக்சீன் செலுத்தப்பட்டதும்.. அந்த முள்ளுப்புரதம் எமது உடற்கலங்களால் உருவாக்கப்பட்டு அதனை தொடர்ந்து தான்.. அன்ரிபாடிகள் அந்த புரதத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்படும். 

முழுமைக்கும் கீழ் உள்ள விளக்கப்பட்டத்தை பார்க்கவும்.

ஏலவே.. ஒரு பயபீதியை சமூக வலையில் உருவாக்கி விட்டுள்ளனர். அதாவது இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்று. அது தவறு.

First Covid Vaccines' Triumph Raises Hope for Cancer Fight - Bloomberg

வணக்கம் நெடுக்கர்,

நான் எழுதியதில் எங்கேயும் எல்லா வைரசும் RNA ஐ கொண்டிருக்கும் என எழுதவில்லை.

mRNA தொழில்நுட்பம் வக்சீன் தயாரிப்பில் இப்போது முதல் முதலாக அறிமுகமாகிறது என்பதை மட்டுமே குறிப்பிடுள்ளேன்.

மேலதிக விளக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த வக்சீன் முறைமை கொவிட் 19 க்கு என்று உருவான அதிநவீனமல்ல.

ஏலவே முயற்சியில் உள்ள ஒன்றும் கூட. 

mRNA vaccines — a new era in vaccinology.

mRNA vaccines have elicited potent immunity against infectious disease targets in animal models of influenza virus, Zika virus, rabies virus and others, especially in recent years, using lipid-encapsulated or naked forms of sequence-optimized mRNA.

https://www.nature.com/articles/nrd.2017.243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்றும் எங்கேயும் எழுதவில்லை. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்றே எழுதப்படுள்ளது.

பீதியை தவறான தகவல் மூலம் பரப்பி விடக்கூடாது என்பதில் எனக்கும் போதுமான அக்கறை உண்டு.

2 minutes ago, nedukkalapoovan said:

மேலும் இந்த வக்சீன் முறைமை கொவிட் 19 க்கு என்று உருவான அதிநவீனமல்ல.

ஏலவே முயற்சியில் உள்ள ஒன்றும் கூட. 

mRNA vaccines — a new era in vaccinology.

mRNA vaccines have elicited potent immunity against infectious disease targets in animal models of influenza virus, Zika virus, rabies virus and others, especially in recent years, using lipid-encapsulated or naked forms of sequence-optimized mRNA.

https://www.nature.com/articles/nrd.2017.243

இந்த வக்சீன் கொவிடுக்கு என உருவான அதி நவீனம் என்றும் நான் எழுதவில்லை.

இதுதான் mRNA தொழில்நுட்பத்தை பாவித்து வெளிவரும் முதல் வக்சீன் என்றே எழுதப்படுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை.

இது தாங்கள் தானே எழுதினீர்கள். மக்களை Guinea pig ஆக பயன்படுத்தும் வகைக்கு அர்த்தப்படுத்தும் கருத்துக்கள் பரவி வரும் சூழலில்.. இப்படியான தகவல்கள் மக்களை மேலும் மேலும் அச்சமூட்டும். வக்சீனை எடுக்க தாமதிக்கப் பண்ணலாம். அது கொவிட் ஒழிப்பை பாதிக்கும்... என்பதால் தான் உங்கள் கருத்துக்கு மேலதிக விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

இது தாங்கள் தானே எழுதினீர்கள். மக்களை Guinea pig ஆக பயன்படுத்தும் வகைக்கு அர்த்தப்படுத்தும் கருத்துக்கள் பரவி வரும் சூழலில்.. இப்படியான தகவல்கள் மக்களை மேலும் மேலும் அச்சமூட்டும். வக்சீனை எடுக்க தாமதிக்கப் பண்ணலாம். அது கொவிட் ஒழிப்பை பாதிக்கும்... என்பதால் தான் உங்கள் கருத்துக்கு மேலதிக விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை என்பது, இதுவரை லேப்பில் முயற்சிக்காத அதி புதிய முறை என்பதல்ல.

எல்லா புது வகை மருந்துகளும் லேப்பில், சில பல வருடங்களாக முயற்சிக்கபட்டே மருந்தாகும். 

இங்கே இதுவரை முயற்சிக்காத என்பது, இதுவரை வந்த வசீன்களில் இந்த முறையில் செய்யபட்டு பாவனைக்கு வரும் முதல் வக்சீன்கள் இவை என்பதைதான் சொல்லுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை என்பது, இதுவரை லேப்பில் முயற்சிக்காத அதி புதிய முறை என்பதல்ல.

எல்லா புது வகை மருந்துகளும் லேப்பில், சில பல வருடங்களாக முயற்சிக்கபட்டே மருந்தாகும். 

இங்கே இதுவரை முயற்சிக்காத என்பது, இதுவரை வந்த வசீன்களில் இந்த முறையில் செய்யபட்டு பாவனைக்கு வரும் முதல் வக்சீன்கள் இவை என்பதைதான் சொல்லுகிறது.

 

நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானவையே.  இது வேற பிரச்சினை, விட்டு விடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு போஸ்ட் office திறந்துதானிருக்கு. அடிக்கடி கைகழுவப் போகவும் முடியாது. sanitizer gel தான் அடிக்கடி போட்டுக்கொண்டு வேலை செய்கிறேன். காசு, பார்சல்கள், கடிதங்கள், bills என்று எல்லாமே தொடத்தான் வேண்டும். கண்ணாடியின் உள்ளே என்பதனால் வேலை செய்யும்போது முகக் கவசம் அணியவேண்டியது இல்லை என்பது நின்மதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானவையே.  இது வேற பிரச்சினை, விட்டு விடுங்கள்!

எனக்கும் அது விளங்குகிறது. 

உசாத்துணை நூல்கள், வக்சீனை தயாரித்த நிறுவனங்கள், பிரபல செய்தி நிறுவனக்களின் science editors எல்லாரும் பாவிக்கும் innovative new way of making a vaccine என்பதன் தமிழாக்கமே அது.

முட்டையை எதுவும் செய்ய முடியாவிட்டால், உரோமத்தையாவது பிடுங்கி விடவேண்டும் தானே🤣.

நானும் கடந்து செல்லவே உத்தேசித்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

 

கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்களுக்கு போஸ்ட் office திறந்துதானிருக்கு. அடிக்கடி கைகழுவப் போகவும் முடியாது. sanitizer gel தான் அடிக்கடி போட்டுக்கொண்டு வேலை செய்கிறேன். காசு, பார்சல்கள், கடிதங்கள், bills என்று எல்லாமே தொடத்தான் வேண்டும். கண்ணாடியின் உள்ளே என்பதனால் வேலை செய்யும்போது முகக் கவசம் அணியவேண்டியது இல்லை என்பது நின்மதி. 

கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா?

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

அவர் மாஸ்கை எடுத்தால் உதை விட பயங்கரமாய் இருக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா?

அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர். என் தங்கைக்கு கனடாவில் இரண்டுநாள் காய்ச்சல் வந்து மூன்றாம் நாள் கொரோனா என்று ஐந்தாம் நாள் ஆள் எழுந்துவிட்டாள். என் தம்பி வேலை செய்யும் இடத்திலும் 18 பேருக்கு வந்து தம்பி மூலம் மனைவிக்கு வந்துவிட்டது. அவர்களையும் கடுமையாகத் தாக்கவில்லை. இரண்டு மூன்றுநாளில் எழுந்துவிட்டனர். என் நண்பியின் கணவர் போலீசில் இருந்தவர்.மூன்று வாரங்களாகிறது. மாறிவிட்டதுதான் என்றாலும் எழுந்து இன்னும் நடக்க முடியவில்லை. தன் உடல் அமைப்பையே முற்றாக மாற்றிவிட்டது என்கிறார் இன்று கதைக்கும்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பூராவும் சிலர் அரைகுறை விளக்கங்களோடு பல தவறான தகவல்களைப் பரப்பி வருவது மக்கள் மத்தியில் கொவிட் தொற்றுத்தொடர்பான பெருக்கம் அதிகரிக்க ஒரு காரணம்.

இந்த அடிப்படையில் தான் விளக்கங்கள் வைக்கப்படுகின்றன. மக்களை வீணே அச்சப்படுத்தாமல் இருப்பது நல்லம்.

ஏலவே எமது தமிழ் சமூகத்தில்.. இந்த "ஏல்லாம் அறிஞ்ச கெட்டிக்காரன்" புகழ் ஆட்கள் பரப்பும் செவி வழி.. வாசிப்பு வழி அரைகுறைகள் மக்களை கொவிட் தொடர்பான சரியான அறிவையும் தடுப்பு முறைகளையும் பின்பற்ற முடியாமல் தவிர்த்து வருவதோடு.. சரியான சுகாதார முறைமைகளைப் பின்பற்றுதலும்.. பிரேரிக்கப்படும்.. தடுப்பு முறைகளை கைக்கொள்வதும்.. கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி ஈட்ட மிக முக்கியமாகும்.

ஏலவே 5 ஜி வைச்சு ஒரு கூட்டம் உலகை அச்சுறுத்தி வருவது போல்.. கொவிட் தொடர்பிலும் பலவித வதந்திகள் பரப்பிவிடப்பட்டுள்ள சூழலில்.. சரியான தகவலை சாதாரண மக்களுக்கு வழங்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த சமூகச் செயலாகும். 

அதுவே இங்கு ஆற்றப்படுகிறது.

ஒரு சில முதுகு சொறியும் வேலை அல்ல.. இங்கு மிணக்கட்டு செய்யப்படுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர். என் தங்கைக்கு கனடாவில் இரண்டுநாள் காய்ச்சல் வந்து மூன்றாம் நாள் கொரோனா என்று ஐந்தாம் நாள் ஆள் எழுந்துவிட்டாள். என் தம்பி வேலை செய்யும் இடத்திலும் 18 பேருக்கு வந்து தம்பி மூலம் மனைவிக்கு வந்துவிட்டது. அவர்களையும் கடுமையாகத் தாக்கவில்லை. இரண்டு மூன்றுநாளில் எழுந்துவிட்டனர். என் நண்பியின் கணவர் போலீசில் இருந்தவர்.மூன்று வாரங்களாகிறது. மாறிவிட்டதுதான் என்றாலும் எழுந்து இன்னும் நடக்க முடியவில்லை. தன் உடல் அமைப்பையே முற்றாக மாற்றிவிட்டது என்கிறார் இன்று கதைக்கும்போது.

ஓம், தாக்கம் ஆளாளுக்கு மாறுப்படுகிறது. பலர் asymptomatic  எனும் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்களாம்.

உங்கள் போஸ்ட் ஓபிசுக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் serve பண்ண மாட்டோம் என திருப்பி அனுப்ப முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஓம், தாக்கம் ஆளாளுக்கு மாறுப்படுகிறது. பலர் asymptotic எனும் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்களாம்.

உங்கள் போஸ்ட் ஓபிசுக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் serve பண்ண மாட்டோம் என திருப்பி அனுப்ப முடியாதா?

அப்படி அனுப்ப முடியாது. ஆனால் போடவேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனாலும் சிலர் சும்மாவே தனக்கு மூச்சுப் பிரச்சனை. போடத் தேவை இல்லை என்று சொல்லுவார்.

2 minutes ago, nedukkalapoovan said:

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

நீங்கள் போட்டாச்சா ?? நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

இதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இது திடீரென முளைத்த பொறிமுறையில் உருவானது என்றோ, இதை எடுப்பது தொடர்பில் மக்கள் அச்சபட வேண்டும் என்றோ இங்கே யாரும் எழுதவில்லை

அப்படி எழுதியதாக நீங்கள் சொன்னதில்தான் மாற்றுகருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.