Jump to content

தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு தடை நீடித்ததால், பல திரையரங்குகள் செயல்படவில்லை.

தற்போது தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படங்களை திரையிடுவதற்கு முன்னதாக, எல்லா திரையரங்குகளிலும் கொரோனா விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படவேண்டும் என்றும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து செயல்படலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டபோதும், திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பல கட்டமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி வந்தனர்.

முன்னதாக, எதிர்வரும் பொங்கல் திருநாளின் போது வெளியாகவுள்ள படங்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி தரவேண்டும் என நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ஒரு சுத்தமான மனிதர் என்ற நினைப்பில் மண்.

50 வீத பார்வையாளர் அனுமதியே கொரனோ  நோய்  தொற்று பரவாமல் இருக்க இவரின் வேண்டுகோள் அப்பாவிகள்  நொய்  தொற்றி செத்தாலும் பரவாயில்லை தன்னுடைய படம் தோல்வி அடையாமல்  ஓடணும் தமிழ் நாட்டு சனத்தை  முதலில் நடிகர்களிடம் இருந்து காப்பாற்றணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

விஜய் ஒரு சுத்தமான மனிதர் என்ற நினைப்பில் மண்.

50 வீத பார்வையாளர் அனுமதியே கொரனோ  நோய்  தொற்று பரவாமல் இருக்க இவரின் வேண்டுகோள் அப்பாவிகள்  நொய்  தொற்றி செத்தாலும் பரவாயில்லை தன்னுடைய படம் தோல்வி அடையாமல்  ஓடணும் தமிழ் நாட்டு சனத்தை  முதலில் நடிகர்களிடம் இருந்து காப்பாற்றணும் .

தாங்கள் வாழ மற்றவன் செத்தாலும் பரவாயில்லை எண்ட நினைப்பு இதுகளுக்கு....
படங்களிலை மட்டும் ஆயிரம் புத்திமதி சொல்லுங்கள்.


பின்னோட்டங்களையும் வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

தமிழ் நாட்டு சனத்தை  முதலில் நடிகர்களிடம் இருந்து காப்பாற்றணும் .

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ்: நடிகர் விஜய், தமிழக அரசுக்கு மருத்துவர் எழுதிய ஆதங்கப்பதிவு

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவராக பணியாற்றும் ஒருவர் மிகவும் உருக்கமான கடிதத்தை தமிழக அரசுக்கும் நடிகர் விஜயக்கும் எழுதியிருக்கிறார்.

இந்த கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலேயே அந்த மருத்துவர் பதிவிட்டிருந்தபோதும், அவர் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மருத்துவர் பதிவிட்டுள்ள கடிதத்தின் விவரம்:

அன்புள்ள விஜய் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அரசு,

நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக இருக்கிறோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் களைப்படைந்து இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் களைப்படைந்துள்ளனர். காவல் அதிகாரிகள் சோர்வடைந்து விட்டனர். சானிட்டரி தொழிலாளர்கள் சோர்வாக உள்ளனர்.

இதுவரை நாம் கண்டிராத தொற்றுநோய்க்கு மத்தியில் ஏற்பட்ட பாதிப்புகள், எந்த அளவுக்கு குறைவாக இருக்க முடியுமோ அந்த அவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் எங்களுடைய வேலையை போற்றிப்பேசவில்லை. ஏனெனில் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது எனக்கு தெரியும். எங்களுக்கு முன்னாள் கேமிரா இல்லை. நாங்கள் ஸ்டன்ட் சாகசங்களை செய்ய மாட்டோம். நாங்கள் ஹீரோக்களும் அல்ல. ஆனால் மூச்சுவிடவாவது கொஞ்சம் நேரத்தை பெறக்கூடியவர்களாக இருக்கிறோம். ஒருவரின் சுயநலத்திற்கும் பேராசைக்கும் நாங்கள் இரையாக விரும்பவில்லை.

கொரோனா தொற்று இன்னும் முடிந்து விடவில்லை, இன்றுவரையிலும் கூட அந்த வைரஸ் பாதிப்பால் மக்கள் இறக்கிறார்கள். நூறு சதவிகித திரையரங்க ஆக்கிரமிப்பு ஒரு தற்கொலை முயற்சி. மாறாக அது ஒரு கொலைக்கு ஒப்பாகும்.

கொள்கை வகுப்பவர்களோ கதாநாயகர்களோ பார்வையாளர்களுக்கு மத்தியில் படம் பார்க்கப் போவதில்லை. இது ஒரு அப்பட்டமான பண்டமாற்று முறை. உயிரை விலையாகக் கொடுத்து வணிகம் செய்வது போன்றது.

நாம் மெதுவாக இயல்பாக வாழ முயன்று கவனம் செலுத்தி வரும் வேளையில், மெதுவாக எரியும் தீ மேலும் வேகமாக பரவாமல் இருப்பதை உறுதி செய்ய முடியுமா?

இந்தப் பதிவை அறிவியல் பூர்வமாக உருவாக்கி, நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை விளக்க விரும்புகிறேன். பிறகு எனக்குள் நானே என்னதான் பிரச்னை என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு ஒரு ஏழை, களைப்படைந்த உள்ளுறை மருத்துவர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடுகையை பதிவு செய்தவரின் பெயர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்றும் அவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை கல்லூரியில் இளநிலை உள்ளுறை மருத்துவராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ்: நடிகர் விஜய், தமிழக அரசுக்கு மருத்துவர் எழுதிய ஆதங்கப்பதிவு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிழம்பு said:

. நாங்கள் ஸ்டன்ட் சாகசங்களை செய்ய மாட்டோம். நாங்கள் ஹீரோக்களும் அல்ல. ஆனால் மூச்சுவிடவாவது கொஞ்சம் நேரத்தை பெறக்கூடியவர்களாக இருக்கிறோம்

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

உலகெங்கெங்கும்..... மொதல்,  மொதலாக...  
தமிழக திரை..... அரங்க்க்குகளில்... 
கொரோனா  ஸ்பெஷல்...

(முக்கியமாக... முக்கி வாசிக்கவும்). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி ரத்து

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை கருத்தில் கொண்டும், மத்திய அரசின் அறிவுரையை கவனத்தில் கொண்டும் திரையரங்குகள், திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும்வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் முக கவசம் அமிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ள தமிழக அரசு, கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சென்னையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருப்பதால் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதில் சிக்கல் இருக்காது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் நீதிபதிகள், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் கூடாது. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரை எச்சரிக்கையுடன் மாநில அரசு செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், தற்போது உள்ள நடைமுறைப்படி, 50 சதவீத பார்வையாளர்களை கொண்டே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர். மதுரை கிளையில் ஜனவரி 11ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதுவரை 50 சதவீத பார்வையாளர் அனுமதி என்ற நடைமுறையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நூறு சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க தமிழக அரசின் அனுமதி கிடைத்து விட்டதால், பொங்கல் தினத்தன்று முழுவீச்சில் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். இதனால், பொங்கல் நாளன்று நடிகர் விஜய் நடித்த மாஸ்டர், நடிகர் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

விஜய்

பட மூலாதாரம்,TWITTER

நடிகர் விஜய் சமீபத்தில் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும்போது நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த சந்திப்பை அடுத்து, 100 சதவீத பார்வையாளர்களை திரையரங்குகளில் அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

சிலம்பரசன்

பட மூலாதாரம்,TWITTER

ஆனால், கொரோனா பரவல் மற்றும் புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா பரவல் தணியாத நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலரிடையே அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன், அரசின் இந்த உத்தரவை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த இரு வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கும் என்றும் வெள்ளிக்கிழமை விசாரணையினஅபோது தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இந்த நிலையில், தமிழக அரசு, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்திருப்பதால், பொங்கல் திருநாளையொட்டி வெளியிட திட்டமிட்டிருக்கும் மாஸ்டர், ஈஸ்வரன் தயாரிப்புக்குழுவினர் குறித்த தேதியில் படத்தை திரையிடுவார்களா அல்லது தள்ளிப்போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"மாஸ்டர், ஈஸ்வரன்" படங்கள் ரீலிஸ் தேதியில் வெளிவருமா? திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி ரத்து - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.