Jump to content

ஸ்ரேயா கோஷல் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Shreya Ghoshal - Wikipedia

வங்காளம் தந்த அருமையான ஒரு அழகான இசைக்குயில். எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திராத குரலுக்கு சொந்தமானவர் இவர்.

பல விருதுகளை வென்று சாதனை படைக்கும் இந்த குரல் இந்தியாவுக்கு வெளியேயும், சிங்களத்துக்கும், ஆங்கிலத்துக்கும் அறிமுகமானது.

Anugerah Filmfare untuk Penyanyi Latar Wanita Terbaik - Wikipedia Bahasa  Melayu, ensiklopedia bebas

இவரது குரலை கேட்டு மெய் மறந்து போன அமெரிக்க ஒஹயோ  மாநில ஆளுநர், ஸ்ரேயா கோஷல் தினம் என்னும் ஒரு தினத்தினை ஜூலை மாதத்தில் வரும் வகையில் அறிவித்து உள்ளார்.

லண்டனின் புகழ் மிக்க மெழுகு சிலைக்கூடத்தில், மெழுகு சிலையாக இருக்கும் ஒரே அழகான, இந்திய இசைக்குயில் இவர் மட்டுமே.

SHREYA

A tribute to the living legends Atif Aslam and Shreya Ghoshal on their  birthday – Reflection

வங்காளத்தில் ஆரம்பித்து, பாஞ்சாலி எனும் இசை அமைப்பாளரால் இந்தி திரை உலகுக்கு அறிமுகமாகி, இளையராஜா மகன், கார்த்திக் இளையராஜா மூலம் தமிழுக்கு வந்தார் இவர். பின்னர் தெலுங்கு, மலையாளம் என இந்தியா எங்கும் கலக்கி வருகிறார்.

மெய்யை உருக்கும் குரலுக்கு சொந்தமான இந்த பெண், போர்ப்ஸ் சஞ்சிகையின் முகப்பில் சிலமுறை வந்துள்ளார்.

இந்தியாவில் இரு முறை தேசிய விருதினை பெற்றுக்  கொண்ட பெண் பாடகிகள் ஆன, லதா மங்கேஷ்கர், சுசிலா, சித்திரா  வரிசையில் இவர் அண்மையில் இணைந்துள்ளார்.

பின்னர் பலரிடம் பழகி இருந்தாலும், இவரது ஆரம்ப கால குரு இவரது தாயார் தான்.

இவர் தனது மானசீக குருவாக சின்னக்குயில் சித்திரா என்று சொல்லி இருந்தாலும், சின்னக்குயில் சித்திரா, சின்னத்தனமாக, மலையாள இசை அமைப்பாளர்கள், ஸ்ரேயாவை அழைப்பதன் மூலம், உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று புலம்பி, இவரை அதிர வைத்தார்.

பெயரை குறிப்பிடாமல், பொதுவாக சொல்லி இருக்கலாம், சித்திரா. இருந்தாலும், அதனை கண்டுகொள்ளாத மிகப் பெரிய உயரத்துக்கு போய் விட்டார் ஸ்ரேயா கோஷல்.

துள்ளிசைப் பாடகி ஆகவும் மேடையினை அலங்கரிக்கிறார் அவர். அமைதியாக பாடி விட்டு செல்லும் மற்ற  இந்திய பெண் பாடகிகளை போலன்றி, மேடையில், ஆடி, பாடி ரசிகர்களை மகிழ்விக்கும் இவரது ஸ்டைல் வித்தியாசமானது.

Shreya_Ghoshal_in_2009.jpg

தமிழில், கார்த்திக் ராஜாவின் பின்னர், இளையராஜா, ரகுமான், யுவன் சங்கர் ராஜா என்று இப்போது இமான் உடன் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

கண்டாங்கி பாடல் இவரை தமிழில் புகழ் பெற வைத்தது. அது மட்டுமல்ல, மனதை உருக்கும் பல தமிழ் பாடல்களையும் இவர் தந்துள்ளார்.

இப்போது, டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் வருகின்றார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சிரேயா கோஷல் உருக்கியது 
இந்த இரு பாடல்கள் ஊடாகவே ...... 

ஆயிரம் தடவைகளுக்கு மேலாக கேட்டுருப்பினும் 
இன்னும் சலிக்காத பாடல்களாக இருக்க நிச்சயம் 
சிரேயாவின் குரலே காரணம்.

இவர் தமிழ் இல்லை என்று கண காலம் கழித்தே தெரிந்து கொண்டேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல குரல். 

வேற்று மொழி பாடகி என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். இளையராஜாவின் இசையமைப்பில் பாடிய பாட்டுக்களும் யுவன்சங்கர் ராஜாவின்  இசையமைப்பில் பாட்டுக்களும் எனக்கு பிடிக்கும்..

இமானின் இசையமைப்பிலும் நல்ல பாடல்களை பாடியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

 

இமானின் இசையில் அருமையான பாடல்

இளையராஜா இசையில்

யுவனின் இசையில் ஐயையோ

 

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் ரகுமானின் இசையில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையை தெறிக்கவிட்டு நெஞ்சை நெகிழ்த்திக் கொண்டு போகும் குரல்.இவருடைய பல பாடல்களுக்கு நான் அடிமை......நல்லதொரு பதிவு நாதம்ஸ்......!   👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நீயும் நானும்

எப்ப நடிகையா அறிமுகமாகப் போறீங்க? பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலிடம் ரசிகர்கள் கேள்வி!

இயல்பாக அதுவாக நடந்தால், படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நீயும் நானும்

எப்ப நடிகையா அறிமுகமாகப் போறீங்க? பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலிடம் ரசிகர்கள் கேள்வி!

இயல்பாக அதுவாக நடந்தால், படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

எந்த வேசமெண்டாலும் நடிப்பாவோ? 🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எந்த வேசமெண்டாலும் நடிப்பாவோ? 🤠

இயல்பாக அதுவாக நடக்கும்போது 
நடிப்பா என்றுதான் எண்ணுகிறேன் 
குழந்தையும் அப்படிதான் சொல்லி இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

ஸ்ரேயா கோஷல்

 

சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஸ்ரேயா கோஷல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/05/22173927/2664332/Tamil-cinema-shreya-ghoshal-blessed-boy-bay.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

பறந்து, பறந்து பாடும் குயிலை வீட்டுக்குள் கொரோனா பூட்டி வைக்க, குழந்தை கிடைத்திருக்கின்றது.

ஏற்கனேவே இந்திய சனத்தொகை, 1.25 கோடி.... தமிழகத்தில் மட்டும், 80 லட்ச்சம் பெண்கள், கரு கொண்டுள்ளார்கள்.

கொரோனாவுக்கு, வீட்டுக்குள்ள அடைத்து வைத்த மோடி அய்யா, குடும்பம் நடத்தி இருந்தால், ஆணுறையை இலவசமாக கொடுத்திருப்பார்.

வட அமெரிக்காவில், ஐரோப்பாவில்,  அமேசானில், கொண்டோம் வித்தே பெரும்  பணம் பார்த்து இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.