துணிச்சல் மிக்க அரசியல் போராளி மாமனிதர் குமார் பொன்னம்பலம் – இன்று 21 ஆவது நினைவு தினம்

By
உடையார்,
in எங்கள் மண்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி த.சத்தியசீலன் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் | படம்: ஜெ.மனோகரன். 234 தொகுதிகளில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சென்னை மாநாட்டில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம், கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கோவை மேற்கு மண்டலத்தில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் தலா 117 ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடுகின்றனர். வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படும். நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை அப்போது அறிவிப்பேன். தேசியக் கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் எங்கள் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டியாக விளங்குகிறது. ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்பதைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாகவே திமுகவில் சுற்றுச்சூழல் பாசறை அமைக்கப்பட்டது. இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு அரசுத் தொழிலாக்கப்படும் என்று நான் பேசியபோது கேலி செய்த கட்சிகள், தற்போது இதையே பேசி வருகின்றன. தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், வேலைக் கையில் எடுத்தோம். அதைப் பாஜகவும், திமுகவும் தற்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் வாக்குக்காகச் செய்கிறார்கள். நாங்கள் அதை உணர்வாகச் செய்கிறோம். அவ்வளவுதான் வேறுபாடு. திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு முன் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, ஏன் இதைச் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடு முழுவதும் வீழ்ந்து கிடக்கிறது. தென் மாநிலங்களில் தங்களுடைய இருப்பைத் தக்க வைக்க முயற்சி செய்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வட மாநிலத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாகக் களத்தில் இறங்கியிருக்கும். அதே நேரத்தில் தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் செவி சாய்க்காது. 4 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றதைக் கண்டும், காணாமல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள்தான் இதைத் தடுக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. எங்களுக்கென்று தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்''. இவ்வாறு சீமான் கூறினார். அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது? நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? வாக்காளர்களை எவ்வாறு அணுகி வாக்குச் சேகரிப்பது? என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர். https://www.hindutamil.in/news/tamilnadu/626364-naam-tamilar-party-is-the-guide-for-national-and-dravidian-parties-seeman-interview-1.html -
By கிருபன் · பதியப்பட்டது
இந்தியாவின் தடுப்பூசிகளை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்..! இந்தியா அனுப்பி வைத்துள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன் பெற்றுக்கொண்டார். இந்தியா வழங்கும் 5 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிய சிறப்பு விமானம் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அவற்றை கையளித்தார். https://www.virakesari.lk/article/99316 -
By கிருபன் · பதியப்பட்டது
மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன் தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை தவிர்க்க முடியாதுள்ளது. அதன் விகிதாசரத்துக்கேற்ப சமூகம் சிந்தனைத் திறனுடன் செயல்படும் ஆற்றலையும் இழந்துவிடும் நிலையேற்படும். நாட்டில் காணப்படும் இந்த படுமோசமான நிலைக்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசு எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? இந்த அரசு எவ்வித நடைமுறை சாத்தியமான இலக்கும் இன்றியே செயல்படுகிறது. தற்போது இந்த அரசு பாதுகாப்பு படையினதும் அதி உயர் பௌதிக சக்திகளினதும் தயவை நாடிக்கொண்டு, மிகவும் பலவீனமான நிலையில்தான் உள்ளது. நாட்டிலிருந்த சில தனவந்தர்கள் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்த கடுமையாக உழைத்தனர். அவ்வாறு பணத்தை வாரி வீசியவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வீசவில்லை. மாறாக அவர்கள் தமது இழந்த பணத்தை பல மடங்காக மீளப்பெற்றுக்கொள்ளும் வகையில் அரச அங்கீகாரத்துடன் நாட்டை கொள்ளையடித்துக்கொண்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. தலைவரின் தலையிடி ஆட்சி மாற்றத்தின் பின் இலகுவாக ஆட்சியை நடத்திச்செல்லக்கூடிய ஒரு நாடாக இலங்கை காணப்படவில்லை மிகச்சிறந்ததோர் ஆட்சியாளருக்கும் கூட கட்டுப்படுத்த இயலாத படு பாதாளத்தில் விழுந்திருந்த நாடாகவே இலங்கை அவ்வேளையில் காணப்பட்டது. எனினும் அக்காலகட்டத்தில் கோட்டாபய அவரது கடுமையான பிரச்சாரப்பணிகள் காரணமாக மக்கள் மத்தியில் செயற்கையாகவே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு தலைவராக அவர் காணப்பட்டார். முறையாக ஆராய்ந்து முடிவெடுக்கத்தெரியாத இலங்கை மக்கள் கோட்டாபயவின் பேச்சில் மயங்கி இமையமலை அளவுக்கு அவர் மீது நம்பிக்கை வைத்து தமது பெறுமதிமிக்க வாக்குகளை அவருக்கு அள்ளிக் கொடுத்தனர். (இலவசக் கல்வி மூலம் இலங்கை மக்களில் 100% ஆனோர் எழுதவும், வாசிக்கவும், கையொப்பமிடவுமே தெரிந்துள்ளனர் ஆனால் ஒரு விடயத்தை சரியாக அறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் 5% ஆவது நாட்டில் இல்லை – மொழிபெயர்ப்பாளர்). அதன்படி மக்களில் பெரும்பாண்மையினர் கோட்டாபயவிற்கு தமது வாக்குகளை அளித்து அவரை முறுங்கை மரத்தின் உச்சிக்கே ஏற்றி விட்டனர். அவ்வாறு அவரது புகழ் எந்த அளவுக்கு ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் அவர் ஜனாதிபதியாகி வெற்றியடைந்தார். அதன் பின் அவரது புகழ் காற்று இறக்கப்பட்ட பலூன் ஒன்றைப் போல் கீழே தள்ளப்பட்டது. கோட்டாபய பாதுகாப்புப் படையின் அதிகாரியாக செயல்பட்ட காலத்தில் அவர் தமது முழுத்திறமையையும் வெளிக்காட்டிய ஒரு திறமையான பாதுகாப்புப் படை அதிகாரியாக இருந்திருக்கலாம். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் விவாதத்திற்குட்பட்டிருந்த போதிலும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் யுத்தத்தின் இணைப்பாளராக மிக முக்கியமான நடவடிக்கைகளில் அவர் மிகத்திறமையாக ஈடுபட்டார். எனினும் நாட்டின் தற்கால அரசியல் நிலை பற்றி எவ்வித ஆய்விலும் ஈடுபடாமலும் எந்த அனுபவமும் இல்லாமல் தான் அவர் ஆட்சித் தலைமைத்துவத்திற்கு வந்தார். 19 ஆவது அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றிய அறிவு அவருக்கு இருக்கவில்லை. நாடு எந்த அளவிளான ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய ஆழமான அறிவும் அவருக்கு இருக்கவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் ஆட்சியாளர்களை சோதனைக்குட்படுத்துவதற்காக நடைமுறையில் காணப்பட்ட அமைப்பு முறையை ‘கழுத்தை நெருக்கிக் கொன்றுவிடும்’ ஒரு முறையைத்தான் அவர் பின்பற்றி வருகிறார.; அரசியல் வித்தகர் ஐவர் ஜெனின்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். “கட்டுப்படுத்த முடியாத அதிகாரத்தைக்கொண்டு தமது அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக மோசடிக்குள்ளாக்கப்படுவார்கள்”. இராணுவ மயப்படுத்தல் தாம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாரதூரமான பிரச்சினைகளைப் பற்றி அறியாதவராகவே ஜனாதிபதி இருக்கிறார். சிவில் நிர்வாகம் ஒன்றை விட இராணுவ நிர்வாகமொன்றினால் அப்பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று அவர் நினைக்கின்றார். நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான குழப்ப நிலையைத் தீர்ப்பதற்கு அது ஒரு தீர்வாகாது. மேலும் அது பாதுகாப்புப் படையினருக்கு நன்மையாகவோ, கௌரவமாகவோ அமையாது. நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர்களே பாதுகாப்புப் படையினர் மாறாக அவர்கள் நாட்டை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது. பாதுகாப்புப் படைக்காக ஆட்களை சேர்க்கும்போது, அவர்களுக்கு நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படையான விடயங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி வழங்கப்படுகின்றதேயன்றி அந்நாட்டின் நிர்வாகம் பற்றி அடிப்படையான விடயங்களையோ அதற்கான தொழில்நுட்பம் பற்றிய பயிற்சியோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உலகில் பல நாடுகளில் இராணுவ ஆட்சிகள் ஏற்கனவே இருந்தன. ஆனால் தற்போது ஆபிரிக்காவில் சூடான் நாட்டில் மட்டுமே இராணுவ ஆட்சி காணப்படுகிறது. அதுவும் பொது மக்களின் போராட்டத்தின் விளைவாக சிவில் நிர்வாகமொன்றுக்கு மாறுவதற்கான ஒப்பந்தமொன்றை செய்து கொண்ட பின்பு தான் அந்நிலை ஏற்பட்டது. இறுதியாக ஆசியாவில் இராணுவ ஆட்சி நடைமுறையிலிருந்த நாடு தாய்லாந்தே எனினும் 2019 ஜூலை 16ம் திகதி அந்த இராணுவ ஆட்சியும் முற்றுப் பெற்றது. இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு உலகில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமையாகத் தோல்வி கண்டுள்ளது. காலத்துக்கொவ்வாத அந்தக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபயவும் பரீட்சித்துக் கொண்டிருக்கிறார் போலும். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புப் படைக்கு மட்டுமன்றி நாட்டை நிர்வகிப்பவர்களுக்கும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்படும். பாதுகாப்புப் படையினர் இந்த பொறியில் அகப்படாது தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் அரசியலமைப்பு நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்புடையதாகும். எதிர்கட்சிகளின் காலத்துக்கொவ்வாத முன்னெடுப்புக்கள் தற்கால இலங்கை முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு ஆளும்கட்சி மட்டுமன்றி எதிர்கட்சிகளும் ஐம்பது வீதம் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளது. நாடு முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு ராஜபக்ஷாக்கள் மட்டும் பொறுப்புக்கூற முடியாது. நாட்டு நிர்வாகத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள பாரளுமன்ற பிரதிநிதிகள் அனைவருமே நாட்டின் இன்றைய பரிதாப நிலைக்கு பதில் கூற வேண்டும். நாட்டின் இன, மத, குலம் என்ற வகையில் காணப்படும் பிரிவுகள் காரணமாகவே நாட்டில் மோதல்களும் இரத்தம் சிந்தலும் ஏற்பட்டது. நாடு இந்த அளவில் சிதைந்து போவதற்கு அது ஒரு முக்கிய காரணியாகும். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கும் அதற்கு பாலூட்டி வளர்ப்பதற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த நாடு இந்த அளவில் குட்டிச்சுவராவதற்கான மற்றுமொரு காரணி நாட்டில் பரந்த அளவில் காணப்படும் தில்லுமுல்லுகளும் மோசடிகளும் ஆகும். நாட்டில் ஒவ்வொரு தடவையும் ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும் நாட்டின் ஜனாதிபதியுடன் கைகோர்த்துக்கொண்டு நாட்டின் சொத்துக்களை சூரையாடுவது இந்த நாடு மோசடிகளால் துர்நாற்றமடிப்பதற்கான பிரதான காரணியென்று துணிச்சலாகக் கூற முடியும். ஆனால் தற்போது எதிர்கட்சிகளின் தான்தோன்றித்தனமான நிலை எவ்வாறாக உள்ளது? அதற்குள் நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரிவிணை எனும் நோய்க்கு முதலில் சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாது எவ்வாறாயினும் “தலைமைப்பதவியை” தான் அடைந்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து கையிறிழுப்பில் ஈடுபட்டு வருவதை நாம் கானக்கூடியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினது இது போன்ற ‘தாளத்துக்கு’ பொது மக்கள் ‘நடனமாடாது’ கவனமாக இருத்தல் அவசியமாகும். நாம் என்ன செய்யலாம்? இந்த துரதிஷ்டவசமான நிலையிலிருந்து நாட்டைத் தூக்கியெடுப்பதற்கு நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைக்கோர்த்துக்கொண்டு முன்வர வேண்டும். இவ்வாறான ஒற்றுமை ஒவ்வொரு நாட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டும். பல்வேறு மட்டத்திலான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலமே அவ்வாறான நிலையை நாட்டில் தோற்றுவிக்க முடியும். ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவெனில் நாட்டிலுல்ல அரசியல் கட்சிகள் தமது குறுகிய வட்டத்திலுள்ள சிந்தனைக்கேற்பவே மேற்படி கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டுமென்று நினைப்பதாகும். எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள படு மோசமான குழப்பநிலை பற்றி மிக விரிவாகவும் சரியாகவும் புரிந்து கொண்டுள்ள தனி மனிதர்களும் அமைப்புக்களும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களில் ஒரு சிலராவது இணைந்து ஒரு அமைப்பாக மாறி ஒரே குரலில் மிக ஆணித்தரமாக பேச முன்வருவார்களாயின் தற்போதைய அரசு மேற்கொண்டுள்ள மிகத் தவறான பயணத்தில் கணிசமாண அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இந்த நாடு தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்குமானால் நாடு அதள பாதாளத்தில் விழுவதை எவராலும் தடுக்க முடியாது போய்விடும். நாட்டுக்கு அந்த நிலை ஏற்படின் அதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இலகுவான விடயமல்ல. தென்னாபிரிக்காவின் வெள்ளை ஆட்சியினருக்கு இது போன்றதொரு நிலைதான் ஏற்பட்டது. கறுப்பு – வெள்ளை இனப்பிரச்சினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு அவர்கள் மிருகத்தனமாக ஆட்சி செய்தனர். அந்த நாட்டில் ‘நிற’ வேறுபாட்டுப் பிரச்சினை உச்ச கட்டத்திற்குச் சென்ற பின்னரே ஆட்சியாளர்கள் தமது குரூரமான போக்கைக் கைவிட்டனர். அதன் பெறுபேராக நாட்டு மக்களினது பங்களிப்புடன் புதிய அரசியலமைப்புப்பொன்றை அமைப்பதற்கான கதவு திறக்கப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தேசத்தைப் புணர்நிர்மாணம் செய்வதற்குமான பணி அதன் பின்பே அங்கு ஆரம்பமானது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கும் தேவைப் படுவதெல்லாம்; அவ்வாறான மாற்று நடவடிக்கைகளே. இலங்கையிலும் பொது மக்களது பங்களிப்புடனான அரசியலைப்புப்பொன்றை உருவாக்குவதற்கு பொது மக்களும் நாட்டிலுள்ள புத்தி ஜீவிகளும் முன் வரவேண்டும். அந்த அரசியலமைப்பு 21ம் நூற்றாண்டுகளுக்குப் பொருத்தமான ஒரு அரசியலமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்புப்பொன்றை உருவாக்குவதற்கு ரணிலோ எமது நாட்டின் தலைவர்களோ தெரிந்திருக்கவில்லை. அவர்கள் மட்டுமன்றி இலங்கையில் அரசியல் விஞ்ஞானம் பற்றி பாடம் கற்பிக்கும் எமது பேராசிரியர்களில் பலருக்கு அது பற்றி தெளிவான விளக்கமில்லை. நாம் புதிய அரசியலமைப்பொன்றின் மாதிரிப் படத்தை வரைந்தால் (எழுதினால்) மட்டும் அப்பணி முழுமையடைந்து விடாது. மாறாக நாட்டிலுள்ள அனைத்து வகையான பிரச்சினைகளைப் பற்றியும் அலசி ஆராயப்படல் வேண்டும். அது மட்டுமின்றி நாட்டின் மறு சீரமைப்பு விடயங்கள் பற்றியும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் ஈடுபடும் குழுவினருக்கு மேற்படி இரண்டு விடயங்கள் பற்றி ஆய்வில் ஈடுபடுத்துவதற்கான உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அந்த மாதிரி அரசியலமைப்புக்கு சிவில் மற்றும் அரசியல் உரிமைப்பற்றிய சாசனமொன்றுக்கு முன்வைக்கப்படும் விளக்கத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மேலும் அது சர்வதேச சட்டத்திற்கேற்பவும் 21ம் நூற்றாண்டில் அரசியலமைப்பின் முன்மாதிரியாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அந்த மாதிரியை தயாரிப்பதற்கான ஆய்வுப் பணியில் நாமும் ஈடுபட வேண்டும். இது போன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலமே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ‘வங்குரோத்து’ நிலை உட்பட அரச நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சிகளிலிருந்தும் அவற்றை காப்பாற்றி கரை சேர்க்க முடியும். அது மட்டுமன்றி நவீன தேசமொன்றையும் எம்மால் கட்டியெழுப்ப முடியும். அது போன்றதொரு மறுசீரமைப்பை நாட்டில் உருவாக்கிய பின்பே நாம் தேர்தலொன்றிற்குச் செல்ல முடியும். https://thinakkural.lk/article/108000 -
By கிருபன் · பதியப்பட்டது
கொக்கட்டிச் சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும், நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி இடம்பெற்ற இறால் வளர்ப்பு பண்ணை படுகொலையும் 1992 ஜுன்12ஆம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 239பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். தமிழர்களையும் நினைவு கூரும் வண்ணமே ‘கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.thaarakam.com/news/19034a02-c53d-4d7e-80e0-540bf20d6c83 -
ஆதி ஐயனார் ஆலய அடையாளங்கள் உடைப்பு; பொலிஸில் முறையிட்ட ரவிகரன் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று (2)) முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை மீண்டும் அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார். மேலும் குறித்த முறைப்பாடு தொடர்பில் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 18.01.2021 அன்று முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, படையினர் சகிதம் வருகைதந்து அங்கு தொல்லியல் அகழ்வுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிலையில் அங்கிருந்த முச்சூலம் உள்ளிட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் மூலமாக எனக்கு தகவல் தரப்பட்டது. அதேவேளை குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் என்னிடம் கோவில் நிவாகத்தினர் முறையிட்டிருந்தனர் . இந்நிலையில் மக்களின் இந்த முறைப்பாடுகளுக்கமையகுருந்தூர்மலை ஆதிசிவன், ஐயனார் கோவிலுக்கு இன்று சென்றிருந்தோம். அப்போது மக்களால் முறையிடப்பட்டதைப் போலவே, அங்கு சென்ற எங்களையே அங்கிருந்த இராணுவத்தினர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாது தடுத்திருந்தனர். பின்னர் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம். இதனைவிட ஆலயநிர்வாகத்தினர், ஊடகங்கள் வாயிலாக அறிந்ததைப் போலவே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்கமுடிந்தது. மேலும் கடந்த 10.09.2020 அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய குருந்தூர்மலைப் பகுதிக்கு சென்றபோது அப்போதும் அங்கு இருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருந்தது. அதேவேளை கடந்த 01.10.2020 அன்று குமுழமுனைப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றபோது, அமைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னமான முச்சூலம், அருகே இருந்த காட்டிற்குள் உடைத்து வீசப்பட்டிருந்ததை அவதானித்திருந்தனர். இந்நிலையில் குறித்த சூலத்தினை எடுத்து ஏற்கனவே இருந்த இடத்தில் வைத்து அன்றைய பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 18.01.2021 அன்று அமைச்சர் வருகைதந்தபோது மீண்டும் அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக அறியமுடிந்தது. இதிலே குறிப்பாக கடந்த 10.09.2020 நீதிமன்றில் இடம்பெற்ற இந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில், தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புக் கோரியிருந்தது. இந்நிலையில் நீதிமன்று தொல்லியல் திணைக்களம் கோரியதற்கமைய குருந்தூர்மலை வளாகத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேதான் அங்கு பாதுகாப்பு தரப்பினர் இருந்த நிலையில், அங்கிருந்து தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.” என்றார். https://newuthayan.com/ஆதி-ஐயனார்-ஆலய-அடையாளங்க/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.