Jump to content

மட்டக்களப்பில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

spacer.png

தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

விடுதலை செய், விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரபட்சம் காட்டாதே, கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும். என பல்வேறு கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது எழுப்பினர்.

spacer.png

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மற்றும் இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

spacer.png

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தலைவர் கதிர்.பாராதிதாஸன், கிழக்குமாகாண சூழலியல் நீPதிக்கான அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ரஜனி ஜெயப்பிரகாஸ், சிவில் அமைப்பின் உறுப்பினர். எஸ்.சீலன், சர்வ மத அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் ஒன்றிணைந்து. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

 

 

https://www.virakesari.lk/article/97902

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியா மற்றும் மட்டக்களப்பில் போராட்டம்

DSC00121-696x392.jpg
 31 Views
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதே நேரம் மட்டக்களப்பிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
DSC00162.jpg
 
வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  DSC00141.jpg
 
நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்பொது  கோவிட்19 தாக்கத்திற்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்களை எதிர் நோக்கியிருக்கின்றனர்
DSC00152.jpg
 
எனவே அவர்களது பிள்ளைகள் குடும்பத்தினரின் நலனையும் அவர்களது நலனையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
DSC00131.jpg
 
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது உறவுகளை சிறைகளில் மடியவிட வேண்டாம், தமிழ் அரசியல் கைதிகள் பயங்கவாதிகள் இல்லை, கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கு போன்ற பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
 
இந்நிலையில்,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
 
IMG_6818.jpg
இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளிளல் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
IMG_6773.jpg
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து,தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் போன்று சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
IMG_6829.jpg
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது
 
Link to comment
Share on other sites

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி போராட்டம்

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளிளல் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து,தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் போன்று சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த நாட்டில் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமா, இந்த நாட்டின் சட்டங்கள் ஒரு இனத்திற்கு மட்டுமா, அரசியல் கைதிகளின் விடுதலையில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்ற பல்வேறு கேள்விகள் அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி போராட்டம் (adaderana.lk)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு’ – வடக்கில் போராட்டம்

 
1-29-696x322.jpg
 25 Views

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில்,  நல்லூர் நல்லை ஆதினத்தின் முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1.1&permmsgid=msg-f:1688033126664978206&th=176d192f63f53f1e&view=fimg&sz=s0-l75-ft&attbid=ANGjdJ-7PdCP-oHVMLSuiuHnYr44ahzYm5hdU19FY4tqfSmkCLW0PYLXv7mmeAH3LYs59uEgwbAQct8BVhEA0WD5bD6nSs0otS9jRqE80An7qVDcNjD1__6mFRMVNF4&disp=emb

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க,  தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, எமது உறவுகளை சிறையில் மடியவிட வேண்டாம்”. போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1.3&permmsgid=msg-f:1688033126664978206&th=176d192f63f53f1e&view=fimg&sz=s0-l75-ft&attbid=ANGjdJ_SRn5VY08spFnnUi7Rmd03m_uaHO0K6j2yuLD2bF90DJ9ZLpah2ZWP9SQNNwpv5dz9rb_t6OKba79RizixO9LfkAu_8HU1ThWDfFBEcYIwKVBoO4lJzMrIYlk&disp=emb

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/protest-mullai.jpg

அதே போல் கிளிநொச்சி மற்றும் மன்னாரிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

https://www.ilakku.org/?p=38585

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசே விடுதலை செய்!! – அரசியல் கைதிகளுக்காய் கிளிநொச்சியிலும் போராட்டம்

FB_IMG_1609829935456.jpg?fit=720%2C540&ssl=1

 

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி – பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று (5) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

 

FB_IMG_1609829961693-300x225.jpg
Share
 
FB_IMG_1609829922486-300x225.jpg
Share
 
FB_IMG_1609829917749-300x225.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை திருக்கோவிலில் நடத்த இருந்த பேரணி பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.