Jump to content

மட்டக்களப்பில் தொடரும் அன்டிஜென் பரிசோதனைகள்


Recommended Posts

மட்டக்களப்பில் தொடரும் அன்டிஜென் பரிசோதனைகள்

மட்டக்களப்பு நகர் பகுதியில் தொடர்ந்தும் ரபிட் அன்டிஜென் பரிசோதனைகளை சுகாதாரப் பகுதியினர் எழுமாற்றாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காந்திப் பூங்காவில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் எனப் பலருக்கும் ரபிட் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

DSC_0040-1-300x199.jpg 

 குறிப்பாக மாவட்டத்துக்கு வெளியில் இருந்து வருகின்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் மக்களைக் கேட்டுகொள்கின்றனர்.

DSC_0046-300x199.jpg

நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தாமதியாது உடனடியாக ரபிட் அன்டிஜன் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு அலட்சியம் செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

DSC_0043-300x203.jpg

மக்கள் சுகாதாரத் துறையினருக்கு வழங்கும் ஆதரவிலும் ஒத்துழைப்பிலும்தான் கொரோனாவை நாட்டில் இருந்து ஒழிக்க முடியும். கண்டிப்பாக சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்காத வர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ளது.

 

Thinakkural.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.