Jump to content

தற்போது உள்ள கொரோனா தடுப்பு மருந்து புதிய வைரசிடமிருந்து பாதுகாக்குமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உள்ள கொரோனா தடுப்பு மருந்து புதிய வைரசிடமிருந்து பாதுகாக்குமா?

Digital News Team

பிரித்தானியாவிலிருந்து குடும்பநல மருத்துவரும், தமிழர் நலவாழ்வு நிறுவனத்தின் தலைவருமான  மருத்துவர் ஆ.புவிநாதன் நேர்காணல்

கோவிட் 19 ன் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸின் திரிபில் (strain) மாற்றம் ஏற்பட்டு ஒரு புதிய  திரிபு உருவாகி இருப்பது இங்கிலாந்தில் அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான  உலக நாடுகள் இங்கிலாந்து டனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. மேலும், இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் பரிசோதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மக்கள் மாத்திரமின்றி உலக சமூகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த புதிய வைரசின்  தாக்கம்  குறித்தும் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் பிரித்தானியாவில்  வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மருத்துவர் புவிநாதன் வழங்கிய செவ்வி

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%

கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸிற்கும்  பழைய வைரஸிற்கும் என்ன வேறுபாடு?

கொரோனா வைரஸ் ஒரு RNA வைரஸ்  இதில்  தொடர்ச்சியாக மரபணுவில் மாற்றங்கள் இயற்கயாகவே  நடைபெற்றுக்கொண்டு   தான்  இருக்கும். இற்றைவரைக்கும் 300 க்கும் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நுண்ணுயிர்த்துறை  ஆய்வு  தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் பிரித்தானியாவில் KENT  என்ற  பிரதேசத்தில் (b.1.1.7 ) என்ற புதியரக  வைரஸ்   அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா வையிரசை சுற்றி  உள்ள முட்களில்    மாற்றத்தை உள்ளடக்கியதாக இந்த வைரஸ் உருமாறியுள்ளது. இந்த வையிரஸ் ஏற்கனவே உள்ள வைரசைவிட 70% வீரியத்துடன் விரைவாக  பரவுகிறது.  இருந்தபோதிலும் இறப்பு விகிதம் அதிகரித்ததாக  இதுவரை உறுதி செய்யப்படவில்லை.  பிரித்தானியாவில் இனம் காணப்பட்ட இந்த புதிய வைரஸ்  குறித்து  அதிகம்  அச்சப்பட தேவையில்லை என்பதையே உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரும் இன்று உறுதி செய்துள்ளார், பிரித்தானியாவை தொடர்ந்து தற்போது  ஸ்பெயின் பிரான்ஸ் இந்த  வையிரஸ்  பரவி உள்ளதால் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம்  எழுந்துள்ளதை உணரமுடிகிறது.

தற்பொழுது  தென் ஆபிரிக்காவில் இருந்து லண்டனுக்கு வந்த சிலரிடம் வேறு  ரக  மாற்றங்களைக் கொண்ட வையிரஸ்  இனம் காணப்படுள்ளது  எனவே இந்த  நிலைமைகளை கவனத்தில் கொண்டு வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள  அச்சநிலையை போக்குவதற்கும் பிரித்தானியாவின் மருத்துவத்துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்த புதியவகை கொரோனா வைரஸின் பாதிப்பின்  அறிகுறிகளுக்கும் பழைய வகை வைரஸால் ஏற்படும் பாதிப்பிற்கும்  மாறுபட்டு உள்ளதா?

அறிகுறிகளில் மாற்றமில்லை. காய்ச்சல், தலைவலி, நுகர்தல் தன்மையில் குறைவு, சுவாசக் கோளாறுகள் போன்ற அறிகுறிகள் உள்ளன. ஆனால் இந்த வகை வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் விதம் பழைய வகையை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. வீரியமுள்ளவை மட்டுமே  வாழும். வீரியமில்லாதவை வாழாது என்பது டார்வின் கூற்று.

astra.jpg

இந்த பதிய வகை வைரஸூக்கு நோய் அரும்பு காலம்(incubation period) எத்தனை நாள் ?

இந்த புதிய வகைக்கும் பழைய வகையைப் போலவே நோய் அரும்பு காலம் 14 நாட்கள் தான் .

தற்பொழுது மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

கொரோனா தொற்று ஆரம்பித்த காலகட்டத்தில், இங்கிலாந்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. தற்போது சற்று குறைந்திருந்தாலும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமே. ஆனாலும் ஆரம்பகட்டத்தில் மக்களுக்கு இருந்த பதட்டம் இப்போது இல்லை. குறைவாகத்தான் உள்ளது. தற்பொழுதுகொரோனாவுடன் வாழப் பழகிவிட்டார்கள். தடுப்பூசி வந்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

முற்காலத்தில் ஒரு பிணிக்கு  எதிராக தடுப்பு மருந்து வர 20 வருடங்கள் கூட ஆகலாம் , ஆனால் தற்போது 10 மாத காலத்திலேயே தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்திருப்பது நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது .

தற்பொழுது தடுப்பூசி யாருக்கெல்லாம் அளிக்கப்படுகின்றது?

கொரோனாவால்  இறப்பவர்களில்  அதிக அளவு வயதானவர்களே. அதனால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. ஒருவருக்கு இரண்டு தவணையாக மூன்று வார இடைவெளியில் தடுப்பூசி அளிக்க வேண்டும். தற்பொழுது முதல்கட்டமாக வயதானவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது.

நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த அந்த பகுதியில் உள்ள 60 சதவீத பேருக்காவது எதிர்ப்புரதம் ( Antibodies) இருக்க வேண்டும். இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த Herd immunity நிலையை அடையலாம் என்று எதிர்பார்க்கிறோம். இன்ஃப்ளூயன்சா வைரஸூக்கான  தடுப்பு மருந்து ஒவ்வொரு ஆண்டும் அதன் புதிய திரிபுக்கு ஏற்றால் போல கண்டுபிடிக்கப்படும்.

pfizer1.jpg

தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு மாற்றத்திற்கு, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்புமருந்து பயனுள்ளதாக இருக்குமா?

கொரோனா வைரஸில் தற்பொழுது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் RNA sequenceஐ ஆராய்ந்து,   அதற்கான புதிய தடுப்பு மருந்து ஆராய்சியில் ஈடுபட்டிருப்பதாக ஃபிவிசர் நிறுவனம் கூறியுள்ளது.

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்தே, புதியவகை வைரஸிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கான ஆராய்ச்சி தரவுகள் இருக்கின்றதா என்று தெரியவில்லை.

ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு அந்த தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி எவ்வளவு கால அளவு இருக்கும்?

கொரொனா வைரஸ் ஒரு புதிய வைரஸ். இது குறித்த முழு தகவல்கள் அறியப்படவில்லை. தற்பொழுது 6 மாதத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் எனக் கூறுகின்றனர். தடுப்பு மருந்து போட்டால் ஒரு வருடத்திற்கான எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆறுமாத காலமே ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால் இன்னும் கூடுதல் கால ஆராய்ச்சிகள் தேவை.

பிரித்தானியாவில் பொருளாதார ரீதியான பாதிப்பு பற்றி கூற முடியுமா ?

இங்கு கொரோனா வைரஸ் காரணத்தால் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் தற்பொழுது ஒரு பொருளாதார உடன்பாடு கையொப்பமாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது .

இதன் மூலம் பொருளாதார பாதிப்புக் குறையும்.பல வியாபாரத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு வேலை பார்த்தவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் வரை 80% ஊதியம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர் .

அங்கு கல்வி சூழல் எவ்வாறு உள்ளது?

கோடை காலகட்டத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. நவம்பர் முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் தொடர்ந்து வீட்டில் இருப்பது மன வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதால், பாடசாலைகள் திறக்கப்பட்டு தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தான் மூடப்பட்டுள்ளன. பின்னர் தை மாதத்தில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. வேலைக்கு செல்பவர்களில், வீட்டில் இருந்து வேலை செய்யக் கூடியவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

இந்த புதிய வகை வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

சமூக இடைவெளியைக் கடைப் பிடித்தல், முகக் கவசத்தை அனைத்து இடங்களிலும் கட்டாயம் அணிதல், கொண்டாட்டங்களைத் தவிர்த்தல் ஆகியன புதிய வைரஸ் தொற்று பரவல் வந்தாலும், இந்த நடவடிக்கைகள் நமக்கு பாதுகாப்பு அளிக்கும். இந்த பண்டிகை காலத்தில் கவனமாக இருந்தால் அடுத்த பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடலாம்.

புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களின் நிலை என்ன?

அனைவருக்கும் பதட்டம் உள்ளது. ஆலயங்கள் கூட மூடப்பட்டுள்ளன. உறவினர்கள், நண்பர்களைச் சந்திக்க இயலவில்லை. வேலை இழந்தவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியில் தடுப்பூசி வந்துள்ள நம்பிக்கையில் அனைவரும் உள்ளனர்

 

https://thinakkural.lk/article/102855

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.