Jump to content

வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?

  • லாரா பிலிட்
  • பிபிசி முண்டோ மொழி சேவை
5 ஜனவரி 2021, 08:09 GMT
Picture showing a person in a hazard suit blocking viruses with a shield

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நமது எதிர்ப்பு மண்டலம் வைரஸ்களுக்கு எதிராக போராடுகிறது.

கொரோனா தொற்றுநோய் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

செல்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளின் இந்த சிக்கலான வலையமைப்பு தான், நோய் தொற்று மற்றும் நோய்களில் இருந்து தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள நம் மனித இனத்திடம் இருக்கும் முக்கிய ஆயுதம்.

உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கும் வயதாகிறது. இதனால் நாம் எல்லா வகையான நோய்களாளும் எளிதில் தாக்கப்படக் கூடியவர்களாகிறோம்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்பிருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இருப்பினும், நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வயது, நம்முடைய வரிசைக்கிரம வயதோடு (பிறந்தநாள் கொண்டாடும் வயது) ஒத்துப் போக வேண்டும் என்கிற அவசியல்லை.

"வரிசைக்கிரமப் படி 80 வயதுள்ள ஒருவருக்கு, 62 வயதான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட நபர்கள் இருக்கலாம் அல்லது அதற்கு நேர்மாறாகவும் இருக்கலாம்" என இஸ்ரேலின் டெக்னியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியின் நோயெதிர்ப்பு நிபுணர் ஷாய் ஷென் ஆர் பிபிசியிடம் கூறுகிறார்.

And elderly black woman sips coffee

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வயோதிகம் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. கோவிட்-19 போன்ற வைரஸுக்கு இலக்காகிறது.

நல்ல செய்தி என்னவென்றால், எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, நோயெதிர்ப்பு மண்டலம் வயதாவதை தாமதப்படுத்தலாம்.

அதைப் பார்ப்பதற்கு முன், நோயெதிர்ப்பு மண்டலம் எப்படி செயல்படுகிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

சில டி & பி செல்கள்

நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இரண்டு பிரிவுகளும் வேறுபட்ட வெள்ளை ரத்த அணுக்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு செல்களும் நம் உடலை தனித் தனி வழிகளில் பாதுகாக்கிறது.

நம் உடலுக்குள் ஒரு அந்நிய செல் வரும் போதை அதை உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே உள்ளார்ந்த நோயெதிர்ப்பு (Innate Immune Response) மண்டலம் வேலை செய்யத் தொடங்குகிறது. இது தான் நம் உடலின் முதற்கட்ட பாதுகாப்பரண்.

இந்த முதல் கட்ட எதிர்ப்பில் 'நியூட்ரோஃபில்ஸ்' (Neutrophils) என்றழைக்கப்படும் வெள்ளை ரத்த செல்களும் ஈடுபடுகின்றன. இந்த செல்கள் பேக்டீரியா & மோனோசைட்களைத் தாக்குகின்றன. அதோடு நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்படுத்த உதவுகிறது. உடலில் நோய் தொற்று இருப்பதை மற்ற நோயெதிர்ப்புச் செல்களை எச்சரிக்கிறது. இது போக என் கே என்றழைக்கப்படும் கில்லர் செல்கள் இருக்கின்றன. வைரஸ் மற்றும் புற்றுநோய்களுடன் போராடுவது தான் இதன் வேலை. மனிதர்கள் வயதாகும் போது இந்த மூன்று செல்களும் சிறப்பாக வேலை செய்யாது என்கிறார் பிரிட்டனின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃப்ளமேஷன் அண்ட் ஏஜிங்'-ல் இயக்குநராக இருக்கும் ஜேனட் லார்ட்.

Microscope image of white blood cells

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வெள்ளை இரத்த அணுக்கள் நம் உயிரினத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன

இதன் பிறகு தான் தகவமைப்பு நோயெதிர்ப்பு (Adaptive Response) என ஒன்று இருக்கிறது. இது டி & பி லிம்போசைட்களால் நடத்தப்படுகிறது. இந்த நோயெதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட பேத்தோஜென்னை எதிர்த்து வெளிப்படும். இந்த தகவமைப்பு நோயெதிர்ப்பு வெளிப்பட ஒரு சில நாட்கள் ஆகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட பேத்தோஜென்னுக்கு எதிராக இந்த செல்கள் களமிறங்கிவிட்டால், அந்த பேத்தோஜென்களை நினைவில் வைத்துக் கொண்டு மீண்டும் நம் உடலில் தோன்றினால் அதைத் தாக்கும்.

"உங்களுக்கு வயதாகும் போது, உங்கள் உடலில் புதிய குறைவான லிம்போசைட்கள் உருவாகியிருக்கும். இவை புதிதாக வந்திருக்கும் கொரோனாவை எதிர்த்தும் போராட வேண்டும். இதற்கு முன்பு, மற்ற தொற்றுகளைச் சமாளிக்க உங்கள் உடல் உற்பத்தி செய்த லிம்போசைட்டுகள், வயது அதிகரிக்கும் போது அத்தனை சிறப்பாக வேலை செய்யாது" என்கிறார் ஜேனட்.

வயது அதிகரிப்பது, உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அனைத்து செயல்பாட்டையும் குறைத்துவிடும்.

Illustration showing the location of the thymus

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டி லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்யும் ஒரு சுரப்பி தைமஸ், நாம் 20 வயதை எட்டும்போது சுருங்கத் தொடங்குகிறது

உள்ளார்ந்த நோயெதிர்ப்பு கொஞ்சம் கூடுதலாகவே செல்களை உற்பத்தி செய்யும், ஆனால் அது பலன் கொடுக்காது. தகவமைப்பு நோயெதிர்ப்பு குறைவான பி & டி லிம்போசைட்களை உருவாக்கும். இதில் பி லிம்போசைட்டுகள் எலும்பு மஜ்ஜைகளில் உருவாகும். எதிர்ப்பான்களை உருவாக்குவது இதன் பொறுப்பு. டி லிம்போசைட்கள் தைமஸ் என்கிற பாகத்தில் உருவாகிறது. பாதிக்கப்பட்டிருக்கும் செல்கள் மற்றும் பேத்தோஜென்களை கண்டுபிடித்து அழிப்பது தான் இதன் பணி.

"மனிதர்களின் தைமஸ் பாகம், 20 வயது முதல் சுருங்கத் தொடங்கிவிடும். இதனால் டி செல்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிடும். இப்படியே தைமஸ் சுருங்கிக் கொண்டே வந்து, 65 அல்லது 70 வயதில் அதன் அளவில் வெறும் மூன்று சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்கிறார்" ஜேனட் லார்ட்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பேத்தோஜென்களைக் குறித்த நினைவுகளை சேமித்து வைக்கும் செல்கள் குறைவதால், தொற்றுகளை எதிர்கொள்ளும் திறனை இழக்கிறது. அதோடு தடுப்பு மருந்துக்கு சாதகமான எதிர்வினையாற்றும் திறனை இழக்கிறது. இவையனைத்தும் நாம் வயதாவதால் நடக்கின்றன.

"ஃப்ளூ தடுப்பு மருந்துகளாக இருக்கும் போது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் தடுப்பு மருந்துக்கு சாதகமான எதிர்வினையாற்றாது" என்கிறார் ஷாய் ஷென் ஆர்.

வயது அதிகரிக்கும் போது ரத்தம் மற்றும் திசுக்களில் வீக்கம் அதிகரிக்கிறது. இதை விஞ்ஞானிகள் Inflammaging (inflammation மற்றும் ageing என்கிற இரு வார்த்தைகளைச் சேர்த்த புதிய சொல்) என்கிறார்கள்.

Man running

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நமது நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உடலை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்

"நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் சிறப்பாக செயல்படாததோடு, வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்" என்கிறார் பேராசிரியர் லார்ட்.

"நாம் வயதாகும் போது இந்த மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து, ஒரு நோய் தொற்றில் இருந்தோ அல்லது காயத்தில் இருந்தோ மீள்வதை சிரமமாக்குகிறது. சில நோய் தொற்றுகள் நீண்ட காலத்துக்கு நம் உடலில் இருக்கலாம்" என பிபிசியிடம் கூறுகிறார் கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் என்கார்னாசியன் மான்டசினோ.

ஹெர்பெஸ் ஜோஸ்டர் அல்லது காசநோய் போன்ற கட்டுப்பாட்டில் இருந்த நோய்த்தொற்றுகள் மீண்டும் தோன்றலாம். இது புதிய பேத்தோஜென்களுக்கான பாதிப்பு மற்றும் புற்றுநோயின் பாதிப்பை அதிகரிக்கிறது.

எப்போதும் வயது குறித்த கேள்வி அல்ல இது

நாம் அனைவரின் உடலும் சீரழிவைச் சந்தித்தாலும், வருடங்கள் கடந்து செல்லும்போது அதன் பாதையை முன் கூட்டியே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் அதன் வழியாக செல்லும் விகிதம் மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது.

இந்த செயல்முறை மரபியலால் பாதிக்கப்படுகிறது, ஒரு பெரிய அளவிற்கு நம் வாழ்க்கை முறையும் காரணம்.

சமீப காலம் வரை, நமது நோயெதிர்ப்பு வயதை தீர்மானிக்க முடியவில்லை.

A couple in a beach walk

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நடை பயிற்சி போன்ற இலகுவான உடல் செயல்பாடுகள் கூட நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதிப்பை குறைக்க உதவுகின்றன

ஆனால் ஷென்-ஓர் மற்றும் அவரது குழு, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இந்த தகவலைப் பெறுவதற்கான ஒரு முறையை உருவாக்கியிருக்கிறார்கள். இது வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமானதாக இருக்கும்.

"நோயெதிர்ப்பு மண்டலத்தின் 18 செல் வகைகளின் கலவையையும், இரத்த மாதிரியில் இருக்கும் மரபணுக்களின் வெளிப்பாட்டையும் ஆராய்வதன் மூலம், ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வயதைக் கண்டறிய முடியும்" என்று ஷென்-ஆர் விளக்குகிறார்.

நம் உடலின் செயல்பாடு குறையும் செயல்முறையின் வேகத்தில் உள்ள மாறுபாடு, பாலினத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

"இரு பாலினத்தவர்களுக்கும் வயதாகும். சில விஷயங்களில் பாலியல் ஹார்மோன்களின் குறிப்பிட்ட விளைவுகளால் ஆண்கள் மற்றும் பெண்களில் வெவ்வேறு அளவில் வயதாகின்றன" என யு.சி.எல்.ஏவின் மான்டசினோ கூறுகிறார்.

பெண்களின் உடலில், மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் பாதுகாப்பு விளைவுகளை சமன் செய்கிறது. இது பெண்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.

சுறுசுறுப்பாக இருங்கள்

இந்த கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டது போல, வயதான செயல்முறையை நம்மால் குறைக்க முடியும்.

அதற்கு முக்கியமாக உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

Woman sitting on a sofa and looking at her mobile phone

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது "புதிய புகைபிடித்தல்" போன்றதற்கு ஒப்பாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்

"இன்று, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, முன்பு புகைபிடித்ததற்குச் சமம். வாழ்நாள் முழுவதும் தங்களின் முதுமை காலம் வரை சுறுசுறுப்பாக இருந்தவர்களுடனான ஆய்வுகளின் முடிவுகள் சிறப்பாக இருந்தன. அவர்கள் உடலில் நிறைய டி செல்கள் இருந்தன, தைமஸ் சுருங்கவில்லை" என்கிறார் ஜேனட் லார்ட்.

"ஒரு நாளைக்கு 10,000 அடி நடப்பவர்களின் உடலில் நியூட்ரோஃபில்ஸ் 20 வயதுடையவர்களைப் போலவே இருக்கிறது என மற்றொரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாம் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை அளவிடும் சாதனங்களை விற்கும் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு தான் இந்த எண் என நான் நினைத்தேன், ஆனால் நாங்கள் ஆய்வு செய்தபோது நான் முற்றிலும் ஆச்சரியப்பட்டேன்" என ஒப்புக்கொள்கிறார் ஜேனட் லார்ட்.

"வல்லுநர்கள் கூறுகையில், டிப்டோக்கள், படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் கைகளால் கொஞ்சம் எடையைத் தூக்குவது போன்ற எளிய பயிற்சிகளைச் செய்வது ஒரு நல்ல தொடக்கம், ஏதாவது செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடிய எதுவும் உதவும்" என்றார் ஜேனட்.

சத்தான உணவு, நார்ச்சத்து நிறைந்த, புளித்த உணவுகள் மற்றும் கொஞ்சம் சிவப்பு இறைச்சி குடல் மைக்ரோபயோட்டாவின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். அதோடு ஒவ்வொரு இரவும் ஆறரை அல்லது ஏழு மணி நேரம் தூக்கம் இதற்கு உதவும்.

மீண்டும் பழைய நிலைக்கு வருவது

Elderly man on a bike

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பர்மிங்காம் ஆய்வுகளில் ஒன்று, தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கும் வயதான சைக்கிள் ஓட்டிகளுக்கு மிகவும் இளைய நபரைப் போன்ற நோய் எதிர்ப்பு அமைப்பு இருப்பதைக் காட்டியது

கடந்த ஆண்டு, யு.சி.எல்.ஏ-வின் ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் என்கிற அறிவியல் சஞ்சிகையில் ஒர் ஆய்வை வெளியிட்டனர். அதில் மூன்று பொதுவான மருந்துகளின் காக்டெய்ல் (வளர்ச்சி ஹார்மோன் மற்றும் இரண்டு நீரிழிவு மருந்துகள்) ஒன்பது தன்னார்வலர்களுக்குச் செலுத்தப்பட்டது. அக்குழுவினரின் உயிரியல் வயதிலிருந்து சராசரியாக 2.5 ஆண்டுகள் குறைவானவர்கள். இவர்கள் அனைவரும் 51 முதல் 65 வயது வரையிலான வெள்ளையின ஆண்கள்.

"இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த ஒன்பது பேரில், ஏழு பேரின் நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் தைமஸ் திசு உட்பட புத்துணர்வடைந்திருப்பதாகக் காட்டியுள்ளன" என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தன்னுடைய குழு பணிபுரியும் ஒரு மருந்தைக் குறிப்பிடுகிறார் ஷென்-ஆர். ஆனால் அதன் சோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மருந்தால் தலைகீழ் மாற்றம் சாத்தியம் என்பதைக் காட்டுகிறது.

"நோயெதிர்ப்பு மண்டலத்தில் வயது குறைவதை நாங்கள் கண்டோம், ஆனால் இது நிரந்தரமாக பராமரிக்கப்படுமா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை," என்கிறார்.

ஆனால் மோசமடையும் வேகத்தைக் குறைப்பது கூட, நம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு முக்கியமான படியாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.