Jump to content

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையாளர்களாக நாம் தயாராக உள்ளோம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையாளர்களாக நாம் தயாராக உள்ளோம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

By Ragavi
 
tna-1.jpg


இந்த நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் ஏற்பட்டு அதனால் நாட்டில் இத்தனை தாக்கங்கள் ஏற்பட ஜனாதிபதியே பிரதான காரணமாகும்.

சுகாதார துறையினர் கையாள வேண்டிய விடயங்களை இராணுவத்திடம் ஒப்படைத்தமையினாலேயே அனைத்தும் பிழைத்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார். 


கொவிட் -19 தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் விடுவிக்க வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையாளர்களாக நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழ் வரும் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சிறுவர் ஊழிய வயதெல்லையை 16 வயதாக்கும் யோசனை நல்லதொன்றாகும். அதேபோல் தோட்டத்தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக வழங்குவது இன்னமும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. 

ஆயிரம் ரூபாய் வழங்குவதில் அரசாங்கம் எந்தவித முயற்சிகளும் எடுத்ததாக தெரியவில்லை. வயதெல்லைக்கு ஒரு சட்டத்தை இயற்றுவதை போல ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தையும் இயற்றி மலையக மக்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

அதேபோல் இலங்கை இன்று கொவிட் -19 வைரஸ் தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. ஒரு நாளைக்கு சராசரியாக ஐநூறு கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டும் வருகின்றனர். இதனால் மரணங்களும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. 

எனவே இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதியாக இருபத்துடன், இருபத்தைந்து மாவட்டங்களில் இருபத்தைந்து இராணுவ அதிகாரிகளை நியமித்து அவர்களை குறித்த கொவிட் கணிகாணிப்பு மற்றும் மேற்பார்வை செய்ய ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இந்த நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் ஏற்பட்டு அதனால் இத்தனை தாக்கங்கள் ஏற்பட முழுமையாக காரணம் ஜனாதிபதியே. அவரே இதற்கான பொறுப்பினை ஏற்றாக வேண்டும். ஒரு சிறிய தீவுக்குள், குறுகிய மக்கள் தொகை வாழும் இந்த நாட்டுக்குள் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாதமைக்கு பிரதான காரணம் பொறுப்புகளை சுகாதார துறையிடம் இருந்து இராணுவத்திற்கு வழங்கியமையேயாகும். இதுதான் நாடாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது. 

இராணுவத்தை வைத்து மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர். தேர்தல் வெற்றியை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு அரசாங்கம் தீர்மானம் எடுக்கின்றது. அப்போது இருந்த நிலையில் இன்று இந்த நாட்டு மக்களின் மனநிலை இல்லை.

இந்த ஆட்சியில் வெளிநாட்டு தூதுவர்களாக, அமைச்சுக்களின் செயலாளர்களாக, மாகாண ஆளுநர்களாக, அரச திணைக்கள அதிகாரிகளாக இராணுவ அதிகாரிகளாக நியமித்து இந்த நாட்டை முழுமையாக பாதாளத்தில் தள்ளும் செயற்பாட்டை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

எனவே இராணுவ மயப்படுத்தல் இல்லாத ஜனநாயக நாட்டினை உருவாக்க வேண்டும். அதேபோல் வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர், 

கொவிட் -19 தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அணைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களில் அமைப்பினர், பொதுமக்கள் சார்வில் இன்று காலை 10 மணிக்கு அடையாள கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் இடம்பெற்றது உரிமைப் போர், அதில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு இன்று கொவிட் -19 தொற்று பரவக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது, எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அல்லது அவர்களை பிணையில் விடுவதர்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளோம் என்பதையும் ஜனாதிபதியிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதனை சபையில் மக்கள் சார்பில் முன்வைக்க விரும்புகிறேன் என்றார்.

 

 

http://www.battinews.com/2021/01/blog-post_93.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.