Jump to content

விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம் – கிஸ்ணன் மகிந்தகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்” – கிஸ்ணன் மகிந்தகுமார்

 
20190501_140529-696x522.jpg
 87 Views

விழிப்புலனிழந்தோரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் வகையில் பிரெய்லி எனும் தொடுகை உணர்வு எழுத்துரு உருவாக்கப்பட்டு 196 ஆண்டுகளாகின்றன.  இவ்வெழுத்துரு வடிவமைப்பை பிரெய்லி எனும் விழிப்புலனிழந்த  பிரெஞ்சு கல்வியியலாளரால் 1824 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

விழிப்புலனற்றோரின் வாழ்விற்கு வழிகாட்டிய அவரை நினைவுகூரும் விதமாக அவரின் பிறந்த தினமான ஜனவரி 4ம் திகதி சர்வதேச பிரெய்லி தினமாக 2019 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனை ஒட்டி இலங்கை வடகிழக்கு விழிப்புலனிழந்தோர் சங்க செயலாளர் கிஸ்ணன் மகிந்தகுமார் அவர்களின் நேர்காணல் இங்கு வழங்கப்படுகிறது.

கேள்வி –

தங்கள் அமைப்பை பற்றி…? எத்தனை பேர், எங்கு, எவ்வகை வலு இழப்புகளுடன்? என்பது பற்றிக் கூறுங்கள்?

பதில் –

எமது சங்கத்தின் பெயர் ‘வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்’ வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பார்வையிழந்தவர்களையும், வடக்கில் ஏனைய காரணிகளால் பார்வையிழந்தவர்களையும் உள்ளடக்கி 278 பார்வையற்ற பயனாளிகளுடன் இயங்கி வருகின்றது.

இதில் பார்வையிழப்புடன் இரு கைகளை, இரு கால்களை, ஒரு கையினை, ஒரு காலினை இழந்தவர்களும் உள்ளார்கள். தலைக் காயத்தினால் பார்வையிழந்தவர்களும் உள்ளார்கள். இதில் 81 பெண்களும், 197 ஆண்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.

IMG_0408.jpg

பார்வையற்றவர்களை மாத்திரமின்றி அவர்களின் குடும்பங்களிலுள்ள 235 சாதாரண பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளையும் கவனித்து வருகின்றோம். தமிழர்களின் உரிமைப் போராட்டம் பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுவதால் போராட்ட அமைப்பிலிருந்து பார்வையிழந்த நபர்களை அரசும் ஏற்க மறுத்தது. அடைக்கலம் கொடுக்க பார்வையற்றோர் நலன்பேணும் நிறுவனங்களும் தயக்கம் காட்டியதால், அனைவரையும் அரவணைத்து செயற்படும் நோக்கிலேயே எமது சங்கமானது 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

“விழியின் இழப்பு வாழ்வின் இழப்பல்ல” என்பதே எமது கொள்கை. வாழ்க்கை என்பது போராட்டம். அதில் விழியின் இழப்பு வாழ்வின் இழப்பல்ல. பார்வையிழப்பு பாவத்தின் பலன் என்பார் சிலர். ஆனால் இயற்கையின் சூட்சுமம் புரிந்தவர் இதனை இயல்பாய் கொள்வார்.

ஒரு மனிதனுக்கு ஒற்றைக்கண், ஒற்றைக்காது, ஒற்றை ஈரல், ஒற்றை நுரையீரல், ஒற்றை சிறுநீரகம் என ஒன்றே போதுமானது. ஆனால் இயற்கை இவற்றை இரண்டாய் படைத்திருக்கின்றது. இழப்பு என்பது இயற்கையும் அறியாமல் நிகழலாம். தடுக்க தன்னால் இயலாவிட்டாலும் தற்காப்பிற்காய் இன்னொரு அவயத்தை இழப்பிற்கு ஈடுசெய்ய படைத்தது இயற்கை. முயற்சிக்கு முற்றுப்புள்ளி மூச்சடங்கும்பொழுதுதான் இடவேண்டும். இரு விழியிழந்தால் மொழிபடிக்க வழியென்ன? இன்னொரு வழிக்கு தொடக்கப்புள்ளி வைக்க நினைத்த இயற்கை, லூயி பிரெயில் என்பவரை படைத்தது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பர். 1809ஆம் ஆண்டு தை 4ஆம் நாள், பிரான்சு நாட்டில் கூப்விரே என்னும் கிராமத்தில் இவர் பிறந்தார்.

இவர் கண்டறிந்த குற்றெழுத்தையே நாமும் பயன்படுத்துகின்றோம். தற்சமயம் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டதால், கணினியின் உதவியுடன் பார்வையுள்ளவர்களுடனான தொடர்பாடலை பேணி வருகின்றோம்

20191102_152251.jpg

கேள்வி –

தற்போது உள்ள வளங்கள் என்ன?

(பயிற்றப்பட்ட மனித வலு, நிதி, பௌதீக வளங்கள், நிர்வாக ஒழுங்கு)

பதில் –

பிரெய்லி முறை பயிற்சி வழங்கும், தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் ஆசிரியர்கள் வளம் உள்ளது. ஆனால் பௌதீக வளங்கள் போதுமானதாக இல்லை. இட வசதி, பயிற்சியளிப்பதற்குரிய சில கருவிகள். இரு கட்டட வசதி, மின்சார வசதி, சில தளபாட வசதி போன்ற வளங்கள் எம்மிடம் உள்ளது. தகவல் தொழில்நுட்ப பயிற்சியளிக்கும் வல்லமையுள்ள ஐந்து பார்வையற்றவர்கள் வடக்கு கிழக்கில் உள்ளார்கள். ஐந்து பார்வையற்றவர்கள் பிரெய்லி முறை பயிற்சி வழங்கக்கூடிய வல்லமையுள்ளவர்களாக உள்ளார்கள். இந்த பயிற்சிகள் வழியே கல்வி கற்று தற்சமயம் வடக்கிலே பார்வையற்ற இரு சட்டவாளர்களும், சட்டக்கல்வியினை தொடரும் ஒரு மாணவனும் உள்ளார்கள்.

அரச உத்தியோகத்தர்களாக 19 பார்வையற்றவர்கள் பணியாற்றுவதுடன் மூவர் ஆசிரியர்களாகவும் கடமையாற்றுகின்றார்கள். கிழக்கு மாகாணத்திலே எட்டு அரச உத்தியோகத்தர்களும் இரண்டு ஆசிரியர்களும் உள்ளார்கள். இதனைவிட பல்கலைக்கழக கற்கைநெறியினை பூர்த்தி செய்த ஆறு பேரும் இக் கற்கைநெறியினை தொடர்கின்ற ஒன்பதுபேரும் வடக்கு கிழக்கில் உள்ளார்கள்.

நிதி நிலைமையினை பொறுத்தவரை அவ்வப்பொழுது உதவியளிக்கின்ற கொடையாளிகளின் உதவியினூடாகவே விழிப்புலனற்றவர்களுக்கான எமது செயற்திட்டங்களானது முன்னெடுக்கப்படுகின்றது. யாப்பு அடிப்படையிலேயே எமது சங்கமானது கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. ஒன்பது பார்வையற்றவர்கள் கொண்ட இயக்குநர் சபையால் எமது சங்கமானது நிர்வகிக்கப்படுவதுடன், சமூகப்பணி செய்யும் வெளிநபர்களையும் இணைத்து நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் தத்துவம்கொண்ட ஐவர் அடங்கிய காப்பாளர் சபையால் காப்பளிக்கப்பட்டிருக்கின்றது. மூவர் கொண்ட ஆலோசகர் குழுவால் வழிநடத்தப்படுகின்றது. அத்துடன் சங்கம் சாரா வெளிநபர் ஒருவர் நிதிக்கட்டுப்பாட்டாளராக செயற்படுகின்றார். நிதி விடுவிக்கும்பொழுது பொருளாளருடன், தலைவர் அல்லது செயலாளர் கையெழுத்திடவேண்டும் அதனை நிதிக்கட்டுப்பாட்டாளர் உறுதிசெய்ய கையொப்பமிட வேண்டும். இரண்டாண்டிற்கு ஒருமுறை பொதுச் சபையினரை கூட்டி நிர்வாகத் தெரிவு இடம்பெறும்.

20190728_092714.jpg

கேள்வி –

பிரெய்லி முறை பயிற்சி பெற்றோர் எத்தனை பேர்? எங்கெங்கு உள்ளனர்?

பதில் –

பிரெய்லி முறை பயிற்சி என்பது இலங்கையில் அனைத்துப் பார்வையற்றவர்களும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயிற்சியாக உள்ளது. ஏனெனில் பார்வையற்ற ஒருவர் குற்றெழுத்திலேயோ அல்லது சாதாரண தட்டச்சிலேயோ தான் பரீட்சை எழுத முடியும். இதனால் வடக்கு கிழக்கிலுள்ள பாடசாலை சென்ற பார்வையற்றவர்கள் அனைவரும் இப்பயிற்சியினை பெற்றிருக்கின்றார்கள்.

கேள்வி –

வேறு நவீன தொடர்பாடல் பயிற்சி பெற்றவர்கள் எத்தனை பேர் எங்கெங்கு உள்ளனர்?

பதில் –

வடபகுதியிலே பார்வையற்ற இருவர் கணினி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறியில் தேசிய தொழில் தகுதிகள் நிலை 4இல் (National Vocational Qualifications – NVQ Level 4) சான்றிதழ் பெற்றிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் ஆறு பார்வையற்றவர்கள்  கணினி மென்பொருள் கற்கைநெறியில் தேசிய தொழில் தகுதிகள் நிலை 3 இல் சான்றிதழ் பெற்றிருக்கின்றார்கள். இதனைவிட கணினி மென்பொருள் கற்கைநெறியினை கற்ற 45 பார்வையற்றவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் உள்ளார்கள்.

கேள்வி –

எதிர்காலத்தில் எவ்வாறான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்கள் விழிப்புலனற்றோர் வாழ்விற்கு வழிகாட்டும் எனக் கருதுகிறீர்கள்?

20190830_105743.jpg

பதில் –

இனம்காட்டும் கண்ணாடி (eg – MY Eye 2) தடைகள் காட்டும் பேசும் வெண்பிரம்பு (talking white cane) போன்றன எதிர்ப்படும் தடைகளை இனங்காட்டுவதுடன் எதிர்ப்படும் தடையின் தூரத்தையும் சொல்ல வல்லது. இனங்காட்டும் கண்ணாடியானது எதிர்ப்படும் தடைகளானது மனிதர்களென்றால் அதனைக்கூட இனங்கண்டு சொல்ல வல்லது.

இந்த வரப்பிரசாதம் பார்வையற்றவர்களுக்கு கிடைக்கச் செய்வதினூடாக எதிகாலத்தில் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு வழி சமைக்கலாம். நவீன தகவல் தொழிநுட்ப வசதிகளில் திரைவாசிப்பான் (Screen Reader)  சேர்த்து கட்டப்படுவதால் பார்வையற்றவர்களும் அவற்றை கையாளக்கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு- சிமாட் கைத்தொலைபேசிகள், கணினிகள் போன்றன பார்வையற்றவர்களும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய நவீன உலகம் இணையத்திற்குள் சுருங்கி விட்டதால், இத்தகைய வசதிகளினூடாக பார்வையற்றவர்களும் இந்த தகவல் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி நவீன உலகோடு சேர்ந்து பயணிக்க முடியும். இதனைவிட நிறங்களை அடையாளம் கண்டுகொள்ளும் சாதனம், காசொன்றின் பெறுமதியை இனம்காணும் சாதனம் என பல சாதனங்கள் பார்வையற்றவர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி –

அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உங்களுக்கு எவ்வாறான உதவிகள் தேவைப்படுகின்றன?

20190826_103907.jpg

பதில் –

பொதுவாகவே பார்வையற்றவர்களுக்குரிய தொழில்நுட்ப கருவிகளுக்கான கேள்விகள் குறைந்தளவே காணப்படுகின்றது. அதேசமயம் இத்தகைய கருவிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேதான் காணப்படுகின்றது.

பார்வையற்றவர்களுக்குரிய தொழில்நுட்ப கருவிகளை அரசாங்கமே பெற்றுக்கொடுக்கின்றன. இதனால் பார்வையற்றவர்களுக்காக தயாரிக்கப்படும் இலத்திரனியல் கருவிகள் மிகவும் விலையுயர்ந்ததாக காணப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எமது பார்வையற்ற பயனாளிகளால் இவற்றை பெற்றுக்கொள்ள இயலாது. முற்போக்கு சிந்தனையாளர்கள், உதவும் வசதியுடையவர்கள் பார்வையற்றவர்களுக்குரிய இத்தகைய இலத்திரனியல் கருவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும். தகவல் தொழில்நுட்ப பயிற்சியளிப்பதற்கு தேவையான செலவீனத்தை பொறுப்பேற்க முன்வர வேண்டும்.

இலங்கை பாடப் புத்தகங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை யூனிக்கோட் முறைக்கு மாற்றினால் அதனை பார்வையற்றவர்கள் திரைவாசிப்பான் தொழில்நுட்ப  உதவியுடன் வாசித்தறிந்துகொள்ள முடியும்.

குறித்த காலம் ஒரு பணியாளர் சம்பளத்தினை பொறுப்பேற்க யாரேனும் முன்வருவதினூடாக இக்காரியத்தினை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அரச கல்வித் திணைக்கள பரீட்சைகளை கணினி மயமாக்கினால் பார்வையற்றவர்கள் பார்வையுள்ள எவரினதும் உதவியின்றி சுயமாகவே தேர்வில் பங்குகொள்ள முடியும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுத்தருவதற்கு உதவவேண்டும்.

 

https://www.ilakku.org/?p=38623

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.