Jump to content

மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை

aru.jpg?fit=758%2C369&ssl=1

மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை. நிலைமைகளைக் கவனத்திலெடுத்தே அதற்கு அனுமதி வழங்க முடியும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் சந்தைக் கொத்தணி பரவலையடுத்து மூடப்பட்டுள்ள தமது வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மருதனார்மடம் சந்தைச் சூழலிலுள்ள வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கேட்டபோதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையதாக நேற்றும் (நேற்றுமுன்தினமும்) 7பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


 
மருதனார்மடத்திலுள்ள வாகனச் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வந்து 4 மணி நேரம் நின்று சென்ற ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் எவ்வாறு வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதிக்க முடியும்?. மருதனார்மடக் கொத்தணி குறைவடைந்து இல்லாமல் போகும்போதே அனுமதிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். நாம் நிலைமைகளை அவதானித்து வருகின்றோம்.

அதற்கு அமைவாகவே கடைத் தொகுதியை திறப்பதற்கான அனுமதியை வழங்க முடியும் என்று சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதேவேளை, மருதனார்மடம் சந்தைக் கொத்தணி பரவலையடுத்து மூடப்பட்டுள்ள தமது வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மருதனார்மடம் சந்தைச் சூழலிலுள்ள வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மனுவை சுன்னாகம் பிரதேச சபைத் தவிசாளரிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

தற்போதுள்ள சூழலில் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு, நாம் எமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், இந்தக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தவும் ஏதுவாக கடைத் தொகுதியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

https://newuthayan.com/மருதனார்மடம்-கடைத்-தொகுத/

 

Link to comment
Share on other sites

  • உடையார் changed the title to மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

என்ன உடையார், சம்பந்தர் நாளைக்கு மருதனாமடம் வருகிறாரா?

தலைப்பு பிழைச்சு போச்சு😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.