Jump to content

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

நல்லூரான் செம்மணி வளைவு எதிர்வரும் 14 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

நல்லூர் கந்தனின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் இந்நத வளைவு செம்மணி வீதியில் புதிதாக, பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இந்த வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த வளைவு அமைக்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நிதியொதுக்கீடுகளை பெற்றுக்கொடுத்ததோடு, தனது சொந்த நிதி உதவிகளையும் வழங்கியிருந்தார்.

2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் குறித்த வளைவுக்கான அடிக்கல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாட்டி வைத்து வளைவின் கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/157466?ref=imp-news

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
Quote

யாழ். மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள்

 

இதென்ன புதுசா இருக்கு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் கோயிலுக்கு செலவு செய்யிறதெண்டால் ஒண்டையும் யோசியாதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

நல்லவேளை அங்கே இருப்பதால் தமிழர் கலாச்சாரம் என்டு தைரியமா போட முடிகிறது..

Screenshot-2021-01-06-23-01-36-749-org-m

இங்கன இருந்தால் திராவிட கலாச்சாரம் என்டு கம்பு சுத்த ஒரு குரூப் கிளம்பி இருக்கும் ..☺️..😊

Link to comment
Share on other sites

யாழ்பாணத்தின் பாரம்பரிய  அடையாளமான “யாழ்” எங்கே? பழைய வளைவின வடிவம் மிக  அழகாக இருந்தது. புதிதாக செய்யப் போய் கெடுத்து வைத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில பார்க்கிறதுபோல் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 மிகவும் அழகாக இருக்கின்றது.

எடுத்ததெற்கெல்லாம் பரந்து பட்டு யோசித்தால் பிச்சை எடுத்தாலும் வாழமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இந்த வளைவு செம்மணி வீதியில் புதிதாக, பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு யாழ் வரவேற்கிறது வளைவுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.

யாழ் வரவேற்கிறது வளைவு.. யாழ் - கண்டி வீதியில் யாழ் நோக்கிய பாதையில்.. நாவற்குழியை தாண்டி உள்ளது.

இது யாழ் நோக்கிய பாதையில் செம்மணி வீதியில் உள்ளது. செம்மணி வீதி தான் நல்லூரை யாழ் - கண்டி வீதியில் இணைக்கிறது.

இந்த வளைவால்.. அந்த வளைவுக்கு எந்த சேதாரமும் வராது.

ஆனால் நாவற்குழியில்.. புத்தரின் வளைவு ஒன்று நிச்சயம் கிளம்பும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

ஆனால் நாவற்குழியில்.. புத்தரின் வளைவு ஒன்று நிச்சயம் கிளம்பும். 

புத்தரின் வளைவு வரவில்லையே தவிர மற்றும் படி புத்தர் சிலை தாராளமாக எல்லா இடங்களிலும் உண்டு.அந்த மதத்துக்குரியவர்கள் அந்த இடத்தில் இல்லாவிடினும்... அதை பற்றியெல்லாம் நாம் கணக்கெடுக்க மாட்டோம்.

ஆனால் நுழைவாயிலில் கோபுரங்கள் வந்திருக்கெல்லோ அதுதான் நமக்கு இடைஞ்சல்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nedukkalapoovan said:

சிலருக்கு யாழ் வரவேற்கிறது வளைவுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.

யாழ் வரவேற்கிறது வளைவு.. யாழ் - கண்டி வீதியில் யாழ் நோக்கிய பாதையில்.. நாவற்குழியை தாண்டி உள்ளது.

இது யாழ் நோக்கிய பாதையில் செம்மணி வீதியில் உள்ளது. செம்மணி வீதி தான் நல்லூரை யாழ் - கண்டி வீதியில் இணைக்கிறது.

இந்த வளைவால்.. அந்த வளைவுக்கு எந்த சேதாரமும் வராது.

ஆனால் நாவற்குழியில்.. புத்தரின் வளைவு ஒன்று நிச்சயம் கிளம்பும். 

உங்களுக்குத்தான் இந்த வளைவின் சூட்சுமம் புரியவில்லை. 

இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறேன்.

1) யாழ் வரவுக்கும் இந்த செம்மணி வளைவிற்கும் இடையிலான தூரம் என்ன.?

பதிலைத் தாருங்கள்,  மிகுதி ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இரண்டாணது வளைவா? இனி இப்படியே வளைவுகள் கட்டி கொண்டிருக்க போகிறார்கள்  வளைவு கலாச்சாரம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்குத்தான் இந்த வளைவின் சூட்சுமம் புரியவில்லை. 

இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறேன்.

1) யாழ் வரவுக்கும் இந்த செம்மணி வளைவிற்கும் இடையிலான தூரம் என்ன.?

பதிலைத் தாருங்கள்,  மிகுதி ...

இது நல்லூர் பிரதேச சபைக்குள் வருகிறது.

அது யாழ் மாநகருக்குள் வருகிறது.

இது நல்லூர் - செம்மணி வீதியில் வருகிறது.

அது யாழ் - கண்டி வீதில் வருகிறது.

அது மாநகர சபை/ நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமானது.

இது நல்லூர் மக்களுக்குச் சொந்தமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

இது நல்லூர் பிரதேச சபைக்குள் வருகிறது..

இது நல்லூர் - செம்மணி வீதியில் வருகிறது.

இது நல்லூர் மக்களுக்குச் சொந்தமானது. 

ஆனால் கந்தபுராண கலாச்சார வளைவைக் கட்டிக்கொடுத்தவர் காரைநகரைச் சேர்ந்தவர் என்பதால் தீவுப்பகுதி மக்களுக்கும் வளைவில் பங்குரிமை உள்ளது😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

இது நல்லூர் பிரதேச சபைக்குள் வருகிறது.

அது யாழ் மாநகருக்குள் வருகிறது.

இது நல்லூர் - செம்மணி வீதியில் வருகிறது.

அது யாழ் - கண்டி வீதில் வருகிறது.

அது மாநகர சபை/ நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமானது.

இது நல்லூர் மக்களுக்குச் சொந்தமானது. 

என்னுடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் தாருங்கள். ********போன்று(🤣) சளாப்பல்   பதில் தராதீர்கள். 

இரண்டுக்கும் இடையிலான இடைவெளி என்ன.. ?

இப்படியொரு தேவை ஏன் வந்தது. ?

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

என்னுடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் தாருங்கள். ******போன்று(🤣) சளாப்பல்   பதில் தராதீர்கள். 

இரண்டுக்கும் இடையிலான இடைவெளி என்ன.. ?

இப்படியொரு தேவை ஏன் வந்தது. ?

😂

நல்லூரை அண்டி இந்த வளைவே இப்ப வந்திருக்குது. இதனை வரவேற்கிறேன்.

அது மாநகரை அண்டி வருகிறது... அதையும் வரவேற்கிறேன்.

இந்த வளைவு வாறதால என்ன பிரச்சனை தங்களுக்கு..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

நல்லூரை அண்டி இந்த வளைவே இப்ப வந்திருக்குது. இதனை வரவேற்கிறேன்.

அது மாநகரை அண்டி வருகிறது... அதையும் வரவேற்கிறேன்.

இந்த வளைவு வாறதால என்ன பிரச்சனை தங்களுக்கு..???!

உங்களால் நேர்படப் பேச முடியாதா.? 

எனது கேள்விக்குப் பதிலைத் தாருங்கள்.

(எனக்கு என்ன பிரச்சனை என்று இறுதியில் கூறுகிறேன்)

Link to comment
Share on other sites

 

 

4 hours ago, Kapithan said:

உங்களுக்குத்தான் இந்த வளைவின் சூட்சுமம் புரியவில்லை. 

இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறேன்.

1) யாழ் வரவுக்கும் இந்த செம்மணி வளைவிற்கும் இடையிலான தூரம் என்ன.?

பதிலைத் தாருங்கள்,  மிகுதி ...

600m..கொஞ்சம் கூட குறைய வர கூடும் 
இன்னொரு வளைவும் காட்டுகிறார்கள் கோயில் வீதியில், கைலாச பிள்ளையார் கோயில்க்கு அண்மையில், ரியோ ஐஸ் கிரீம் கடை முதலாளி காட்டுகிறாராம் 

Link to comment
Share on other sites

https://images.app.goo.gl/v6FWApAjKShodZzP6

மேலே உள்ள இணைப்பில் உகந்தை முருகன் கோயிலில் அமைத்துள்ள வளைவு இணைத்திருக்கிறேன் 

வீதி வளைவிற்கும் கோயில்  வளைவிற்கும்  வித்தியாசம் இருக்கிறது இது கோயில் விளைவினை நினைவூட்டுகிறது 
இதை விட yarl நகர் வரவேற்கிறது  எனும் முன்னைய வளைவு எனக்கு பிடித்திருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அபராஜிதன் said:

 

 

600m..கொஞ்சம் கூட குறைய வர கூடும் 
இன்னொரு வளைவும் காட்டுகிறார்கள் கோயில் வீதியில், கைலாச பிள்ளையார் கோயில்க்கு அண்மையில், ரியோ ஐஸ் கிரீம் கடை முதலாளி காட்டுகிறாராம் 

600 Mtr. தொலைவில் யாழ் வரவு இருக்க இப்போது அப்படியொரு தேவை எங்கிருந்து சி வி கே சிவ ஞானத்திற்கு(😜) எங்கிருந்து வந்தது.. ?

இதனூடாக எதனைச் சொல்ல விளைகிறார்கள் நல்லூர் பிரதேச சபையினர்.. ? 

யாழ் வரவின் முன்னைய படங்களை (போருக்கு முன்/பின்) எடுத்துப் பாருங்கள். நல்லூர் பிரதேச சபையினரின் பல்வேறு செய்திகளை அதனூடு நீங்கள் உணரக்கூடியதக இருக்கும். 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இராணுவ ட்ரக் போதும்...இது மல்லாந்து கிடக்க...அரசுக்கு ஒரு காரணம் இருக்கும் ..வெறி..அல்லது கட்டுப்பாடு இழந்தது....3 மாதத்தில் இடித்து வீழ்த்தியவர்..தியாகி  அல்லது மந்திரியாவார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:


இரண்டாணது வளைவா? இனி இப்படியே வளைவுகள் கட்டி கொண்டிருக்க போகிறார்கள்  வளைவு கலாச்சாரம் தான்

சிங்களம் வடகிழக்கு பகுதிகளிலை மரத்துக்கு மரம் வைரவர் கோவில் மாதிரி புத்தர் சிலையையும் வைச்சு பெரிய பெரிய விகாரைகளையும் கட்டேக்கை வராத ரோசம் மானம் நற்சிந்தனை  வளைவுகள் கட்ட மட்டும் வருகுதாக்கும்...🤪

Link to comment
Share on other sites

நல்ல தான் இருக்குது,  முதல் முறையாக நடு ரோட்டிலே பூரண கோபுர  கும்ப கலசங்களுடன் இந்து கோவில் ஒன்று கட்டியுள்ளார்கள்.  
நாய் லைட் போஸ்ட்டை கண்டால் காலை உயர்த்திரமாதிரி,புத்த  சிங்களவர் அரச மரத்தை கண்டால் புத்தர் சிலை வைப்பதுமாதிரியும் . உயர்குடி இந்துக்கள் ரோட்டுக்கு, ரோட்டு இப்படி பட்ட வளைவுகள் கட்டி தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் காத்தான் குடி நகரை வரவேற்கும் வளைவு மஞ்சந்தொடுவாயில் அமைக்க முனைந்தார் கிஸ்புல்லா அதை தடுத்து காத்தான் குடிக்குள் அமைக்க கடும் அமைக்க வேண்டுமென பல வாதங்கள் நடந்தது இறுதியில் காத்தான் குடி எல்லைக்குள் அமைக்கப்பட்டது .பிள்ளையான் இருந்த காலத்தில்

இது போன்ற பல வளைவுகள் பல ஊரில் அமைந்திருக்கிறது இது யாழில் அமைவதிலும் மகிழ்ச்சி ஒரு குறுப்புவரும் இதை கட்டின காசுக்கு நாலு ஏழை சனத்துக்கு சாப்பாடு கொடுத்து இருக்கலாமென .

விரைவில் காரைதீவிலும் அமைய இருக்கிறது நிந்தவூர் எல்லையில்  என செய்தியில் படித்த நினைவில்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பனை உயரத்துக்கு புத்தர் சிலை  வைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் வளைவு வைப்பதுக்கு எதிர்ப்பு கிளம்புது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.