Jump to content

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு.

ஆனால் ஆறுமுகநாவலரின் செயற்பாடுகள் தொடர்பாக கொஞ்சம் தேடிப் பார்த்து வாசியுங்கள். அவர் தமிழ், சைவ சமயம் தவிர்த்து வேறு எதனை முன்னிலைப்படுத்தி உறுதிப்படுத்தினார் என்பது தங்களுக்குப் புரியும். 🙂

கண்டவன் போனவன் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்த பலதையும் எழுதுவான். அதை எல்லாம் அறிவுபூர்வமான.. சமுதாய நலன் சார்ந்த எழுத்துக்கள் என்று எடுக்க முடியாது. அப்படி எடுத்து வாசிப்பதே நம் தவறு.

ஆறுமுகநாவலர் ஒரு ஆக்கிரமிப்புச் சூழலை எவ்வாறு கத்தி இன்றி.. துப்பாக்கி இன்றி.. தான் சார்ந்த மக்களின் உரிமையை அடையாளத்தை அவர்களின் மண்ணில் நிலை நிறுத்தப் பாடுபட்டார் என்பதும்.. தமிழ் மொழியை செம்மொழியாக்க எவ்வளவுக்கு உழைத்தார் என்பதும்.. தமிழுக்கு இலக்கண வடிவம் வழங்கியவர்களில்.. அவரும் முதன்மையானவர்..  தான் முக்கியம்.

தேசிய தலைவரின் மக்களுக்கான.. போராட்ட நியாயமும் தியாகமும் தான் முக்கியம்.. அவரைப் பற்றியும் அவதூறு எழுதிப் பிழைக்கும் கூட்டங்களும் உள. அது அவசியமில்லை.

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரைப் பற்றி எமக்கு முன்னாலே அவதூறு பேசும் கூட்டம்.. ஆறுமுகநாவலரைப் பற்றி என்ன என்ன எல்லாம் எழுதும் என்பது விளங்கிக் கொள்ளக் கூடியதே.

அதுதான் சொன்னேனே.. எமது அடிமை நிலைக்கு நாமே தான் பெரிதும் காரணம். யாரை எங்கே வைப்பது என்று நமக்குப் புரிவதில்லை... தெரிவதில்லை. 

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
2 hours ago, Kapithan said:

தயவு செய்து என்னை உங்களுடன் ஒப்பிடாதீர்கள்... 

நானே நீங்கள் - நீங்களே நான். இதிலே எங்கே ஒப்பீடு? வேறு பெயர்களில் எழுதுவது மட்டும் தானே வித்தியாசமாக இருக்கிறது? 😀

Link to comment
Share on other sites

11 hours ago, nedukkalapoovan said:

கண்டவன் போனவன் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்த பலதையும் எழுதுவான். அதை எல்லாம் அறிவுபூர்வமான.. சமுதாய நலன் சார்ந்த எழுத்துக்கள் என்று எடுக்க முடியாது. அப்படி எடுத்து வாசிப்பதே நம் தவறு.

ஆறுமுகநாவலர் ஒரு ஆக்கிரமிப்புச் சூழலை எவ்வாறு கத்தி இன்றி.. துப்பாக்கி இன்றி.. தான் சார்ந்த மக்களின் உரிமையை அடையாளத்தை அவர்களின் மண்ணில் நிலை நிறுத்தப் பாடுபட்டார் என்பதும்.. தமிழ் மொழியை செம்மொழியாக்க எவ்வளவுக்கு உழைத்தார் என்பதும்.. தமிழுக்கு இலக்கண வடிவம் வழங்கியவர்களில்.. அவரும் முதன்மையானவர்..  தான் முக்கியம்.

தேசிய தலைவரின் மக்களுக்கான.. போராட்ட நியாயமும் தியாகமும் தான் முக்கியம்.. அவரைப் பற்றியும் அவதூறு எழுதிப் பிழைக்கும் கூட்டங்களும் உள. அது அவசியமில்லை.

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரைப் பற்றி எமக்கு முன்னாலே அவதூறு பேசும் கூட்டம்.. ஆறுமுகநாவலரைப் பற்றி என்ன என்ன எல்லாம் எழுதும் என்பது விளங்கிக் கொள்ளக் கூடியதே.

அதுதான் சொன்னேனே.. எமது அடிமை நிலைக்கு நாமே தான் பெரிதும் காரணம். யாரை எங்கே வைப்பது என்று நமக்குப் புரிவதில்லை... தெரிவதில்லை. 

நெடுக்கு,  ஆறுமுக நாவலர்  எவ்வாறான சாதி வெறியர் என்பதை மற்றவர்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர் எழுதிய சைவ வினாவிடையில் தானே தனது அசிங்கமான சைவ உயர் சாமித் திமிர்  முகத்தை காட்டியுள்ளார்.  அறிவு என்பது பரந்து பட்டு எல்லா மனிதரையும சமமாக மதிக்கும் வெளிப்பாட்டையே தரவேண்டும். தான் விரும்பும் கோட்பாட்டை தான்விரும்பும்  தலைவரை மட்டும் துதிபாடும் அதேவேளை,  அதை தவிர்தது மற்றவர்களை வசைபாடுவது அறிவு அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

நெடுக்கு,  ஆறுமுக நாவலர்  எவ்வாறான சாதி வெறியர் என்பதை மற்றவர்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர் எழுதிய சைவ வினாவிடையில் தானே தனது அசிங்கமான சைவ உயர் சாமித் திமிர்  முகத்தை காட்டியுள்ளார்.  அறிவு என்பது பரந்து பட்டு எல்லா மனிதரையும சமமாக மதிக்கும் வெளிப்பாட்டையே தரவேண்டும். தான் விரும்பும் கோட்பாட்டை தான்விரும்பும்  தலைவரை மட்டும் துதிபாடும் அதேவேளை,  அதை தவிர்தது மற்றவர்களை வசைபாடுவது அறிவு அல்ல. 

சும்மா எழுத்தில் எல்லா மனிதர்களும் சமன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இந்த உலகில் மனிதன் தனக்குள் ஆயிரக்கணக்கான ஏற்றத்தாழ்வுகளை விதைத்தே உயர்வு தாழ்வு எல்லாத்தையும் விதைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அதை முற்றாக அகற்ற முடியாது.

ஒரு இனத்தின் விடிவைப் பற்றி பொதுத்தளத்தில்.. ஒரு பொது மீட்சிக்கு உழைத்தது பற்றிப் பேசுவதுதான் சாத்தியப்பாடானது.. தேவையானதும் கூட. ஆறுமுக நாவலர் அதைச் செய்தார். அது அறிவு பூர்வமான ஒன்றே. 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

சும்மா எழுத்தில் எல்லா மனிதர்களும் சமன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இந்த உலகில் மனிதன் தனக்குள் ஆயிரக்கணக்கான ஏற்றத்தாழ்வுகளை விதைத்தே உயர்வு தாழ்வு எல்லாத்தையும் விதைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அதை முற்றாக அகற்ற முடியாது.

அப்படியா?  அப்படியானால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் மேலாண்மையை  மாற்ற முடியாது என்ற அவர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா?  

இதை நீங்கள் அப்பவே சொல்லியிருந்தால்   சும்மா சம உரிமை எல்லோரும் சமம் எற்று போராடப் போய் இவ்வளவு இழப்பும் வந்திருக்காது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சும்மா எழுத்தில் எல்லா மனிதர்களும் சமன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இந்த உலகில் மனிதன் தனக்குள் ஆயிரக்கணக்கான ஏற்றத்தாழ்வுகளை விதைத்தே உயர்வு தாழ்வு எல்லாத்தையும் விதைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அதை முற்றாக அகற்ற முடியாது.

ஒரு இனத்தின் விடிவைப் பற்றி பொதுத்தளத்தில்.. ஒரு பொது மீட்சிக்கு உழைத்தது பற்றிப் பேசுவதுதான் சாத்தியப்பாடானது.. தேவையானதும் கூட. ஆறுமுக நாவலர் அதைச் செய்தார். அது அறிவு பூர்வமான ஒன்றே. 

அப்போதே சொன்னேன். ஆறுமுகநாவலரை விட்டுவிடுவோம் என்று. கேட்டீர்களா.. 🤥

சில விடயங்களை அப்பட்டமாக நான் கூறியதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அதற்காக அதைக் கிளறி புண்ணாக்க வேண்டிய தேவை இல்லை.

🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி செய்யாமல் இருப்பதுதான் மடத்தனம்.
முயற்சி திருவினையாக்கும் என்பது முதியோர் அறிவுறுத்தியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அப்படியா?  அப்படியானால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் மேலாண்மையை  மாற்ற முடியாது என்ற அவர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா?  

இதை நீங்கள் அப்பவே சொல்லியிருந்தால்   சும்மா சம உரிமை எல்லோரும் சமம் எற்று போராடப் போய் இவ்வளவு இழப்பும் வந்திருக்காது . 

சிங்கள மேலாதிக்கத்தை சிங்களவர்கள் தங்களோடு வைச்சுக் கொள்ளலாம். அதனை தமிழர்கள் மீது பிரயோகிக்க முயல்வதுதான் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பாக பரினமிக்கிறது. அதையே தான் தமிழர்கள் வெறுக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2021 at 19:13, யாயினி said:

ஒம் உண்மை தானே இந்த வளைவுகள் கட்டி சோ காட்டுவதை விட நாலு கஸ்ரப்டுகிற சனதுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யலாம் தானே..அப்படி நாங்கள் சொல்ல வருவதில் என்ன தப்பு இருக்கிறது.🤔

எப்படித் தான் நாங்கள் கத்தினாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை  என்றால் வளைவுக் கலாச்சாரத்தோடு மட்டும் வாழுவது நன்று..

எங்கள் ஈழம் கலை கலாச்சாரம் அழிது என்று வெளிநாட்டில் இருந்து கத்துவியள் பிறகு கலாச்சாரத்தும் , சமய விழுமியங்களுக்குக்கும் இடம்கொடுத்தால் இங்க வந்து குத்தி முறிவியள் .

இப்ப யாழ்ப்பாண முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அகற்றப்பட்டிருக்கு அப்ப இது கட்டுன காசுக்கு ஏதாவது செஞ்சிருக்கலாமே அம்மையாரே அந்த நேரமும் பசி நிலவியது , பஞ்சம் நிலவியது, ஏழைகள் வாழ்ந்தார்கள் இப்ப என்ன சொல்ல போகிறீர்கள். 

நாங்கள் எங்கள் கலாச்சாரத்துடனே வாழப்போகிறோம் உங்களால் எங்களை திருத்த முடியாது திருத்தவும் ஏலாது , திருக்கேதீஸ்வரத்தில் வளைவு கட்ட நம்ம சமூகமே விடாத போது அடக்கி ஆழும் சிங்கள சமூகம் எம்மை அடக்க நினைத்து நமது வாழ்விடங்களையும் , வயல்களைய்ம் காடுகளையும் அவர்கள் புராதன சின்னங்களை புதைத்து விட்டு இது சிங்களவர்கள் காணி நிலம் எனும் போது மட்டும் சந்தோசமாக இருக்கும் போல . நாளைக்கு சிங்களவர்கள் நல்லூரில் இருப்பது கதிர்காம கந்தன் நீங்கள் வெளியேறுங்கள் என்றால் கொடுத்து விட்டு போவோம் என்ன சும்மா வீணான செலவுகள் தானே நமக்கு . பிறகு கலை கலாச்சாரம் என்று கண்டியை சொல்லுவம் சரிதானே

Link to comment
Share on other sites

48 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள மேலாதிக்கத்தை சிங்களவர்கள் தங்களோடு வைச்சுக் கொள்ளலாம். அதனை தமிழர்கள் மீது பிரயோகிக்க முயல்வதுதான் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பாக பரினமிக்கிறது. அதையே தான் தமிழர்கள் வெறுக்கிறார்கள். 

என்ன நெடுக்கர் நீங்கள் தானே சொன்னீர்கள் சும்மா எழுத்தில் எல்லா மனிதர்களும் சமன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஏற்றத்தாழ்வுகள் உலகில் இருக்கும். அதை முற்றாக மாற்ற முடியாது என்று.  

இப்போது மாற்றி பேசுகின்றீர்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள மேலாதிக்கத்தை சிங்களவர்கள் தங்களோடு வைச்சுக் கொள்ளலாம். அதனை தமிழர்கள் மீது பிரயோகிக்க முயல்வதுதான் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பாக பரினமிக்கிறது. அதையே தான் தமிழர்கள் வெறுக்கிறார்கள். 

நீங்கள் கூறும் மேலாதிக்கம் சாதிய அமைப்பிற்கும் பொருந்தும். 

சற்று சிந்தியுங்கள். 

எம்மைப் பலமிழக்கச் செய்யும் ஒன்றிற்கு எப்படி ஆதரவளிப்பீர்கள்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறும் மேலாதிக்கம் சாதிய அமைப்பிற்கும் பொருந்தும். 

சற்று சிந்தியுங்கள். 

எம்மைப் பலமிழக்கச் செய்யும் ஒன்றிற்கு எப்படி ஆதரவளிப்பீர்கள்..?

 

8 minutes ago, tulpen said:

என்ன நெடுக்கர் நீங்கள் தானே சொன்னீர்கள் சும்மா எழுத்தில் எல்லா மனிதர்களும் சமன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஏற்றத்தாழ்வுகள் உலகில் இருக்கும். அதை முற்றாக மாற்ற முடியாது என்று.  

இப்போது மாற்றி பேசுகின்றீர்கள்.

 

சாதி என்பது அழிக்கப்பட்டு விட்டது. ஒரு இன அழிப்பை நாம் சந்தித்த போது சிங்கள பெளத்த பேரினவாதம் அதன் அரச பயங்கரவாதம் கொண்டு எம்மை சாதி.. மதம் என்று பிரிச்சு அழிக்கவில்லை. தமிழன் ஒரு தனி இனம் என்று தான் அழித்தார்கள். அந்தப் பொதுமைப்பாட்டின் அடிப்படையில் தான் இப்போ தமிழர்களாக நாம் எமது பூர்வீக நிலத்தில் எமக்கான உரிமையை வலியுறுத்தி எமக்கான ஆட்சி மற்றும் வாழ்வுரிமையை கோரி நிற்கிறோம்.

ஆறுமுக நாவலரும்.. தமிழ் மொழி பேசிய தமிழர்களின் மீட்சிக்கு தான் அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்களின் சதிகளுக்கு எதிராக செயற்பட்டு.. எம் இனத்தின் மீட்சிக்கு உதவினார். அவர் அதற்கு சைவத்தை தமிழை கருவியாக்கிக் கொண்டார். 

தனிமனித ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால்.. நாம் தமிழர்கள். அந்தப் பொதுமைப்பாடுதான் எம்மை ஒரு தனித் தேசிய இனமாக்கியுள்ளது. அதில் சாதி.. மத.. வர்க்க.. நிற.. பேதங்கள் இருக்கலாம்.. இல்லாது அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்.. நாம் ஒரு இனமாக அழிக்கப்படக் கூடாது. அழிக்க அனுமதிக்கவும் முடியாது. 

Link to comment
Share on other sites

3 minutes ago, nedukkalapoovan said:

 

சாதி என்பது அழிக்கப்பட்டு விட்டது. ஒரு இன அழிப்பை நாம் சந்தித்த போது சிங்கள பெளத்த பேரினவாதம் அதன் அரச பயங்கரவாதம் கொண்டு எம்மை சாதி.. மதம் என்று பிரிச்சு அழிக்கவில்லை. தமிழன் ஒரு தனி இனம் என்று தான் அழித்தார்கள். அந்தப் பொதுமைப்பாட்டை தான் இப்போ தமிழர்களாக நாம் எமது பூர்வீக நிலத்தில் எமக்கான உரிமையை வலியுறுத்தி எமக்கான ஆட்சி மற்றும் வாழ்வுரிமையை கோரி நிற்கிறோம்.

தனிமனித ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால்.. நாம் தமிழர்கள். அந்தப் பொதுமைப்பாடுதான் எம்மை ஒரு தனித் தேசிய இனமாக்கியுள்ளது. அதில் சாதி.. மத.. வர்க்க.. நிற.. பேதங்கள் இருக்கலாம்.. இல்லாது அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்.. நாம் ஒரு இனமாக அழிக்கப்படக் கூடாது. அழிக்க அனுமதிக்கவும் முடியாது. 

சரி இப்போது தெளிவாக  புரிகிறது நெடுக்கு. தமிழர்களை மற்றய இனத்தவர்கள் அடக்குமுறை செய்யக்கூடாது. ஆனால் தமிழர்களுக்குள்  உயர் சாதி சைவர்களாகிய நாம் எமக்குள் தாழ்ந்த சாதி  என்று சிலர் மீது  அடக்கு முறை செய்வது உலக இயல்பு. அதை கண்டுக்ககூடாது. சிறந்த கொள்கை. அடிமையாக வாழ முழு தகுதியும் இந்த கொளகை உடையவர்களுக்கு உண்டு. இப்போது புரிகிறது போராட்டம் ஏன் தோற்றது என்று. தெளிவான வி ளக்கத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

சரி இப்போது தெளிவாக  புரிகிறது நெடுக்கு. தமிழர்களை மற்றய இனத்தவர்கள் அடக்குமுறை செய்யக்கூடாது. ஆனால் தமிழர்களுக்குள்  உயர் சாதி சைவர்களாகிய நாம் எமக்குள் தாழ்ந்த சாதி  என்று சிலர் மீது  அடக்கு முறை செய்வது உலக இயல்பு. அதை கண்டுக்ககூடாது. சிறந்த கொள்கை. அடிமையாக வாழ முழு தகுதியும் இந்த கொளகை உடையவர்களுக்கு உண்டு. இப்போது புரிகிறது போராட்டம் ஏன் தோற்றது என்று. தெளிவான வி ளக்கத்துக்கு நன்றி 

நாம் எந்தச் சாதி அடக்குமுறைக்கும் ஆளாகாமல் தான் போராடினோம். வீழ்த்தப்பட்ட போதும் சாதி அறியாமல் தமிழர்களாகவே வீழ்ந்தோம்.

உங்கள் தேவைப்பாட்டுக்கு சாதியை தக்க வைக்க விரும்பினால்.. வைச்சுக் கொள்ளுங்கள். ஆனால் திணிக்காதீர்கள்.

சாதியே அறியாத தலைமுறை உருவாகிவிட்டது. அதையாவது இனப்பற்றோடு ஒற்றுமையாக விடுங்கள். 

நாவலர் வாழ்ந்த காலத்தின் சில பாதகத் தாக்கங்கள் அவரிடம் இருந்திருந்தாலும்..அவர் மொழி இன காப்புக்காக ஆற்றிய பங்களிப்பு போற்றுதற்குரியதே.

இந்த விளக்கம் இல்லாதவர்களோடு கருத்தாடி என்ன பயன்..????!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கள் ஈழம் கலை கலாச்சாரம் அழிது என்று வெளிநாட்டில் இருந்து கத்துவியள் பிறகு கலாச்சாரத்தும் , சமய விழுமியங்களுக்குக்கும் இடம்கொடுத்தால் இங்க வந்து குத்தி முறிவியள் .

இப்ப யாழ்ப்பாண முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அகற்றப்பட்டிருக்கு அப்ப இது கட்டுன காசுக்கு ஏதாவது செஞ்சிருக்கலாமே அம்மையாரே அந்த நேரமும் பசி நிலவியது , பஞ்சம் நிலவியது, ஏழைகள் வாழ்ந்தார்கள் இப்ப என்ன சொல்ல போகிறீர்கள். 

நாங்கள் எங்கள் கலாச்சாரத்துடனே வாழப்போகிறோம் உங்களால் எங்களை திருத்த முடியாது திருத்தவும் ஏலாது , திருக்கேதீஸ்வரத்தில் வளைவு கட்ட நம்ம சமூகமே விடாத போது அடக்கி ஆழும் சிங்கள சமூகம் எம்மை அடக்க நினைத்து நமது வாழ்விடங்களையும் , வயல்களைய்ம் காடுகளையும் அவர்கள் புராதன சின்னங்களை புதைத்து விட்டு இது சிங்களவர்கள் காணி நிலம் எனும் போது மட்டும் சந்தோசமாக இருக்கும் போல . நாளைக்கு சிங்களவர்கள் நல்லூரில் இருப்பது கதிர்காம கந்தன் நீங்கள் வெளியேறுங்கள் என்றால் கொடுத்து விட்டு போவோம் என்ன சும்மா வீணான செலவுகள் தானே நமக்கு . பிறகு கலை கலாச்சாரம் என்று கண்டியை சொல்லுவம் சரிதானே

ஒன்றும் மேலதிகமாக எழுத தோன்றவில்லை காரணம் ஒவ்வொருத்தருடைய எண்ணங்களையும் மற்ற மற்ற உறவுகளும் பார்த்து கொண்டு தானேஇருப்பார்கள்..ஒவ்வொருத்தருடைய எழுத்துக்களுக்கும் எண்ணப்பாடுகளுக்கும் மதிப்பிடூ இரூக்கும் தானே.அன்று தொடக்கம் இன்றுவரை உங்கள் மத்தியில் இருக்கும் எண்ணம் நாம் வெளி நாடுகளில் இருந்து கொண்டு ஒன்றும் கேட்க கூடாது..என்பதே..நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி கட்சிகளையும் சாதி கதைப்பவர்களையும் அடக்கி ஒடுக்க எல்லாம் சரி வரும். 
ஆறுமுகநாவலர் செய்த நல்ல விடயங்கள் ஆயிரம் இருக்க ஒன்றை மட்டும் தூக்கிப்பிடித்து முகர்ந்து பார்ப்பவர்களின் உள் நோக்கம் நன்றாகவே புரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சாதி கட்சிகளையும் சாதி கதைப்பவர்களையும் அடக்கி ஒடுக்க எல்லாம் சரி வரும். 
ஆறுமுகநாவலர் செய்த நல்ல விடயங்கள் ஆயிரம் இருக்க ஒன்றை மட்டும் தூக்கிப்பிடித்து முகர்ந்து பார்ப்பவர்களின் உள் நோக்கம் நன்றாகவே புரிகின்றது.

ஆறுமுகநாவலரை இங்கே கொண்டுவந்தது நெடுக்கர். அவரை இங்கே விவாதப் பொருளாக்க வேண்டாம் என்று கூறியது நான். ஏனென்றால் அவர் தொடர்பாக சாதக/பாதகமான விமரிசனங்கள் உண்டு. அதன் பின்பும் அவரை இங்கே தொடர்ச்சியாக முன்நிலைப்படுத்தியது நெடுக்ஸ். 

ஆகவே நீங்கள் கூறியது நெடுக்கருக்குத்தான் பொருந்தும்.

நெடுக்கர் இதனைக் கவனிக்கவும் 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, யாயினி said:

ஒன்றும் மேலதிகமாக எழுத தோன்றவில்லை காரணம் ஒவ்வொருத்தருடைய எண்ணங்களையும் மற்ற மற்ற உறவுகளும் பார்த்து கொண்டு தானேஇருப்பார்கள்..ஒவ்வொருத்தருடைய எழுத்துக்களுக்கும் எண்ணப்பாடுகளுக்கும் மதிப்பிடூ இரூக்கும் தானே.அன்று தொடக்கம் இன்றுவரை உங்கள் மத்தியில் இருக்கும் எண்ணம் நாம் வெளி நாடுகளில் இருந்து கொண்டு ஒன்றும் கேட்க கூடாது..என்பதே..நன்றி.

கேள்வி கேட் கலாம் போராடலாம்  ஆனால் அங்கிருந்து செய்து ஏதும் ஆகப்போவதில்லை என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை மற்றவர்களை  நினைத்து நான் வாழ்வதில்லை யார் முத்திரை குத்தினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை அவ்வளவுதான் .மதீப்பீடு செய்து என்ன மார்க்கா கொடுக்க போகிறார்கள் இல்லையே 

Link to comment
Share on other sites

21 minutes ago, குமாரசாமி said:

அழகு...🙏🏽

தமிழர் கலாச்சசாரம் வரவேற்கிறது இரண்டு பொண்டாட்டிகளுடன். இதுதான் தமிழர் பண்பாட்டின் குறியீடா? 

இரண்டு பொண்டாட்டி இருப்பது அழகா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் குத்தி முறிஞ்சாலும் முருகனுக்கு இரண்டு மனைவிகள்.

“நல்லூர் கந்தனின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் இந்நத வளைவு செம்மணி வீதியில் புதிதாக, பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இந்த வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளைவு எதற்காக கட்டப்பட்டதோ அதனை நிறைவேற்றி உள்ளது. 

 

குத்தி முறிஞ்சு பிரயோசனம் இல்லை..

👐

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

 

வளைவு எதற்காக கட்டப்பட்டதோ அதனை நிறைவேற்றி உள்ளது. 

 

குத்தி முறிஞ்சு பிரயோசனம் இல்லை..

👐

இங்கு குத்தி முறியவில்லை. நல்லூர் கோவில் நாம் ஜாலியாக தினசரி போன இனியும் ஜாலியாக  போக போகும் கோவில் தான். 😂🤣👍. ஆனால்  தமிழ் கடவுள் முருகன் என்று கூறிவிட்டு  வட இந்திய புராணமான ஸ்கந்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை யாழ்ப்பாண மக்கள் கலாசாரம் என்று கூறும் புலுடா கலாச்சாரத்தை தான் கூறினேன். 

யாழ்பாண மக்களுக்கு என்று சொந்த கலாச்சாரம் இல்லையா? அதனால் தான் நாம் வட இந்திய கலாச்சாரமான ஸ்கந்தபுராணத்தை எமது கலாச்சாரம் என்று புலுடா விடுகிறோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் அலங்கார வளைவு திறக்கப்பட்டது!

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! -  NewMannar நியூ மன்னார் இணையம்

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது!

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இந்த அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலங்கார வளைவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூசைகள் இடம்பெற்றன.

இந்நிலையில், தைத்திருநாளான இன்று, நல்லூர் ஆலயத்திலிருந்து திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.

அத்துடன், தவில், நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது.

சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! |  Perikai

 

வெகு விமரிசையாக திறக்கப்பட்டது நல்லூர் கந்தசுவாமி ஆலய அலங்கார வளைவு! -  Jvpnews

 

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! |  Perikai

 

தமிழர்களின் சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கிய யாழ்ப்பாணம்  வரவேற்பு வளைவு கோலாகலமாகத் திறந்து வைப்பு!! | Newlanka

 

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! |  Perikai

 

வெகு விமரிசையாக திறக்கப்பட்டது நல்லூர் கந்தசுவாமி ஆலய அலங்கார வளைவு! -  Today Jaffna News - Jaffna Breaking News 24x7

யாழில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார வளைவு  திறப்பு - Tamilwin

வெகு விமரிசையாக திறக்கப்பட்டது நல்லூர் கந்தசுவாமி ஆலய அலங்கார வளைவு! -  Jvpnews

 

யாழில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார வளைவு  திறப்பு - Tamilwin

http://athavannews.com/நல்லூர்-கந்தசுவாமி-கோயி-4/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.