Jump to content

11 விக்கெட்டுகளை வீழ்த்திய 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸன்: டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தானை பந்தாடியது நியூஸி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11 விக்கெட்டுகளை வீழ்த்திய 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸன்: டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தானை பந்தாடியது நியூஸி. 

jamieson-bowls-nz-to-2nd-test-series-win-over-pakistan பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நியூஸிலாந்து அணியினர் : படம் உதவி ட்விட்டர்
 

கிறிஸ்ட்சர்ச்


6.8அடி உயரமுள்ள கைல் ஜேமிஸனின் வேகப்பந்துவீச்சு, போல்டின் துல்லியப்பந்துவீச்சு ஆகியவற்றால் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.

இந்த கோடைகால சீசனில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளது.

 
 
 

இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேமிஸன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸில் ஜேமிஸன் 69 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 48 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் நியூஸிலாந்து அணி ஐசிசி வரலாற்றிலேயே முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அணியாக நியூஸிலாந்து மாறியுள்ளது.

1609917256756.jpg இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேமிஸன்

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்து. நியூஸிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்ஸன் 238 ரன்கள், நிகோலஸ் 157,டேரல் மிட்ஷெல் 102 ஆகியோரின் அபாரமான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள்சேர்த்து டிக்ளேர் செய்து,362 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 186 ரன்களில் ஆட்டமிழந்து, இன்னிங்ஸ் 176 ரன்களில் தோல்வி அடைந்தது.

4-வது நாளான நேற்று ஒரு விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 8 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று காலை ஆட்டம் தொடங்கியவுடன் போல்ட் வீசிய 4-வது ஓவரில் நைட்வாட்ச்மேன் அப்பாஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜோடி அபித் அலி, அசார் அலி இருவரும் நிலைத்து நிற்க முயன்றனர்,

ஆனால், இருவரும் 29 ரன்கள் கூட்டணி சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜேமிஸன் பந்துவீச்சில் அபித் அலி 26 ரன்னில் வெளியேறினார். உணவு இடைவேளையின்போது 69 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்தது. அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடி, விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால், ஆட்டத்தை டிரா செய்திருக்கலாம். ஆனால், உணவு இடைவேளைக்குப்பின் பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ஜேமிஸன் பந்துவீச்சில் இழந்தனர்.

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களான பாபர் ஆஸம் போன்றோர் காயம் காரணமாக விளையாடாததால் 2-ம் தரமான அணியாகவே மதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி வலுவற்ற சராசரி வீரர்கள் கொண்ட அணியாக இருக்கிறது என்று முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கூட விமர்சித்திருந்தார். அது சரியானது என நிரூபிக்கும் வகையில் இன்றை பேட்டிங் அமைந்திருந்தது.

79 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 107 ரன்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது. ஒட்டுமொத்ததமாக 81.4 ஓவர்களில் 186ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

1609917274756.jpg

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி(37),ஜாபர் கோகர்(37) ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்துவீச்சாளர் ஜேமிஸன் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர் நாயகனாக வில்லியம்ஸன் தேர்வு செய்யப்பட்டார்.

நியூஸிலாந்து வீரர் ஜேஸமின் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 4-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய ஜேமிஸன், இதுவரை 36 விக்கெட்டுகளை வீழ்த்தி 13 சராசரி வைத்துள்ளார். ஒரு அரைசதம் அடித்து பேட்டிங்கிலும் 56.5 சராசரி வைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகிய ஜேமிஸன் 44,49 என இரு இன்னிங்ஸிலும் பேட்டிங்ஸில் ஸ்கோர் செய்து, 45 ரன்களுக்கு 5 வி்க்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

இந்த சீசனில் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் அரைசதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் ஜேமிஸன் வீழ்த்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட்டிங்கில் 32ரன்கள் சேர்த்த ஜேமிஸன், 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் பேட்டிங்கில் சேர்த்த ஜேமிஸன் 5 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

https://www.hindutamil.in/news/sports/619552-jamieson-bowls-nz-to-2nd-test-series-win-over-pakistan-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி உடையார்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் தான் ப‌டு தோல்வியை பாக்கிஸ்தான் ச‌ந்திச்ச‌து , ச‌ம‌ நிலையில் முடிய‌ வேண்டிய‌ விளையாட்டு கூட‌ பாக்கி வீர‌ர்க‌ளின் அவ‌ச‌ர‌ ஆட்ட‌த்தால் தோல்வி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.